Jump to content

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால்


Recommended Posts

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால்

 

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் இரண்டு ஒருநாள் பயிற்சிப் போட்டிகளில் ஆடுகின்றது. 

இந்த பயிற்சிப் போட்டிகளின் முதல் மோதல் கடந்த திங்கட்கிழமை (17) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், இரண்டாவது பயிற்சிப் போட்டி நாளை (20) நடைபெறுகின்றது.  

கட்டுநாயக்கவில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 14 பேர் அடங்கிய கிரிக்கெட் சபை பதினொருவர் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை அணிக்காக கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒருநாள் போட்டியொன்றில் ஆடிய தினேஷ் சந்திமால், குறிப்பிட்ட கால ஓய்வுக்குப் பின்னர் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை காட்டியதன் மூலம் இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் ஒன்றும் சந்திமாலுக்கு கிடைத்திருக்கின்றது. 

அதேநேரம், பானுக்க ராஜபக்ஷவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார். இலங்கை T20I அணி இனம் கண்ட அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகள் எதிலும் ஆடாத நிலையில்,  அவருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இலங்கை ஒருநாள் அணியில் இணைய வாய்ப்பு ஒன்று உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரர் மினோத் பானுக்கவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் ஆடவிருக்கின்றார்.

இதேவேளை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்ட லஹிரு திரிமான்ன, பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் தலைவராக செயற்படவிருக்கின்றார்.  

அதேவேளை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வாய்ப்பினை பெற்ற பெதும் நிஷங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியில் தொடர்ந்தும் தமது இடத்தை தக்கவைக்க, வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்னாந்துவும் இணைக்கப்பட்டுள்ளார்.

 

இவர்கள் தவிர இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாந்து, சுழல் பந்துவீச்சாளர்களான அஷேன் பண்டார, புலின தரங்க ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் கிரிக்கெட் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான பயிற்சிப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (22) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

இலங்கை பதினொருவர் கிரிக்கெட் அணி – லஹிரு திரிமான்ன (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, மினோத் பானுக்க, ரமேஷ் மெண்டிஸ், அமில அபொன்சோ, அசித்த பெர்னாந்து, கசுன் ராஜித,  அஷேன் பண்டார, திக்ஷில டி சில்வா, புலின தரங்க

http://www.thepapare.com/squad-for-the-official-warm-up-game-vs-west-indies-news-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.