Jump to content

பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.”

3N7A2698-scaled.jpg?zoom=2&resize=1200,5

தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு ஒரு …… நிற்கிறது என்று கூறியிருப்போம். சில வேளைகளில் சிலர் இப்படி எம்மிடம் சொல்லுவதையாவது கேட்டுமிருப்போம். தொழில்களை சாதியாக்கி அதனை சண்டைகள் வரை கொண்டு சென்ற நமக்கு அன்றிலிருந்தே பாலியல் தேவைக்கென குறிப்பிட்ட பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் நாமனைவரும் அறிந்த விடயமே. உழைப்பிற்கு அல்லது சேவைக்கு ஊதியம் பெறப்படின் அதனை தொழில் என வரையறுக்கும் நாம் ‘விபச்சாரம்’, ‘விபச்சாரி’ (இப் பெண்பால் சொல்லிற்கான ஆண்பால் சொல் என்ன என்பது கூட தெரியாது. ஆனால் பல நாடுகளில் ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்) என்கின்ற பதங்களைக் தவிர்த்து ‘பாலியல் தொழிலாளி’ என்கிறதான சொற்பதங்களை கையாள முயல்வதே நம் முதற்கண் நாகரீகம் என கருத வேண்டும். பாலியல் தொழிலை சட்டமாக்குவதற்கான விவாதங்கள் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை பல நாடுகள் அதனை சட்டபூர்வமானதாக்கி பாலியல் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகின்றன.”பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்படல் வேண்டுமா?” என்கின்ற வினாவை இம்முறை இரு பாலியல் தொழிலாளிகளிடம் கட்டுரைக்காக அணுகி கேட்டிருந்தோம்.

மல்வந்தி (வயது – 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது)

பதினெட்டு வயதில் திருமணமாகி இன்று நான் இரு குழந்தைகளுக்கு தாய்.  கடைசிக்குழந்தை வயிற்றிலிருக்கும் போது எனது கணவரை போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுபண்ணி விட்டார்கள். தற்போது வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குழந்தை பிறக்கும் வரை எம்மிடம் இருந்த நகைகள் பொருட்களை வைத்து காலந்தள்ளினோம். பின்னர் ஒன்றும் செய்ய என்னால் முடியவில்லை. பிள்ளைகளுக்கும் கணவரின் வழக்கு செலவிற்கும் நிறைய பணம் தேவைப்பட்டது. தெரிந்தவர்களும் பெரிதாக உதவி செய்ய முன்வரவில்லை. எனக்கும் படிப்பறிவு இல்லை. கணவர் முன்னர் வேலை செய்த முதலாளியிடம் உதவி கேட்டேன். சிறிதளவு பணம் தந்தார். மறுபடியும் உதவி செய்ய வேண்டும் எனின் தன்னுடைய பாலியல் தேவைக்கு உடன்படுவதாயின் தருவதாக சொன்னர். எனக்கும் ஆரம்பத்தில் தயக்கமாகவிருந்தாலும் குறைந்தபட்சம் என் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காகவது பணம் தேவையாயிருந்தது. தற்கொலை செய்யவும் முயற்சித்தேன். அதுவும் முடியவில்லை. இறுதியில் அந்த முதலாளியின் விருப்பத்திற்கு உடன்பட்டேன். ப்பணம் கிடைத்தது. அவர் மூலம் அவரது நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவர்களது பாலியல் தேவைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் மேலும் சம்பாதிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் என்னுடைய ஊரிலிருந்து இவ்வாறான தொடர்புகளை மேற்கொள்ள முடியவில்லை. பின்னர் தலைநகருக்கு வந்து வீதிகளில் நின்று ஆட்களைப் பிடிக்கிறேன்.  கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு தான் சம்பாதிக்கிறேன். ஊரிலிருந்து இத்தொழிலை செய்தால் என் இரு பெண் பிள்ளைகளினதும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் இங்கு வந்து போவது நல்லதெனப்படுகிறது. பிள்ளைகளை எங்கள் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுவிட்டு காலையில் வேலைக்கு போவதாக கூறி இங்கு வருவேன். மாலையில் பெரும்பாலும் ஆறு மணிக்கு முன் வீடு சென்று விடுவேன். யாரும் சந்தேகப்படவில்லை. கொழும்பிலுள்ள கடையொன்றில் வேலை செய்வதாக தான் நினைக்கிறார்கள்.

