Jump to content

ஒரு ஞானியின் கதை - நிழலி (சிறுகதை)


Recommended Posts

அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது.

ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது.

அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார்.

இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக அந்தக் கடைக்குச் செல்வது என் வழக்கம். அங்கிருக்கும் மரக்கறி வகைகளும் மீன் வகைகளும் ஓரளவுக்கு தரமாக இருப்பது அங்கு அடிக்கடி செல்வதற்கு காரணமாக இருப்பினும், காஷ்சியரில் நிற்கும் ஒரு பெட்டை கொஞ்சம் கவர்ச்சியாக நிற்பதும் இன்னொரு கூடுதல் காரணம்.அந்தக் கடையில் தான் இந்த ஆள் சி.டி.கள், டி.வி.டி.கள் விற்கும் பிரிவில் நிற்பார். அனேகமாக இவர் தான் அதற்கு பொறுப்பு என நான் நினைப்பதுண்டு. அவரிடம் ஒரு போதும் எதுவும் வாங்க நினைப்பதில்லை.

அவருக்கு உள்ளூர நான் தன்னை வெறுப்பது தெரியும் என்பது போலத்தான் அவர் பாவனைகளும் இருக்கும். ஒரு நமுட்டுச் சிரிப்பை கக்கத்துக்குள் வைத்திருந்து என்னைக் கண்டதும் தன் முகத்தில் விரித்து வைப்பார். பார்க்க எரிச்சலாக இருக்கும்.

மகளை இலங்கைக்கு கூட்டிக் கொண்டு போன போது அவள் விரும்பிச் சுவைத்தவற்றில் ஒன்று கிரீம் சோடா. கனடாவுக்கு வந்த பின்பும் அவளுக்கு பிடித்த பானமாக அதுதான் இருக்கின்றது. இங்கு தமிழ் கடைக்கு போகும் போது வா என்று கூப்பிட்டால் இலேசில் வர மாட்டாள். ஆனால் கிரீம் சோடா வாங்கித் தருவன் என்று சொன்னால் உடனே என்னுடன் வந்து விடுவாள்.

அன்றும் அப்படி அவளையும் கூட்டிக் கொண்டு வழக்கமாக போகும் அதே தமிழ் கடைக்கு போன போது அவளைக் கண்டு அந்த மனுசன் மெலிதாக புன்னகைத்தார். புன்னகைத்த பின் என் முகத்தையும் நேராக பார்க்கும் போது என்னால் பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. போனால் போகட்டும் என்று ஒரு சிறு புன்னகையை தெளித்து விட்டன்.
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்தவர் என் கைகளை திடீர் என்று பற்றிக் கொண்டார். என்னை உற்று உற்றுப் பார்த்தார். சில கணங்கள் மெளனமாக நின்றார். பின் என்ன நினைத்தாரோ அல்லது ஏன் நினைத்தாரோ தெரியவில்லை மட மடவென கதைக்கத் தொடங்கினார்.

-----------------------------------------------------------------------
இருள் ஒரு திரவம் போல கண்களில் திடீரெனப் பரவத் தொடங்கியது. அருகில் இருந்த எல்லாம் ஒரு கணத்தில் எவையுமற்றதாகிப் போயின.மனம் ஒரு புள்ளியில் மட்டும் நிலைத்து நின்றது. எல்லையற்ற மெளனம் ஒரு சிறு குமிழாக உருவாகி பெரும் காடாக மனதில் விரிந்து சென்றது.

"அந்தக் கணத்தை எப்ப நினைத்தாலும் இப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது தம்பி"

"என்னைச் சுற்றி எல்லாமே இருளாகவும் எல்லாமே இல்லாமல் போனதாகவும் தான் அந்தக் கணத்தில் எனக்கு தெரிந்தது"

"இந்த நாட்டுக்கு நான் வந்து 30 வருடங்களுக்கும் மேல் ஆகுது. பக்கத்து விட்டு சேமியோனின் குடும்பமே சிங்களம் போட்ட குண்டில் சிதறிப் போக அங்கு இருந்தால் என் குடும்பத்துக்கும் இப்படித்தான் ஆகும் என்று வெளிக்கிட்டவன் தான் தம்பி"

"மனிசியையும் மகனையும் கொழும்பில கொண்டு வந்து விட்டுட்டு ஏஜென்சி மூலம் ஏறி இங்கு வந்து சேர ஆறு மாசம் எடுத்தது தம்பி"

