Jump to content

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேச்சையாகப் போட்டியிட வைக்கத் தீர்மானம் - இந்து குருமார் பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

அது அவர்களின் தப்பல்ல, சுயநலத்திற்கு விலைபாேகிறவர்களின்பாெதுப்பண்பு.

எல்லோரிடமும் ஆகக் குறைந்த அளவிலேனும் பொது நலனில் அக்கறை இருக்க வேண்டும். அல்லது நாகரீகங்கள் கற்காலத்திற்கு திரும்புவது தவிர்க்க முடியாதது.

Link to comment
Share on other sites

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

’பிரிவினையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்’

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமையென, மன்னார் நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 24ஆவது அமர்வு, சபை மண்டபத்த்லி,  நேற்று (20) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் அரசியல் ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லையெனவும் இனியும் அவ்வாறான பிரச்சினைகள் நடக்க கூடாதெனவும் கூறினார்.

ஆன்மீகம் என்ற ரீதியில் அரசியல் செய்கின்றபோது, பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், அந்த வகையில், ஆன்மீகத் தலைவர்கள் சரியான முறையில் உணர்ந்து, மக்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, ஆன்மீகத்தையும் அரசியலையும் வைத்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்காமல் செயற்பட வேண்டுமெனவும், செல்வக்குமரன் டிலான் கேட்டுக்கொண்டார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பிரிவினையை-ஏற்படுத்துவதை-தடுக்க-வேண்டும்/72-245819

Link to comment
Share on other sites

47 minutes ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

 

😢😢😢😢😢😢😢😢😢😢😢

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

அவ்வாறு மாறுவதற்கு எந த புறக காரணிகளும் இல்லை. ஆர். எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு அது பொறுக்காமல் இப்படியான போலித்தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமிழ்மக்களிடம் இவ்வாறான மதரீதியான பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். எம்மிடையே சிறிய அளவில் ஊடுருவியுள்ள சங்க பரிவார விஷமிகளை களை எடுப்பதுதான் இவ்வாறான முரண பாடுகளை வேரறுக்க வழி. 

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

அவ்வாறு மாறுவதற்கு எந த புறக காரணிகளும் இல்லை. ஆர். எஸ் எஸ் பயங்கரவாதிகளுக்கு அது பொறுக்காமல் இப்படியான போலித்தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தமிழ்மக்களிடம் இவ்வாறான மதரீதியான பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள். எம்மிடையே சிறிய அளவில் ஊடுருவியுள்ள சங்க பரிவார விஷமிகளை களை எடுப்பதுதான் இவ்வாறான முரண பாடுகளை வேரறுக்க வழி. 

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

அப்படியானால் சிறுபான்மை மதமான சைவ சமயம் பவுத்த மதத்திற்கெதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

அப்படியானால் சிறுபான்மை மதமான சைவ சமயம் பவுத்த மதத்திற்கெதிராகத்தான் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அது தற்பாதுகாப்பு 'போராட்டமாக' இருப்பதில் தவறில்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

பௌத்த மதம்  ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

Link to comment
Share on other sites

22 hours ago, ampanai said:

சைவ/இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம். அந்த மதத்தை இலங்கையில் பின்பற்றுபவர்கள் பொதுவாக அரசியல் இல்லை தீவிரவாதம் என்பவற்றில் ஈடுபடுவதில்லை. அதை போதிப்பவர்களும் ஆத்மீகத்தை போதிப்பவர்களாக உள்ளார்கள். 

ஆனால், அவர்கள் இன்று மாற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், புறக்காரணிகள். 

நாம் நல்லவனாக இல்லை கெட்டவனாக வாழலாம் என்பது எங்களால் மட்டுமே முடிவெடுக்கப்படுவதில்லை. 

 

15 hours ago, ampanai said:

இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் அமைப்பின் சட்டங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சனநாயக நாடுகளில் உள்ள பண்பு. 

ஆனால், இலங்கையில் புத்த முதன்மை மதமாகவும், அரசியலில் ஈடுபடும்  மதமாகவும், வன்முறைகளில் ஈடுபடும் மதமாகவும் உள்ளது. அண்ணளவாக வருடம் ஒன்றிற்கு முன்னராக நடந்த உயிர்த்த ஞாயிறு படுகொலையில் இன்னொரு சிறுபான்மை மதமாகவும் மூன்றாவது சிறுபான்மை மதம் குறிவைக்கப்பட்டது. 

எனவே வேரறுப்பதில் அந்தந்த மதங்களிலும் செய்திருந்தால் இந்த மதமும் தானாக இருந்திருக்கும். 

ஆக. நான்காவது சிறுபான்மை மதம் மட்டும் தொடர்ந்தும் அமைதியாகவும் உரிமைகளை இழந்தும் மௌனமாக இருக்கும் என எதிர்பாக்க முடியாது. 

