Jump to content

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.jpg

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழக ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகளை உடலில் கலக்காமல் தடுப்பதில், நமது ஜீரணப் பாதையில் உள்ள பக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அசைவ உணவுகளை உண்பதற்குப் பதில், தாவர உணவுகளை உள்கொள்வதன் மூலம், அந்த பக்டீரியாக்களின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

இதன் காரணமாக, உடலில் கொழுப்பு சேர்வது குறைவதால், இருதய நோய்கள் ஏற்படும் அபாடம் குறைகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/தாவர-உணவுகளை-உட்கொள்பவர்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தாவர உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவு!

இருதய நோய் மட்டுமில்லை.....புற்றுநோய்,மூட்டுவலியள் எல்லாம் வராது கண்டியளோ!
எங்கடை மூதாதையர் எல்லாம் பூலால் உண்ணாதீர்கள் எண்டு சும்மாவே சொன்னவையள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுத்த பொய் ...சைவ உணவுக்காரரிடம் டயபீட்டிக், கொலஸ்ரோல் போன்ற வருத்தங்கள் இல்லையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இது சுத்த பொய் ...சைவ உணவுக்காரரிடம் டயபீட்டிக், கொலஸ்ரோல் போன்ற வருத்தங்கள் இல்லையா 

சைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

புலால் உண்ணாமல் கொஞ்சம் கூடுதலான காலம் உயிர் வாழ்வதைவிட புலால் உண்டு வேகமாக மேலே போகலாம். 😀

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 
இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் 
படும் பாட்டை பார்க்கும்போது  
என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை  அருவெறுப்பாக இருக்கிறது 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 

வேற யாரப்பா தந்தது? படைச்சவன் தான். மிருகங்கள் மற்ற மிருகங்களை கொல்வது படைத்தவன் நியதி தானே? அசைவம் சாப்பிடாத யானையே மனிதனை கொல்கிறது - நாங்கள் எந்த மூலைக்கு? எல்லாம் தெய்வ சித்தம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

வேற யாரப்பா தந்தது? படைச்சவன் தான். மிருகங்கள் மற்ற மிருகங்களை கொல்வது படைத்தவன் நியதி தானே? அசைவம் சாப்பிடாத யானையே மனிதனை கொல்கிறது - நாங்கள் எந்த மூலைக்கு? எல்லாம் தெய்வ சித்தம்.

வீட்டுக்குள் பாம்பு வந்தால் அடித்து கொல்கிறீர்கள்.
காட்டுக்குள் மனிதன் போனால் யானை என்ன உங்களை முத்தமிட வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இப்படியான எண்ணம் எனக்கும் முன்பு இருந்ததுன் 
எமது ஆரோக்கியம் பற்றி நாம் சிந்திப்பது விடுவது எமது சொந்த முடிவு 

இன்னொரு மிருகத்தை கொல்லும் உரிமை எமக்கு யார் தந்தது? 
இப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் மாடுகள் ஆடுகள் கோழிகள் 
படும் பாட்டை பார்க்கும்போது  
என்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை  அருவெறுப்பாக இருக்கிறது 

புலால் உணவு என்பது தனியே மனிதனின் ருசி சம்பந்தப்பட்டதல்ல. உலகின் புரதத் தேவை , இயற்கைச் சமனிலையோடு தொடர்புபட்டது. 

மனித இனத்தின் வளர்ச்சி(கூர்ப்பு)க்கு, அதாகப்பட்டது, மூளை வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒருவகையான புரதக் கூறு புலால்(விலங்கு) உணவில் மட்டுமே உள்ளதாக ஆய்வு கட்டுரை ஒன்றில் வாசித்தேன்.

இந்தியாவின் பல மானிலங்களில் மாட்டைக்  கொல்வது தடை செய்யப்பட்டபோதுக், குறைந்த விலையில் ஏழைகளுக்கான புரத உணவு கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலம்(source) இதுவென்று  தடைக்கெதிராக போராடியவர்களின் வாதங்களிலொன்றாக இது இருந்தது.

உலகின் புரதத் தேவையின் மிகப் பெரும் பகுதியை  நிறைவு செய்யும் உற்பத்தி, வினியோகம் இரண்டையும் ஒரு சில நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. போர்க்காலங்களில் இதனை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் ஏதுனிலைகள்கூட கண்டறியப் பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

4 hours ago, Kapithan said:

இந்தியாவின் பல மானிலங்களில் மாட்டைக்  கொல்வது தடை செய்யப்பட்டபோதுக், குறைந்த விலையில் ஏழைகளுக்கான புரத உணவு கிடைக்கும் மிகவும் முக்கியமான மூலம்(source) இதுவென்று  தடைக்கெதிராக போராடியவர்களின் வாதங்களிலொன்றாக இது இருந்தது.