கேள்வி: இது பற்றி உங்கள் கணவருக்கு தெரியுமா?

பதில்: (முதலில் சிரித்து பின்னர் கைகளை பிசைந்த படி கலங்கிய கண்களுடன்…) ஒருநாள் கணவரைச் சந்திக்க சிறை சென்றபோது சொல்லி விட்டேன். இரண்டு மூன்று தடவைகள் பார்க்க சென்றபோது கோபத்தில் பேசவில்லை… பிறகு சரி… குடும்பம் பற்றி கவலை இருந்திருந்தால் இப்படி குடு வேலைக்கு போய் மாட்டி எங்கள நடுத்தெருவில விட்டுட்டு போயிருப்பாரா?

கேள்வி: பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் குறித்த வைத்திய பரிசோதனைகள் செய்வதுண்டா?

பதில்: இல்லை… அந்தப் பரிசோதனைகள் எங்கு செய்கின்றார்கள் என்று தெரியாது. அதிகளவு பணம் கொடுத்து செய்ய எங்களைப் போன்றவர்களிடம் பணம் இல்லை. (தனது கைகளைத் திருப்பிக்காட்டியபடி…) இப்படி ஏற்படுகின்ற காயங்களுக்கு மட்டும் மருந்து ஏதும் கட்டுவதுண்டு…

கேள்வி: காயங்களா?

பதில்: ம்ம்ம்ம்…..பாலியல் தொழிலுக்காக வருகிறவர்கள் சில நேரங்களில் எம்மை அடித்துத் துன்புறுத்துவதுமுண்டு. அப்படி வருகின்ற காயங்கள் தான் இவை…

கேள்வி: பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்குவதில் உங்கள் கருத்து?

பதில்: அப்படி ஆக்கினால் நல்லம் தான். மருந்துகளை நாங்கள் எடுக்க முடியும்…. கொஞ்சம் மரியாதையும் கிடைக்கும்….

###

சாமிலி (வயது 41, பெயர் மாற்றப்பட்டுள்ளது)

என்னுடைய தாயாரும் ஒரு பாலியல் தொழிலாளிதான். அப்பாதான் என் அம்மாவை வற்புறுத்தி இத்தொழிலுக்கு அனுப்பினார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவை எமக்கு தந்துவிட்டு அவர் மிச்சத்தினை வைத்து தொடர்ந்து குடிப்பார், சூதாடுவார். எனக்கு 16 வயதிருக்கும்போது அம்மாவுக்கு திடீரென்று கடுங்காய்ச்சல் வந்தது. நான்கு நாட்களில் இறந்துவிட்டார். பிறகு நானும் அம்மாவைப் போல் இத்தொழிலுக்கு வந்துவிட்டேன். என்னுடைய சகோதரர்கள் இருவரை படிப்பித்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆனால், என்னை சகோதரி என்றே சொல்ல மாட்டார்கள். அவர்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயம்.

கேள்வி: பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் குறித்த வைத்திய பரிசோதனைகள் செய்வதுண்டா?

பதில்: என் உள்ளுறுப்புகளில் ஒருவித தொற்று ஏற்பட்ட போது மருத்துவரிடம் சென்று மருந்தெடுத்துள்ளேன். இரத்தப்பரிசோதனை எல்லாம் செய்ததில்லை. இரு முறை கருக்கலைப்பும் செய்துள்ளேன். அதில் முதல் முறை அதிக இரத்தப்பெருக்காகி கடும் கஸ்டப்பட்டுவிட்டேன்.

கேள்வி: பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்குவதில் உங்கள் கருத்து?