மனித வாழ்வுக்கு மதங்கள் ஏன் தேவை என்று கேள்வி எழுப்பும் போது மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன மதங்கள் அன்பை போதிக்கின்றன, மனித வாழ்வுக்கு மேலான கடவுளை அடைதல்  என்றெல்லாம் கூறும் அதை நம்பும் அதே  மதக்கருத்தியல் தான் மதங்களை காப்பாற்றும்  நோக்கத்திற்காக மனிதன் தனக்குள் சண்டையிடலாம் என்றும்  நல்லவனாக, அல்லது கெட்டவனீக வாழ்வது மற்றயவர்களால் தான முடிவெடுக்கப்படுகிறது என று வெறுப்பையும் விதைக்கிறது. என் மதம் உன் மதம. என்று தமக்குள ஈகோவை வளர்ககும் போதே ஆன்மீகம் அவர்களுக்குள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  

இவ்வாறான தாம் முன்பு சொன்னதையே வெட்கமின்றி மறுதலிப்பது மதங்களின் இயல்பு. கடவுளுக்கு  எல்லாம் தெரியும்.உலகில் வாழும் எல்லல ஜீவராசிகளையும் அவனே படைத்தான். அனைத்தும் அறிந்தவன் அவன்  என்று  பக்தர்களை நம்ப வைத்த அதே கும்பல் தான் கடவுளுக்கு தமிழ் தெரியாது. தமிழில் பூசை செய்தால் கடவுளுக்கு புரியாது  சமஸ்கிரகத்தில் மட்டும் தான் பூசை செய்ய வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில்  கூறி பகதர்களை நம்ப வைத்துள்ளது. சிந்திக்கும் ஆற்றலை இழந்து இரண்டையும் ஒரே நேரத்தில்  நம்பும்  கூட்டம் தான் பக்த கூட்டமாக உள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

பௌத்த மதம்  ஒரு சிறுபான்மை மதம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், வெளிப்புறம்

சிரிப்பொலி,
காமெடி பஜார்,
கோமாளிபாக்கம்,
கொழும்பு 🙂 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

 

மனித வாழ்வுக்கு மதங்கள் ஏன் தேவை என்று கேள்வி எழுப்பும் போது மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன மதங்கள் அன்பை போதிக்கின்றன, மனித வாழ்வுக்கு மேலான கடவுளை அடைதல்  என்றெல்லாம் கூறும் அதை நம்பும் அதே  மதக்கருத்தியல் தான் மதங்களை காப்பாற்றும்  நோக்கத்திற்காக மனிதன் தனக்குள் சண்டையிடலாம் என்றும்  நல்லவனாக, அல்லது கெட்டவனீக வாழ்வது மற்றயவர்களால் தான முடிவெடுக்கப்படுகிறது என று வெறுப்பையும் விதைக்கிறது. என் மதம் உன் மதம. என்று தமக்குள ஈகோவை வளர்ககும் போதே ஆன்மீகம் அவர்களுக்குள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  

இவ்வாறான தாம் முன்பு சொன்னதையே வெட்கமின்றி மறுதலிப்பது மதங்களின் இயல்பு. கடவுளுக்கு  எல்லாம் தெரியும்.உலகில் வாழும் எல்லல ஜீவராசிகளையும் அவனே படைத்தான். அனைத்தும் அறிந்தவன் அவன்  என்று  பக்தர்களை நம்ப வைத்த அதே கும்பல் தான் கடவுளுக்கு தமிழ் தெரியாது. தமிழில் பூசை செய்தால் கடவுளுக்கு புரியாது  சமஸ்கிரகத்தில் மட்டும் தான் பூசை செய்ய வேண்டும் என்பதையும் ஒரே நேரத்தில்  கூறி பகதர்களை நம்ப வைத்துள்ளது. சிந்திக்கும் ஆற்றலை இழந்து இரண்டையும் ஒரே நேரத்தில்  நம்பும்  கூட்டம் தான் பக்த கூட்டமாக உள்ளது. 

துல்பன்,
நீங்கள் மதத்தை பற்றி கூறும் கருத்துக்கள் உயர்ந்தவையாகவும் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், நாம் இருக்கும் இடத்திற்கு அது சரி வருமா என்பதே வினா? இல்லை அந்த மாற்றம் அவர்களுக்குள்  இருந்து வர வேண்டும். 

உதாரணத்திற்கு, ஒருவருக்கு தமிழ் தெரியும் என்பதை விட அதை எங்கே எப்படி யாரிடம் எதை பேச வேண்டும் மற்றும் எதை பேசக்கூடாது என்பது முக்கியமானது. 

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.