மாட்டு இறைச்சி விலை கூடிய இறைச்சி அல்லவா!

படத்தில் உள்ள தேங்காய் இருதய நோய்க்கு நல்லதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

மாட்டு இறைச்சி விலை கூடிய இறைச்சி அல்லவா!

படத்தில் உள்ள தேங்காய் இருதய நோய்க்கு நல்லதா?

 

அல்ல. இந்தியாவில் மாட்டிறைச்சிதான் ஒப்பீட்டளவில் விலை குறைவானது.

Link to comment
Share on other sites

On ‎2‎/‎19‎/‎2020 at 11:58 PM, தமிழ் சிறி said:

மாமிச உணவுகளைக் குறைத்து, தாவர உணவுகளை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அட இது சிம்பிள் லாஜிக்.

இதயம் தாவரத்தில் இருந்தால், அதை சாப்பிடும்பொழுது இதய நோய் வரும்.

இதயம் இல்லாவிட்டால், இதய நோய் வராது.. ம் 🙂 

Link to comment
Share on other sites

போன மாதம் என் நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்கின்றவர் இரவு 8:30 வரைக்கும் வேலை செய்து விட்டு மனுசிக்கு அடிச்சு இந்தா வாறன் என்று சொல்லிப் போட்டு மேசையிலேயே சரிந்தவர் தான்...ஆள் எழும்பவே இல்லை. மாரடைப்பில் இறந்து விட்டார். 40 வயது. ஒரே ஒரு ஆண் பிள்ளை இருக்கு.

இவர்

1. புலால் உண்பதில்லை - சுத்த சைவம்
2. உடல் பருமனும் இல்லை
3. மது, புகைப்பிடித்தல் அறவே இல்லை
4. எட்டாம் மாடி வரைக்கும் மாடிப்படிகளை பயன்படுத்தி ஏறி வருகின்றவர்.

இதே போன்ற இயல்புகளைக் கொண்ட கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவின் பழைய மாணவனான இன்னொரு நண்பர் 42 வயதில் திருவெம்பாவை பூசைக்கு போய் விட்டு வந்து கதிரையில் சாய்ந்தவர் தான்...பிறகு எழுந்திருக்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 11:37 AM, குமாரசாமி said:

இருதய நோய் மட்டுமில்லை.....புற்றுநோய்,மூட்டுவலியள் எல்லாம் வராது கண்டியளோ!
எங்கடை மூதாதையர் எல்லாம் பூலால் உண்ணாதீர்கள் எண்டு சும்மாவே சொன்னவையள்.

புலால் உணவு என்று சொல்ல வேணும். பூலால் உண்ணாதீர்கள்  என்று சொன்னால்... :rolleyes:
தமிழ் நாட்டில், அதுக்கு... வேறை 😮 அர்த்தம்   குமாரசாமி அண்ணே.... :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மருதங்கேணி மாதிரி கோழி மாடுகளை கொல்ல கூடாது என்று தாவர உணவுக்கு மாறுபவர்கள் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகிறது.

 

 

மனிதன் வேட்டைப் பற்களையும், இறைச்சியை நன்கு அரைக்க கூடிய கொடுப்புப் பற்களையும் கொண்ட விலங்கு. ஆதி மனிதன் விவாசாயம் கற்க முன்பாக விலங்குகளை வேட்டையாடியே தன் இனத்தை பெருக்கியவன்/ள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மரக்கறி உண்ணும் மனிதன் வாழ்ந்திருக்க கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவு. ஆரியம் கலக்க முன் தமிழனும் அப்படித்தான் இருந்திருப்பான்.

உலகில் நீண்ட காலத்துக்கு இந்த மரக்கறி மட்டும் சாப்பிட்டு வாழும் பழக்கம் நிலைக்குமா என்பது சந்தேகம். மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் போது, 30 வீதத்தினர் மரக்கறிக்கு மாறினால் கூட விவசாய நிலம் போதுமானதாக இருக்காது. இப்படி மரக்கறிக்கு மாறுகின்றவர்களில் அனேகர் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தான். மேட்டுக்குடிகளுக்கு தான் இது சாத்தியம்.

