Jump to content

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை


Recommended Posts

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.


mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி. 

பாவம் பிரபாகரனும் அவனின் பிள்ளைகளும்.

(அடுத்தது என்ன சாதிக்கொரு வேட்பாளரா ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் அரசியலுக்கு ஏற்றதல்ல......
இதனால் தான் இனவாத பிக்குகளை திட்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

 

6 hours ago, ampanai said:

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சிங்கள அரசு புத்த மதத்தை முதன்மை மதமாக்கி, சிறுபான்மை மதங்களை அழித்து வருகின்றது. இங்கே, தமிழ் பேசும் அரசியல் வாதிகள் உட்பட சிறுபான்மை அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாத நிலை.

ஆனால், அதற்கு தீர்வாக இவ்வாறான அணுகுமுறை தீர்வை தருமா என தெரியவில்லை. இருந்தாலும், சிங்கள தரப்பில் பல வேறு புத்த மதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகளும் அமைப்புக்களும் உள்ளன. அவைகள் அரசியல் செல்வாக்கும் கொண்டவை, பாராளுமன்றத்திலும் உள்ளார்கள். அதனால், இந்த அணுகுமுறையும் சரியாக இருக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

காலத்திற்கு ஏற்ப மாற வேண்டியது தான் இல்லாட்டில் அழித்து விடுவார்கள்

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

இந்தியா, சிரியா, ஈராக், மத்திய கிழக்கு மற்றும் பல கிறீத்துவக் குழுக்கள் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியும் மஹிந்தவும் சேர்ந்து காய்ச்சிய கூழின் பருக்கை இவர்கள். சீ நல்லிணக்கம்.  தமிழரை கூறு போடுகினமாம் மானங்கெடட தமிழன் இருந்தாலென்ன அழிந்தாலென்ன?

Link to comment
Share on other sites

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

அரசியல் என்னும் சாக்கடை.

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

முதல்ல கோவில்களில் கொள்ளையடிப்பதை நிப்பாட்டுங்க.
அதுக்கு பிறகு உங்க கோஷ்டி அரசியலுக்கு லாயக்கா இல்லையா என்டு யோசிப்பம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Dash said:

நான் இப்ப சில மாதங்களாக இதை குறிப்பிட்டு வருகிறேன்..சைவ மக்களையும் கத்தோலிக்க மக்களையும் பிரிக்க பாரிய சதி நடக்குது. 500 வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த இரண்டு தரப்பினரும்  கடந்த  சில மாதங்களாக முரண்பட காரணம் என்ன ...???

உங்கள் கருது சரியாக இருந்தாலும் தற்போதைய நிலவரம் வேறுமாதிரி இருக்கிறது।

சட்டத்தரணி புனிதநாயகம் தலைமையில் கத்தோலிக்கர்கள் இப்போது ஒரு அணியாக போட்டியிடப்போகிறார்கள்। இந்துக்கள் தமது அணியாக போட்டியிடப்போகிறார்கள்।

கத்தோலிக்கர்கள் வாக்குப்பலம் அங்கு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த அணி வெல்லக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது। இதட்கு அங்குள்ள ஆயர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகின்றது।

எனவே நிச்சயமாக அடைக்கலத்துக்கு இம்முறை ஆப்பு வைக்கப்படும் போலத்தான் தெரிகிறது। அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வளர்க்க  முயட்சிக்கிறார்களே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதில்லை। இதுதான் கள நிலவரம்।

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒற்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவ சிறி மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.


mannar.jpg

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(18) காலை 10.30 மணியளவில் இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர் கால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்து மக்களை  அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளார்கள்.

எதிர் வருகின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்   மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைக்குழுவாக  போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர்.ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற  கேள்வி உள்ளது.

கடந்த 2 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதி நிதியை; கேட்டிருந்தோம்.ஆனால் கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடையம் தொடர்பாக கதைத்த போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீடு வளங்க அவர்கள்; விரும்ப வில்லை.ஆசன ஓதுக்கீடு தரவும் இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்கள் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏன் என்றால் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு வேட்பாளர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

ஒவ்வொறு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும் ஒவ்வொறு சமையத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதி நிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்த சுயேட்சை இயங்கப் போவது இல்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற  பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடையம் தொடர்பில் ஆலயத்தின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.அதற்கமைவாக எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு  எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உறுவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்த எந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்து ஆலோசித்து வருகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதி நிதிகள்,இந்துக் குருக்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/75902

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Vankalayan said:

