Jump to content

குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்


Recommended Posts

குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

 

by : S.K.Guna

Safiyya-Shaikh.jpg

ஐஸ்ஐஸ் ஆதரவாளர் சஃபியா ஷேய்க், செயின்ற் போல்ஸ் தேவாலயம் (St Paul’s Cathedral) மீது தன்னைத் தானே வெடிக்கவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாக ஒப்புக் கொண்டார்.

மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார்.

சதி நடவடிக்கையில் ஈடுபட்டபோது 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.

ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கான தண்டனை மே மாதம் வழங்கப்படவுள்ளது.

St-Pauls-Cathedral.jpg

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஷேய்க் கைதுசெய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இரண்டு ரகசிய அதிகாரிகளுடன் தொடர்பை வளர்த்துக்கொண்டார்.

அந்த அதிகாரிகள் இருவரும் தீவிரவாத ஆதரவுள்ள கணவன், மனைவியாக தம்மை அடையாளப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவருக்கு சமூக ஊடகத்தின் மூலம் ஷேய்க் தகவல்களை அனுப்பினார்.

நான் ஏராளமானவர்களைக் கொல்ல விரும்புகிறேன். அதற்காக தேவாலயத்தினைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன். கிறிஸ்ற்மஸ் அல்லது ஈஸ்ரர் போன்ற நாளில் ஏராளமானவரைக் கொல்லலாம் என்று அதிகாரிக்குத் தகவல் அனுப்பினார்.

நான் எப்போதும் அச்சுறுத்தல்களை அனுப்புகிறேன்.ஆனால் அந்த அச்சுறுத்தல்களை உண்மையானதாக மாற்ற விரும்புகிறேன்.

சஃபியா ஷேய்க் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தின் படத்தை அதிகாரிக்கு அனுப்பியதுடன் நான் நிச்சயமாக இந்த இடத்தைத் தெரிவுசெய்ய விரும்புகிறேன்.

நான் குண்டினை வெடிக்கவைக்க விரும்புகிறேன். இறக்கும் வரை சுட விரும்புகிறேன். அந்த இடத்தையும் காஃபிர்களையும் (ஐ.எஸ்ஸின் எதிரிகள்) அழிக்க விரும்புகிறேன்.

ஹோட்டலிலும், பின்னர் தேவாலயத்திலும் குண்டினை வெடிக்கவைப்பேன். நான் இறக்கும்வரை கொல்லுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு வாரத்திற்குப் பின்னர் அவர் செயின்ற் போல்ஸ் தேவாலயத்தைப் பார்வையிட்டதுடன் அது தொடர்பான வீடியோக்களையும் அனுப்பினார்.

வெடிகுண்டுகளைத் தயார்செய்வதற்காக பெண் ரகசிய அதிகாரியிடம் ஷேய்க் இரண்டு பைகளைக் கொடுத்ததாக வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அயலவர்களால் ஈர்க்கப்பட்ட சஃபியா ஷேய்க், 2007 இல் இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு பிரதான இஸ்லாத்தை நிராகரித்தார்.

2016 ஆம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் மற்றும் ஏனைய ஜிஹாதிக் குழுக்களின் தீவிரவாத வன்முறைச் சித்தாந்தத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.

வழிபாட்டாளர்களும் இமாம்களும் தனது தீவிரவாதக் கருத்துக்களைப் பற்றி கவனத்தில்கொள்வார்கள் என்ற அச்சத்தில், சஃபியா ஷேய்க் மசூதிகளில் கலந்துகொள்வதை நிறுத்தினார்.

ஏற்கனவே அவர் குறித்து, அரசாங்கத்தின் பயங்கரவாதத் தடுப்புத் திட்டத்திற்கும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டம் தீட்டியது மற்றும் பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்புவது ஆகிய குற்றங்களை சஃபியா ஷேய்க் ஒப்புக் கொண்டார்.

மே 12 ஆம் திகதி தண்டனை வழங்குவதற்கு முன்னதாக தண்டனை அறிக்கைகளை தயார் செய்யுமாறு நீதிபதி ஜஸ்ரிஸ் ஸ்வீனி (Justice Sweeney) உத்தரவிட்டார்.

நன்றி bbc.co.uk

Link to comment
Share on other sites

On 2/21/2020 at 9:25 AM, nunavilan said:

அயலவர்களால் ஈர்க்கப்பட்ட சஃபியா ஷேய்க், 2007 இல் இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு பிரதான இஸ்லாத்தை நிராகரித்தார்.

2016 ஆம் ஆண்டில் இருந்து ஐ.எஸ் மற்றும் ஏனைய ஜிஹாதிக் குழுக்களின் தீவிரவாத வன்முறைச் சித்தாந்தத்தைப் பின்பற்றத் தொடங்கினார்.

அதிகமாக இஸ்லாம் மதத்தை பின்பற்றும் பகுதிகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் பெற்றோர்களுக்கும் இந்த கவலை உள்ளது. 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.