விரைவில் பூச்சிகளை உண்ணும் பழக்கம் மக்கள் இடையே அதிகரிக்கும். இப்பவே ஈசல், வெட்டுக்கிளி போன்றவற்றை சுவையான உணவுகளாக சமைக்கும் முறைகள் வந்து விட்டன. என் நைகர் நாட்டு சக ஊழியன் வெட்டுக்கிளி வறுவலை ஒரு நாள் சுவைக்க தந்தான். நன்றாக இருந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

போன மாதம் என் நண்பனின் அலுவலகத்தில் வேலை செய்கின்றவர் இரவு 8:30 வரைக்கும் வேலை செய்து விட்டு மனுசிக்கு அடிச்சு இந்தா வாறன் என்று சொல்லிப் போட்டு மேசையிலேயே சரிந்தவர் தான்...ஆள் எழும்பவே இல்லை. மாரடைப்பில் இறந்து விட்டார். 40 வயது. ஒரே ஒரு ஆண் பிள்ளை இருக்கு.

இவர்

1. புலால் உண்பதில்லை - சுத்த சைவம்
2. உடல் பருமனும் இல்லை
3. மது, புகைப்பிடித்தல் அறவே இல்லை
4. எட்டாம் மாடி வரைக்கும் மாடிப்படிகளை பயன்படுத்தி ஏறி வருகின்றவர்.

இதே போன்ற இயல்புகளைக் கொண்ட கொழும்பு பம்பலப்பிட்டி இந்துவின் பழைய மாணவனான இன்னொரு நண்பர் 42 வயதில் திருவெம்பாவை பூசைக்கு போய் விட்டு வந்து கதிரையில் சாய்ந்தவர் தான்...பிறகு எழுந்திருக்கவில்லை.

நிழலி,  உண்மையில்...  இதற்கெல்லாம்  மன அழுத்தமே  காரணம்.
சிறுவர் கல்வி கற்க ஆரம்பிப்பதிலேயே... அவர்களுக்கு மன அழுத்தம் ஆரம்பித்து,
வேலைக்கு சென்ற பின்பும்.... அவர்களின் மன அழுத்தம் தொடர்வதால்,
அது இதயத்தை பாதித்து, இறப்பில் முடிகின்றது.

சென்ற தலைமுறையில்... வாழ்ந்த, எமது பெற்றோருக்கு,
இப்படியான மன அழுத்தம் இருந்ததில்லை, என்றே கூறுவேன்.

ஏனென்றால்... அவர்களுக்கு நவீன தொடர்பு வசதிகள் இருக்கவில்லை.
உலகில் எல்லோருக்கும்.. இது தான், மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. 

இப்போது... கணனி, கைத்தொலை பேசி வந்தவுடன்...
இன்றைய தலை முறை...  எட்டு மணித்தியால வேலை முடிந்த பின்பும்...
விடுமுறை நாட்களிலும்... அந்த நவீன சாதனங்கள் மூலம்...
வேலையில்.. ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி இருக்கும் போது... மனிதனுக்கு மனம், ஆறுதலைடையும் சக்தியே... 
இல்லாமல் போய் விடுவது.. பெரிய பரிதாபம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சைவம் எண்டுட்டு டெய்லி வதக்கின கறியும்,எண்ணையிலை பொரிச்ச கத்தரிக்காய் குழம்பு, ரீ ரைம் எண்டால் பூந்தி லட்டு,தார்மாதிரி இருக்கிற எண்னையிலை பொரிச்ச வடை எண்டு அமுக்கினால் வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்? :(

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கோ அண்ணா 365 நாளும் மரக்கறி வதக்காமல்,பொரிக்காமல் நீங்கள் சாப்பிடுவீங்களோ?...அறுசுவை கொண்டது தான் எனது உணவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 7:07 PM, நிழலி said:

மனிதர்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் போது, 30 வீதத்தினர் மரக்கறிக்கு மாறினால் கூட விவசாய நிலம் போதுமானதாக இருக்காது.

இதே மாதிரி விலங்கு உணவை கைவிட முடியாதவர்கள் இயற்கை சூழலில் வளர்க்கப்படுகிறது கோழி மாடுகளை மட்டும் உண்டும் படி வேண்டுகோள் வைக்கிறார்கள். அதுகூட மனித தேவையை நிறைவடைய செய்ய முடியுமா என்ற சந்தேகம் வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.