Jump to content

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை


Recommended Posts

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.


mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி. 

பாவம் பிரபாகரனும் அவனின் பிள்ளைகளும்.

(அடுத்தது என்ன சாதிக்கொரு வேட்பாளரா ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் அரசியலுக்கு ஏற்றதல்ல......
இதனால் தான் இனவாத பிக்குகளை திட்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

 

6 hours ago, ampanai said:

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சிங்கள அரசு புத்த மதத்தை முதன்மை மதமாக்கி, சிறுபான்மை மதங்களை அழித்து வருகின்றது. இங்கே, தமிழ் பேசும் அரசியல் வாதிகள் உட்பட சிறுபான்மை அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாத நிலை.

ஆனால், அதற்கு தீர்வாக இவ்வாறான அணுகுமுறை தீர்வை தருமா என தெரியவில்லை. இருந்தாலும், சிங்கள தரப்பில் பல வேறு புத்த மதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளும் அமைப்புக்களும் உள்ளன. அவைகள் அரசியல் செல்வாக்கும் கொண்டவை, பாராளுமன்றத்திலும் உள்ளார்கள். அதனால், இந்த அணுகுமுறையும் சரியாக இருக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

இந்தியா, சிரியா, ஈராக், மத்திய கிழக்கு மற்றும் பல கிறீத்துவக் குழுக்கள் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியும் மஹிந்தவும் சேர்ந்து காய்ச்சிய கூழின் பருக்கை இவர்கள். சீ நல்லிணக்கம்.  தமிழரை கூறு போடுகினமாம் மானங்கெடட தமிழன் இருந்தாலென்ன அழிந்தாலென்ன?

Link to comment
Share on other sites

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

அரசியல் என்னும் சாக்கடை.

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

முதல்ல கோவில்களில் கொள்ளையடிப்பதை நிப்பாட்டுங்க.
அதுக்கு பிறகு உங்க கோஷ்டி அரசியலுக்கு லாயக்கா இல்லையா என்டு யோசிப்பம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

உங்கள் கருது சரியாக இருந்தாலும் தற்போதைய நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது।

சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் கத்தோலிக்கர்கள் இப்போது ஒரு அணியாக போட்டியிடப்போகிறார்கள்। இந்துக்கள் தமது அணியாக போட்டியிடப்போகிறார்கள்।

கத்தோலிக்கர்கள் வாக்குப்பலம் அங்கு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த அணி வெல்லக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது। இதட்கு அங்குள்ள ஆயர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றது।

எனவே நிச்சயமாக அடைக்கலத்துக்கு இம்முறை ஆப்பு வைக்கப்படும் போலத்தான் தெரிகிறது। அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வளர்க்க  முயட்சிக்கிறார்களே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதில்லை। இதுதான் கள நிலவரம்।

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.


mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

 

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

Link to comment
Share on other sites

47 minutes ago, Kapithan said:

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

 

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

கபித்தான், என்ன செய்வது। இப்படி இந்துக்கள் தனியே போனால் , கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் தனியேதான் போக வேண்டும்। வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை।

பார்ப்பம் மாற்று  தலைமையும் வந்துவிட்ட்து।  இணையப்போராளிகளும் இருக்கிறார்கள்। அவர்களாவது எதாவது செய்யட்டும்।பிரபாகரன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது।

Link to comment
Share on other sites

யுத்தம் நடந்த காலத்தில் இந்து குருமார் மக்களுக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டதான எனக்கு ஞாபகம் இல்லை. ஒப்புக்கு சில சர்வமத பேரணிகளில் கலந்து கொண்டிருப்பார்கள். அதைக்கூட  ஒழுங்கு செய்தவர்கள் வேறு அமைப்புக்கள் தான். அதே வேளை யுத்த காலத்தில் ஐரோப்பிய பத்திரிகளில் புலிகளுக்கு எதிராகவும் தமிழரின் போராட்டதை கொச்சைப்படுத்தி  வந்த அத்தனை கட்டுரைகளுக்கும் மூலம் எது என்று பார்த்தால் அத்தனையும் டெல்லியில் இருந்து இந்து பார்பன பத்திரிகையாளர்களால் எழுத‍ப்பட்டவையாகவே இருந்தன.  இந்த லட்சனத்தில் தமிழர்களிடம் மத ரீதியான பிளவுகளை உருவாக்க  முனையும் இப்படியான மதகுருமார் என்ற விஷ செடிகளை தமிழ் மக்கள் இணைந்து தோற்கடிப்பதோடு நில்லாது வேரறுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

