Jump to content

நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

நல்ல தொடக்கம்; தொடரட்டும் நல்லபடியாக...

காரை துர்க்கா   / 2020 பெப்ரவரி 18

வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன், ‘மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ என்ற அமைப்பு, புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.   

யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேணார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார் நிபுணர்கள், பேராசிரியர்கள், புலமை சார்ந்தோர் இணைந்து, மேம்பாட்டு மன்றத்தில் செயற்பட முன்வந்துள்ளனர்.  

இந்தப் பூமிப்பந்தில், பிரச்சினைகள் இல்லாத தனிநபர்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. பிரச்சினைகள் இல்லாத சமூகங்கள் இல்லை. ஆகவே, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானவையே. 

இவ்வாறாக, பிரச்சினைகள் அனைவருக்கும் பொதுவானவைகளாக இருந்தாலும், போர் அரக்கன் மூர்க்கத்தனமாகக் கோரத்தாண்டவம் ஆடிய மண்ணில் வாழும் தமிழ் மக்களது பிரச்சினைகள், வேறு விதமானவைகளாகவும் சிக்கல்கள் நிறைந்தவைகளாகவும் காணப்படுகின்றன; தொடர்கின்றன. 

ஆயுதப் போர் நிறைவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் ஓய்ந்துவிட்ட போதிலும், தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சினைகள் ஓய்ந்தபாடில்லை; தீர்வதற்கான அறிகுறிகளையும் காணவில்லை. மாறாக, பிரச்சினைகள் மேலும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை அப்படியே இருப்பதாகும். அதுகூட, மேலும் சிக்கலுக்குள்ளேயே சிக்கியுள்ளது. 

மறுவளமாக, இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற, அனுபவிக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு, அரசியல் பிரச்சினையே பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது. 

உதாரணமாக, யாழ்ப்பாணம், வலிகாமம்  வடக்கு உயர்ப் பாதுகாப்பு வலயத்துக்குள் ஒருவரது வீடும் விவசாயக் காணியும் கையகப்படுத்தப்பட்டு இருப்பின், அவரது இருப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி, அவர் அன்றாடப் பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருப்பார்.ஆனால், அவரது வீடும் காணியும் விடுவிக்கப்படாமைக்குக் காரணம், அடிப்படைப் பிரச்சினையான அரசியல்  பிரச்சினையே ஆகும். 

இவ்வாறாக, 72 ஆண்டுகால இனப்பிணக்கான அரசியல் பிணக்கு தீராத வரை, நாளாந்தம் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அன்றாடப் பிரச்சினைகளும் தீரப்போவது இல்லை. 

ஆனாலும், அடிப்படைப் பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்படுமா? அதற்காக, இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தமிழினம் காத்திருக்க வேண்டுமென்று எவருக்கும் தெரியாது. 

இந்நிலையில், ஒருபுறம் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் மறுபுறம், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணவேண்டிய தேவைப்பாடுகள் நிறையவே இருக்கின்றன. 

இது இவ்வாறு நிற்க, இதுவரையான காலப்பகுதியில், எமது அரசியல்வாதிகளால் அன்றாடப் பிரச்சினைகளைக் கணிசமான அளவில்கூடப் பூர்த்திசெய்ய முடியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியே உள்ளது. 

2010ஆம் ஆண்டில் போர் நிறைவுபெற்ற காலங்களில், ஆட்சியில் இருந்தவர்களுடன் ஐக்கியமாக இருந்தவர்களாலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான நல்லாட்சி காலப்பகுதியில் ஆட்சி அமைக்கவும் அவ்வாறாக அமைத்த ஆட்சியை நடத்தவும் ஆதரவு வழங்கியவர்களாலும், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாரியளவில் உயர்த்த முடியவில்லை. அன்றாடப் பிரச்சினைகளைப் பெருமளவில் தீர்க்க முடியவில்லை. 

இதற்கிடையே, இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள், வெறுமனே அரசியல்வாதிகளாலும் அரச திணைக்களங்களாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் மாத்திரம் தீர்க்கப்படக் கூடியதும் அல்ல என்பதையும், நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

ஆகவே, இந்நிலையில் இதுபோன்ற அபிவிருத்தி மன்றங்களது வருகை அவசியமானதே; வரவேற்கக்கூடியதே. ஆனால், மறுபுறத்தில் அவற்றினது இயலுமை, தொடர்ச்சித் தன்மை என்பன குறித்துக் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.  

புதிதாக அமைப்புகளைத் தொடங்குவது மிகச் சுலபம். ஆனால், அவற்றை வினைத்திறன் உள்ளதாகத் தொடருவது ரொம்பக் கடினம். ஆகவே, இன்று இவ்வாறு சமயத் தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் உருவாக்கப்பட்ட அமைப்பு, பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது. இவற்றுக்குப் பாரிய சமூகப் பொறுப்பு உள்ளது. 

இன்று தமிழ் மக்கள் மத்தியில் பல சமூக அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதற்கு, கணிசமான புலம்பெயர்ந்த உறவுகள், பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள். 

ஆனாலும், இவ்வாறான அமைப்புகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, குறைவாகவோ, இல்லாமலோ உள்ளது என்றுகூடக் கூறலாம். ஆகவே, புதிதாகத் தற்போது உருவாக்கம் பெற்றுள்ள மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், சமூக அமைப்புகளுக்கான ‘தாய்’ அமைப்பாக மிளிர வேண்டும். 

