Jump to content

யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருங்கிவிட்ட மாற்றுத் தலைமை(கள்)

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 பெப்ரவரி 19

தமிழ்த் தேசிய அரசியலில், மாற்றுத் தலைமை(களு)க்கான வெளி, யாழ். தேர்தல் மாவட்டத்திலுள்ள ஏழு நாடாளுமன்ற ஆசனங்களுக்குள் மெல்ல மெல்லச் சுருக்கப்பட்டுவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள் முன்னெடுத்துவரும் அரசியல், இதைத்தான் உணர்த்துகிறது.   

அவ்வாறான கட்டத்தில் இருந்துதான், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களும் அதன் ஆதரவுத் தரப்பினரும், எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சந்திக்கப் போகிறார்கள்.  

அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடத்துணியும் சமூகங்களிடம், விடுதலைக்கான சித்தாந்தமும் அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் அவசியமாகும். 

விடுதலைக்கான சித்தாந்தம் என்பது, ஒரு சமூகத்துக்குள் காணப்படும் அக முரண்பாடுகளை, தர்க்க நியாயங்களோடு களைவதாகவும் இருக்க வேண்டும். (அக முரண்பாடுகள் என்பது சாதி, சமய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளைக் கொண்டதாகக் கூட இருக்கலாம்)   
அதுதான், அந்தச் சமூகத்தின் சித்தாந்த அரசியலை ஒருங்கிணைக்கவும் தக்க வைக்கவும் உதவும். மாறாக, ஒரு பிரதேசம், மதம், சாதி,  வர்க்கம் ஆகியவற்றின் பிடியில் எழும் அரசியல், எப்போதும் சுயநல அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கும்.  

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, சித்தாந்த அடிப்படையில் தோற்றம் பெற்ற ஒன்றுதான். பௌத்த, சிங்கள பேரினவாதம், மூர்க்கம் பெற்ற தருணத்தில், அதற்கு எதிரான திரட்சியை, தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் அடிப்படைகளோடு எழுந்தது. அதன் நீட்சிதான் இன்றும் இருக்கின்றது. 

ஆனால், அது, அக முரண்பாடுகளை முழுமையாகக் களைந்து, பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், பூரணத்துவத்துக்கு அண்மித்த நிலையை எட்டியிருந்ததாகக் கொள்ளலாம். 

ஆனால், இன்றைய நிலை என்பது, வருந்தத்தக்க கட்டத்தை எட்டி இருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், கட்சிகளோ அமைப்புகளோ அந்தக் கட்டத்தை அடைவது தொடர்பில், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

ஆனால், தமிழ்த் தேசிய அரசியலை அடிப்படையாகக் கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் தரப்புகள், குறிப்பாக மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், அவ்வாறான நிலைக்குள் சிக்குவதென்பது, மிகவும் சிக்கலானது. அது, அவர்களை மாத்திரமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் இன்னும் இன்னும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்கள், கடந்த ஒரு தசாப்த காலமாகத் திரட்சியொன்றுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில முயற்சிகளை முட்டிமோதி எடுக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் உதிரிகளை உருவாக்கி இருக்கின்றனவே தவிர, உருப்படியான தரப்பொன்றை இதுவரையில் உருவாக்கவில்லை. மாறாக, உருவாகியுள்ள உதிரிகளிடமும் பிளவுகளும் பிரச்சினைகளுமே ஏற்பட்டிருக்கின்றன.  

கூட்டமைப்புக்கான விதை, கிழக்கில்தான் போடப்பட்டது. அங்கு முளைத்த விதைதான், வடக்கு, கிழக்கு பூராவும் வளர்த்திருக்கின்றது. அதற்கு,  விடுதலைப் புலிகள் பாரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். புலிகளுக்குப் பின்னரான காலத்தில், கூட்டமைப்பில் பிரிவுகளும் பிளவுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன.   

