Jump to content

‘பாதைகள் மாறினால் தமிழ் தேசியம் சிதையும்’


Recommended Posts

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னாரில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வோர் அரசியல் பாதையில் பயணிக்கும் பொழுது தமிழர்களுடைய தமிழ் தேசியம் சிதையுமே ஒழிய வேறு இலாபம் எதுவும் இல்லை. இவை எமது வாக்குகளை சிதைக்கும் செயலே” என, சட்டத்தரணி டினேஷன் தெரிவித்தார்.

அண்மையில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக ஊடக சந்திப்பின் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.

image_7aaed9fea2.jpg

குறித்த விடயம் தொடர்பாக  கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களினுடைய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.

“இந்த வகையில் கடந்த வருடம் மன்னார் திருகேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் மத்தியில் மத ரீதியான பிளவுகளை சிலர் தூண்டிவருகின்றனர். அதன் மூலம் அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் என சில மத தலைவர்களும் அரசியல்வாதிகளும் எண்ணுகின்றனர்.

“இந்த வளைவு உடைக்கப்பட்டதை கொண்டு, தற்போது மன்னாரில் இரு மதத்தினரும் இருவேறு அரசியல் பாதைகளில் சென்று கொண்டு இருக்கின்றனர். தற்போது இந்து குருமார் பேரவை தாங்கள் சுயேட்சையாக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

“மறு பக்கம் கிறிஸ்தவ அமைப்புகள் தாங்கள் தங்களுடைய குழுக்களை அமைத்து, சில கூட்டங்களை நடத்தி தாங்களும் சுயமாக அல்லது கூட்டணி அமைத்தோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்தோ கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜென பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாயின், எமது பேரம் பேசுகின்ற சக்தி பெரும்பான்மை இல்லாமல் போய்விடும்.

“இவ்வாறு நாம் பிரிந்து நின்றோம். ஆனால் எமது பகுதியில் வேறு இனத்தவரோ, வேறு மதத்தவர் ஒருவரோ, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரோ நாடாளுமன்ற உறுப்பினராக வர வாய்ப்புள்ளது.

“எனவே, எமது மக்கள் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில், எமது உரிமைகளையோ தீர்வுகளையோ பெற்றுகொள்ள முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/வன்னி/பாதைகள்-மாறினால்-தமிழ்-தேசியம்-சிதையும்/72-245904

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும், நாங்களும் குமுறி என்ன ஆகப்போகுது? சிங்களவன் தன் இனத்தில் மோதலை ஏற்படுத்தவில்லை, சிங்கள கிறிஸ்தவர்களுக்கு  பயத்தை ஏற்படுத்தினான். பலிக்கடா இஸ்லாம். பலி கிறிஸ்தவ தமிழர். புத்தத்துக்கு சலுகைகளை அறிவித்து வாக்கு பெற்றான். சலுகைகளுக்கு விலை போகிற எங்கடையளுக்கு  சலுகை அறிவிக்க வக்கில்லை.  காசு கைமாறியாச்சு,  மதக்கலவரம் என்று முடிவாகிச்சு. கொளுத்தி விட்டு குளிர் காய காத்திருக்குதுகள். புலம்பித் தீர்க்க வேண்டியதுதான் எங்களால் முடிந்தது. 

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

நீங்களும், நாங்களும் குமுறி என்ன ஆகப்போகுது? சிங்களவன் தன் இனத்தில் மோதலை ஏற்படுத்தவில்லை, சிங்கள கிறிஸ்தவர்களுக்கு  பயத்தை ஏற்படுத்தினான். பலிக்கடா இஸ்லாம். பலி கிறிஸ்தவ தமிழர். புத்தத்துக்கு சலுகைகளை அறிவித்து வாக்கு பெற்றான். சலுகைகளுக்கு விலை போகிற எங்கடையளுக்கு  சலுகை அறிவிக்க வக்கில்லை.  காசு கைமாறியாச்சு,  மதக்கலவரம் என்று முடிவாகிச்சு. கொளுத்தி விட்டு குளிர் காய காத்திருக்குதுகள். புலம்பித் தீர்க்க வேண்டியதுதான் எங்களால் முடிந்தது. 

1956 இல் இருந்து இனக்கலவரங்களே இருந்து வந்து இறுதியில் யுத்தம் நடந்து முடிந்துள்ளது. 

