Jump to content

ஜெனீவா பிரேரணை குறித்த அரசாங்கத்தின் முடிவினால் இலங்கை சர்வதேசத்தின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் : சமன் ரத்னபிரிய


Recommended Posts

(செ.தேன்மொழி)

ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய , இதன்காரணமாக சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

saman.jpg


       

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து அதில் கிடைக்கும் நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முயற்சித்ததோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் வெளியிடப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் அரச செலவுகளுக்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் தமக்கு மேலும் 367 ரூபா பில்லியன் நிதியை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டே கணக்கறிக்கையை தயார் செய்தது.

அரசாங்கத்தினால் புதிய செயற்திட்டங்கள் கொண்டுவரப்படாத நிலையில் இந்த நிதிக்கான அவசியம் என்ன? அரசாங்கம் இதிலுள்ள சிக்கல்களை கருத்திற் கொண்டுதான் அதனை சபையில் சமர்ப்பிக்காமல் இருந்துள்ளது.அவ்வாறு சமர்ப்பித்திருந்தாலும் அது பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்கு வைத்துதான் அரசாங்கம் இந்த இடைக்கால கணக்கறிக்கையை தயார் செய்திருக்குமா என்பது தொடர்பில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தில் மக்களின் நலன் கருதி பல சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் , தற்போதைய அரசாங்கம் அதனை செய்யாது இருக்கின்றது.

தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றாது இருக்கின்றது.

பெறுமதிசேர் வரியை குறைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. ஐக்கிய தேசியக் கட்சி அதிக வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்தே வரியை அறவிட்டது.ஆனால் தற்போதைய அரசாங்கம் வற்வரியை குறைத்து அவர்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுத்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்த முயற்சியையாவது எடுத்துள்ளாரா?

ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கின்றது.

சர்வதேசத்திடம் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெனீவாவின் பிரேணைக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டால் சர்வதேசத்தின் எதிர்ப்பை இலங்கை சந்திக்க நேரிடும்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் கூட அரசாங்கம் நிறைவேற்றாது இருக்கின்றது.

நீங்கள் இப்போ எது சொன்னாலும் அது மக்கள் காதில் விழாது எல்லோரும் புத்தமத கனவுலகில் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.