Jump to content

பொறுமையிழந்த விக்கியிடம் சூடு வாங்கிய கஜேந்திரகுமார்!


Recommended Posts

vikkimullai-620x330.jpg

பொறுமையிழந்த விக்கியிடம் சூடு வாங்கிய கஜேந்திரகுமார்!

 
தமிழ் மக்கள் கூட்டணிமீதும் அதன் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தொடர்பாகவும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் கஜேந்திரகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன் கஜேந்திரகுமார் தொடர்பான பலவிடயங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்

ஊடகவியலாளர் கேள்விகள்
கேள்விகள்:-“தமிழ்த் தேசியமக்கள் முன்னணி”யினர் நீங்கள் ஒற்றையாட்சிஅரசியலமைப்புக்குள் தமிழ் மக்களைஏமாற்றிமுடக்குவதற்குஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சிக்குள் இணைந்துள்ளதாக கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன?
பதில்:-யார் இந்தத் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர்? அந்தப் பழையதமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானேநீங்கள் கூறுகின்றீர்கள்?
ஊடகவியலாளர்:– ஆம்.
பதில்:-அகில இலங்கைத் தமிழ்காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பைமாற்றிவிட்டார்களா? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஸ்டி என்றுமாற்றியிருந்தால் ஜீ.ஜீ.தனதுகட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாகஅர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம்,வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாகமுடியும். ஜீ.ஜீ.சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே! எனக்குத் தெரிந்தவரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்றுவரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சிதான்!
அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம்.
நாங்கள் கேட்பதுசமஸ்டி. அதுஎல்லோருக்குந் தெரிந்தவிடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்தியஅரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோவொருகரவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா?
ஊடகவியலாளர்:-ஆமாம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள்!
பதில்:-சரி! எங்களுக்கு அவ்வாறானஉறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்கமாட்டோம் அல்லவா?
ஊடகவியலாளர்:-விளங்கவில்லை.
பதில்:-அதாவதுநாங்கள் மத்தியஅரசாங்கங்களுடன் கரவான உறவுவைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்னசெய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்றுசேரவிடாது தடுப்போம் அல்லவா? அதாவதுதமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா?
ஊடகவியலாளர்:-ஆமாம்.
பதில்:-நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம்? அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

  1. தமிழ்த்தேசீயக் கூட்டமைப்பின் ஒற்றுமையைமுதலில் 2009ல் குலைத்தவர் யார்?
  2. தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்துஅதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார்?
  3. பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்துதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்ததுயார்?
  4. காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றுசேர்ந்துதமக்குள் ஒருஐக்கியத்தைத் தேடியபோதுதம் கட்சிக்கெனவேறுஒருஅலகைஉண்டுபண்ணிகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப்பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர்யார்?
  5. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார்?
  6. ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக் கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார்?
  7. எமது இரண்டாவது “எழுகதமிழ்” நிகழ்வைஎப்படியாவதுகுலைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார்?
  8. தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஸ்டியா, தனிநாடாஎன்பதைவெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார்?
  9. இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் கரவாகக் கண்டு வந்தவர்கள் யார்?
  10. கோதாபயபாதுகாப்புசெயலாளராக இருந்தபோது தமது சகோதரனை விடுவிக்க கோதாபயவுடன் கரவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்?
  11. தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்குஆதரவானமக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார்?
  12. பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்றரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசாங்கத்திற்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்குமீன் போலக் காட்டும் கட்சிஎந்தக் கட்சி?
  13. ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில்அடம் பிடிப்பவர்கள் யார்?
  14. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போனநிலையில் அரசியலைகொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டுஉருவாகும் போது தேசியநலன் கருதிதாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்குதுரோகம் செய்பவர்கள் யார்?
    ஆகவேதமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக்குலைத்துவருபவர்கள் யார் என்றுநான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒருகேள்விகேட்கவிரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மைஅளிக்கும்?
    ஊடகவியலாளர்:-அரசாங்கத்திற்கும்,பேரினவாதிகளுக்கும்!
    பதில்:-சரியாகச் சொன்னீர்கள்! அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மைஅளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒருகட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றிவருவது நாங்களா? அவர்களா?. அத்துடன் இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்கமுடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பதுஎ னதுசந்தேகம்.
    எனதுசந்தேகம்பிழையென்றால் இப்பொழுதாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டிவைத்து விட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்துபயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை!

 

http://thamilkural.net/?p=28715

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.