Jump to content

பாதிரியாரின் ஏற்பாட்டில் வந்த அடாவடிக்குழு எழுவைதீவிலிருந்து அனுப்பி வைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

பாதிரியாரா/ வீணை மற்றும் மொட்டு கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள கற்பனை பாதிரியாரா.....???

 

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

மன்னார் திருக்கேதீச்சர நுழை வாயில் வளைவை தள்ளி வீழ்த்தி நந்திக்கொடியை காலால் உழக்கிய அதேபாணியில்

 

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

குறித்த குழுவில் வந்திருந்த பெண்கள்; ஒரு பாதிரியாரின் பெயரைக் குறிப்பிட்டு அவரே தங் களை இங்கு அனுப்பி வைத்ததாக வும் ஆலடிமாநாட்டில் வந்த செய்தி மற்றும் ஊர்காவற்றுறையில் சைவப் பெயர்களில் உள்ள வீதிகளுக்கு கத்தோலிக்கப் பெயர்களைச் சூட்டு கின்ற செய்தியை வலம்புரி பிரசுரித் தமையாலும் தாங்கள் இங்கு அனுப் பப்பட்ட தாகவும் மற்றும்படி ஆலடி மாநாட் டில் வந்த  தகவல்கள் என்ன என்பதே தங்களுக்குத் தெரியா தென்றும் வலம்புரி உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தனர்

 

On 2/22/2020 at 2:31 AM, ampanai said:

வலம்புரி அலுவலகத்திற்குள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்த குழுவில் அறியாத்தனமாக சிலர் இடம்பெற்றிருந்த காரணத் தினாலும் தங்கள் புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டாம் என அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் அவர்களின் சுய கௌரவத்தை பாதுகாக்கும் பொருட்டு புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்

உருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா? உண்மையா? என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா? என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.

Link to comment
Share on other sites

53 minutes ago, satan said:

உருவாக்கப்பட்ட நாடகம், பாத்திரம் கற்பனையா? உண்மையா? என்று ஆராயக்கூட நமக்கு ஆர்வமில்லை. தலைப்பு நமக்குள் அவ்வளவு ஆக்ரோஷத்தை உருவாக்குது. தமிழனின் உணர்வை தட்டி எழுப்பக்கூடிய விடயங்களை நாடிபிடித்து எழுதப்பட்ட நாடகம். பாத்திரத்துக்கு பெயர் கிடையாது, ஆதாரம் கிடையாது. வந்தவர்கள், சொன்னவர்கள், குழு, கலகம். நாடகத்தின் நோக்கமும், எழுத்தாளரும் யார் என்பதை தெளிவாக தெரிந்தபடியால் அமைதி நிலவுகிறது. எழுதியவரோ தனது நோக்கம் நிறைவேறவில்லையே என்கிற ஆதங்கத்தில் எண்ணெய் ஊற்றி பத்தி எரியாதா? என்று காத்திருக்கிறார். எழுதிய அத்தனை கதையும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதியது என்று இங்கு கோடிட்டு காட்டிவிட்டார் எழுத்தாளர்.

கத்தோலிக்கரால் தமிழ்மக்களுக்கு ஆபத்து! ஜனாதிபதி சிவராத்திரியில் திருநீறு பூசி சைவமாகி விட்டார். சைவத்தமிழர் அனைவரும் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3 ல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற்று கொடுங்கள். ஜனாதிபதி கோத்தபாய தமிழ்மக்களை இந்த கத்தோலிக்க பயங்கரவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றுவார்.

Link to comment
Share on other sites

7 minutes ago, கற்பகதரு said:

கத்தோலிக்கரால் தமிழ்மக்களுக்கு ஆபத்து! ஜனாதிபதி சிவராத்திரியில் திருநீறு பூசி சைவமாகி விட்டார். சைவத்தமிழர் அனைவரும் ஜனாதிபதியின் கட்சிக்கு வாக்களித்து 3 ல் 2 பெரும்பான்மை வெற்றியை பெற்று கொடுங்கள். ஜனாதிபதி கோத்தபாய தமிழ்மக்களை இந்த கத்தோலிக்க பயங்கரவாதிகளிடம் இருந்தும் காப்பாற்றுவார்.

இந்த நாடகத்தின் முழு சாராம்சமே இது தான். இவர்களுடைய முக்கிய இலக்கு கூட்டமைப்பின் வாக்கு வங்கி, அதுவும் குறிப்பாக அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதனின் வாக்கு வங்கி.