"வந்த அடுத்த நாளில் இருந்து ஒரு மெஷின் மாதிரி ஓடிக்கொண்டே இருந்தனான். முதலில் மனிசியையும் மகனையும் இங்கு எடுக்க மூன்று வேலைகள் செய்யத் தொடங்கினன் தம்பி. அவர்கள் வந்த பின் மேலும் இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறக்க இந்த மெஷின் அதுகளுக்காக இன்னும் இன்னும் ஓடத் தொடங்கிச்சு தம்பி"

"வாரத்தில் ஏழு நாளும் வேலை. ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கும் மேல் வேலை செய்ய வேண்டும். வருசம் கூட கூட வேலையிலும் பொறுப்புகள் கூட இந்த மெஷின் இன்னும் இன்னும் ஓடிச்சுது தம்பி"

"வெளியில போன பிள்ளைகள் வீட்ட வரும் போது அம்மாக்காரி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவவை நான் வேலைக்கு விட வில்லை தம்பி"

"பிறகு பிள்ளைகளும் வேலைக்கு போகத் தொடங்கி இருப்பினமே அண்ணா" நான் அவரிடம் கேட்டேன்.

"ஓம் தம்பி ..ஆனால் நிலையான ஒரு இடத்துக்கு வரும் வரைக்கும் நானும் வேலை செய்தால் தான் அவர்களுக்கு வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று நான் என்ர வேலையை விடேல்ல தம்பி"

"அப்படி ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போதுதான் எனக்கு அப்படி எல்லாமே ஒரு நொடியில் இருளத் தொடங்கிட்டு. பிரமை பிடிச்ச மாதிரி ஒரே இடத்தில் நின்று கொண்டு ஒரே ஒரு புள்ளியை பார்த்துக் கொண்டு...."

"எனக்குள் ஏதோ உடைந்து போன மாதிரி ஆயிட்டுது... அவ்வளவு நாளும் நான் சேர்த்து சேர்த்து வைச்சு இருந்த எல்லா நினைவுகளும் ஒரு வினாடியில் எனக்குள் இருந்து வெளியே போயிட்டுது தம்பி"

" ஒரு அழி றபரால எல்லாவற்றையும் அழிச்ச மாதிரி என் பெயர் தொட்டு நான் ஆர் என்ற வரைக்கும் மறந்து போச்சுது தம்பி"

"எதுவுமே ஞாபம் இல்லை. பெயர் ஊர் நான் ஆர், எங்க வீடு, மனிசி பிள்ளைகள் - எல்லாமே மறந்து போச்சு தம்பி"

"நான் ஒரு செத்த சவம் போல ஆகிட்டன் தம்பி"

"அதுக்கு பிறகு நடந்தது எனக்கு நினைவில் இல்லை. வேலையில் எனக்கு இப்படி நடந்ததால் கம்பெனியே பொறுப்பெடுத்து என்னை மருத்துவமனையில் அனுமதித்தது. 8 மாதங்கள் ஆஸ்பத்திரி வீடு என்று என்னை உருட்டி எடுத்தது வாழ்க்கை"

"உங்களுக்கு நினைவுகள் வரத் தொடங்கவில்லையா அண்ணா" நான் அவரது கைகளை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டு கேட்கின்றேன்.

"8 மாதங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் வரத் தொடங்கிட்டு"

"ஆனால் எனக்கு அப்படி வராமல், நினைவுகள் எதுவுமே இல்லாமல் ஒரு விசரனாக செத்து போயிக்க வேண்டு தம்பி"

"ஏன் அண்ணா...." என்னால் அவரது பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை"

"ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தமும், ஒவ்வொருவரும் யார் என்று நினைவு வரும்போதுதான் எனக்கு இந்த வாழ்க்கை மேல அப்படி ஒரு வெறுப்பு தம்பி"


"வீட்டை கொண்டு வந்த பிறகு வந்த நாட்களில் ரிவி போட்டால் ஓப் பண்ணவோ அல்லது மற்ற சனலுக்கு மாற்றவோ தெரியாது.. படிகளில் ஏறத் தெரியும் ஆனால் இறங்க பயமாக இருக்கும். 24 மணித்தியால மணிக்கூட்டை புரிய முடியவில்லை. ஆராவது வெளியே போனால் வீட்ட வர மட்டும் தனிய இருக்க செரியான பயமாக இருக்கும்"

"சப்பாடு எல்லாம் கரண்டியால சாப்பிட முடியவில்லை. கைகளால் சாப்பிட்டாலும் இடது கையால தான் சாப்பிட தொடங்கினன்"

"ஏன் அண்ணா... உங்கள் குடும்பம் ... உங்களை...." எனக்கு மெலிதாக ஏதோ புரிய உணர்வுகள் தழம்பத் தொடங்கின

அவரின் கண்கள் தீர்க்கமாக எதையோ தேடின. அவரது மனவேகத்துக்கு சொற்கள் இசையவில்லை என நினைக்கின்றேன். இதயக் கூடு மேலே எழும்பி எழும்பி தணிந்தது அவருக்கு.