இப்பொழுது ஒரு மதக்கலவரம் ஒன்று உருவானால், உருவாக்கப்பட்டால் நாடு மீள முடியாத அழிவை சந்திக்கும். அதாவது, தமிழினம் மட்டுமல்ல சிங்கள  இனமும் பாதிக்கப்படும் ( 75% சிங்களவர்கள் அதில் 5% கிறிஸ்தவர்கள்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலவரங்களை  செய்தும், அதனால் பாதிக்கப்பட்டு இழப்புகளை சந்தித்தும்  பழகியதாலோ என்னவோ அது பற்றி யாரும் கவலைப்படாமல் தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். ஒருவேளை தாம் அதனால் பாதிக்கப்படப்போவதில்லை என்கிற நம்பிக்கையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பகுதிகளில் இப்போது பிற மதத்தினர் சக மதத்தினரைச் சகிச்சுப்போவதில்லை மற்றும்படி அண்மைக்காலமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழக்கதோசத்தில் சைவ ஆலையங்களுக்குள் எந்தவிதா ஆகம முறைகளையும் கடைப்பிடிக்காது உள்நுளைந்து முகம் சுழிகவைக்கிறார்கள். குறிப்பாக நல்லூர்த் திருவிழா காலங்களில் வெளிவீதியில் காணப்படும் மக்கள் கூட்டத்தில் அனேகமாக இவர்களைக் காணலாம் முன்னமெல்லாம் இவர்கள் சாமி வீதி உலா முடிந்தபின்பு கோவில்காலக் கடைத்தொகுதிகள் மற்றும் கலை நிகழ்சி நடக்கும் இடங்களில் காணப்படுவார்கள் ஆனால் இப்போது சாமி வீதி உலா வரும்போதே சாமிக்கு சில மீற்றர் தூரத்திலேயே கால்களில் காலணி அணிந்து நவ நாகரீக உடை அணிந்து தாங்களும் உலா வருகிறார்கள் 

அதற்காகச் சைவ சமயம் சார்ந்த இளையோர்களும் மற்றோரும் ஒன்றும் மோசமில்லை என்பதில்லை பெரியோர்களானாலும் அவர்கள் களிசான் சேட்டுடந்தான் திரிகிறார்கள் அப்போ சைவ சமயத்தையே சார்ர்திருக்கும் நாமே அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை பஞ்சமா பாதகண்க்களில் அனைத்தையும் செய்கிறார்கள் கோவில் முதலாளி இரண்டு பெண்டாட்டி வைத்திருக்கிறார் அல்லது தொடுப்பு வைத்திருகிறார் கோவிலில் சாமி காவுபவர் வாகனக்கொம்பை தோழில் வைச்சுக்கொண்டே பெண்களைச் சைட் அடிக்கிறார் தேர்த்திருவிழா முடியமுன்னமேயே நல்ல கொழுத்த கிடாய் ஆடு எங்க கிடைக்கும் பங்கு இறைச்சி திண்டு கனகாலமாச்சு அதைவிட மச்சானும் சுவிசிலிருந்து கனவிதமான போத்திலோட காத்துக்கொண்டு இருக்கிறான் எனச் சகபாடியுடன் விசாரிக்கிறார்

ஊர்ருக்குப் போகும் புலம்பெயர் தேசத்தவரோ கோயிலாவது மசிராவது எனக்கும் பிள்ளைகளுக்கும் மச்சமில்லாது இறங்காது எனச்சொல்ல ஓம் அம்மா அவரும் பிள்ளைகளும் அப்படித்தான் என பொண்டாட்டிக்காரி சொல்ல இவர் லெப்ரினன் கேணல் பட்டம் கிடைச்சமாதிரி நெஞ்சை நிமிர்த்துகிறார் புளித்தியர் இங்க லண்டன் புற நகர்த்தெருக்களில் தமிழ்கடையில் இரண்டரை பவுண்சுக்கு புளுதி கூட்டிவிட்டோ சுவிஸில வயோதிபர் மடத்தில கக்கூஸ் கழுவிவிட்டோ வெந்ததையும் வேகாததையும் துண்டு குப்புறப் படுத்துக்கிடந்தவர் அட் எ ரைமில லெப்ரினன் கோணல்