ஆனாலும், கூட்டமைப்பு இன்றைக்கும் தமிழ் மக்களின் (ஏக) பிரதிநிதிகள் என்கிற தகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பின் அரசியலோ, அதன் முடிவுகளோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. கிட்டத்தட்ட ‘குறைகுடம்’ போலத்தான் கூட்டமைப்பின் அரசியல் இருந்து வருகின்றது. குறைகுடத்தின் தளம்பல்களைச் சகித்துக் கொள்ள முடியாத மக்கள், விரக்தியுடன் இருக்கிறார்கள்.   

ஆனால், விரக்தியடைந்த மக்களை ஒன்றிணைக்கும் தரப்புகள், (அதுவும் பூரணத்துவம் மிக்க அரசியலைச் செய்யும் தரப்புகள்) தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் எழுச்சி பெறாமைதான், கூட்டமைப்பு மீதான விரக்திகளைத் தாண்டி, அதன் ஆதரவுத் தளம் நிலைபெறுவதற்குக் காரணமாகும்.  

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் களம் என்பது, தேர்தல் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டதுதான். யார் விரும்பினாலும் இல்லையென்றாலும் மக்களின் பிரதிநிதிகள் என்கிற அடையாளத்தைப் பெறுவதற்குத் தேர்தல் வெற்றிகள் அவசியமாகின்றன.

கூட்டமைப்பு தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகள்தான், அவர்களை (ஏக) பிரதிநிதிகள் நிலைக்குத் தள்ளியுமிருக்கின்றன. அப்படியான கட்டத்தில், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், தேர்தல் வெற்றியைக் குறிவைத்து, இயங்குவது தவிர்க்க முடியாததுதான்.   

ஆனால், மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையைக் கொண்டு நடக்கும் இவர்கள், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் வெற்றிக்கான அடியைத் தேடுவதுதான் பிரச்சினையாகின்றது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கி, அண்மையில் உருவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வரையில், அவர்களின் எல்லை என்பது, யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் சுருக்கப்பட்டுவிட்டது.   

அதுவும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்குள் வரும், கிளிநொச்சி கூட அவர்களின் எல்லைகளுக்குள் சேர்வதில்லை. அப்படியான நிலையில், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் வீச்சு என்பது, தமிழ் மக்களிடம் என்ன வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கேள்வி எழுகின்றது.  

எந்தத் துறையாக இருந்தாலும், ஒரே நாளில் பெரிய வெற்றிகளைப் பெற்றுவிட முடியாதுதான். ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பிக்கும் பயணம், மெல்ல மெல்ல அடுத்த கட்டங்களை அடைய வேண்டும். அதற்கு, காலமும் நேரமும் தேவைதான். 

அரசியலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தமிழ்த் தேசிய அரசியலின் மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள் இன்று நேற்று உருவானவர்கள் அல்ல. இவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான நாள்களில், கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக எழுந்தவர்கள். இவர்களால், கடந்த ஒரு தசாப்த காலத்தில், ஒற்றை வெற்றியையேனும், நம்பிக்கை கொள்ளும் அளவுக்குப் பெற முடியவில்லை என்பதுதான் பெரிய சிக்கல்.  

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களின் குறி, யாழ். தேர்தல் மாவட்டம்தான். அதைத்தாண்டி, அவர்கள் சிந்திப்பதில்லை. ஒப்புக்கு வேண்டுமானால், வேட்பாளர்களை நிறுத்துவார்கள். 

இந்த நிலையை உருவாக்கியதில், யாழ். மய்யவாதிகளும் ஊடகங்களும் அரசியல் கட்டுரையாளர்களும் புலம்பெயர் அமைப்புகளும் பங்காளிகள் ஆவார். ஒவ்வொரு தேர்தலும், யாழ். தேர்தல் மாவட்டத்துக்காக மாத்திரம் நடத்தப்படுவது மாதிரியான நிலைப்பாடொன்றை, இவர்கள் வரையறுக்கிறார்கள்; அதன் அடிப்படையில்தான் சிந்திக்கிறார்கள்; செயற்படுகிறார்கள்(?). அதனால்தான், யாழ்ப்பாணத்தைத் தாண்டி, மாற்றுத் தலைமைக் கோரிக்கையாளர்களால் வடக்கு, கிழக்கில் கோலோச்ச முடிவதில்லை.  