சில வினாடிகள் மெளனமாக இருந்தார்.பின்

"என்னை ஹோலில் வைத்து விட்டு என்னைச் சுற்றி இருந்து என்னைப் பற்றி கதைப்பார்கள் தம்பி."

"சனியன் செத்து போயிருந்தால் கூட பரவாயில்லை... இப்படி இருந்து உசிரை எடுக்குது" என்று சொல்லிவினம் தம்பி

"பேஸ்மண்டில் கொண்டு போய் தள்ளி விட்டாலும் இதுக்கு மேலே வரத் தெரியாது...கிடந்து உழலுது என்று சொல்லுவினம் தம்பி"

"எனக்கு நினைவுகள் சரியாக வராவிட்டாலும் சொல்பவற்றை விளங்கிக் கொள்ள ஏலும் என்றது அவையளுக்கும் தெரியும் தம்பி. ஆனாலும் என்னை குத்தி காயப்படுத்தி பார்க்க அப்படி ஒரு ஆசை அவர்களுக்கு"

"ஏன் அண்ணா... உங்கள் மனைவி...?"

"அவா என்ன செய்வா.... நானும் இப்படி ஒரே அடியாக வீழ்ந்து விட்டதால் பிள்ளைகள் சொல்லுக்கு தானே கட்டுப்பட வேண்டும் தம்பி"

"ஆனாலும் பிள்ளைகளுடன் சேர்ந்து அவவும் என்னை திட்டுவதைத்தான் என்னால் கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை தம்பி"

"30 வருடம் ஓடியதால் களைத்துப் போன இந்த மெஷினை எப்படா ஒரே அடியாக தூக்கி எறியலாம் என்று தான் எல்லாரும் யோசிச்சினமே ஒழிய இந்த மெஷினுக்கு இன்னும் உசிரும் உணர்வும் இருக்கு என்று விளங்கிக் கொள்ளவில்லை "

"நினைவுகள் முழுசா வர வர வேதனைகள் தான் கூடிச்சு "

"வருத்தம் வந்தாலும் வயசு போனாலும் இந்த மனசுக்கு அது தெரிவதில்லை தம்பி. அது எப்பவும் போல அடி மனசுக்குள் அன்பை எதிர்பார்த்து யாராவது அரவணைப்பார்களா என ஏங்கும் தம்பி"

எனக்குள் ஏதோ அறுந்து போய் கொண்டு இருந்தது. கண்களின் ஓரம் மெலிசாக ஓடத் தொடங்கி சில நிமிடங்கள் ஆயிருந்தன.

"சரி அண்ணா.. ஆனால் இப்ப நீங்கள் சரியாகத்தானே ஆகிட்டீர்கள். தனியாக கடையின் ஒரு பகுதியை பொறுப்பெடுத்து நடத்துகின்றீர்கள்..." நான் கேட்டேன்

"ஓம் தம்பி... எனக்கு இப்ப முழுக்க சரியாகிட்டுது. 3 வருசங்கள் ஆச்சுது சரியாக தம்பி"

"போன நினைவுகள் சுனாமி மாதிரி திரும்ப வரும் போது மறந்த விடயங்களையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டது. என்னால சின்ன வயதில நடந்த எல்லா விடயங்களையும் திகதி வாரியாக சொல்ல முடியும் தம்பி"

"இப்பவும் குடும்பத்துடனா இருக்கின்றியள்?" நான் கேட்டன்

ஒரு மெலிதான... ஏளனமான அந்த சிரிப்பு அவரின் முகத்தில் பரவியது. அவர் குரலில் தொற்றிக் கொண்டது உற்சாகமா அல்லது இவ் உலகைப் பார்த்து செய்யும் நையாண்டியின் மொழியா என தெரியவில்லை.

"ஓம் தம்பி. ஆனால் முன்னை மாதிரி இல்லை. நானே ராஜா நானே மந்திரி ... மாசம் காசு கொண்டு வருதால் எனக்கு அங்கு இப்ப திருப்பி நடப்பு இருக்கு..வீடும் என்ற பெயரில் தான் இருக்கு. ஆனாலும் நானே எனக்கு உரிய சாப்பாட்டை சமைச்சு, நானே என்னை முழுக்க கவனிச்சு... எனக்கு பிடிச்ச எல்லாவற்றையும் நானே செய்றன் தம்பி"

"இப்பதான் தம்பி என்ற வாழ்க்கையை நான் வாழ்றன்"

சில வினாடிகள் மெளனமாக இருந்தார். பின்னர்

"கெதியன இவர்கள் எல்லாரையும் விட்டுட்டு ஒரு நாள் நான் வெளியே போய் விடுவன் "

"எங்கே அண்ணா போவீர்கள்..."