 

ஆம், கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பின் தோல்வியே காரணம். அவர்கள் பதவியில் இருந்து மக்களை ஏமாற்றியதால் ஒரு அரசியல் தலைமை இல்லாத இனமாக மாறி உள்ளோம். 

விளைவு - இவ்வாறான தன்னிலை முன்னெடுப்பு. 

ஆனால், இறுதியில் நீங்கள் குறிப்பிட்டது போன்று, அடுத்த அரசியல் தலைமுறை உருவாக்கம் பெற இது வழிகோலுகின்றது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fNeMN5.gifமன்னார்ஸ்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ, தமிழரசுகட்சி, த .தே. கூட்டணியில் எத்தனை கிறிஸ்தவ உறுப்பினர் இருக்கிறார்கள்? ஓரிருவரை தவிர எல்லோருமே இந்துக்கள் தானே. இதுபற்றி கிறிஸ்தவர்கள் யாரும் கவலைப்படவில்லையே. இப்போமட்டும் இந்துக்களுக்கு ஏனிந்த வீணான கவலை? முன்னாள்  மன்னார் ஆயர், சிங்கள அரசியலின் அநீதிகளை  எடுத்துக்காட்டும்போது கிறிஸ்தவன், இந்து என்கிற பேதம் இல்லாமல் தமிழர் என்கிற ஒருமைப்படியே நடந்தார். கிறிஸ்தவர்களில் என்ன பெரிய பிழையைக்கண்டு இப்பிடி பிரிச்சுக்கொண்டு நிக்கினம். பதவி, பணம், சொந்தப் புத்தி இல்லை.  மக்களை செம்மறிக் கூட்டம் எண்டு நினச்சு மேய்க்க நிக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:41 PM, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

 

On ‎2‎/‎18‎/‎2020 at 10:32 PM, Kapithan said:

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

 

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

சமயத்திற்கொரு கட்சிச்,  சாதிக்கொரு கட்சி தொடங்கலாம் என்கிறீர்கள். 

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 7:42 PM, Vankalayan said:

 நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

மன்னார் மறைமாவட்டத்தின் கவலை, உண்மையான எல்லா தமிழனுக்கும் உள்ள கவலை. வாக்குறுதிகளை காெடுத்து, வாக்கு வாங்கி பாராளுமன்றம் செல்பவர்கள் அந்த மக்களை, அவர்களது தேவைகளை தட்டி கழித்து, சர்வாதிகாரிகளைப் பாேல் அவர்களுக்கு பதிலளிப்பது ஏற்புடையதல்ல. அதனாலேயே இந்துவான விக்கினேஸ்வரனை அரசியலுக்கு காெண்டுவர ஊக்கம் காெடுத்தது. ஆனால் சதி எல்லாவற்றையும் பழைய நிலையிலிருந்து நகர விடவில்லை. அதனால் இப்படி சிந்தித்து செயற்பட்டு உரிமைகளை பெற நினைக்கலாமே ஒழிய, இந்துக்களுக்கு எதிராகவாே, அரச நன்மைகளுக்காகவாே செயற்படமாட்டார்கள். செயற்படவும் கூடாது. அப்படி செயற்பட்டால் அது உண்மையான கத்தாேலிக்க, அப்பாேஸ்தலிக்க திருச்சபையாகாது. சில விலைபாேனதுகள் அவ்வாறு கருதலாம் அல்லது அவர்களையும் மாற்ற நினைக்கலாம். அது தவறானது. சிலர் தீட்டிய மரத்தில் கூர் பார்க்க நினைத்து, அவதூறு செய்வதன் மூலம் தங்கள் சின்னத்தனத்தையும், நன்றிகெட்ட தனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று.

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.