Jump to content

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

இதன் காரணமாக, உடலில் கொழுப்பு சேர்வது குறைவதால், இருதய நோய்கள் ஏற்படும் அபாடம் குறைகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/தாவர-உணவுகளை-உட்கொள்பவர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

இருதய நோய் மட்டுமில்லை.....புற்றுநோய்,மூட்டுவலியள் எல்லாம் வராது கண்டியளோ!
எங்கடை மூதாதையர் எல்லாம் பூலால் உண்ணாதீர்கள் எண்டு சும்மாவே சொன்னவையள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுத்த பொய் ...சைவ உணவுக்காரரிடம் டயபீட்டிக், கொலஸ்ரோல் போன்ற வருத்தங்கள் இல்லையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இது சுத்த பொய் ...சைவ உணவுக்காரரிடம் டயபீட்டிக், கொலஸ்ரோல் போன்ற வருத்தங்கள் இல்லையா 

சைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 
இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் 
படும் பாட்டை பார்க்கும்போது  
என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை  அருவெறுப்பாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 

வேற யாரப்பா தந்தது? படைச்சவன் தான். மிருகங்கள் மற்ற மிருகங்களை கொல்வது படைத்தவன் நியதி தானே? அசைவம் சாப்பிடாத யானையே மனிதனை கொல்கிறது - நாங்கள் எந்த மூலைக்கு? எல்லாம் தெய்வ சித்தம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

வேற யாரப்பா தந்தது? படைச்சவன் தான். மிருகங்கள் மற்ற மிருகங்களை கொல்வது படைத்தவன் நியதி தானே? அசைவம் சாப்பிடாத யானையே மனிதனை கொல்கிறது - நாங்கள் எந்த மூலைக்கு? எல்லாம் தெய்வ சித்தம்.

வீட்டுக்குள் பாம்பு வந்தால் அடித்து கொல்கிறீர்கள்.
காட்டுக்குள் மனிதன் போனால் யானை என்ன உங்களை முத்தமிட வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 
இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் 
படும் பாட்டை பார்க்கும்போது  
என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை  அருவெறுப்பாக இருக்கிறது 

புலால் உணவு என்பது தனியே மனிதனின் ருசி சம்பந்தப்பட்டதல்ல. உலகின் புரதத் தேவை , இயற்கைச் சமனிலையோடு தொடர்புபட்டது. 

மனித இனத்தின் வளர்ச்சி(கூர்ப்பு)க்கு, அதாகப்பட்டது, மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒருவகையான புரதக் கூறு புலால்(விலங்கு) உணவில் மட்டுமே உள்ளதாக ஆய்வு கட்டுரை ஒன்றில் வாசித்தேன்.

இந்தியாவின் பல மானிலங்களில் மாட்டைக்  கொல்வது தடை செய்யப்பட்டபோதுக், குறைந்த விலையில் ஏழைகளுக்கான புரத உணவு கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலம்(source) இதுவென்று  தடைக்கெதிராக போராடியவர்களின் வாதங்களிலொன்றாக இது இருந்தது.

உலகின் புரதத் தேவையின் மிகப் பெரும் பகுதியை  நிறைவு செய்யும் உற்பத்தி, வினியோகம் இரண்டையும் ஒரு சில நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. போர்க்காலங்களில் இதனை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஏதுனிலைகள்கூட கண்டறியப் பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

4 hours ago, Kapithan said:

இந்தியாவின் பல மானிலங்களில் மாட்டைக்  கொல்வது தடை செய்யப்பட்டபோதுக், குறைந்த விலையில் ஏழைகளுக்கான புரத உணவு கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலம்(source) இதுவென்று  தடைக்கெதிராக போராடியவர்களின் வாதங்களிலொன்றாக இது இருந்தது.

மாட்டு இறைச்சி விலை கூடிய இறைச்சி அல்லவா!

படத்தில் உள்ள தேங்காய் இருதய நோய்க்கு நல்லதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

மாட்டு இறைச்சி விலை கூடிய இறைச்சி அல்லவா!

படத்தில் உள்ள தேங்காய் இருதய நோய்க்கு நல்லதா?

 

அல்ல. இந்தியாவில் மாட்டிறைச்சிதான் ஒப்பீட்டளவில் விலை குறைவானது.

Link to comment
Share on other sites

On ‎2‎/‎19‎/‎2020 at 11:58 PM, தமிழ் சிறி said:

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அட இது சிம்பிள் லாஜிக்.

இதயம் தாவரத்தில் இருந்தால், அதை சாப்பிடும்பொழுது இதய நோய் வரும்.

இதயம் இல்லாவிட்டால், இதய நோய் வராது.. ம் 🙂 

Link to comment
Share on other sites

போன மாதம் என் நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்கின்றவர் இரவு 8:30 வரைக்கும் வேலை செய்து விட்டு மனுசிக்கு அடிச்சு இந்தா வாறன் என்று சொல்லிப் போட்டு மேசையிலேயே சரிந்தவர் தான்...ஆள் எழும்பவே இல்லை. மாரடைப்பில் இறந்து விட்டார். 40 வயது. ஒரே ஒரு ஆண் பிள்ளை இருக்கு.

இவர்

1. புலால் உண்பதில்லை - சுத்த சைவம்
2. உடல் பருமனும் இல்லை
3. மது, புகைப்பிடித்தல் அறவே இல்லை
4. எட்டாம் மாடி வரைக்கும் மாடிப்படிகளை பயன்படுத்தி ஏறி வருகின்றவர்.

