Jump to content

‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்...

image_9d28009c8f.jpg 

‘கேட்கிறவன் கேனயனாய் இருந்தால்....’ என்று தொடங்குகிற பழமொழி ஒன்றுண்டு. சில நாள்களாகவே அது, என் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.   

இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்திருக்கிறது. இது, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.   

ஒருபுறம், உள்நாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான மனோநிலை தீவிரமடைந்துள்ளது. இது, எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஆளும் கூட்டணி எதிர்பார்த்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி, அவர்களை நகர்த்தும்.  

மறுபுறம், தமிழ்த் தரப்புகள் அமெரிக்கா, இன்னமும் தமிழர்கள் பக்கம் நிற்கிறது என்ற ‘புருடா’வை, இன்னொரு முறை எந்தவொரு வெட்கமும் இல்லாமல் சொல்வதற்கும் வழிவகுக்கும். இவற்றுக்கு மேல், இதன் பயன் ஏதுமில்லை.   

அமெரிக்காவின் இந்தத் தீர்மானம், தமிழர்கள் மத்தியில் சிலாகிக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள், புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள். ‘இன்னொரு ஜெனீவா விஜயம் உறுதி’ என, வழமையான ‘ஜெனீவா புரோக்கர்’கள் அகமகிழ்ந்தனர். அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் ‘அந்தர்பல்டி’ அடிக்கத் தெரிந்தவர்களுக்கும் மகிழ்ச்சிதான்!  

இந்தப் பயணத் தடை, நகைச்சுவையானது. இதே அதிகாரி, அமெரிக்காவில் ஐ.நா அலுவலகத்தில், இலங்கையின் துணைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய போது, இவர் குற்றவாளியாகத் தெரியவில்லை; இப்போது தான் தெரிகிறார்.   

இப்போதுதான் இவரது குற்றங்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது, ‘அனைத்தும் நாமறிவோம்’ என்று சொல்லும் அமெரிக்காவுக்கு, இப்போதுதான் தெரியும் என்று நாம் நம்பவேண்டுமா? ‘கொப்பிக்குள் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்று’ சிறுபராயத்தில் நாம் நம்புவது போல!   

இறுதிப் போர் நடந்தபோது இல்லாத அக்கறை, போர் முடிந்த பின்னர், முட்கம்பி வேலிகளுக்குள் இருந்தபோது இல்லாத அக்கறை, பின்னர், நல்லாட்சியோடு கூடிக்குலாவியபோது இல்லாத அக்கறை, இப்போது எங்கிருந்து, ஏன் திடீரென்று வந்தது?   

 அச்சப்பட நிறையவே இருக்கின்றன. இன்னொரு முறை, தமிழர்களின் பெயரால், அவர்களின் அரசியல் அரங்கேறுகிறது. MCC, சீனா என எத்தனையோ ஆக வேண்டியிருக்கிறது; அதுதான் ஓநாய் அழுகிறது. ஆனால், ஆடு நனைவதற்கு அது அழுகிறது என்று, நாம் நம்பவைக்கப்படுகிறோம்.   

இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி, அமெரிக்காவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.   

புலம்பெயர் தமிழர்களும் அமைப்புகளும் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் நிலைப்பாட்டை, இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையில் திருப்ப வல்லவர்கள் என்று, நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.   

மேற்குலக அரசியல் தலைவர்களுக்கு, இந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.   

இதில் ஒரு பகுதியை நம்புவதற்கு, அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு, பலருக்கு நியாயம் இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும், மேற்குலகு பற்றிய ஒரு நம்பிக்கை, இன்னோர் ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.   

ஆனால், ஒரு கொடிய போரின் முடிவும் அதைத் தொடர்ந்த அகதி வாழ்வும் வாய்க்கப் பெற்ற பின்னர், நம்பிக்கை வைக்க என்ன இருக்கிறது?   

அமெரிக்கா, இலங்கையில் பூரண கட்டுப்பாட்டை வேண்டுகிறது. அது, இயலாமல் போயுள்ள நிலையில், இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே அது தொடர்ந்து குழிபறித்து வந்துள்ளது. ஆனால், அமெரிக்கா மீதான நம்பிக்கை, இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் குறையவில்லை.   

தமிழ் மக்கள், இன்னமும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மனந்திருந்தி, தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று எதிர்பார்ப்பவர்களாகவே இருப்பதில் வியக்க ஒன்றும் இல்லை.   

ஏனெனில், தமிழ்ச் சமூகத்தில் பெரும் பகுதியானோர் இன்னமும் பகுத்தறிந்து பார்க்கும் சிந்தனைக்குத் திரும்பவில்லை. இன்னமும், தமிழரின் வசதி படைத்த வர்க்கத்தினரிடையே, ‘வெள்ளைக்காரர் நியாயமானவர்கள்’ என்கிற சிந்தனைப்போக்கு வலுவாகவே உள்ளது.   

இப்போதும், அமெரிக்காவை நம்பச் சொல்கிறவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள்.   
அமெரிக்காவையும் மேற்குலகையும் விட்டால் போக்கிடம் இல்லை என்று நம்பச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.   

அமெரிக்காவின் இப்போதைய அறிவிப்பை, தமிழ் மக்களுக்கான நீதிக்கான தொடக்கம் என்பவர்களும் அதை நம்புபவர்களும், தொடக்கத்தில் சொன்ன பழமொழிக்குப் பொருத்தமான சொந்தக்காரர்கள் ஆவார்கள்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆடு-நனைகிறதென்று-அமெரிக்கா-அழுததாம்/91-245797

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M-VEHyTc_400x400.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.