Jump to content

மட்டக்களப்பில் ஆலய மண்ணரிப்பைத் தடுக்க கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றதும் முக்கியம் வாய்ந்ததுமான முறக்கட்டான்சேனை விஷ்ணு ஆலயம் மற்றும் இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம் என்பவற்றிற்கு சமீபமாக நீண்ட காலமாக ஏற்படும் பாரிய மண்ணரிப்பு பாதிப்பை தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆழுனர் திருமதி அனுராதா ஜயம்பத் மாவட்ட அரசாங்க அதிபரை பணித்துள்ளார்.


ஸ்ரீ ரமண மகரிசி அறப் பணி நிலையத்தின் இலங்கை கிளை தலைவர் மாரிமுத்து செல்லத்துரை இந்த மண்ணரிப்பு பாதிப்பு பற்றி கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இந்த பணிப்புரையை அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இந்த பணிப்புரைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட செயலக காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் குறித்த மண்ணரிப்பைத் தடுக்க முன்னுரிமை அடிப்படையில் குறித்த மண்ணரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபை செயலாளர் ஆர். ராஜ்பாபுவிற்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.


குறித்த மண்ணரிப்பு பாதிப்பினால் இயற்கை வளம் கொண்ட மருதமர நீர் ஊற்றுக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் ஸ்ரீ விஷ்ணு ஆலய கட்டடங்கள் முறக்கட்டான்சேனை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்படவும் இதனால் இப்பாடசாலையின் கல்வி கற்றலுக்கும் ஆலயத்தின் சமய வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணிமன்றத் மாரிமுத்து செல்லத்துரை தமது வேண்டுகோளில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இப்பிரதேச மாணவர்களின் கல்விக்கு பங்கம் ஏற்படாது இருக்கவும் ஆலயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது இருக்கவும் தலைவர் செல்லத்துரை தமது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மகிந்தராஜபக்ஷவின் பொதுச் சேவைகளை பாராட்டி பிரதமரின் சேவைகள் எதிர்காலத்தில் தழைத்து ஓங்கவும் வேண்டி பிரதமருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பிய ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி நிலயத்தின் இலங்கை கிளைத் தலைவர் மாரிமுத்து செல்லத்துரைக்கு பிரதமர் மகிந்தராஜபக்ஷ நன்றி பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.


இந்த நன்றி பாராட்டுதல் கடிதத்தில் தங்களின் வாழ்த்துச் செய்திக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாகவும் எதிர் காலத்தில் மட்டக்களப்பு பிரதேச இந்து மக்களுக்கு தங்களால் முன் வைக்கப்படும் சமய அறப்பணிகளுக்கு அரசாங்க உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மகிந்தராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதம அமைச்சரின் அலுவலக உதவிப் பணிப்பாளர் ஷனிகா எகநாயக அறிவித்துள்ளார்.

இதேவேளை அறப்பணிமன்ற நிலயத்தின் இலங்கை கிழைத்தலைவர் செல்லத்துரை பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் இழைப்பாறிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நல்ல கடமையை பாராட்டி அவரது நியமனத்திற்கு அனுப்பிய வாழ்த்து செய்திக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி பாராட்டி அவருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இக்கடிதத்தில் தமது சேவையில் Nலும் இந்து மக்களின் நன்மை கருதி முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளுக்கு தான் கவனம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தமது பாராட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/ஆலய-மண்ணரிப்பைத்-தடுக்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.