பதில்: நல்லம்தான், இப்போது நாம் வீதியில் நின்று இந்த தொழிலைச் செய்கின்றோம். யாருடனாவது விடுதிகளுக்கு போய் விட்டால் பொலிஸார் வந்து விடுவார்கள். எம்மிடம் பணம் கேட்பார்கள். கொடுக்காவிட்டால் வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தி ஏற்றிப்போவார்கள். அவர்களிடம் இருந்து விடுதலையாகி வருவதற்கு செலவளிப்பதை விட கேட்கும் போது கொடுத்து விட்டால் நல்லம் என்று தான் நினைத்துக்கொடுப்போம்.

தொழில்செய்யும் ஒரு பிள்ளையை வந்தவன் அடிச்சு கையில் சிகரெட்டால் சுட்டு காசையும் பறிச்சிட்டான். அந்தப்பிள்ளையுடன் நானும் பொலிஸுக்கு போய் முறையிட்டம். தொழில் செய்றவங்கள் இதெல்லாம் தாங்கத்தான் வேணும், எங்களுக்கு பணம் தரவேணும் இல்லாட்டி ஏதாவது செய்வம் என்று பொலிஸாரும் பணம் வாங்கிவிட்டார்கள். கடைசியில் நீதி கிடைக்கல, இருந்த பணமும் பொய்ட்டுது. நாம் இதனை செய்ய அனுமதி கிடைத்தால் இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.

இவ்வாறான பல மல்வந்திக்களும் சாமிலிக்கலும் எம் தெருக்களில் நின்றுகொண்டு தம் அன்றாட வாழ்விற்காக பாலியல் தொழில் செய்துகொண்டுதானிருக்கின்றார்கள். இப்பாலியல்  தொழிலினை சட்டபூர்வமானதாக்குவதன் மூலம் மற்றும் நிர்வாக அலகாக ஸ்தாபிப்பதன் மூலம்

  • பாதுகாப்பான உறவிற்கான பாலியல் கல்வியை வழங்கலாம்
  • வயதெல்லைகளை நிர்ணயிப்பதன் மூலம் சிறுவர்கள் இத்தொழிலிற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை அல்லது கடத்தப்படுவதை (Child Trafficking) தடுக்கலாம்.
  • சட்ட பூர்வமானதாக்கி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்கினால் பாலியல் தொழிலாளிகள் சித்திரவதைக்கு உள்ளாவதைத் தடுக்கலாம். குறைந்தபட்சம் சித்தரவதைக்குள்ளாவதைக் குறைக்கலாம்.
  • அனுமதிக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பாலியல் தொற்றுக்கள் மற்றும் நோய்களைத் தடுக்கலாம் அல்லது வெகுவாகக் குறைக்கலாம்.
  • இலங்கை போன்ற சுற்றுலாத்துறை சார் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நாடுகள் இத்தகைய பாலியல் சார் தொழில்களை சட்டபூர்வமானதாக்குவதன் ஊடாக பாலியல் சார் வன்முறைகள், சித்திரவதைகளைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நிவர்த்திக்கவும் முடியும்.
  • சட்டவிரோதமாக நடாத்தப்படுகின்ற இவ்வாறான விடயங்களில் தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி சுரண்டல்களை மேற்கொள்கின்றவர்களிடமிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க முடியும்.

பாலியல்சார் தேவைகளாயினும் சரி தொழிலாயினும் சரி காலங்காலமாக மாறாததொன்று. இதனை சட்டபூர்வமானதாக்கினாலும் இல்லாவிட்டாலும் இத்தொழில் குறைவடையவோ நிறுத்தப்படவோ போவதில்லை. இதில் ‘கலாசாரம்’ என்பதைக் காட்டி எதுவும் ஆகிவிடப்போவதுமில்லை. குறைந்தபட்சம் நாட்டு மக்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொடுப்பது அரசின் தலையாய கடமையல்லவா….

கேஷாயினி எட்மண்ட்

https://maatram.org/?p=8315

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kavi arunasalam said:

இலங்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.

http://www.dailymirror.lk/breaking_news/Not-an-offence-to-earn-a-living-by-prostitution-Fort-Magistrate/108-183325 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இலங்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.

நிச்சயமாக இலங்கையில் இது சாத்தியம். ஏனென்றால் தமிழர்களைவிட சிங்களவரிடையே மாற்றங்கள் வேகமாக இடம்பெறுகின்றன. 

