Jump to content

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

germany_1.jpg

ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – எட்டு பேர் உயிரிழப்பு ஐவர் காயம்!

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இதன்போது குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் பொலிஸ் ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பொலிஸார் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.

Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த  மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து  இரண்டாவது தாக்குதலை அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Barகளும் ஒருவருக்கே சொந்தமானது.

பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அவர்களை நாஷி என திட்டுவதும்,அவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதும்,ஜேர்மன் பெண்களை விபச்சாரிகளாக பார்ப்பதையும் ,பன்றிகள் என விளிப்பதையும் நிறுத்த வேண்டும்.உழைக்காமல் உண்டு மகிழ்வதை தவிர்க்க வேண்டும்.

நான் இங்கே வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பாக துருக்கி, சேர்பியன்,அல்பேனியன்,கொசொவோ,ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்  என இன்னும் கொஞ்ச நாட்டுக்காரர்..
எனக்குத்தெரிய இங்குவாழும் எம்மினத்தவர்கள் ஜேர்மனியர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள்.அவர்களுக்கும் எம்மவர்மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இந்தியர்கள் பாக்கிஸ்தானியர்கள் உட்பட ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை கொலைசெய்யவேண்டும்-  கொலையாளியின்  அதிர்ச்சி இணையத்தள பதிவு

 ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு ஒன்பது பேரை கொலை செய்த நபர் தனது தனிப்பட்ட இணையத்தளத்தில் ஜேர்மனியில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பிரஜைகள் உட்பட பல ஆசிய ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என தெரிவித்துள்ளமை விசாரணையாளர்களிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரொபியாஸ் ரத்ஜென் எனும் அந்த நபர் தனது இணையத்தளத்தில் எங்கள் மத்தியில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இனக்குழுக்களும், இனங்களும் கலாச்சாரங்களும் உள்ளன  என தெரிவித்துள்ளார்.

இவர்களை சுத்தம் செய்யவேண்டும் இது; உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

german_shooter.jpg

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது

இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.


இவர்களை முற்றாக அழிப்பதை சாத்தியமாக்கும் பட்டன் ஒன்று இருந்தால் நான் ஒரு நொடியில் அதனை அழுத்துவேன் என ரத்ஜென் தெரிவித்துள்ளார்.

பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார்.

இந்த இணையத்தளத்தினை அதிகாரிகள் தற்போது அகற்றியுள்ளனர்

german_shooting6.jpg

இதேவேளை இவர் இன்று மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்ஜென் அவரது வீட்டில் தாயாருடன் இறந்து கிடக்க காணப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/76120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 9 people, people smiling

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

பின்வரும் இனத்தவர்கள் நாடுகளை சேர்ந்தவர்களை முற்றாக அழிக்கவேண்டும் என அவர் தனது

இணையத்தளத்தில்குறிப்பிட்டுள்ளார்-மொராக்கோ அல்ஜீரியா லிபியா துனிசியா எகிப்து இஸ்ரேல் சிரியா ஜோர்தான் லெபனான்,துருக்கி ஈரான்ஈராக் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் வியட்நாம் கம்போடியா பிலிப்பைன்ஸ்.

இதில் இஸ்ரேலையும் சேர்த்துள்ளமை இன்னும் நாசி போக்குள்ளவர்கள் ஜெர்மனியில் உள்ளார்களா? என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 11:14 AM, குமாரசாமி said:

இங்கே வாழும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியர்களுக்கு மரியாதை கொடுக்க பழக வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அவர்களை நாஷி என திட்டுவதும்,அவர்களை முட்டாள்களாக சித்தரிப்பதும்,ஜேர்மன் பெண்களை விபச்சாரிகளாக பார்ப்பதையும் ,பன்றிகள் என விளிப்பதையும் நிறுத்த வேண்டும்.உழைக்காமல் உண்டு மகிழ்வதை தவிர்க்க வேண்டும்.

நான் இங்கே வெளிநாட்டவர்கள் என கூறியது குறிப்பாக துருக்கி, சேர்பியன்,அல்பேனியன்,கொசொவோ,ஈராக்,ஈரான்,ஆப்கானிஸ்தான்  என இன்னும் கொஞ்ச நாட்டுக்காரர்..

