Jump to content

தருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

B9625-F21-FE66-473-C-9-DD6-3-A9-E6-F59-D
அவள் இரண்டு
தடவைகள் தனது கணவன் Adrian கத்தியால் குத்தியிருக்கிறாள்அவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான். 2018இல் நடந்த இந்தச் சம்பவத்துக்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.

34 வயதான Natascha தனது வாழ்க்கைத் துணைவன் Adrianஆல் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து விடுபட வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது கொலையில் போய் முடிந்து விட்டது.

Adrian பொறாமைக் குணம் கொண்டவன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் Nataschaவைத் தாக்கிக் கொண்டிருந்தான். முகத்தில் உதைவது, சைக்கிளில் செல்லும் போது தள்ளி விழுத்துவது என்று பலவிதத்திலும் அவளைத்  தாக்கிக் கொண்டிருந்தான். தன்னை அவன் எப்பொழுது தாக்குவான் என்று தெரியாமல் Natascha அச்சத்துடனேயே எப்பொழுதும் இருந்தாள். அவளது பிள்ளைகளுக்கு முன்னாலேயேபெட்டை நாய், பரத்தைஎன்று பேசிக் கொண்டும் இருந்தான். நாளடைவில் அவனது ஏச்சுக்களும் தாக்குதல்களும் மணிக்கணக்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தன. Adrianக்கும் Natascha வுக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஆரம்பமாவதால்  ஒரு கட்டத்தில் அவள் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு Adrian இடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். பின்னர் இருவருக்கும்  சமரசம் ஏற்பட மீண்டும் இணைந்து கொண்டார்கள்

14.12.2019இல்  தங்கள் இருவருக்கும் உள்ள மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்காக ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மீண்டும் இருவருக்கும் இடையில்  சண்டை ஆரம்பித்தது. Adrian உடனடியாகவே Natascha வைத் தாக்க ஆரம்பித்து விட்டான். அவனது தாக்குதலுக்கு மத்தியிலும் Natascha தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி நிலவறைக்குள் மறைந்து கொண்டாள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவளது குடியிருப்பில் இருந்த பக்கத்து வீட்டுக்காரர் அவளுக்கு உதவியாக நின்றார்

ஒரு நிலையில் வீட்டில் Adrian இன் சத்தம் அடங்கிப் போனதுஇதை அவதானித்த Natascha, பிள்ளைகளை பக்கத்து வீட்டுக்காரனுடன் விட்டு விட்டு தனது வீட்டுக்குள் சென்று தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற எத்தனித்த போது அவள் முன்னல் Adrian வந்து நின்றான்அப்பொழுது Natascha நின்ற இடம் சமையலறை. அந்த வாசலை மறைத்துக்  கொண்டு  நின்று அவள் மேல் தாக்குதலை Adrian ஆரம்பித்தான். அவளால் வெளியேற முடியாத நிலைஅடி, உதைகள் பலமாக இருந்தன. இந்த நிலையில் சமையலறை மேசை இழுப்பறையைத் திறந்து  அங்கிருந்த கத்தியை எடுத்து தன் பலம் கொண்ட மட்டும் Adrian உடலில் சொருகினாள். நிலை தடுமாறி கீழே விழுந்தவன் மீது மீண்டும் ஒரு தடவை கத்தியால் குத்தினாள்சமையலறைக்குள்ளேயே Adrian இறந்து போனான்

Natascha, Adrianஐ கத்தியால் குத்தும் போது அவளது இரத்தத்தில் 2 வீதமான அற்ககோல் செறிவு காணப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது. பாதுகாப்புக்காக Adrian Natascha கத்தியால் ஒருதடவை குத்தியபின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கப் பார்த்திருப்பாள். ஆனால் அவள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் அவனைக் கத்தியால் குத்தியிருக்கிறாள். இது ஒருவரைக் காயப்படுத்தி மரணம் விளைவிப்பதற்கான செயல் என்று கருதி நீதிமன்றம் Natascha வுக்கு  மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

`கொலை நடந்த நேரத்தில் உள்ள சூழ்நிலை, அந்த நேரத்தில் அவளுக்கு இருந்த பதட்டம், அவள் இரத்தத்தில் இருந்த அற்ககோல் செறிவு, அவளது பிள்ளைகளின் எதிர்காலம்,  மற்றும் Natascha தப்பிக்க முடியாத  ஒரு வன்முறையின் சூழலில் அந்தக் கத்தியைப் பாவித்து தன்னை  விடுவிக்க முடிந்தது போன்ற காரணங்களைக் கவனத்தில் கொண்டு Natascha வை நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும்` என்று Nataschaவின்  சார்பில் அவளுடைய வழக்கறிஞர் ஒரு மேன் முறையீடு செய்தார்.