தமிழ் மக்களிடையே ஆங்காங்கே அவ்வப்போது, மதம் சார்ந்த முரண்பாடுகள் தோன்றுகின்றன அல்லது, தோற்றுவிக்கப்படுகின்றன.இது போன்ற நிலைமைகள், போர் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மண்ணில் காணப்படவில்லை; தோன்றவில்லை. தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம்.

ஆனால், இன்று ஏற்பட்டுள்ள இவ்வாறான சி(று)ல முறுகலுக்குள் எண்ணெய் வார்க்க, பல தரப்புகள் கங்கணம் கட்டி வரிசையில் நிற்கின்றன. ஆகவே, இந்து - கிறிஸ்தவ மத அமைப்புகளின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படுகின்றபோது, இவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறியலாம்; கிள்ளி எறிய வேண்டும். 

அதுபோல, வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும், இவ்வாறான இணைத் தலைமையிலான உறவு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த இணைத் தலைமை, பிறப்பில் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ வாழுபவர்களை அடிப்படையில் தமிழர்களாக இணைக்க வேண்டும். 

தமிழ் மக்களது வெளிச் சூழலை, பிறிதொருவர் நிர்ணயித்தல் (சுதந்திரம்) அடிமைத்தனம் எனப்படும். ஆனால் இன்று, எங்கள் அரசியல்வாதிகளுக்கு  இடையே புரிந்துணர்வுகள் அ(றுந்து)ற்று, எங்களது உளச்சூழலைக் கூட (மனதை), வெளியே இருப்பவர்கள் நிர்ணயிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இவற்றின் தோற்றக் காரணத்தைக் கண்டுபிடித்தாலே, வெற்றிக்கான திறவுகோலை வடிவமைத்துக் கொள்ளலாம். 

ஆகவே, வடக்கு, கிழக்கின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம், தமிழ் அரசியல்வாதிகளால் உதாசீனம் செய்ய முடியாத பலம்கொண்ட அமைப்பாக எழுச்சி பெறவேண்டும்.

தமிழ் மக்கள், தங்களது அரசியல்வாதிகள் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள். யார் உண்மையானவர்கள்; யார் உண்மை போல நடிக்கின்றார்கள் என, முழுமையாகக் குழம்பிய நிலையில் உள்ளார்கள். 

முன்பு போல இல்லாது, அரசியல் விமர்சனங்கள் நிறைந்த உலகத்தில், தற்போது நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை விட, சமூக வலைத்தளங்கள் வழியாக நாளாந்தம் பல கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனது உண்மைத் தன்மை தொடர்பிலும், மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.

ஒரு பொதுமகன், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். அது அவரது தெரிவு விருப்பம். ஆனால், அவ்வாறு வாக்களித்து வெற்றி பெறுபவர் அடுத்து வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஆசனத்தில் இருக்கப் போகின்றார். ஆகவே, பிழையானவர்களைத் தெரிவுசெய்தால், மீண்டும் சரியானவர்களை மீளத் தெரிவுசெய்ய, ஐந்து ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். 

இன்று அனைத்துச் செயற்பாடுகளிலும் அரசியல் நுழைந்துவிட்டது. நகர சபையினர் குப்பையை எடுக்கும்போது, சில கட்சிகளைச் சார்ந்தவர்களின் வீடுகளில் மாத்திரமே குப்பைகளைச் சேகரிப்பதாக மக்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்துள்ளார். 

ஆகவே, குப்பை அள்ளுவது வரை அரசியல் சென்று நாற்றம் அடிக்கின்றது. இவ்வாறு நாற்றம் அடிப்பதாலேயே, நல்லவர்கள், கௌரவமானவர்கள், சமூகநோக்கில் நடுநிலை நிற்பவர்கள் போன்றோர் அரசியலுக்குள் வர அச்சப்படுகின்றார்கள். 

ஆகவே, நாற்றம் எடுக்கும் அரசியலை மாற்றத்துக்குள் கொண்டுசெல்ல, இவ்வாறான பொது அமைப்புகள் முயற்சி செய்யவேண்டும். 

தென்னிலங்கையில், தங்களது மதம் சார்ந்து பௌத்த அமைப்புகள் நடந்து கொள்வது போல, மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றமும், தங்களது இனம் சார்ந்து நடந்துகொள்ள வேண்டும். 

போரால் தமிழ்ச் சமூகம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ளது. அந்தச் சமூகத்தின் கட்டமைப்புகள் சிதைவடைந்து கிடக்கின்றன. ஒழுங்கமான சமூக அமைப்புகள் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடக்கின்றன. 

இந்நிலையில், இருக்கின்ற இந்த நிலையிலேயே, எமது சமூகம் தொடர்ந்தும் இருக்க முடியாது. அல்லது, “இந்த நிலையையே, இவ்வாறு ஏற்று வாழ வேண்டும்” என எவரும் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்ல-தொடக்கம்-தொடரட்டும்-நல்லபடியாக/91-245663

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செயற்பாடு

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

தமிழ் மக்கள் அப்போது மதத்தால் இரண்டாக இருந்தாலும், இனத்தால் (தமிழ்) ஒன்றுபட்டிருந்தோம்.

முயற்சி திருவினையாகட்டும். திருவினையாக ஒருதலைமுறையாவது செல்லவேண்டும். ஏனெனில் முயற்சி பாடப்புத்தகமாகி, அது பாலர் வகுப்பிலிருந்து அறிவூட்டப்பட்டு, அங்கிருந்து தொடங்கவேண்டும். அத்துடன் இன்றைய முதிர்ந்த தலைமுறை மக்களில் மாற்றமுடிந்தவர்களை மாற்ற முயற்சிக்கலாம். முதிர்ந்ததை  வளைப்பது கடினம், 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.