Jump to content

செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட்


Recommended Posts

செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட்

 
United-696x464.jpg
 

செல்சி அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. 

செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் இலங்கை நேரப்படி இன்று (18) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் அந்த அணி 3 புள்ளிகளாலேயே பின்தங்கியுள்ளது. 

மன்செஸ்டர் யுனைடட் அணி 1964-65 பருவத்திற்குப் பின் செல்சி அணிக்கு எதிராக கோல் விட்டுக்கொடுக்காமல் லீக் தொடரில் இரட்டை வெற்றிகளை பெற்றது இது முதல் முறையாகும். அதேபோன்று 1987-88 பருவத்திற்கு பின்னர் செல்சி அணிக்கு எதிராக மன்செஸ்டர் யுனைடட் இரட்டை லீக் வெற்றிகளை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.  

உச்ச பரபரப்பு கொண்டதாக ஆரம்பமான இந்தப் போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் அதிகம் வாய்ப்புகளை பெற்று நெருக்கடி கொடுத்த நிலையில் சொந்த மண்ணில் செல்சி அணி தடுமாற்றத்துடனேயே விளையாடியது.  

போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடியும் நேரத்தில் அன்தோனியோ மார்சியல் மன்செஸ்டர் யுனைடட்டை முன்னிலை பெறச் செய்தார். அரோன் வான் பிசக்கா பரிமாற்றிய பந்தை அவர் வலைக்குள் புகுத்தினார். 

முதல் பாதி: மன்செஸ்டர் யுனைடட் 1 – 0 செல்சி

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே கோர்ட் சவுமா செல்சி சார்பில் பதில் கோல் திருப்பியபோதும் அது சர்ச்சைக்குரியதாக இருந்தது. தொலைக்காட்சி நடுவர் உதவி மூலம் பரிசோதிக்க, அந்த கோல் கோனர் கிக் கிடைத்த பின் செல்சி பின்கள வீரர் சீசர் அஸ்பிலிகுடா மன்செஸ்டர் யுனைடட் பின்கள வீரரை தள்ளிவிட்ட நிலையிலேயே கோல் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.    

இதன்போது மிச்சி பட்சுயை உதைத்து சிவப்பு அட்டையில் இருந்து தப்பிய ஹர்ரி மகுயிரே 66 ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணிக்காக இரண்டாவது கோலை புகுத்தினார். ப்ரூனோ பெர்னான்டஸின் கோனரை தலையால் முட்டியே அணித் தலைவரான மகுயிரே அந்த கோலை புகுத்தினார். 

இந்நிலையில் செல்சி அணி பெற்ற மற்றொரு கோலும் நிராகரிக்கப்பட்டது. 76 ஆவது நிமிடத்தில் மேசன் மௌன்ட் உதைத்த ப்ரீ கிக்கை ஒலிவியர் கிரௌட் தலையால் முட்டி வலைக்குள் புகுத்தினார். ஆனால் அப்போது அவரது கால் ஓப் சைட் நிலையில் இருந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.  

முழு நேரம்: மன்செஸ்டர் யுனைடட் 2 – 0 செல்சி

கோல் பெற்றவர்கள்

மன்செஸ்டர் யுனைடட் –  அன்தோனியோ மார்சியல் 45’, ஹர்ரி மகுயிரே 66’

http://www.thepapare.com/international-football-roundup-18th-of-february-premier-league-2020-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.