Jump to content

30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87.jpg

30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி!

30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார்.

30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம்.

ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல.

விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது.

பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/

Link to comment
Share on other sites

9 minutes ago, தமிழ் சிறி said:

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87.jpg

30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி!

30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/

உங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள்। எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம்।

அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால்।

அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானே।நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்।

எனவே உங்கள் வீடடை   சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது.

அம்மணி! உங்களுக்கே புரியாத புதிரை அவிழ்க்க முயலமுன், என்ன... ஏன் நடந்தது என்று தெரிந்து கொண்டால் விடை தானாக கிடைத்துவிடும். 
அமெரிக்கா  விடுதலை புலிகளின் அமைப்பின் நோக்கங்களை கருத்தில் கொண்டு உங்கள் தளபதிக்கு  தடை விதித்தது என்றால், ஏன் அந்த அமைப்பை அழித்து ஒழிக்க உங்கள் இராணுவத்துக்கு உதவியது? ஒருவேளை அமெரிக்காவுக்கு மூளை மாறாட்டமாய் இருக்கலாம். எதுக்கும் உங்கள் மனநல வைத்தியர் ஒருவரை அனுப்பி ஆராயலாம். இருக்கவே இருக்கிறது சர்வதேச திறமை வாய்ந்த புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி செய்திகளை சேகரித்து அறிக்கை தயாரித்து வழக்கும் தொடரலாம்.  தானும் ஒரு ஆள் எண்டு ஆளாளுக்கு அறிக்கை விட வெளிக்கிட்டினம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.