தேர்தல் அரசியலுக்கு என்றொரு வடிவம் இருக்கின்றது. எவ்வளவு முட்டி மோதினாலும், யாராலும் 100 சதவீத வாக்குகளைப் பெற முடியாது. 

அப்படியான நிலையில், தேர்தலொன்றில் விழப்போகும் வாக்குகளில், பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான ஓட்டம்தான் வெற்றியின் அடிப்படை. 

அப்படியான நிலையில், ஒரு பிரதேசத்துக்குள் மாத்திரம் சுருங்கிவிட்டவர்களால், அந்த அடிப்படைகளைத் தொடுவது சிரமமானது.  

வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “...நேர்மையாகவும் கொள்கையில் உறுதியாகவும் செயற்படும் எமது கட்சிக்கு, தமிழ் மக்கள் அமோக ஆணையை வழங்கிக் குறைந்தது, 15 ஆசனங்களை வடக்கு, கிழக்கில் பெற ஆதரவு தர வேண்டும்...’ என்றார். உண்மையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தன்னுடைய வாக்கு எல்லையை, யாழ்ப்பாணத்துக்குள் சுருக்கிக் கொண்டுவிட்ட கட்சி.   

அப்படியான நிலையில், வடக்கு,  கிழக்கு பூராவும் பெரிய வெற்றியொன்றை (கிட்டத்தட்ட ஏக பிரதிநிதிகள் அளவுக்கான வெற்றியை) மக்கள் வழங்க வேண்டும் என்று, என்ன அடிப்படையில் கோருகிறார்? 

வடக்கு, கிழக்கு மக்களிடம் நம்பிக்கையைப் பெறுவதற்கு அவரும், அவரது கட்சியும் கடந்த காலங்களில் எவ்வாறான நடவடிக்கைகளை  முன்னெடுத்திருக்கிறார்கள்?  

அதுபோலத்தான், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணியான, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நிலையும் ஆகும். 

இவர்களின் உண்மையான எல்லை எது என்பதை, பொதுத் தேர்தல் சிலவேளை உறுதிப்படுத்தலாம். ஏனெனில், புதிய கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்த எந்தக் கட்சியும் தனி வாக்கு வங்கியைக் கொண்டிருப்பவை அல்ல.  

பெருவெளியாகக் காணப்பட்ட மாற்றுத் தலைமைக்கான வெளி, உதிரிகள் எடுத்துக் கொண்ட சொற்பவெளி போக, சுருங்கிவிட்டது. அது, வடக்கு, கிழக்கின் அரசியலைக் கூட்டமைப்பின் பக்கத்துக்கு மீண்டும் தள்ளிவிட்டிருக்கின்றது.   

புத்திஜீவிகள் உள்ளிட்ட மாற்றுத் தலைமைக்கான கோரிக்கையாளர்கள், யாழ். தேர்தல் மாவட்டத்தை மாத்திரம் முன்னிறுத்திச் சிந்திப்பதை எப்போது நிறுத்திவிட்டு, வடக்கு, கிழக்கு என்கிற சிந்தனைக்கு வருகிறார்களோ, அன்று ஆரோக்கியமான மாற்றுத் தலைமைக்கான வெளி மீண்டும் திறக்கும். அதுவரை, ஒப்பாரிகள் ஓயப்போவதில்லை
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யாழ்-தேர்தல்-மாவட்டத்துக்குள்-சுருங்கிவிட்ட-மாற்றுத்-தலைமை-கள்/91-245721

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.