ஆனாலும் இந்த சதியை கூட்டமைப்பு வெற்றிகரமாக முறியடத்து விட்டது போல் தான் உள்ளது

Link to comment
Share on other sites

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது


ஊடகத்தை அச்சுறுத்து வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என யாழ்ப்பாணம், கிளி நொச்சி மாவட்ட உலமா சபைத் தலைவர் யபுறீ சுபியான் (மெளலவி) வலம் புரிக்கு நேரில் வந்து தனது ஆழ்ந்த கவலையை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்தியில் பிழை சரி என்பதற்கு அப்பால் அதை திருத்தி மீள்பிரசுரம் செய்ய முடியும். அதனை அணுகு வதற்கு ஒரு அமைதியான வழியில் போவதை விடுத்து இவ்வாறு அச் சுறுத்தும் வகையில் செயற்படுவது இனமத ஒற்றுமையை சீர்குலைக் கும் செயலாக கருதமுடிகின்றது. 

இவ்வாறான செயல் எதிர்காலத் தில் மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்தும். நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

Link to comment
Share on other sites

6 minutes ago, ampanai said:

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது


ஊடகத்தை அச்சுறுத்து வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும் என யாழ்ப்பாணம், கிளி நொச்சி மாவட்ட உலமா சபைத் தலைவர் யபுறீ சுபியான் (மெளலவி) வலம் புரிக்கு நேரில் வந்து தனது ஆழ்ந்த கவலையை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
செய்தியில் பிழை சரி என்பதற்கு அப்பால் அதை திருத்தி மீள்பிரசுரம் செய்ய முடியும். அதனை அணுகு வதற்கு ஒரு அமைதியான வழியில் போவதை விடுத்து இவ்வாறு அச் சுறுத்தும் வகையில் செயற்படுவது இனமத ஒற்றுமையை சீர்குலைக் கும் செயலாக கருதமுடிகின்றது. 

இவ்வாறான செயல் எதிர்காலத் தில் மிகவும் மோசமான விளைவு களை ஏற்படுத்தும். நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

மீண்டும் இந்த விடயத்துக்குள்  உலாமா சபை மூக்கை நுளைத்திருப்பது சைவத் தமிழரையும் கத்தோலிக்க தமிழரையும் பிரிக்க மாபெரும் சதி நடப்பது புலனாகிறது

Link to comment
Share on other sites

வலம்புரிக்கு நேரில் வந்து நீதியரசர் விக்னேஸ்வரன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்

வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்து  குழு வொன்று அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வலம்புரி அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இவருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்றிட்டம் மற்றும் ஊடகச்செயலாளர் தவச் செல்வம் சிற்பரனும் உடன் வந்திருந்தார்.

நிலைமைகளை கேட்டறிந்த நீதியரசர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வலம் புரியில் நடந்தது ஒரு அடாவடித்தனமாக தென்படுகின்றது.

ஒரு பத்திரிகை தனது கருத்துக்களை வெளியிடும்போது அது சம்பந்தமாக யாருக்காவது கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடக்கூடாது.

அவற்றிலே தவறுகள் இருந்தால் அல்லது வேறுகருத்துக்கள் இருந்தால் அவர்கள் அவற்றை ஊடகத்திற்குத் வெளிப்படுத்தி அவை பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்கலாம். 

அவை சம்பந்தமாக வேண்டு மெனில் முறைப்பாடுகள் செய்வ தற்கு, அதற்கென ஸ்தா பனங்கள் இருக்கின்றன. பத்திரி கைகள் சம்பந்தமாக அவர்கள் முறைப்பாடு செய்யலாம். 
அதை விடுத்து ஒரு 30 பேர் ஒரு ஊடக காரியாலத்திற்கு சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு பயத் தையும் பீதியையும் ஏற்படுத்துவது வரவேற் கத்தக்கதல்ல. 

கண்டிக்கப்பட வேண்டியது. நாங்கள் இன்னமும் இந்த நாட் டிலே ஜனநாயத்திற்கு மதிப்புக் கொடுத்து வருகின்றோம் என்றால் நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு இடங்கொடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின் றது. அந்த ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான அடாவடித் தனங்கள் பாரியவிளைவுகளை கொண்டுவரக்கூடியன. 

அவற்றை நாங்கள் தவிர்க்கா விட்டால் மேலும் இவ்வாறான பல நடவடிக்கைகள் நடைபெற்று எங்கள் பிரதேசங்களிலே சட்டமும் ஒழுங்கும் பாதிக்கக்கூடியவாறான முன்னுதாரணங்களாக அவை மாறிவிடும் என்றார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20622&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடித் தேடி வலம்புரிக்கு  வந்து அனுதாபம் தெரிவிப்பதை பார்த்தால்; இந்த நாடகம் முடிவடைந்து விடக்கூடாது, மூட்டிய தீ அணைந்து விடக்கூடாது என்று ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தளவு முட்டாள் இனம் என்பது தெரிந்தே. யார் என்ன சொன்னாலும், உடனே வெளிக்கிட்டு நம்மை நாமே தாக்கி அழியும் இனம் நம் இனம் ஒன்றுதான். வலம்புரிக்கு வாழ்த்துக்கள்,  தமிழரை நாசமாக்குவதற்கு.