On 2/20/2020 at 8:03 PM, ampanai said:

பாடசாலையிலும் அலுவலகத்திலும்  கிடைத்த அனுபவஙகள் மூலமாகவும் ஜேர்மனிய பிரஜைகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் இடையிலான மோதல்கள் குறித்த பத்திரிகை செய்திகளை படித்த பின்னரும் இந்த முடிவிற்கு வந்ததாக அவர் குறி;பிட்டுள்ளார்.

நான் சொல்லல.....🙄

 

On 2/20/2020 at 7:10 AM, Kavi arunasalam said:

புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது.

On 2/20/2020 at 6:00 AM, தமிழ் சிறி said:

ஜேர்மனியின் ஹனோவ் நகரில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கி பிரயோகங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

இறந்தவர்கள்.... குர்திஷ் இனத்தவர்கள் என்று பத்திரிக்கை செய்தியில் படித்தேன்.
அத்துடன் அந்த கொலையாளி,  இரு இடங்களில் தாக்குதலை நடத்திவிட்டு..
வீட்டிற்கு சென்று... தனது 72 வயது தாயாரையும் சுட்டுக் கொன்று விட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்த நிலையில்..
பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இறந்தவர்கள்.... குர்திஷ் இனத்தவர்கள் என்று பத்திரிக்கை செய்தியில் படித்தேன்.
அத்துடன் அந்த கொலையாளி,  இரு இடங்களில் தாக்குதலை நடத்திவிட்டு..
வீட்டிற்கு சென்று... தனது 72 வயது தாயாரையும் சுட்டுக் கொன்று விட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்து கிடந்த நிலையில்..
பொலிஸாரால் கண்டு பிடிக்கப் பட்டார்.

குர்திஷ் இனத்தவர் என்றபடியால் தானோ துருக்கி இனத்தவர்கள் கண்டன அறிக்கைகளோ அல்லது வருத்தங்களையோ தெரிவிக்கவில்லை.
அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் எனது கணிப்பில் துருக்கியர்கள் சிங்கள/கிந்தியர்களை விட மோசமானவர்கள்.
சித்தரல்லா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2020 at 11:17 PM, குமாரசாமி said:

இறந்தவர்கள் துருக்கி நாட்டவர்கள். ஆனால் குர்திஷ் இனத்தவர்கள்.இது உண்மையா?

100919germanyshooting_960x540-720x450.jpg

ஜேர்மனியில் குர்துகளை இலக்கு வைத்த துப்பாக்கி சூடு சம்பவம்: பாதுகாப்பு தீவிரம்!

ஜேர்மனியில் குர்து இன மக்களை இலக்கு வைத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸார் அதிகம் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் குர்திஷ் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இத்தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மேற்கு நகரமான ஹனாவ் நகரில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) நடந்த தாக்குதல் ஜேர்மனியில் சிறுபான்மை சமூகங்கள் பாசிச மற்றும் இஸ்லாமிய வன்முறைக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தை ஆழப்படுத்தியுள்ளதுடன், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராட மாநில அதிகாரிகள் எவ்வளவு செய்கிறார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இனவாதக் கொள்கையுடைய 43 வயதான தொபியாஸ் ராதேன் என்பர், ஹனாவ் நகரில், குர்துகள் அதிகம் கூடும் இரு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10பேர் உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர், துப்பாக்கிதாரி தனது 72 வயதான தாயை சுட்டுக்கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த தாக்குதல் சம்பவம், பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின்னணியுடன், தீவிர வலதுசாரி மாற்று ஜேர்மனி (ஆஃப்டி) கட்சிக்கு எதிராக பின்னடைவைத் தூண்டியுள்ளது.

தொபியாஸ் ராதேன், பல தீவிர வலதுசாரி சதி வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டார், அதே போல் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார், அதில் அவர் இனவெறி மற்றும் யூஜெனிச கருத்துக்களை ஆதரித்துள்ளார்.

http://athavannews.com/ஜேர்மனியில்-குர்துகளை-இல/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.