Jump to content

புர்காவுக்கு தடை உட்பட 14 பரிந்துரைகள் முன்வைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து எழுந்த 14 சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்க்கும் பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று (19) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்,

பொது இடத்தில் முகத்தை மறைத்து முகத்திரை அணிந்திருக்கும் போது பொலிஸாருக்கு அடையாளப்படுத்த தவறினால் பிடியாணை இன்றி கைது செய்ய முடியும் என்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது. இன, மத அடிப்படையிலான கட்சிகளை பதிவு செய்வதை நிறுத்தி வைக்கும் சட்டத்தை இயற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் இஸ்லாமிய மதராஸ் நிறுவனங்களில் பயிலும் அனைத்து மாணவர்களையும் மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண கல்வி முறைக்குள் உள்ளவாங்க வேண்டும் என்று குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மதராஸ்களை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்காக மட்டும் இஸ்லாமிய மௌலவி கல்விக்காக மட்டும் மதராஸ்கள் இயக்கபட வேண்டும் என்று முன்மொழிந்து, முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் கீழ் மதராஸ்களை ஒழுங்குபடுத்த சிறப்பு குழுவை நியமிக்கவும் பரிந்தரைத்துள்ளது.

மேலும் தேசிய பாதுகாப்பு கொள்கை, தேசிய மற்றும் சர்வதேச புதிய முன்னேற்றத்துக்கு ஏற்ப குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை திருத்துதல், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்ட திருத்தம், வஹப் சட்ட திருத்தத் தேவை, ஹலான் சான்றிதழ் செயல்முறை மற்றும் அனைத்து மதங்களுடனும் அமைச்சு ஒன்றை உருவாக்குதல். – என்பவை தொடர்பிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

https://newuthayan.com/புர்காவுக்கு-தடை-உட்பட-14-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூனாக்களுக்கு..சனி ..குரு ப்பெயற்சி சரியில்லையோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

புர்கா போன்ற உடைகளை தடை செய்யவும் இன, மத அடிப்படையில் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்தவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு பரிந்துரைந்துரைத்துள்ளது.

வரவேற்க வேண்டிய விடயம்.
மூனாக்கள்... இதனையம் அனுபவிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

நிச்சயமாக இவைகள் நல்ல யோசனைகளை। அரசாங்கம் விரைவில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்।

விசேடமாக இந்த மதரஸாக்கள்தான் பயங்கர வாதிகளை உருவாக்கும், மூளை சலவை செய்யப்படும் தொழிற்ச்சாலையாக இயங்குகிறது।

மேலும் இந்த பயங்கரவாத இயக்கங்களுக்கு ரிசார்ட் , ஹிஸ்புல்லா   போன்றவர்கள்  இயக்கும் தொண்டர் இஸ்தாபனங்கள் ஊடக வரும் பணங்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.