நிச்சயமாக உங்களால் மன்னர் மாவட்த்திலிருந்து இந்த அமைப்பூடாக ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியாது। மன்னாரில் ஏறக்குறைய ஐந்து வீதமான இந்துக்களே இருக்கிறார்கள்। அப்படி என்றால் ஒரு இந்து அமைப்பால் வெல்வது மிக கடினம் ।

அத்துடன் வவுனியா, முல்லைத்தீவில் எந்தவொரு கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை।

எனவே நீங்கள் செய்ய நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்। இந்து, கத்தோலிக்க கிறிஸ்தவ வாக்குகள் மத ரீதியாக பிரியும்போது முஸ்லிம்களுக்கு அது வாய்ப்பாக அமையும்। அல்லது தமிழர் அல்லாத தரப்புக்கு வாய்ப்பாக அமையும்।

இருந்தாலும் மன்னாரில் கத்தோலிக்கர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட்தாக அறிகிறேன்। அவர்களும் கத்தோலிக்க ஆயர்களின் துணையுடன் ஒரு சடடதரணி தலைமையில் போட்டியிடப்போகிறார்கள்। எனவே அவர்கள் நிச்சயமாக மன்னாரில் வெல்லுவார்கள்।

இது தமிழர்களுக்கு ஒரு பின்னடைவே . நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

 

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

Link to comment
Share on other sites

47 minutes ago, Kapithan said:

அப்போ வட கிழக்கிலுள்ள கிறீத்துவர்களின் நிலை ? அவர்கள் தமிழர்கள் இல்லையா? இது பிற மாவட்டங்களிலுள்ள கிறீத்துவர்களை காட்டிக் கொடுக்கும் செயல் இல்லையா ? முத்தையா (😜) முரளீதரனின் செய்கைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லையே ?

 

ஐயா பிரபாகரா ! நீ எங்கேயய்யா இருக்கிறீர்? உன்னுடைய சனத்தின் கேவல நிலையை ஒரு தரம் திரும்பிப் பாருமையா!

இந்த கேடுகெட்ட இனத்துக்காகவா நீயும் உன்னுடைய பிள்ளைகளும் உயிர் கொடுத்தீர் !

கபித்தான், என்ன செய்வது। இப்படி இந்துக்கள் தனியே போனால் , கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் தனியேதான் போக வேண்டும்। வேறு ஏதும் வழி இருப்பதாக தெரியவில்லை।

பார்ப்பம் மாற்று  தலைமையும் வந்துவிட்ட்து।  இணையப்போராளிகளும் இருக்கிறார்கள்। அவர்களாவது எதாவது செய்யட்டும்।பிரபாகரன் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது।

Link to comment
Share on other sites

யுத்தம் நடந்த காலத்தில் இந்து குருமார் மக்களுக்காக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டதான எனக்கு ஞாபகம் இல்லை. ஒப்புக்கு சில சர்வமத பேரணிகளில் கலந்து கொண்டிருப்பார்கள். அதைக்கூட  ஒழுங்கு செய்தவர்கள் வேறு அமைப்புக்கள் தான். அதே வேளை யுத்த காலத்தில் ஐரோப்பிய பத்திரிகளில் புலிகளுக்கு எதிராகவும் தமிழரின் போராட்டதை கொச்சைப்படுத்தி  வந்த அத்தனை கட்டுரைகளுக்கும் மூலம் எது என்று பார்த்தால் அத்தனையும் டெல்லியில் இருந்து இந்து பார்பன பத்திரிகையாளர்களால் எழுத‍ப்பட்டவையாகவே இருந்தன.  இந்த லட்சனத்தில் தமிழர்களிடம் மத ரீதியான பிளவுகளை உருவாக்க  முனையும் இப்படியான மதகுருமார் என்ற விஷ செடிகளை தமிழ் மக்கள் இணைந்து தோற்கடிப்பதோடு நில்லாது வேரறுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

இந்த நிலைக்கு காரணம்.. சிக்கல்களை சரியாகக் கையாளத் தெரியாத... தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம் சும் மாவை சாவை கும்பலே.

அவர்கள்.. தமிழர்களை முற்றாக அரசியல் அநாதைகளாக்கும் வேலையையே 2009 மே க்குப் பின்னிருந்து செய்து வருகின்றனர்.

இது மிகவும் வருந்தத்தக்க விடயம். 

இதனைச் சீர்செய்ய வேண்டியது தமிழர் மண்ணின் மீது மக்கள் மீது பற்றுறுதி கொண்ட இளையோரே. 