அந்த மேன் முறையீட்டுக்கன தீர்ப்புத்தான் நீதிமன்றில் இப்பொழுது அறிவிக்கப் பட்டிருக்கிறது. "ஒரு அவசர நிலையிலேயே Natascha  கத்தியை எடுத்து தனது வாழ்க்கைத் துணைவனைக் கொன்றிருக்கிறாள். Nataschaவின் நிலையைக் கருத்தில் கொண்டு அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்கள் நீங்க அவளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் பட வேண்டும்" என நீதிமன்றம் அறிவித்து அவளை விடுதலை செய்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறதுமேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவருமே மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் தினசரி பிரச்சனைகள் சந்தர்பங்கள் அதிகம். கணவனை பிரிந்து சென்று பாதுகாப்பாக பிள்ளைகளுடன் வாழ்ந்திருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறதுமேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பெண்களும் எதோ ஒருவிதத்தில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழும்போது தவிர்க்க முடியாததாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

ஜேர்மனியில் மட்டுமல்ல இங்கே அவுஸ்ரேலியாவிலும் domestic violenceஇனால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். 

https://mobile.abc.net.au/news/2020-02-21/turning-domestic-violence-into-culture-war-thwarts-real-action/11989328?nw=0&pfmredir=sm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்காப்புக்காக கொலையும் செய்வாள் மனைவி, தலைப்பை இப்பிடி போட்டிருக்கலாம்.
பத்தினி என்ற சொல் எனக்கு பிடிக்கல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

இது தப்பித்தவறி நடந்திருக்கு. நோர்மலாய் ஜேர்மனியிலை பெண்கள் தெய்வத்துக்கு சமம். ஒரு பெண் ஆணுக்கெதிராய் முறைப்பாடு செய்தால் அவ்வளவுதான்......
என்ரை மூனா சும்மா செல்லமாய் தன்ரை மனிசிக்காரியின்ரை கன்னத்திலை தட்டினதுக்கே ஆறுமணித்தியாலம் உள்ளுக்கை இருந்தவர்.:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இது தப்பித்தவறி நடந்திருக்கு. நோர்மலாய் ஜேர்மனியிலை பெண்கள் தெய்வத்துக்கு சமம். ஒரு பெண் ஆணுக்கெதிராய் முறைப்பாடு செய்தால் அவ்வளவுதான்......
என்ரை மூனா சும்மா செல்லமாய் தன்ரை மனிசிக்காரியின்ரை கன்னத்திலை தட்டினதுக்கே ஆறுமணித்தியாலம் உள்ளுக்கை இருந்தவர்.:grin:

 

தெய்வத்தை கருவறையில் வைத்துத்தான் அர்ச்சனை, அபிசேகம் எல்லாம் செய்யிறது....இவர் என்ன கோதாரிக்கு கண்ட இடத்திலயும் வைத்து கன்னத்தில தட்டினவர்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

தற்காப்புக்காக கொலையும் செய்வாள் மனைவி, தலைப்பை இப்பிடி போட்டிருக்கலாம்.
பத்தினி என்ற சொல் எனக்கு பிடிக்கல.

https://youtu.be/8kSxNWoeX3Y

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா ஜேர்மனி இந்தியாவையே வென்றுவிடும் போல இருக்கே.

அந்தப் பெண்ணுக்கு விடுதலை கொடுப்பது தான் நீதி.

ஈழப்பிரியன் அண்ணா...
நீங்கள், ஜேர்மனியையையும்... இந்தியாவையும்....
ஒரே... தராசில் வைத்து ஒப்பிட்டதை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2020 at 2:51 PM, Kavi arunasalam said:

2018 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற வீதத்தில் தனது கணவனாலோ அல்லது வாழ்க்கைத் துணைவனாலோ ஆபத்தான உடல் காயங்களுக்கு உள்ளாகிறாள் என்றும் வீடு என்பது பெண்களுக்கு வாழ்விடம் மட்டுமல்ல மிகவும் ஆபத்தான இடமுமாகும்  என்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருக்கிறதுமேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பெண் மட்டுமே சட்ட உதவியை நாடுகிறாள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

21 hours ago, குமாரசாமி said:

இது தப்பித்தவறி நடந்திருக்கு. நோர்மலாய் ஜேர்மனியிலை பெண்கள் தெய்வத்துக்கு சமம். ஒரு பெண் ஆணுக்கெதிராய் முறைப்பாடு செய்தால் அவ்வளவுதான்......
என்ரை மூனா சும்மா செல்லமாய் தன்ரை மனிசிக்காரியின்ரை கன்னத்திலை தட்டினதுக்கே ஆறுமணித்தியாலம் உள்ளுக்கை இருந்தவர்.:grin:

 

 

14 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன் அண்ணா...
நீங்கள், ஜேர்மனியையையும்... இந்தியாவையும்....
ஒரே... தராசில் வைத்து ஒப்பிட்டதை, மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.  :grin:

மேலே கவி அருணாசலம் எழுதியதை வைத்தே இந்தியாவுடன் ஜேர்மனியை ஒப்பிட்டேன்.

இப்போ நீங்கள் இருவரும் சொல்வதைப் பார்த்தா கவி அருணாசலம் ஒரு பொய்யன் என்றெல்லோ இருக்கிறது?

சிறி கண்டிப்பதாக இருந்தால் கவி அருணாசலத்தையே கண்டிக்க வேண்டும்.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

மேலே கவி அருணாசலம் எழுதியதை வைத்தே இந்தியாவுடன் ஜேர்மனியை ஒப்பிட்டேன்.

இப்போ நீங்கள் இருவரும் சொல்வதைப் பார்த்தா கவி அருணாசலம் ஒரு பொய்யன் என்றெல்லோ இருக்கிறது?

சிறி கண்டிப்பதாக இருந்தால் கவி அருணாசலத்தையே கண்டிக்க வேண்டும்.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

இது பொயினட்.இனி பண்ணிப்பாருங்கோவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.