Jump to content

சுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார்


Recommended Posts

சுதந்திரக் கட்சியை சுழியோடி காப்பவர் யார்

 

 

image_0ef976d541.jpgறம்ஸி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிடுமானால், அதனை வரவேற்பதாகப் பெருந்தோட்டத்துறை அமைச்சரும்

அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரன தெரிவித்திருப்பதானது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தாகவும் இருக்கலாமென்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தற்போது இருந்ததையும் இழந்த நாதியற்ற நிலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தொடர்ந்தும் இப்பதவியில் நீடிப்பாராக இருந்தால்,

இக்கட்சிக்கு எதிர்காலமே இல்லாமல் போகுமென்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லையென, அக்கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, “நாங்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால்,

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டோம்” என்று கூறிக் கும்மாளமிட்ட பின்னர் என்ன நடந்தது?  

சுதந்திரக் கட்சியினர், வெறும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்குத்தான் சோரம் போனார்களே தவிர, கொள்கை எனும் கோட்பாட்டை அடியோடு மறந்துவிட்டனர்.

கட்சிக்கோ அல்லது பொதுச் செயலாளருக்கோ தூரநோக்கு இல்லையென்றால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் கொண்டு வந்த இந்தக் கட்சியை எவ்வாறு வழிநடத்த முடியும்?

இன்னுமொரு விடயத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபால டீ சில்வா கூறுகின்றார். “நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் ஒரே நோக்கம்,

ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே ஆகும்” எனப் பேசியுள்ளார். இவரின் இந்தப் பேச்சினால், எதை விளங்கிக்கொள்ள முடியும்? அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, உண்மையாகத்தான் இவ்வாறு பேசுகின்றாரா அல்லது

அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதென்று தெரியாமல் பேசுகின்றாரா என்பது, அவருக்கே நிதர்சனம். “யானையின் வாலில் ஒரு குழுவும் தும்பிக்கையில் மற்றுமொரு குழுவும்,

கால்களைப் பிடித்தவாறு இன்னொரு  குழுவும் பங்கு போட்டுக்கொண்டிருக்கும் போது, அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தூங்கிக்கொண்டுதான் இருக்கின்றாரா?  

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியாகவும் தற்போது பொதுக் கூட்டணியென்றும், பொதுச் சின்னம் இதயம்; அன்னம் என்றும் தடுமாறும்போது,

ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறுவது, சிந்தனைக்குரிய விடயமாகும்.  

இதேவேளை, தற்போதைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில், கட்சியின் அன்றைய தலைவராகவிருந்த

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில்

image_d04c057378.jpgகூட்டமைப்பொன்றை அமைத்து ஆட்சி செய்த பெருமை அவருக்கே இருந்தது. அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வளர்ந்துகொண்டே இருந்தது.  

இப்போது, “நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், அரசமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்

கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். இதை, அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது ஏன் செய்யவில்லை? தற்போதைய ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் இணைந்து, அரசமைப்பில் மாற்றத்தைச் செய்யப்போவதாக மைத்திரிபால சிறிசேன கூறுவதாகவிருந்தால், 2015ஆம்

ஆண்டில் இந்த நாட்டு மக்கள் அவருக்கு அளித்த வாக்குக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது என்பதுதான் அர்த்தம். ஒவ்வொரு முறையும், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் செயற்பாட்டிலேயே ஈடுபடுவது இலங்கையின் தலைவிதியாகிவிட்டது.  

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்வதைப் பொதுஜன பெரமுனவில் உள்ள பலர் எதிர்ப்பதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அப்படியாயின், ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அரசியலில் எதைச் சாதித்துள்ளார்? ஆடரம்பர வாழ்க்கை வேண்டாமெனக் கூறி, நாடாளுமன்றத்தில் வாழையிலையில் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்ட இவர், ஒரே ஒருமுறை மாத்திரம், வெளிநாடொன்றுக்குச் செல்லும்போது, சாதாரண பயணிகள்

ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்தார். அதன்பின்னர் சென்ற சகல வெளிநாட்டுப் பயணங்களையும், அதிசொகுசு (BUSINESS CLASS) ஆசனத்திலேயே பயணம் செய்தார் என்பது மட்டுமல்லாமல், அவருடன் செல்லும் குழுவினரின் எண்ணிக்கையையும்,

இரண்டு மடங்காக்கிக் கொண்டார். தற்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து போட்டியிடவுள்ளாரெனப் பேச்சுகள்  அடிபடுகின்றன.

