Jump to content

புதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

marine-engineering-1.jpg

புதுச்சேரியிலிருந்து யாழிற்கு விரைவில் கப்பல் சேவை

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மேலும்  தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/புதுச்சேரியிலிருந்து-யா/

Link to comment
Share on other sites

பலாலிக்கான விமான சேவையை ஆரம்பித்த நல்ல விடயம் முடக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று சிங்களம் இதையும் வளர விடாமல் தடுக்காமல் இருக்கவேண்டுமே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநள்ளாறு உட்பட நவக்கிரக சுற்றுலாவுக்கு அடி போடுகினம் போல் கிடக்கு..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

திருநள்ளாறு உட்பட நவக்கிரக சுற்றுலாவுக்கு அடி போடுகினம் போல் கிடக்கு..👍

புதுச்சேரி என்றால் ஊர் திரும்பும்போது நடையில் ஒரு தள்ளாட்டமும் வருமோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

புதுச்சேரி என்றால் ஊர் திரும்பும்போது நடையில் ஒரு தள்ளாட்டமும் வருமோ😂

PresentAlarmingKingfisher-size_restricte

டெபநேட்லி ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரிக்கு போய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இலங்கையர் எவரையும் இது வரை நான் சந்திக்கவில்லை. ஒரு வேளை புதுச்சேரிகாரர்களுக்கு யாழ்பாணம் போய் பார்க்க ஆசைவந்துவிட்டதோ!

1 hour ago, goshan_che said:

புதுச்சேரி என்றால் ஊர் திரும்பும்போது நடையில் ஒரு தள்ளாட்டமும் வருமோ😂

தமிழ்நாட்டிலும் மதுவிற்கு அனுமதி உண்டுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

புதுச்சேரிக்கு போய் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இலங்கையர் எவரையும் இது வரை நான் சந்திக்கவில்லை. ஒரு வேளை புதுச்சேரிகாரர்களுக்கு யாழ்பாணம் போய் பார்க்க ஆசைவந்துவிட்டதோ!

தமிழ்நாட்டிலும் மதுவிற்கு அனுமதி உண்டுதானே

புதுச்சேரியில் வரி குறைவு அதனால் விலையும் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழன் காலத்திலிருந்து இந்த கப்பல் சிங்கள ஜனதாவை பயமுறுத்திகொண்டு தான் இருக்கு

Link to comment
Share on other sites

On 2/19/2020 at 10:02 AM, தமிழ் சிறி said:

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

அழிவுச் சிந்தனை நிறைந்த ஹிந்தியனின் கனவுகளில் எதுவும் உருப்படியாக நடந்ததில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.