ஒரு புண்ணாக்கும் வெள்ளிக்கிழமைகளில்கூடப் போகாத கோவில் மழைக்கும் வெயிலுக்கும் ஆடுமாடுகள்தான் ஒதுங்குறது வழக்கம் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் அதுக்கும் இந்தக் கக்கூஸ் கழுவும் புலம்பெயர்தமிழன் பொறுக்கி முன் மண்டபத்து தூண் ஒன்று கட்ட இருபது இலட்சத்தை நான் தாறன் எண்டு பழிகிடக்கிறான் அப்பவே தெரியவில்லையா இவர்களது கல்வி அறிவு எங்க நிக்குது இவர்கள் பிளேன் ஏறி வரேக்க எந்தக் கல்வி அறிவோட வந்தவையள் என ஏண்டா புலம்பெயர் தமிழா கொஞ்சமேனும் அப்டேட் ஆகுங்களேனடா 

எனக்கு இப்பிடி இப்பிடி எதாவது கோவம் வந்துகிட்டே இருக்கு ஆதலால்தான் நான் எதையும் எழுத விரும்புறதில்லை.

Link to comment
Share on other sites

மிகவும் ஆபத்தான விடயம். இப்படியே எமது இனம் சிறிது சிறிதாக உடைக்கப்படும் நிலையை மக்களுக்கு புரியவைக்கவேண்டும். ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சுயலாபத்தை நோக்கி நகரும்போது மக்களையும் இனத்தையும் பற்றி யார் சிந்திக்க போகின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

தமிழ்ப் பகுதிகளில் இப்போது பிற மதத்தினர் சக மதத்தினரைச் சகிச்சுப்போவதில்லை மற்றும்படி அண்மைக்காலமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழக்கதோசத்தில் சைவ ஆலையங்களுக்குள் எந்தவிதா ஆகம முறைகளையும் கடைப்பிடிக்காது உள்நுளைந்து முகம் சுழிகவைக்கிறார்கள். குறிப்பாக நல்லூர்த் திருவிழா காலங்களில் வெளிவீதியில் காணப்படும் மக்கள் கூட்டத்தில் அனேகமாக இவர்களைக் காணலாம் முன்னமெல்லாம் இவர்கள் சாமி வீதி உலா முடிந்தபின்பு கோவில்காலக் கடைத்தொகுதிகள் மற்றும் கலை நிகழ்சி நடக்கும் இடங்களில் காணப்படுவார்கள் ஆனால் இப்போது சாமி வீதி உலா வரும்போதே சாமிக்கு சில மீற்றர் தூரத்திலேயே கால்களில் காலணி அணிந்து நவ நாகரீக உடை அணிந்து தாங்களும் உலா வருகிறார்கள் 

அதற்காகச் சைவ சமயம் சார்ந்த இளையோர்களும் மற்றோரும் ஒன்றும் மோசமில்லை என்பதில்லை பெரியோர்களானாலும் அவர்கள் களிசான் சேட்டுடந்தான் திரிகிறார்கள் அப்போ சைவ சமயத்தையே சார்ர்திருக்கும் நாமே அதற்கான ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை பஞ்சமா பாதகண்க்களில் அனைத்தையும் செய்கிறார்கள் கோவில் முதலாளி இரண்டு பெண்டாட்டி வைத்திருக்கிறார் அல்லது தொடுப்பு வைத்திருகிறார் கோவிலில் சாமி காவுபவர் வாகனக்கொம்பை தோழில் வைச்சுக்கொண்டே பெண்களைச் சைட் அடிக்கிறார் தேர்த்திருவிழா முடியமுன்னமேயே நல்ல கொழுத்த கிடாய் ஆடு எங்க கிடைக்கும் பங்கு இறைச்சி திண்டு கனகாலமாச்சு அதைவிட மச்சானும் சுவிசிலிருந்து கனவிதமான போத்திலோட காத்துக்கொண்டு இருக்கிறான் எனச் சகபாடியுடன் விசாரிக்கிறார்

ஊர்ருக்குப் போகும் புலம்பெயர் தேசத்தவரோ கோயிலாவது மசிராவது எனக்கும் பிள்ளைகளுக்கும் மச்சமில்லாது இறங்காது எனச்சொல்ல ஓம் அம்மா அவரும் பிள்ளைகளும் அப்படித்தான் என பொண்டாட்டிக்காரி சொல்ல இவர் லெப்ரினன் கேணல் பட்டம் கிடைச்சமாதிரி நெஞ்சை நிமிர்த்துகிறார் புளித்தியர் இங்க லண்டன் புற நகர்த்தெருக்களில் தமிழ்கடையில் இரண்டரை பவுண்சுக்கு புளுதி கூட்டிவிட்டோ சுவிஸில வயோதிபர் மடத்தில கக்கூஸ் கழுவிவிட்டோ வெந்ததையும் வேகாததையும் துண்டு குப்புறப் படுத்துக்கிடந்தவர் அட் எ ரைமில லெப்ரினன் கோணல்