(நாங்கள் எப்போதும் பின்னோக்கி சிந்தித்துத்தானே பழக்கம்😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இலங்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பு இல்லை என்று அவர் யாழ்பாணத்தை தான் சொல்லி இருப்பார் அங்கே தான் துப்பறியும் நிபுணர்கள் காவலர்கள் எல்லாம் இருக்கிறார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் இது சாத்தியப்பட வாய்ப்பு இல்லை என்று அவர் யாழ்பாணத்தை தான் சொல்லி இருப்பார் அங்கே தான் துப்பறியும் நிபுணர்கள் காவலர்கள் எல்லாம் இருக்கிறார்கள் 😂

நோ மோ(ர்) பச்சை 😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு 
தீமை காடு தீ போல பரவும் என்பதுதான் எச்சரிப்பாக இருக்கிறது 

வியட்நாம் போர் நடந்த போது 
அமெரிக்க இராணுவத்தினருக்கு ஒருவார இரண்டு வார விடுமுறையில் 
தாய்லாந்து கொண்டுவருவார்கள் ... பின்பு அமெரிக்க இராணுவம் வருகிறது 
டொலரில் காசு கொடுக்கிறார்கள் என்று பலர் பெண்களை அழைத்து வர தொடங்கினார்கள் 
அப்படிதான் மிக சாதாரணமாக தொடங்கியது .... 

இன்று (ஒருவருடம் முன்பு) ஒரு வேலை விடயமாக தாய்லாந்து செல்ல இருப்பதாக 
நண்பன் ஒருவனுக்கு தொலைபேசியில் சொன்னேன் ...
அவன் ... வேலை விஷயம் என்றால் தாய்லாந்துதான் நல்ல இடம் என்று சொன்னான் 
நான் பால் குடித்தாலும் நிற்கப்போவது பனைக்கு கீழ் என்பதால் .. அந்த பயணத்தை நிறுத்திவிடடேன். 
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் ......

இலங்கையின் பூகோள அமைவு ... சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகள் 
பொருளாதார வளர்ச்சி ... சட்ட ஒழுங்கு .... துப்பரவு சுற்றுலா .... சீனர்களின் வருகை 
என்பது இதை ஒரு குறிப்பிட்ட நாளில்  வேறு ஒரு நிலைக்கு மாற்றிவிட்டு இருக்கும்.

நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் 
ஏழைகள் இன்னமும் ஏழைகள் ஆகுவார்கள் ... சாதாரண பாண் வாங்கவே 
சிறுவர்களை பாலியலுக்கு தள்ளும்  பிலிப்பைன்ஸ் கம்போடியா இந்தோனேசிய 
என்ற நிலைக்கு ஏழைகளை தள்ளிவிடும். 

இப்போது இந்த தெருக்களில் திரியும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை 
அல்லது ஒரு தொழில் வாய்ப்பை அரசு செய்யவேண்டும் என்பது என்னவோ உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சட்டங்களை பொறுத்தவரை , வருமானத்தை ஈட்டும் பொருட்டு தனியொருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகாது , அதனை பலபேர் கொண்ட நிறுவனமயமாக்கினால் மட்டுமே அது சட்டத்திற்கு எதிரானது என்று மிக அண்மையில் கொழும்பு நீதிவான் ஒருவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்। 

பார்க்க:    http://www.dailymirror.lk/breaking_news/Not-an-offence-to-earn-a-living-by-prostitution-Fort-Magistrate/108-183325

 

Fort Magistrate Ranga Dissanayake acquitted a woman arrested in a brothel on charges of prostitution said it was not considered an offence in Sri Lanka for a woman to earn a living through prostitution but however it was an offence to operate a brothel…..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இதில் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு 
தீமை காடு தீ போல பரவும் என்பதுதான் எச்சரிப்பாக இருக்கிறது 

வியட்நாம் போர் நடந்த போது 
அமெரிக்க இராணுவத்தினருக்கு ஒருவார இரண்டு வார விடுமுறையில் 
தாய்லாந்து கொண்டுவருவார்கள் ... பின்பு அமெரிக்க இராணுவம் வருகிறது 
டொலரில் காசு கொடுக்கிறார்கள் என்று பலர் பெண்களை அழைத்து வர தொடங்கினார்கள் 
அப்படிதான் மிக சாதாரணமாக தொடங்கியது .... 