Link to comment
Share on other sites

On 2/22/2020 at 9:14 PM, ampanai said:

வலம்புரியை அச்சுறுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் யாழ்.ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வலம்புரிக்கு நேரில் வந்து கண்டனம் தெரிவிப்பு

 

அவர் மேலும் தெரிவிக்கை யில், மூவின மக்களும் ஒற்று மையாக வாழும் இந்நாட்டில் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முனை வது தவிர்க்கப்பட வேண்டும்.
 
 

மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு। யாரிடட போய் இதை சொல்லுறது।

17 hours ago, ampanai said:

வலம்புரிக்கு நேரில் வந்து நீதியரசர் விக்னேஸ்வரன் நிலைமைகளைக் கேட்டறிந்தார்

வலம்புரி அலுவலகத்துக்குள் நுழைந்து  குழு வொன்று அடாவடித்தனம் புரிந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வலம்புரி அலுவலகத்துக்கு நேரில் வருகை தந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

இவருடன் தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்றிட்டம் மற்றும் ஊடகச்செயலாளர் தவச் செல்வம் சிற்பரனும் உடன் வந்திருந்தார்.

நிலைமைகளை கேட்டறிந்த நீதியரசர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், வலம் புரியில் நடந்தது ஒரு அடாவடித்தனமாக தென்படுகின்றது.

ஒரு பத்திரிகை தனது கருத்துக்களை வெளியிடும்போது அது சம்பந்தமாக யாருக்காவது கருத்து முரண்பாடுகள் இருந்தால் அதற்காக அடாவடித் தனத்தில் ஈடுபடக்கூடாது.

அவற்றிலே தவறுகள் இருந்தால் அல்லது வேறுகருத்துக்கள் இருந்தால் அவர்கள் அவற்றை ஊடகத்திற்குத் வெளிப்படுத்தி அவை பற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்கலாம். 

அவை சம்பந்தமாக வேண்டு மெனில் முறைப்பாடுகள் செய்வ தற்கு, அதற்கென ஸ்தா பனங்கள் இருக்கின்றன. பத்திரி கைகள் சம்பந்தமாக அவர்கள் முறைப்பாடு செய்யலாம். 
அதை விடுத்து ஒரு 30 பேர் ஒரு ஊடக காரியாலத்திற்கு சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு பயத் தையும் பீதியையும் ஏற்படுத்துவது வரவேற் கத்தக்கதல்ல. 

கண்டிக்கப்பட வேண்டியது. நாங்கள் இன்னமும் இந்த நாட் டிலே ஜனநாயத்திற்கு மதிப்புக் கொடுத்து வருகின்றோம் என்றால் நாங்கள் ஊடக சுதந்திரத்திற்கு இடங்கொடுக்க வேண்டும். ஊடக சுதந்திரம் தான் ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின் றது. அந்த ஊடக சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான அடாவடித் தனங்கள் பாரியவிளைவுகளை கொண்டுவரக்கூடியன. 

அவற்றை நாங்கள் தவிர்க்கா விட்டால் மேலும் இவ்வாறான பல நடவடிக்கைகள் நடைபெற்று எங்கள் பிரதேசங்களிலே சட்டமும் ஒழுங்கும் பாதிக்கக்கூடியவாறான முன்னுதாரணங்களாக அவை மாறிவிடும் என்றார். 

http://valampurii.lk/valampurii/content.php?id=20622&ctype=news

ராஜபக்சேக்கள் பவுத்த சிங்களவர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। விக்கி அவர்கள் இந்து தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। 

17 hours ago, ampanai said:

ஊடகத்தை அச்சுறுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது

 

 நாம் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண் டிய இந்த தருணத்தில் மதம் சார்ந்த பிரச்சினைகள் எமக்குள் ஏற்பட்டு எமது ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்படக்கூடாது என வும் தெரிவித்தார். 

வலம்புரிக்குள் புகுந்து வலம்புரி ஊழியர்களையும் ஆசிரியரையும் அச்சுறுத்தியதற்கு தான் மிகுந்த கவலை அடைவதாக தெரிவித்துள் ளார். 

அவருடன் உலமா சபையின் சமூக செயற்பாட்டாளர் ஹி.னி.னி. இவுர்ரானும்  (மெளலவி)  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://valampurii.lk/valampurii/content.php?id=20626&ctype=news

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்। நீங்கள் முதலில் தமிழ் பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதை நிறுத்துங்கள்। 

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

மூவினங்களும் ஒற்றுமையாக வாழும் நாடு। யாரிடட போய் இதை சொல்லுறது।

ராஜபக்சேக்கள் பவுத்த சிங்களவர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। விக்கி அவர்கள் இந்து தமிழர்களின் வாக்குகளை சேகரிக்கிறார்கள்। 

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்। நீங்கள் முதலில் தமிழ் பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதை நிறுத்துங்கள்। 

இதை தான் ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுகுது......!!!!!

மெளலவி வருகிறார்.....பிக்கு வருகுறார். எல்லாம் நல்லா திட்டமிட்டு நடக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.