Jump to content

Rise of Empires : Ottoman (Netflix)


Recommended Posts

ஒவ்வொரு சாம்ராஜ்யத்தின்  எழுச்சிக்கு பின்னும் இன்னொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி இருக்கும் .1453 ல் கொன்ஸ்தாந்திநேபிள் ஓட்டமன் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது என்பதை ஒரு வரியில் கடந்து சென்றிருப்போம் அதன் பின் உள்ள ரத்தகளரியான வீரம்செறிந்த வரலாற்றை  சொல்வது தான் Rise of Empires : Ottoman (Netflix)
(மெ(மு)ஹமட்-(II) VS கொன்ஸ்ரன்டைன் (XI)) 
மேற்கு வரலாற்றாசிரியர்களால் மெகமட் ன்  இந்த வெற்றியும் அவனின் சிறப்புகளும் எந்தளவுக்கு வரலாற்றில் சிறப்பாக கூறப்படிருக்கிறதோ தெரியவில்லை துருக்கியர்களால் இயன்றவரை அவரின் சிறப்புகள் புத்தி கூர்மை வீரம் என எல்லாம் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது 

மெகமட் தாய் எந்த நாட்டவர் என இன்று வரை வரலாற்றாசிரியர்களால் தெளிவாக கூறமுடியவில்லை போலிருக்கிறது .சிறுவயதில் தாயைப்பிரிந்து தந்தையிடம் செல்லும் முகமட் அங்கு தனது தந்தையின் இரண்டாவது மனைவியினால்(சித்தி) வளர்க்கபடுகிறார்  அவரின் அறிவுரைகள் மற்றும்  வளர்ப்பு முறைகளே மிகச்சிறந்த ஒரு பேரரசனாக எதிர்காலத்தில் அவரை உருவாக்கியது.கிட்டத்தட்ட 12 மொழிகளை பேசக்கூடியதாக இருந்தார் 

.12 வயதில் தந்தையிடமிருந்து சிம்மாசனம் இவரின் கைக்கு மாறுகிறது தனது கைக்கு வந்தவுடன் அவரின் முதல் இலக்காக அவர் குறி வைத்தது தந்தையால் பலமுறை முயன்றும் வெற்றி பெறமுடியாமல் போனதும்  1300 ஆண்டுகளாக எதிரிகளால் வெல்லப்படமால் இருந்ததும்  இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்ததும் இரண்டுகண்டங்களின் சந்தியாக இருந்ததும் வெல்லமுடியாத கோட்டை சுவர்களை கொண்டிருந்ததுமான தங்க கொம்பு என்று அழைக்கப்படும் இயற்கை துறைமுகத்தை தன்னகத்தே கொண்டதுமான கொன்ஸ்தாந்திநேபிளை...

தலைமை அமைச்சரிலிருந்து முழு அமைச்சரவையே அவரின் முடிவுக்கு எதிராக இருந்தது.இறுதியில் கொடுத்த அரசை தந்தை திரும்ப எடுத்து கொண்டு தனது பிரதிநிதியாக இருக்குமாறு தலைநகரிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள ஒரு பகுதிக்கு மஹ்மட்டை அனுப்புகிறார்.

தனது 21 ஆவது வயதில் தந்தையின் இறப்பின் பின் அரியணை ஏறும்  மஹ்மட் தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் நோக்கில் 70ஆயிரம் துருப்பினருடன் பயணமாகிறார் .. தனது தந்தையின் தோல்விகளிலிருந்து பாடம் கற்றிருந்த மஹ்மட் மிகப்பலம் வாய்ந்த உயரமான  கோட்டை சுவர்களை தகர்ப்பதன்
மூலம் மட்டுமே  நகரத்தை கைப்பற்ற முடியும் என அதற்கான வழிகளை தேடுகிறார் ஹங்கேரிய நாட்டு டிசைனர்   ஒருவர் 8மீ நீளம் மற்றும் 2மீட்டர்.அளவான விட்டம் கொண்ட பீரங்கி தயாரிப்பதற்கான மாதிரி வரைபடத்தை அவர்முன் காட்ட அதை உருவாக்கி அதையே தனது இரகசிய ஆயுதமாக கொண்டு முற்றுகையை ஆரம்பிக்கிறார் .. முற்றுகை குறிப்பிட்ட காலத்திற்குள் முறியடிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் ரோமிலிருந்த  போப்பின் உதவி வந்துவிடும் . மஹ்மட் இரகசிய ஆயுதம் பீரங்கிகளாக இருக்க கிழக்கு ரோமானியர்களின் ஆயுதமாக   இத்தாலிய கடல் கொள்ளை காரனும் மிகச்சிறந்த வாள் சண்டை வீரனும் கோட்டை களை பாதுகாப்பதில் வல்லவனுமான Giustiniani யையும் அவனின் படையையும் கோட்டையை பாதுகாக்கும்  பொறுப்பில் விடுகின்றார் கொன்ஸ்டன்டைன்-11

இடைவிடாது முழங்கும் பீரங்கிகளால் கோட்டை சுவர்கள் விரிசல் விழுந்தாலும் துருக்கியர்களின் ஒவ்வொரு தாக்குதல்களையும் giustiniani யும் அவரின் படையும் முறியடிக்கிறது முற்றுகை நாள்கள் நீள தொடங்குகின்றன.

இறுதியில்  முற்றுகை தொடங்கி 8 வாரங்களின்  பின் தொடர் முற்றுகைகளினாலும் முகமட் இன் சில தாக்குதல் உத்திகளினாலும் கொன்ஸ்தாந்திநேபிள் துருக்கியர் வசமானது . எப்படி என்பதை நெட் ப்ளிக்ஸ் ல் பார்த்து மகிழுங்கள் 

(1922 வரை அவர்கள் வசம் இருந்ததாக  வரலாறு சொல்கிறது)

கொன்ஸ்தாந்திநேபிள் துருக்கியர் வசமானதன் பின்னரே மேற்கு நாடுகள் வேறு வழிகளை தேடி தமது பயணங்களை ஆரம்பித்தனர் . 1497 ல் அப்படி வந்த ஒரு ஐரோப்பிய நாட்டவன் தன் குழுவினருடன் கள்ளிகோட்டை ( கேரளா) துறைமுகத்தையும் (1505ல் காலி- இலங்கை  துறைமுகத்தையும் கண்டடைந்தததாக வரலாறு சொல்கிறது )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.