Jump to content

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

germany_1.jpg

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்!

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.

Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த  மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து  இரண்டாவது தாக்குதலை அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Barகளும் ஒருவருக்கே சொந்தமானது.

பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அவர்களை நாஷி என திட்டுவதும்,அவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதும்,ஜேர்மன் பெண்களை விபச்சாரிகளாக பார்ப்பதையும் ,பன்றிகள் என விளிப்பதையும் நிறுத்த வேண்டும்.உழைக்காமல் உண்டு மகிழ்வதை தவிர்க்க வேண்டும்.

நான் இங்கே வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பாக துருக்கி, சேர்பியன்,அல்பேனியன்,கொசொவோ,ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்  என இன்னும் கொஞ்ச நாட்டுக்காரர்..
எனக்குத்தெரிய இங்குவாழும் எம்மினத்தவர்கள் ஜேர்மனியர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்.அவர்களுக்கும் எம்மவர்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்கள் உட்பட ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை கொலைசெய்யவேண்டும்-  கொலையாளியின்  அதிர்ச்சி இணையத்தள பதிவு

 ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு ஒன்பது பேரை கொலை செய்த நபர் தனது தனிப்பட்ட இணையத்தளத்தில் ஜேர்மனியில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பிரஜைகள் உட்பட பல ஆசிய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ளமை விசாரணையாளர்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரொபியாஸ் ரத்ஜென் எனும் அந்த நபர் தனது இணையத்தளத்தில் எங்கள் மத்தியில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இனக்குழுக்களும், இனங்களும் கலாச்சாரங்களும் உள்ளன  என தெரிவித்துள்ளார்.

இவர்களை சுத்தம் செய்யவேண்டும் இது; உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

german_shooter.jpg

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது

இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.


இவர்களை முற்றாக அழிப்பதை சாத்தியமாக்கும் பட்டன் ஒன்று இருந்தால் நான் ஒரு நொடியில் அதனை அழுத்துவேன் என ரத்ஜென் தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார்.

இந்த இணையத்தளத்தினை அதிகாரிகள் தற்போது அகற்றியுள்ளனர்

german_shooting6.jpg

இதேவேளை இவர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்ஜென் அவரது வீட்டில் தாயாருடன் இறந்து கிடக்க காணப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/76120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 9 people, people smiling

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது

இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.

இதில் இஸ்ரேலையும் சேர்த்துள்ளமை இன்னும் நாசி போக்குள்ளவர்கள் ஜெர்மனியில் உள்ளார்களா? என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 11:14 AM, குமாரசாமி said:

இங்கே வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அவர்களை நாஷி என திட்டுவதும்,அவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதும்,ஜேர்மன் பெண்களை விபச்சாரிகளாக பார்ப்பதையும் ,பன்றிகள் என விளிப்பதையும் நிறுத்த வேண்டும்.உழைக்காமல் உண்டு மகிழ்வதை தவிர்க்க வேண்டும்.

நான் இங்கே வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பாக துருக்கி, சேர்பியன்,அல்பேனியன்,கொசொவோ,ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்  என இன்னும் கொஞ்ச நாட்டுக்காரர்..

On 2/20/2020 at 8:03 PM, ampanai said:

பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார்.

நான் சொல்லல.....🙄

 

On 2/20/2020 at 7:10 AM, Kavi arunasalam said:

புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.

On 2/20/2020 at 6:00 AM, தமிழ் சிறி said:

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

இறந்தவர்கள்.... குர்திஷ் இனத்தவர்கள் என்று பத்திரிக்கை செய்தியில் படித்தேன்.
அத்துடன் அந்த கொலையாளி,  இரு இடங்களில் தாக்குதலை நடத்திவிட்டு..
வீட்டிற்கு சென்று... தனது 72 வயது தாயாரையும் சுட்டுக் கொன்று விட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்த நிலையில்..
பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இறந்தவர்கள்.... குர்திஷ் இனத்தவர்கள் என்று பத்திரிக்கை செய்தியில் படித்தேன்.
அத்துடன் அந்த கொலையாளி,  இரு இடங்களில் தாக்குதலை நடத்திவிட்டு..
வீட்டிற்கு சென்று... தனது 72 வயது தாயாரையும் சுட்டுக் கொன்று விட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்த நிலையில்..
பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டார்.

குர்திஷ் இனத்தவர் என்றபடியால் தானோ துருக்கி இனத்தவர்கள் கண்டன அறிக்கைகளோ அல்லது வருத்தங்களையோ தெரிவிக்கவில்லை.
அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் எனது கணிப்பில் துருக்கியர்கள் சிங்கள/கிந்தியர்களை விட மோசமானவர்கள்.
சித்தரல்லா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2020 at 11:17 PM, குமாரசாமி said:

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

100919germanyshooting_960x540-720x450.jpg

ஜேர்மனியில் குர்துகளை இலக்கு வைத்த துப்பாக்கி சூடு சம்பவம்: பாதுகாப்பு தீவிரம்!

ஜேர்மனியில் குர்து இன மக்களை இலக்கு வைத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் அதிகம் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இத்தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மேற்கு நகரமான ஹனாவ் நகரில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நடந்த தாக்குதல் ஜேர்மனியில் சிறுபான்மை சமூகங்கள் பாசிச மற்றும் இஸ்லாமிய வன்முறைக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தை ஆழப்படுத்தியுள்ளதுடன், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராட மாநில அதிகாரிகள் எவ்வளவு செய்கிறார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இனவாதக் கொள்கையுடைய 43 வயதான தொபியாஸ் ராதேன் என்பர், ஹனாவ் நகரில், குர்துகள் அதிகம் கூடும் இரு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10பேர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர், துப்பாக்கிதாரி தனது 72 வயதான தாயை சுட்டுக்கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த தாக்குதல் சம்பவம், பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின்னணியுடன், தீவிர வலதுசாரி மாற்று ஜேர்மனி (ஆஃப்டி) கட்சிக்கு எதிராக பின்னடைவைத் தூண்டியுள்ளது.

தொபியாஸ் ராதேன், பல தீவிர வலதுசாரி சதி வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டார், அதே போல் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் இனவெறி மற்றும் யூஜெனிச கருத்துக்களை ஆதரித்துள்ளார்.

http://athavannews.com/ஜேர்மனியில்-குர்துகளை-இல/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.