Jump to content

லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி


Recommended Posts

லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி

 
Untitled-1-450-696x464.jpg
 

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் (Round of 16) முதல் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (19) ஆரம்பமாகின. முதல் நாளின் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் அட்லடிகோ மெட்ரிட்

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் நடப்புச் சம்பியனான லிவர்பூல் ஸ்பெயினின் அட்லெடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்று பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதில் நெருக்கடியை சந்தித்துள்ளது. 

கடந்த முறை இறுதிப் போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணியை 2-0 என தோற்கடித்து கிண்ணத்தை வென்ற அட்லெடிகோவின் வன்டா மெட்ரோபொலிடானோ அரங்கு இந்த முறை லிவர்பூல் அணிக்கு சாதகமாக இருக்கவில்லை.   

சொந்த ரசிகர்கள் முன் உற்சாகத்தோடு போட்டியை ஆரம்பித்த அட்லடிகோ, ஆரம்பத்திலேயே  ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது. போட்டியின் நான்காவது நிமிடத்தில் ஸ்பெயின் மத்தியகள வீரர் சாவுல் நிகுஸ் நெருக்கமான தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.

எனினும் அட்லடிகோ தனது வழக்கமான ஆக்கிரமிப்பு ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. பின்களத்தில் மொஹமட் சலாஹ், ரொபார்டோ பிர்மினோ மற்றும் சாடியோ மானே ஆகிய எதிரணி கோல் இயந்திரங்கள் உள்ளே வராமல் பொறுமையாக காத்திருந்தனர்.  

முதல் பாதியில் சைம் விரலிஜ்கோவுடன் மோதலில் ஈடுபட்ட மானே அதிர்ஷ்டவசமாக மஞ்சள் அட்டையுடன் தப்பினார். சலாஹ்வுக்கு பதில் கோல் திருப்ப வாய்ப்புக் கிடைத்தபோது அவர் தலையால் முட்டிய பந்து வெளியே பறந்தது. பிற்பகுதியில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் வைத்து ஹென்டர்சனுக்கு கோல் பெறும் வாய்ப்பு ஒன்று நூலிழையில் தவறியது.  

இந்நிலையில் சாடியோ மானே மற்றும் சலாஹ் ஆகியோருக்கு பதில் முறையே டிவொக் ஒர்கி மற்றும் அலெக்ஸ் ஒக்லாடே-சம்பர்லெயின் ஆகியோரை பயிற்சியாளர் ஜுர்கன் க்ளொப்ஸ் அனுப்பியபோதும் அதுவும் வெற்றி அளிக்கவில்லை.   

ப்ரீமியர் லீக் தொடரில் 26 போட்டிகளில் 25 இல் வென்று கிண்ணத்தை நெருங்கி இருக்கும் லிவர்பூல் சம்பியன்ஸ் லீக்கில் அந்த திறனை வெளிப்படுத்த தவறி வருகிறது. இந்தப் பருவத்தில் அனைத்துப் போட்டித் தொடர்களிலும் லிவர்பூல் தோற்ற மூன்று போட்டிகளில் இரண்டு சம்பியன்ஸ் லீக் ஆட்டங்களாகும். 

சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டாவது கட்டத்தில் வரும் மார்ச் 11 ஆம் திகதி லிவர்பூல் தனது சொந்த மைதானமான அன்பீல்டில் அட்லடிகோ மெட்ரிட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற அதில் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் பெருசியா டோர்ட்முண்ட்

எர்லிங் ஹாலன்டின் இரட்டைக் கோல் மூலம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு எதிரான போட்டியில் பொருசியா டோர்ட்முண்ட் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.  

வடமேற்கு ஜெர்மனியில் டோர்ட்முண்டின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாதபோதும் நோர்வே நாட்டின் 19 வயது ஹாலன்ட் மீண்டும் ஒருமுறை தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படத்தினார். 

69ஆவது நிமிடத்தில் கோல் பகுதிக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு இடையே பந்து தனது பக்கமாக வந்ததைப் பயன்படுத்தி டோர்ட்முண்ட் சார்பில் ஹாலன்ட் முதல் கோலை திருப்பினார். 

மறுபுறம் நான்கு போட்டிகளின் பின் மீண்டும் அணிக்குத் திரும்பிய நெய்மர் 75 ஆவது நிமிடத்தில் ம்பப்பே உதவே PSG சார்பில் பதில் கோல் திருப்பினார். 

ஒரு நிமிடம் கழித்து மீண்டும் செயற்பட்ட ஹாலன்ட் ஆபார கோல் ஒன்றை பெற்றார். கியோ ரெய்னெ வழங்கிய பந்தை நெய்மரை முறியடித்து பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து கோல் புகுத்தினார். 

இந்த கோல்கள் மூலம் ம்பப்பேவுக்கு அடுத்து சம்பியன்ஸ் லீக்கில் 10 கோல்களை எட்டிய இரண்டாவது இளம் வீரராக ஹாலன்ட் இடம்பிடித்ததோடு இந்தப் பருவத்தில் அவர் மொத்தம் 29 போட்டிகளில் பங்கேற்று 39 கோல்களை பெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது. 

சம்பியன்ஸ் லீக்கின் 16 அணிகள் சுற்றில் வைத்து கடந்த மூன்று பருவங்களிலும் வெளியேறிய PSG தனது சொந்த மைதானத்தில் வரும் மார்ச் 11 ஆம் திகதி இரண்டாம் கட்டப் போட்டியில் பெருசியா டோர்ட்முண்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. காலிறுதிக்கு முன்னேற அந்த அணிக்கு கடைசி சந்தர்ப்பமாக அது இருக்கும். 

http://www.thepapare.com/champions-league-round-up-for-18th-of-february-2020-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.