ஒரு புண்ணாக்கும் வெள்ளிக்கிழமைகளில்கூடப் போகாத கோவில் மழைக்கும் வெயிலுக்கும் ஆடுமாடுகள்தான் ஒதுங்குறது வழக்கம் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் அதுக்கும் இந்தக் கக்கூஸ் கழுவும் புலம்பெயர்தமிழன் பொறுக்கி முன் மண்டபத்து தூண் ஒன்று கட்ட இருபது இலட்சத்தை நான் தாறன் எண்டு பழிகிடக்கிறான் அப்பவே தெரியவில்லையா இவர்களது கல்வி அறிவு எங்க நிக்குது இவர்கள் பிளேன் ஏறி வரேக்க எந்தக் கல்வி அறிவோட வந்தவையள் என ஏண்டா புலம்பெயர் தமிழா கொஞ்சமேனும் அப்டேட் ஆகுங்களேனடா 

எனக்கு இப்பிடி இப்பிடி எதாவது கோவம் வந்துகிட்டே இருக்கு ஆதலால்தான் நான் எதையும் எழுத விரும்புறதில்லை.

இது ஒன்றும் சைவ சமயத்தவன் என்றோ வேதக்காறன் என்றோ பிரித்துப் பார்க்கத்தேவையில்லை. எங்கள் சமூகம் எந்த ஒரு ஒழுங்குக்கும், கட்டுப்பாட்டிற்கும் ஒத்துவராத காட்டுமிராண்டிக் கூட்டம்.

அதனால்தான் பிரபாகரனின் துப்பாக்கிக்கு கட்டுப்பட்டிருந்தது. 

எங்கள் சமூக உளவியல் எப்போதும் அதிகாரத்திற்கு மட்டுமே கட்டுப்படும்.
 

அதிகாரத்துடன் ஒட்டி நிற்பதால் கீழே விழும் அற்ப சொற்ப பருக்கைகளுக்காக கூட இருப்பவனையே காட்டியும் கூட்டியும் கொடுக்கும்.

சுய புத்தியுமில்லை சொல் புத்தியுமில்லை. அன்புக்கும் கட்டுப்படாது. அறிவுக்கும் கட்டுப்படாதது. மிக மிகச் சுயநலன் கொண்டது. 

எங்கள் இனத்தை ஒன்று சேர்க்கும் ஒரே விடயம் அறிவுக்கு  அப்பாற்பட்ட சாதி மட்டும்தான்.

 

அழிவின்இறுதிக்கட்டத்தில் உள்ள மிகக் கேவலமான இனம்.

 

மெழுகுதிரி எரிந்து முடிவில் கடைசியாக ஒருமுறை ஓங்கி எரியுமே அதுதான் எங்களின் விடுதலைப் போராட்டம்.

இன்னும் ஐம்பது வருடங்களில் இலங்கையில் தமிழன் என்கின்ற ஒரு தனி இனக் குழுமத்தை காணமுடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, manthahini said:

மிகவும் ஆபத்தான விடயம். இப்படியே எமது இனம் சிறிது சிறிதாக உடைக்கப்படும் நிலையை மக்களுக்கு புரியவைக்கவேண்டும். ஆனால் எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் சுயலாபத்தை நோக்கி நகரும்போது மக்களையும் இனத்தையும் பற்றி யார் சிந்திக்க போகின்றார்கள்?

ஒவ்வொரு மனிதனும் சுய லாபங்களை கடந்து  சிந்தித்தால், மலையையும் குடையலாம். ஆனால் ஊதி பெருப்பித்து குளிர் காய்கிறேன் என்று பிடிவாதம் பிடித்தால், அழிவை தடுக்க முடியாது. எதிரியின் வெற்றி நிட்சயம். அதை ஏற்கெனவே சிங்களம் ஆரூடம் கூறிவிட்டது. 

Link to comment
Share on other sites

17 hours ago, ampanai said:

1956 இல் இருந்து இனக்கலவரங்களே இருந்து வந்து இறுதியில் யுத்தம் நடந்து முடிந்துள்ளது. 

இப்பொழுது ஒரு மதக்கலவரம் ஒன்று உருவானால், உருவாக்கப்பட்டால் நாடு மீள முடியாத அழிவை சந்திக்கும். அதாவது, தமிழினம் மட்டுமல்ல சிங்கள  இனமும் பாதிக்கப்படும் ( 75% சிங்களவர்கள் அதில் 5% கிறிஸ்தவர்கள்) 

இலங்கையில் மட்டுமா இன, மத கலவரங்கள் நடக்கின்றன? பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியாவிலும் கூட இவ்வாறான கலவரங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாடுகள் மீளமுடியாத அழிவை சந்திக்கவில்லையே?