இன்று (ஒருவருடம் முன்பு) ஒரு வேலை விடயமாக தாய்லாந்து செல்ல இருப்பதாக 
நண்பன் ஒருவனுக்கு தொலைபேசியில் சொன்னேன் ...
அவன் ... வேலை விஷயம் என்றால் தாய்லாந்துதான் நல்ல இடம் என்று சொன்னான் 
நான் பால் குடித்தாலும் நிற்கப்போவது பனைக்கு கீழ் என்பதால் .. அந்த பயணத்தை நிறுத்திவிடடேன். 
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் ......

இலங்கையின் பூகோள அமைவு ... சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகள் 
பொருளாதார வளர்ச்சி ... சட்ட ஒழுங்கு .... துப்பரவு சுற்றுலா .... சீனர்களின் வருகை 
என்பது இதை ஒரு குறிப்பிட்ட நாளில்  வேறு ஒரு நிலைக்கு மாற்றிவிட்டு இருக்கும்.

நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும் 
ஏழைகள் இன்னமும் ஏழைகள் ஆகுவார்கள் ... சாதாரண பாண் வாங்கவே 
சிறுவர்களை பாலியலுக்கு தள்ளும்  பிலிப்பைன்ஸ் கம்போடியா இந்தோனேசிய 
என்ற நிலைக்கு ஏழைகளை தள்ளிவிடும். 

இப்போது இந்த தெருக்களில் திரியும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை 
அல்லது ஒரு தொழில் வாய்ப்பை அரசு செய்யவேண்டும் என்பது என்னவோ உண்மைதான். 

நாங்க நம்பீட்டம் 😜😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் தொழில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். அது சமூகங்களை பல்வேறு வடிவங்களில் சீர்குலைக்கும் ஒரு தொழில்.

மேலும் பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தொழிற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டும்.. நிரந்தர தொழில் பெறும் வரை அவர்களின் குடும்பப் பராமரிப்புக்கு அரசு நிதி வழங்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பாலியல் தொழில் முற்றாக தடை செய்யப்பட வேண்டும். அது சமூகங்களை பல்வேறு வடிவங்களில் சீர்குலைக்கும் ஒரு தொழில்.

மேலும் பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தொழிற்பயிற்சி மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டும்.. நிரந்தர தொழில் பெறும் வரை அவர்களின் குடும்பப் பராமரிப்புக்கு அரசு நிதி வழங்க வேண்டும். 

நேற்று தொலைக்காட்சியில் "Escort  Documentary" பார்த்தேன்.

 நடுத்தர வயது பெண்ணொருவருடனும் இளவயது ஆண் ஒருவருடனும் பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். பெண்கள் ஆண்களை விட கூடுதலாக உழைக்கிறார்கள்.  ஒரு வார இறுதிக்கு பெண்மணி $2400 ம் ஆண் $1500 அளவிலும் அறவிடுகிறார்களாம்.  இதுவே மணிக்கணக்கு என்றால் ரேட் கூட ।
இந்த தொழிலை இல்லாமல் செய்வது சாத்தியமில்லை , பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லோரும் கைக்கொள்வதை உறுதி செய்வதே நடைமுறையில் சாத்தியமான விடயமாக இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சாமானியன் said:

நேற்று தொலைக்காட்சியில் "Escort  Documentary" பார்த்தேன்.

 நடுத்தர வயது பெண்ணொருவருடனும் இளவயது ஆண் ஒருவருடனும் பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். பெண்கள் ஆண்களை விட கூடுதலாக உழைக்கிறார்கள்.  ஒரு வார இறுதிக்கு பெண்மணி $2400 ம் ஆண் $1500 அளவிலும் அறவிடுகிறார்களாம்.  இதுவே மணிக்கணக்கு என்றால் ரேட் கூட ।
இந்த தொழிலை இல்லாமல் செய்வது சாத்தியமில்லை , பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லோரும் கைக்கொள்வதை உறுதி செய்வதே நடைமுறையில் சாத்தியமான விடயமாக இருக்கும்...

