Jump to content

பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மடக்கி பிடித்தனர்

பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்!

பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக மாணவிகளை படம் பிடித்துள்ளர் உதவி பேராசிரியர்.. இந்தியாவிலேயே சிறந்த பல்கலை. என பெயர் வாங்கும் சென்னை ஐஐடியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி அவர்.. பிஎச்டி படித்து வருகிறார்... விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள பாத்ரூமுக்கு சென்றார் மாணவி.

பிறகு யதேச்சையாக அங்கிருந்த சுவற்றை பார்த்தார்.. அப்போதுதான் அதில் சின்ன ஓட்டை இருப்பதை பார்த்தார். அந்த துளைக்குள் மாணவி எட்டி பார்த்தபோது, ஒருவர் அங்கிருந்து வேகமாக நழுவி செல்வதை கவனித்தார்... உடனே பாத்ரூமை விட்டு வெளியே வந்தவர், அந்த நபரின் பின்னாடியே ஓடினார்.. அவரை மடக்கி பிடித்தார்... "லேடீஸ் பாத்ரூமில் உங்களுக்கு என்ன வேலை? இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்றார்.

உடனே அந்த நபர்.. "நான் இந்த பக்கமா வந்துட்டு இருந்தேன்" என்று நழுவியபடி பதில் சொன்னார். ஆனாலும் மாணவிக்கு ஏதோ தப்பாகவே பட்டது.. உடனே அவரிடம் இருந்த செல்போனை லபக்கென பிடுங்கி பார்த்தார்... அதில் எதுவுமே பதிவாகவில்லை.. ஆனாலும் பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக அந்த செல்போன் இருந்ததை பார்த்ததாக உறுதியாக நம்பினார்.
 

சக நண்பர்களிடம் இதை பற்றி மாணவி எடுத்து சொன்னார்.. உடனடியாக கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தரப்படவும், அவர்களும் விரைந்து வந்தனர்... சம்பந்தப்பட்ட சுபம் பேனர்ஜீயை விசாரித்தனர்.. அப்போதுதான் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.. சுபம் பேனர்ஜீ மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்.. ஏரோஸ்பேஸ் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவ்வளவு நாள், பாத்ரூமில் உள்ள தண்ணீர் செல்லும் பைப்புகள் நடுவில் உள்ள ஓட்டையின் வழியாக செல்போனை வைத்து, பெண்களை வீடியோ எடுத்து வந்துள்ளார் என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் அவரது செல்போனை மீண்டும் போலீசார் சோதனை செய்தபோது, அதில் வீடியோ ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை ஆதாரங்களை அதற்குள் அழித்திருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், தடயவியல் ஆய்வகத்துக்கு அந்த செல்போனை அனுப்பி வைத்துள்ளனர். இப்போது உதவி பேராசிரியர் புழல் ஜெயிலில் உள்ளார்.

இன்னும் பாத்திமா மரணத்துக்கே எந்த நீதியும் இதுவரை கிடைக்காத நிலையில், அடுத்த பகீர் இதே ஐஐடியில் மீண்டும் கிளம்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/madras-iit-asst-professor-arrested-for-taking-videos-of-girl-students/articlecontent-pf437068-377654.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ் அடிக்கும் என்ற பயத்தில் கூட அவர் இப்படி 
கூறி இருக்கலாம் .......... இத்தால் நாம் சொல்ல வருவது யாதெனில் 

செய்தி மிகவும் ஆதாரம் அற்று இருக்கிறது 
என்பதை சொல்ல விழைந்துள்ளோம் அஃதே 

Link to comment
Share on other sites

On 2/20/2020 at 9:49 PM, Maruthankerny said:

போலீஸ் அடிக்கும் என்ற பயத்தில் கூட அவர் இப்படி 
கூறி இருக்கலாம் .......... இத்தால் நாம் சொல்ல வருவது யாதெனில் 

செய்தி மிகவும் ஆதாரம் அற்று இருக்கிறது 
என்பதை சொல்ல விழைந்துள்ளோம் அஃதே 

மாணவி சந்தேகப்பட்டதில் பாதி உண்மை இருக்கலாம். அந்தரங்கத்துக்கு பக்கம் ஏற்படுவதை அறியும் ஏழாம் உணர்வு  பெண்களுக்கு இருப்பதாக எனக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. ஆனால் இந்த பேராசிரியர் செல் போனில் படம் எடுக்காமல் கண்ணால் பார்த்து மூளையில் பதித்திருப்பார். பொலிஸுக்கும் இவரில் சந்தேகம் வந்திருக்க வேண்டும், உருட்டி இருப்பார்கள். இவர் செல்போனில் எடுத்தார் என்று பொலிஸ் மிரட்ட ஆதாரம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்ட பேராசிரியரும் நீங்கள் சொல்வது படியே ஆகட்டும் என்றிருப்பார். ஆதாரம் இல்லாத நிலையில் பொலிஸ் பொய் வழக்கு போட்டதாகவும் மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகவும், மாணவி பேராசிரியர் மேல் பொய் குற்றச்சாட்டு சுமத்தி பேராசிரியருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியதாகவும், இதனால் மாணவியும் பொலிஸும் பேராசிரியருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் முடியும் சாத்தியம் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.