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் இளைத்தவன் சைவன் தானே யார் தூற்றினாலும் சிரித்து கடப்பதால மன்னாரில 2000 மேற்பட்டவர்கள் தமிழ் பெணகள் மக்கா தொழ மீதி வத்திக்கான் தொழ எவன் சொன்னது மாதோட்டம் சந்தி சைவம் எண்டு  அருமை சம்பந்த பட்டவன் மட்டும் கதைக்க வேணுமாம் அவனுக்கு கோவன்னா போவது விளங்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்பாதையில் நாங்கள் ஒற்றுமையாய் பயணித்திருந்தால்: எங்கள் விடுதலையையும், வீரர்களையும் இழந்து இன்று எடுப்பார் கை பிள்ளைபோல நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்க  மாட்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

எல்லோருக்கும் இளைத்தவன் சைவன் தானே யார் தூற்றினாலும் சிரித்து கடப்பதால மன்னாரில 2000 மேற்பட்டவர்கள் தமிழ் பெணகள் மக்கா தொழ மீதி வத்திக்கான் தொழ எவன் சொன்னது மாதோட்டம் சந்தி சைவம் எண்டு  அருமை சம்பந்த பட்டவன் மட்டும் கதைக்க வேணுமாம் அவனுக்கு கோவன்னா போவது விளங்கவில்லை 

மார்த்தாண்டா !

நாங்கள் சாதிக்கொரு கோவில் கட்டிக்கொண்டும், சாதிக்கொரு கிணறு தோண்டிக்கொண்டும்,  பெயருக்கொரு கும்பாபிசேகமும், வீட்டுக்கொரு கோவிலும் கட்டுவோம் ஆனால் அருகிலிருக்கும் பக்கத்து வீட்டுக்காறன் சாப்பிட ஒருநேரச் சாப்படுமில்லாமல் கிடப்பான். பார்த்துக்கொண்டிருப்போம். அவ்னின் பிள்ளைகள் வெறும் வயிற்றோடு கிழிந்த துணியோடு ப்ள்ளிக் கூடம் போவான். சிரித்துக்கொண்டுமிருப்போம். 

ஆனால் ஒருவன் வந்து, வா உனக்கு கல்வியும் தாறன் நல்ல சாப்படும் தாறன். என்னோடு வா என்று கூப்பிட்டால்...

உடனே ஓடிவந்து குய்யோ முய்யோ என்று கத்துவீர்களா ? 

போங்கையா போய் கண்ணாடிக்கு முன்னால் நின்று ஒரு நிமிடம் உங்கள் முகத்தை வடிவாய் பாருங்கோ. 

பிறகு வந்து இங்கே கருத்தெழுதுங்கள்

Link to comment
Share on other sites

On 2/21/2020 at 9:53 PM, ampanai said:

கடந்த வருடம் மன்னார் திருகேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டதை தொடர்ந்து,

கள்ளகாணியில சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் பாதிரியார் தூண்டலில் வன்முறையில் ஈடுபட்ட அந்த கிறீஸ்தவ விஷமிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை பிளவுகள் பெருகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Rajesh said:

கள்ளகாணியில சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் பாதிரியார் தூண்டலில் வன்முறையில் ஈடுபட்ட அந்த கிறீஸ்தவ விஷமிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை பிளவுகள் பெருகும்.

எச்சரிக்கிறீரோ ?

நீவீர் ஞாரெண்டு இவிட அறியும். உமட பருப்பு இவிட வேகாதுண்டே.😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பாதிரியார் சொல்லி விட்டார். இது ஏற்கெனவே இருந்த பிரச்னை. தான் புதிதாக வந்திருப்பதால் அது பற்றி தனக்கு  தெரியாது. சைவசமய பக்கத்தார் கூறியது; மன்னார் முன்னாள் ஆயர் இருக்கும்வரை எந்தப்பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று. இப்போ இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுடன் வளைவு வைத்தாயிற்று. ஆனால் நாங்கள் விடப்போவதில்லை. இரண்டில் ஒன்று காணாமல் விடமாட்டொம், எங்களுக்கு வம்பு பண்ணிக்கொண்டு இருக்க இன்னொன்று கிடைக்கும் வரை. எப்பவும் நம்ம பூமி கலவரமாய், இரத்தம் சிந்திக்கொண்டு இருக்க வேணும். இது ஒருவகையான மனோவியாதி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