ஐயா, Escort services உயர்தர மக்களுக்கான சேவை! வெளியே போகும்போது கொம்பனி கொடுக்கவும் தனியே இருக்கும்போது கொம்பனி கொடுக்கவும் பெருந்தொகை அறவிடுவார்கள்.

மேலே கட்டுரையில் உள்ளவர்கள் விளிம்புநிலை மக்கள். எதுவுமற்றவர்கள். அவர்களை வாடிக்கையாளர்களும் சுரண்டுவார்கள், கொடுமைப்படுத்துவார்கள். போலிஸும் இருப்பதையும் பறித்துக்கொள்ளும். 

சட்டபூர்வமாக்கினால் சுரண்டல் குறையும் என்பதால் விபச்சாரத்தை சட்டபூர்வமாக ஒரு தொழிலாக மாற சுரண்டிப்பிழைப்பவர்கள் விடமாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

நேற்று தொலைக்காட்சியில் "Escort  Documentary" பார்த்தேன்.

 நடுத்தர வயது பெண்ணொருவருடனும் இளவயது ஆண் ஒருவருடனும் பேட்டி கண்டு போட்டிருந்தார்கள். பெண்கள் ஆண்களை விட கூடுதலாக உழைக்கிறார்கள்.  ஒரு வார இறுதிக்கு பெண்மணி $2400 ம் ஆண் $1500 அளவிலும் அறவிடுகிறார்களாம்.  இதுவே மணிக்கணக்கு என்றால் ரேட் கூட ।
இந்த தொழிலை இல்லாமல் செய்வது சாத்தியமில்லை , பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லோரும் கைக்கொள்வதை உறுதி செய்வதே நடைமுறையில் சாத்தியமான விடயமாக இருக்கும்...

ஈழத்தில் போராளிகளின் காலத்தில் பாலியல் தொழில் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தது. மேல் எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களின் தாக்கம் இருக்கவே இல்லை.

எதையும் சாத்தியமா என்றத்தில் இருந்து ஆரம்பிக்காமல்.. தேவையில் இருந்து ஆரம்பிப்பதே சிறப்பு.

விபச்சாரத்தை அடியோடு அழிக்க முடியும். ஒரு வளமான சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்..

எப்போது என்றால்.. விபச்சாரத்தின் தேவையை நோக்கி ஓடும் பெண்களினதும் ஆண்களினதும் தேவையை சரியான வழியில் இனங்கண்டு தீர்த்து வைப்பதன் மூலமும் இறுக்கமான சட்ட அமுலாக்கம் மூலமுமே... ஆகும். 

மாறாக விபச்சாரத்தை சட்ட ரீதியாக்கிவிட்டு.. சமூகச் சீரழிவுகளை இன்னும் இன்னும் தலைமேல் சுமக்கக் கூடிய அளவுக்கு எமது சமூகங்கள் பொருண்மிய பலம் பொருந்தியவை அல்ல.

செயராலியோன் எனும் ஆபிரிக்க தேசம்.. விபச்சாரத்தால் சீரழிந்த தேசமாகி கிடக்கிறது. அங்கு மக்கள் தொகையில் பாதிப்பேர் எயிட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களோடு போராடிக் கொண்டிருக்கின்றனர். 

விபச்சாரம் சட்டமாக்கப்பட்ட மேற்குலக நாடுகளில் விபச்சாரத் தொழில் முகவர்களின் சுரண்டல்கள்.. ஆட்கடத்தல்கள்.. தொடர் கொலைகள்.. சித்திரவதைகள்.. பால்வினை நோய்களின் தாக்கம் என்பன இன்றும் அரசுக்கும் சமூக அமைப்புகளுக்கும் தலையிடியான விடயமாகவே உள்ளன.

ஆகவே இவற்றை சட்டமாக்கி.. சமூகத்தை சீர் செய்ய முடியாது. இல்லாதொழிப்பதன் மூலமே சமூகத்தை இவை சீண்டாதிருப்பதை உறுதி செய்ய முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.