Jump to content

ஹோர்மோன்களின் தொழிற்பாடு சீராக இல்லாமைக்கான காரணங்கள்


Recommended Posts

உடலில் ஹோர்மோன்கள் சீரற்ற நிலையில் காணப்படுமாயின் அதன் விளைவாக உடல், உள மற்றும் உணர்வு ரீதியாகப் பலவிதமான பிரச்சினைகள் வெளிப்படும். அதன் காரணத்தினால் போஷாக்கான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இப்பிரச்சினையைத்  தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதன் ஊடாக ஹோர்மோன்கள் சீராக இயங்கவும் வழிவகுக்கும்.  

அதன் காரணத்தினால் அன்றாட உணவில் புரதச் சத்தைக் கொண்ட உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஊடாக பசியின்மையைத் தவிர்த்துக் கொள்ளலாம். புரதச்சத்தானது பசி உணர்வை சீராக இயங்க வைக்கப் பெரிதும் உதவதோடு ஹோர்மோன் தொழிற்பாட்டுக்கும் பக்க துணையாக அமையும். அதனால் நாளாந்தம் ஒவ்வொரு உணவு வேளையிலும் 20 -, 30கிராம் அளவு புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் உணவு வேளையை அமைத்துக்கொள்வதே சிறந்ததாகும். அப்போது அதிக பசி ஏற்படவும் மாட்டாது. பசி ஏற்பட்டாலும் அது தொல்லையாகவும் அமையாது.  

மேலும், உடலில் இன்சுலின் அளவு சீராக சுரப்பதற்கு அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது பெரிதும் பயன்மிக்கதாக இருக்கும். குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை உரிய அளவில் பேணி அவற்றை சக்தியாக மாற்றுவதற்கும் உடற்பயிற்சி பெரிதும் உதவும். இது தொடர்பில் அதிக உடல் பருமன் கொண்ட பெண்கள் சிலரில் 24வாரங்கள் உடற்பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன் படி அவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது உடற்பயிற்சி இன்றி இருக்கும் பெண்களை விடவும் உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களின் உடலில் இன்சுலினின் செயற்பாடு ஒழுங்குமுறையாக இருப்பதும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  

ஆனால் உடல் பருமன் அதிகரிக்கும் போது ஹோர்மோன் தொழிற்பாட்டிலும் சீரின்மை ஏற்படலாம். இன்சுலின் சுரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டு நீரிழிவும் ஏற்பட முடியும். இவ்வாறான உபாதைகளை தவிர்ப்பதற்கும் உடற்பயிற்சி பெரிதும் உதவ முடியும்.  

இவை இவ்வாறிருக்க, மன அழுத்தத்திற்கான ஹோர்மோன்கள் அதிகம் தூண்டப்படுமாயின் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இதற்கு இன்றைய பரபரப்பான வாழ்க்கை அமைப்பு பெரிதும் உதவக்கூடியதாகவே உள்ளது. ஆனால் அந்த வாழ்க்கை முறைமையிலிருந்து விடுபடுவதே ஆரோக்கியத்திற்கு உகப்பானதாக அமையும். ஏனெனில் மன அழுத்தத்திற்கான ஹோர்மோன் அதிகம் சுரக்குமாயின் உயர் குருதியழுத்தம், இதய துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படல், கவலை, பயம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும். அதனால் பரப்பான வாழ்க்கையமைப்பிலிருந்து வெளியேறி உள அமைதி மிக்க வாழ்க்கை அமைப்பில் ஈடுபடுவதே உடல், உள ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்ககூடியதாக இருக்கும்.  

அதேநேரம் உடல், உள ஆரோக்கியத்திற்கு உகப்பான முறையில் ஹோர்மோன்கள் தொழிற்படவென உணவு பழக்கவழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பை உடலில் அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது.  

என்றாலும் சிலர் எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பர். மூன்று வேளை உணவுக்கு மேலதிகமாக இடையிடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டிருப்பர். இதன் விளைவாக உடல் பருமனாகி ஹோர்மோன்களிலும் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக மிகக் குறைவாக சாப்பிட்டால் போதுமானளவு சத்துகள் உடலுக்கு கிடைக்காமல் போகலாம். அதனால் ஒரு நாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட சத்தான உணவு வகைகளை சாப்பிட்டால் போதும். அதன் மூலம் உடலுக்கு தேவையான அளவு சக்தி கிடைக்கப்பெறும். அத்தோடு ஹோர்மோன்களின் சீரான தொழிற்பாட்டுக்கு ஏற்ப செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளவும் தவறக்கூடாது. அதன் மூலம் உடல், உள ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 

http://www.thinakaran.lk/2020/02/08/சுகாதாரம்/48079/ஹோர்மோன்களின்-தொழிற்பாடு-சீராக-இல்லாமைக்கான-காரணங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.