அந்தப் பாதிரியார் சொல்லி விட்டார். இது ஏற்கெனவே இருந்த பிரச்னை. தான் புதிதாக வந்திருப்பதால் அது பற்றி தனக்கு  தெரியாது. சைவசமய பக்கத்தார் கூறியது; மன்னார் முன்னாள் ஆயர் இருக்கும்வரை எந்தப்பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் மட்டுமே இந்தப் பிரச்சனையை எழுப்புகிறார்கள் என்று. இப்போ இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுடன் வளைவு வைத்தாயிற்று. ஆனால் நாங்கள் விடப்போவதில்லை. இரண்டில் ஒன்று காணாமல் விடமாட்டொம், எங்களுக்கு வம்பு பண்ணிக்கொண்டு இருக்க இன்னொன்று கிடைக்கும் வரை. எப்பவும் நம்ம பூமி கலவரமாய், இரத்தம் சிந்திக்கொண்டு இருக்க வேணும். இது ஒருவகையான மனோவியாதி.  

மிகவும் சரியான கூற்று.

Link to comment
Share on other sites

6 hours ago, மார்த்தாண்டன் said:

எல்லோருக்கும் இளைத்தவன் சைவன் தானே யார் தூற்றினாலும் சிரித்து கடப்பதால மன்னாரில 2000 மேற்பட்டவர்கள் தமிழ் பெணகள் மக்கா தொழ மீதி வத்திக்கான் தொழ எவன் சொன்னது மாதோட்டம் சந்தி சைவம் என்று

69,000 இசுலாமியர். 60,000 கத்தோலிக்கர், 28,000 சைவர்கள்.  ஆட்சியில் பௌத்தர்கள். கடந்த ஆண்டு 2,000 சைவ பெண்களுக்கு சைவமும் பிடிக்கவில்லை, சைவர்களையும் பிடிக்கவில்லை - மதம் மாறி கலியாணம் செய்து விட்டார்கள். சைவத்தை விட்டு ஏன் இப்படி இவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள்? பணம், வசதி, உதவி, மதிப்பு, நிம்மதி ... இவை எல்லாம் சைவத்தில் கிடைக்காமல் மற்ற மதங்களில் கிடைக்கின்றனவா? ஓடோடென்று விட்டுவிட்டு 2,000 வருடங்களாக ஓடுகிறார்களே? ஏன்? இப்படி மீதம் உள்ளவர்களும் ஓடாமல் இருக்க என்ன செய்யலாம்? 

Link to comment
Share on other sites

9 hours ago, கற்பகதரு said:

69,000 இசுலாமியர். 60,000 கத்தோலிக்கர், 28,000 சைவர்கள்.  ஆட்சியில் பௌத்தர்கள். கடந்த ஆண்டு 2,000 சைவ பெண்களுக்கு சைவமும் பிடிக்கவில்லை, சைவர்களையும் பிடிக்கவில்லை - மதம் மாறி கலியாணம் செய்து விட்டார்கள். சைவத்தை விட்டு ஏன் இப்படி இவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள்? பணம், வசதி, உதவி, மதிப்பு, நிம்மதி ... இவை எல்லாம் சைவத்தில் கிடைக்காமல் மற்ற மதங்களில் கிடைக்கின்றனவா? ஓடோடென்று விட்டுவிட்டு 2,000 வருடங்களாக ஓடுகிறார்களே? ஏன்? இப்படி மீதம் உள்ளவர்களும் ஓடாமல் இருக்க என்ன செய்யலாம்? 

புத்த பிக்குவின் சிகிச்சை தான் சரி போல படுகுது உனக்கு என்ன வேலை எண்டு அந்தாள் போல் குடுக்கலாமோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

புத்த பிக்குவின் சிகிச்சை தான் சரி போல படுகுது உனக்கு என்ன வேலை எண்டு அந்தாள் போல் குடுக்கலாமோ

கண்ணாடியின் முன் நின்று பார்த்தீர்களா மைடியர் மார்த்தாண்டன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மார்த்தாண்டன் said:

புத்த பிக்குவின் சிகிச்சை தான் சரி போல படுகுது உனக்கு என்ன வேலை எண்டு அந்தாள் போல் குடுக்கலாமோ

அதை எதிர் பார்த்துதான் எல்லாம் நகருது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.