 

ஆம், கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பின் தோல்வியே காரணம். அவர்கள் பதவியில் இருந்து மக்களை ஏமாற்றியதால் ஒரு அரசியல் தலைமை இல்லாத இனமாக மாறி உள்ளோம். 

விளைவு - இவ்வாறான தன்னிலை முன்னெடுப்பு. 

ஆனால், இறுதியில் நீங்கள் குறிப்பிட்டது போன்று, அடுத்த அரசியல் தலைமுறை உருவாக்கம் பெற இது வழிகோலுகின்றது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

fNeMN5.gifமன்னார்ஸ்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ, தமிழரசுகட்சி, த .தே. கூட்டணியில் எத்தனை கிறிஸ்தவ உறுப்பினர் இருக்கிறார்கள்? ஓரிருவரை தவிர எல்லோருமே இந்துக்கள் தானே. இதுபற்றி கிறிஸ்தவர்கள் யாரும் கவலைப்படவில்லையே. இப்போமட்டும் இந்துக்களுக்கு ஏனிந்த வீணான கவலை? முன்னாள்  மன்னார் ஆயர், சிங்கள அரசியலின் அநீதிகளை  எடுத்துக்காட்டும்போது கிறிஸ்தவன், இந்து என்கிற பேதம் இல்லாமல் தமிழர் என்கிற ஒருமைப்படியே நடந்தார். கிறிஸ்தவர்களில் என்ன பெரிய பிழையைக்கண்டு இப்பிடி பிரிச்சுக்கொண்டு நிக்கினம். பதவி, பணம், சொந்தப் புத்தி இல்லை.  மக்களை செம்மறிக் கூட்டம் எண்டு நினச்சு மேய்க்க நிக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:41 PM, குமாரசாமி said:

 இந்தியாவிலை இப்ப நடக்கிற இந்துமதம் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகள் சரியெண்டு சொல்ல வாறியள் 😁

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

 

On ‎2‎/‎18‎/‎2020 at 10:32 PM, Kapithan said:

எப்படி 

சாதிக்கொரு கட்சி, சமயத்திற்கு ஒரு கட்சி என்றா ?

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஓம் அண்ணா ...இல்லாட்டில் ஒரு காலத்தில் முஸ்லீம்களது நாடாயிருக்கும் 

 

குட்டக்  குட்ட ஓரளவுக்குத் தான் குனியலாம் 

சமயத்திற்கொரு கட்சிச்,  சாதிக்கொரு கட்சி தொடங்கலாம் என்கிறீர்கள். 

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 7:42 PM, Vankalayan said:

 நிச்சயமாக கத்தோலிக்க அணியில் வெல்லுபவர் அரசுடன் இணைவார் அதன் மூலம் மன்னர் மக்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்।

மன்னார் மறைமாவட்டத்தின் கவலை, உண்மையான எல்லா தமிழனுக்கும் உள்ள கவலை. வாக்குறுதிகளை காெடுத்து, வாக்கு வாங்கி பாராளுமன்றம் செல்பவர்கள் அந்த மக்களை, அவர்களது தேவைகளை தட்டி கழித்து, சர்வாதிகாரிகளைப் பாேல் அவர்களுக்கு பதிலளிப்பது ஏற்புடையதல்ல. அதனாலேயே இந்துவான விக்கினேஸ்வரனை அரசியலுக்கு காெண்டுவர ஊக்கம் காெடுத்தது. ஆனால் சதி எல்லாவற்றையும் பழைய நிலையிலிருந்து நகர விடவில்லை. அதனால் இப்படி சிந்தித்து செயற்பட்டு உரிமைகளை பெற நினைக்கலாமே ஒழிய, இந்துக்களுக்கு எதிராகவாே, அரச நன்மைகளுக்காகவாே செயற்படமாட்டார்கள். செயற்படவும் கூடாது. அப்படி செயற்பட்டால் அது உண்மையான கத்தாேலிக்க, அப்பாேஸ்தலிக்க திருச்சபையாகாது. சில விலைபாேனதுகள் அவ்வாறு கருதலாம் அல்லது அவர்களையும் மாற்ற நினைக்கலாம். அது தவறானது. சிலர் தீட்டிய மரத்தில் கூர் பார்க்க நினைத்து, அவதூறு செய்வதன் மூலம் தங்கள் சின்னத்தனத்தையும், நன்றிகெட்ட தனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

நானும் இரதியை ஓரளவு வளர்ந்தவர் என நினைத்திருந்தேன். இப்பத்தான் தெரிகிறது வினாயகமூர்த்தியருக்கு சிறிய வயதிலும் மகள் இருக்கிறார் என்று.

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.