இதில் அவர் வெற்றி பெறுவாரென்றால், அது வேறுவிடயம். ஆனால், தோல்வி அடைந்தால் என்ன நடக்குமென்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், பொதுத் தேர்தலுக்கு  இடையில், அரசியலிலிருந்து அவர் ஓய்வுபெறப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒருமுறை தன்னிடம் கூறியதாக, இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஓரிரு தினங்ளுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 

ஆனால் தற்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியே, ஆளுங்கட்சியாகத் தற்போது பிரமித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மிக மிக முக்கியப் பாத்திரமான

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை நாம் இவ்விடத்தில் மறந்துவிட முடியாது. இவரது விடாமுயற்சிக்கு அதிக பாத்திரமாக, நாட்டின் பெரும்பான்மையின மக்களின்

ஒத்துழைப்பு, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராகக் களமிறங்கியிருந்த  கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குக் கிடைக்கவும் அவர் அதில்

வெற்றியடையவும் வாய்ப்பாக இருந்ததாக் காணக்கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள், வாய்கிழியத் தொண்டை கிழியக் கத்தியும், அந்த மக்களின் முடிவு உலகத்தையே ஒருகணம் அதிரவைத்தது.  

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

கட்சி, அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு விடாமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவை நாடாமல், தங்களது கட்சியின் உறுப்பினர்களினாலேயே அரசாங்கத்தை அமைக்கும் எண்ணத்திலும்

முயற்சியிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, எத்தரப்பினருடன் கூட்டணி அமைத்தாலும், பொதுத் தேர்தலில் மொட்டுச் சின்னத்திலேயே வெற்றிபெறும். பெரும்பான்மை மக்களின் ஆதரவை, மொட்டுச் சின்னமே பெற்றுள்ளது” என்று, போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்காக, அடிப்படைவாதிகளுடன் ஒருபோதும் கைக்கோர்த்துச் செயற்பட மாட்டோம் என்றும் நாட்டு மக்களே தமக்குப் பெரும்பான்மை பலத்தை

வழங்கி, பலமான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.  

பொதுஜன பெரமுனவில் பல பங்காளிக் கட்சிகள் உள்ளன. அனைத்துக் கட்சிகள்,

சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து, கூட்டணியமைத்துப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம். கூட்டணி அமைப்பதால், பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் மாற்றம் ஏற்படாது. என்றும் கூறியுள்ள அவர், பெரும்பாலான

உறுப்பினர்கள் மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இவரது இந்தப் பேச்சை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொள்வாரா?  

தற்போது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சிகளின் தூசித்துடைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதால், இனவாதங்களும் பிரதேசவாதங்களும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவிலிருந்த நாடு திரும்பிய பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ, பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதில்லையென தெரிவித்திருந்தமை, ஓர் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில்தான் உள்ளது.   

ஏன் அவர் அந்த முடிவுக்கு வந்தார் என்பது பற்றி யாருடனும் பேசியதாகத் தெரியவில்லை.பொதுஜன பெரமுன வெற்றி பெற்றதற்குப் பின்னர்,

முதன்முறையாக இவ்வாறான கருத்துத் தெரிவிப்பது ஆரோக்கியமானதல்ல என்றுதான் கூறமுடியும். இதேவேளை, பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு

பொதுத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்திலிருந்தே போட்டியிடவுள்ளாரென, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ், கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதிகள்

  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதிகள் போட்டியிடும் ஒரு புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்,

இம்முறை பொதுத் தேர்தல்  களத்தில் குதிக்கவுள்ள அதேநேரத்தில், இரண்டு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்த  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரம் ஏன் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்ற கேள்வியொன்று எழுந்துள்ளது.  

இவ்வாறு இருந்த போதும்,  நீண்டகாலத்தின் பின் இலங்கையின் 72ஆவது சுதந்திரதின வைபவத்துக்கு,  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சமுகமளித்து, பிரதமர் மஹிந்த  ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி

ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோருடன் மிகவும் அந்நியோன்யமாக உரையாடிக் கொண்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.

இதைத்தான் சொல்வது அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை; நிரந்தரப் பகைவனுமில்லை என்று. சிலவேளை, பொதுஜனப் பெரமுனவுடன் இணைந்துப் போட்டியிடும் எண்ணங்கள் ஏதும் அவருக்கு உண்டானதோ என்று எண்ணுவதற்கும் இடமில்லை.

பிந்திய செய்தியின் அடிப்படையில், இன்று செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவருமான மைத்திரிபால ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு, பொதுத்

தேர்தல் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஏற்கெனவே தேர்தல்

ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளன. இருந்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சில இடங்களில் தனித்துப் போட்டியிடலாமெனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுதந்திரக்-கட்சியை-சுழியோடி-காப்பவர்-யார்/91-245675

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.