இதே போன்ற இயல்புகளைக் கொண்ட கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவின் பழைய மாணவனான இன்னொரு நண்பர் 42 வயதில் திருவெம்பாவை பூசைக்கு போய் விட்டு வந்து கதிரையில் சாய்ந்தவர் தான்...பிறகு எழுந்திருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 11:37 AM, குமாரசாமி said:

இருதய நோய் மட்டுமில்லை.....புற்றுநோய்,மூட்டுவலியள் எல்லாம் வராது கண்டியளோ!
எங்கடை மூதாதையர் எல்லாம் பூலால் உண்ணாதீர்கள் எண்டு சும்மாவே சொன்னவையள்.

புலால் உணவு என்று சொல்ல வேணும். பூலால் உண்ணாதீர்கள்  என்று சொன்னால்... :rolleyes:
தமிழ் நாட்டில், அதுக்கு... வேறை 😮 அர்த்தம்   குமாரசாமி அண்ணே.... :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

 

 

மனிதன் வேட்டைப் பற்களையும், இறைச்சியை நன்கு அரைக்க கூடிய கொடுப்புப் பற்களையும் கொண்ட விலங்கு. ஆதி மனிதன் விவாசாயம் கற்க முன்பாக விலங்குகளை வேட்டையாடியே தன் இனத்தை பெருக்கியவன்/ள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மரக்கறி உண்ணும் மனிதன் வாழ்ந்திருக்க கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆரியம் கலக்க முன் தமிழனும் அப்படித்தான் இருந்திருப்பான்.

உலகில் நீண்ட காலத்துக்கு இந்த மரக்கறி மட்டும் சாப்பிட்டு வாழும் பழக்கம் நிலைக்குமா என்பது சந்தேகம். மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் போது, 30 வீதத்தினர் மரக்கறிக்கு மாறினால் கூட விவசாய நிலம் போதுமானதாக இருக்காது. இப்படி மரக்கறிக்கு மாறுகின்றவர்களில் அனேகர் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான். மேட்டுக்குடிகளுக்கு தான் இது சாத்தியம்.

விரைவில் பூச்சிகளை உண்ணும் பழக்கம் மக்கள் இடையே அதிகரிக்கும். இப்பவே ஈசல், வெட்டுக்கிளி போன்றவற்றை சுவையான உணவுகளாக சமைக்கும் முறைகள் வந்து விட்டன. என் நைகர் நாட்டு சக ஊழியன் வெட்டுக்கிளி வறுவலை ஒரு நாள் சுவைக்க தந்தான். நன்றாக இருந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

போன மாதம் என் நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்கின்றவர் இரவு 8:30 வரைக்கும் வேலை செய்து விட்டு மனுசிக்கு அடிச்சு இந்தா வாறன் என்று சொல்லிப் போட்டு மேசையிலேயே சரிந்தவர் தான்...ஆள் எழும்பவே இல்லை. மாரடைப்பில் இறந்து விட்டார். 40 வயது. ஒரே ஒரு ஆண் பிள்ளை இருக்கு.

இவர்

1. புலால் உண்பதில்லை - சுத்த சைவம்
2. உடல் பருமனும் இல்லை
3. மது, புகைப்பிடித்தல் அறவே இல்லை
4. எட்டாம் மாடி வரைக்கும் மாடிப்படிகளை பயன்படுத்தி ஏறி வருகின்றவர்.

இதே போன்ற இயல்புகளைக் கொண்ட கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவின் பழைய மாணவனான இன்னொரு நண்பர் 42 வயதில் திருவெம்பாவை பூசைக்கு போய் விட்டு வந்து கதிரையில் சாய்ந்தவர் தான்...பிறகு எழுந்திருக்கவில்லை.

நிழலி,  உண்மையில்...  இதற்கெல்லாம்  மன அழுத்தமே  காரணம்.
சிறுவர் கல்வி கற்க ஆரம்பிப்பதிலேயே... அவர்களுக்கு மன அழுத்தம் ஆரம்பித்து,
வேலைக்கு சென்ற பின்பும்.... அவர்களின் மன அழுத்தம் தொடர்வதால்,
அது இதயத்தை பாதித்து, இறப்பில் முடிகின்றது.

சென்ற தலைமுறையில்... வாழ்ந்த, எமது பெற்றோருக்கு,
இப்படியான மன அழுத்தம் இருந்ததில்லை, என்றே கூறுவேன்.

ஏனென்றால்... அவர்களுக்கு நவீன தொடர்பு வசதிகள் இருக்கவில்லை.
உலகில் எல்லோருக்கும்.. இது தான், மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. 

இப்போது... கணனி, கைத்தொலை பேசி வந்தவுடன்...
இன்றைய தலை முறை...  எட்டு மணித்தியால வேலை முடிந்த பின்பும்...
விடுமுறை நாட்களிலும்... அந்த நவீன சாதனங்கள் மூலம்...
வேலையில்.. ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் போது... மனிதனுக்கு மனம், ஆறுதலைடையும் சக்தியே... 
இல்லாமல் போய் விடுவது.. பெரிய பரிதாபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்? :(

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கோ அண்ணா 365 நாளும் மரக்கறி வதக்காமல்,பொரிக்காமல் நீங்கள் சாப்பிடுவீங்களோ?...அறுசுவை கொண்டது தான் எனது உணவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 7:07 PM, நிழலி said:

மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் போது, 30 வீதத்தினர் மரக்கறிக்கு மாறினால் கூட விவசாய நிலம் போதுமானதாக இருக்காது.

இதே மாதிரி விலங்கு உணவை கைவிட முடியாதவர்கள் இயற்கை சூழலில் வளர்க்கப்படுகிறது கோழி மாடுகளை மட்டும் உண்டும் படி வேண்டுகோள் வைக்கிறார்கள். அதுகூட மனித தேவையை நிறைவடைய செய்ய முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.