Jump to content

அரசுக்கு அழுத்தம் தராதீர் என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு!


Recommended Posts

அரசுக்கு அழுத்தம் தராதீர் என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு!

அரசுக்கு அழுத்தம் தராதீர் என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு!

 

´அரசியல் தீர்வு தருவோம் என்ற உத்தரவாதம் எதனையும் முன்வைத்து புதிய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, எவரும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்ககூடாது´ எனத் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்வதிகார போக்கை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இனமக்களதும் பிரச்சினைகளையும் உணர்ந்து அவற்றுக்கான தீர்வினை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதியினதும் அரசினதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் வாழும் இனங்களின் தலைமைகள் தமது மக்களின் அபிலாஷைகளை எடுத்து இயம்புவதும் அதற்கான தீர்வைக் கோரி நிற்பதும் அவர்தம் ஜனநாயகக் கடமையாகும். அந்தக் கடமையைச் செய்ய முற்படுவோரை அதிகாரப் போக்கில் தடுத்த நிறுத்த நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கலாசாரம் ஆகும் எனவும் ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் நீண்ட காலமாகச் சிறுபான்மை இனங்கள் தமக்கான அதிகார பரவாக்கல் குறித்து குரல் எழுப்பி வருகின்றன. இதற்கான தீர்வை எட்டி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவற்றின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் அரசியல் தீர்வுகள் குறித்து எமக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என அரசின் பிரதிநிதியான அமைச்சர் தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும்.

எந்தச் சமூகம் தனது பிரச்சினையை ஆளும் தரப்பிடமே முன் வைக்க முடியும். அதனை சரிவர அறிந்து அவற்றிக்குத் தீர்வு தர வேண்டியது ஆட்சியில் இருக்கும் அரசின் பொறுப்பாகும். அதனை விடுத்து, அழுத்தம் கொடுக்கக் கூடாது, கோரிக்கை வைக்கக் கூடாது எனத் தெரிவிப்பது ஆணவத்தின் வெளிப்படாகும். இதனை ஜனநா யக ரீதியாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

´இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் நான் ஜனாதிபதி, எனவே அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவி ஏற்பு தொடக்கம் நடந்த முடிந்த சுதந்திர தின உரை முதல் அழைப்பு விடுத்து வருகின்றார். அவரது நல் எண்ணத்தை சிறுபான்மை சமூகங்கள் பெரிதும் வரவேற்றுள்ளன.

இந்நிலையில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருவது பெரும் கவலையை அளிக்கிறது. எனவே, இத்தகைய கருத்து பகிர்வுகளைத் தவிர்த்து அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படும் எண்ணவோட்டங்களை விதைத்து இந்த நாடு ஜனநாயகத்தின் அடையாளமாக உலக அரங்கில் வலம்வர ஆவன செய்யவேண்டும் என்றார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களும் நான் ஜனாதிபதி, எனவே அனைவரும் என்னுடன் இணைந்து செயற்பட முன்வாருங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பதவி ஏற்பு தொடக்கம் நடந்த முடிந்த சுதந்திர தின உரை முதல் அழைப்பு விடுத்து வருகின்றார்

தன் கடமையை சரிவர செய்யாதவருக்கு,  மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று கட்டளை இடவோ அல்லது எதிர்பார்க்கவோ உரிமை இல்லை. நீ விதைத்ததற்கு ஏற்ப அறுவடையை எதிர்பார், பேராசை கொள்ளாதே.  பிக்குகள் என்ன செய்யினம்? இதுகளை போதிக்காமல் வம்புச் சண்டைக்கு திரியுதுகள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.