அவர் பற்றியிருந்த கைகளை விடுவித்துக் கொண்டு "சரி தம்பி பிள்ளை கன நேரமாக எங்களையே பார்த்துக் கொண்டு நிற்குது" என்று சொல்லி மகளின் கன்னத்தில் தடவி விட்டு கடைக்கு வெளியே சென்றார்'

"அப்பா ஏன் அவர் உங்களிட்ட இப்படி தன் பிரைவேட் கதையை சொன்னார்" என்று மகள் கேட்டாள். என்னிடம் பதில் இருக்கவில்லை. மனம் முழுசும் மனிதர்கள்  மீதான வெறுப்பு படந்து இருந்தது.


* ***************************************************************

அடுத்த கிழமை கடைக்கு போய்அவரை உள்ளே சென்று தேடிப்பார்க்கும் போது அண்ணா இருக்கவில்லை. கடைக்கு போனால் ஆரைப் பார்க்க விருப்பம் இல்லாமல் அவ்வளவு காலமும் தவிர்த்தேனோ அவரை தேடி தேடி கடைக்குள் சுற்றி வந்தேன். அவரை காண முடியவில்லை.

சாமான்கள் வாங்கி காசும் கொடுத்து வெளியே வந்து காரை ஸ்ராட் பண்ணும் போது தான் எதேச்சையாக கடையின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு இருந்த அந்த நோட்டீஸ் கண்களில் பட்டது.

"காணவில்லை" எனும் தலைப்பிட்டு அந்த அண்ணாவின் படம் போட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

மனம் பதபதைக்க காரை விட்டு இறங்கிச் சென்று காணாமல் போன திகதியை பார்க்கின்றேன்.

அதே திகதி....தன் கதையை எனக்கு சொன்ன அதே திகதி!

(யாவும் கற்பனை அல்ல)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நிறைய முதியவர்களின் நிலைமை இப்படித்தான் போகின்றது..... வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு.பெரும்பாலும் பெண்கள் நாணல்போல் சமாளித்து கொண்டு போய் விடுவார்கள், ஆண்கள்தான் பனைமரம் மாதிரி நிண்டால் நேரே, விழுந்தால் வேருடன்......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

அடுத்த கிழமை கடைக்கு போய்அவரை உள்ளே சென்று தேடிப்பார்க்கும் போது அண்ணா இருக்கவில்லை. கடைக்கு போனால் ஆரைப் பார்க்க விருப்பம் இல்லாமல் அவ்வளவு காலமும் தவிர்த்தேனோ அவரை தேடி தேடி கடைக்குள் சுற்றி வந்தேன். அவரை காண முடியவில்லை.

அவர் பட்ட வேதனையை விட அவரைக் காணாதது ரொம்பவும் கஸ்டமாக இருந்திருக்கும்.

கனடாவில் குடும்பத்துக்காக இரண்டு மூன்று வேலை செய்து குடும்பமே இல்லாமல் வீதிக்கு வந்தோர் பலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும், சோகம் நிறைந்த கண்ணீர்  கதை. 😢
இப்படி ஒரு நிலைமை... எவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எம்மையும் தயார் படுத்தச் சொல்லுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நன்றாக எழுதப்பட்ட மோசமான கதை. ஆனாலும் எல்லோரும்  இப்படியானவர்கள் அல்ல என்னும் உண்மை மனதுக்கு ஆறுதலைத் தருகிறது. மனைவிகூட இவரை ஒதுக்குகிறார் என்பதை நம்பமுடியாதுள்ளது. அது உண்மையாயின் அவர் மனைவியுடன் நல்ல வாழ்வு வாழாது பணம் பணம் என்று ஓடியுள்ளார். இவரிலும் தப்பு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அழுத்தமான கதை...என்றாலும் ஒருக்கா --------- லான்ட் கடைக்கும் போகச்சொல்லுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ,பெண்களது மனதை புரிந்து கொள்ளாமல் பணம் ,பணம் என்று ஓடினால் இந்த நிலைமை தான் 😞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/22/2020 at 9:59 AM, suvy said:

புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நிறைய முதியவர்களின் நிலைமை இப்படித்தான் போகின்றது..... வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் வானத்தைப் பார்த்துக்கொண்டு.பெரும்பாலும் பெண்கள் நாணல்போல் சமாளித்து கொண்டு போய் விடுவார்கள், ஆண்கள்தான் பனைமரம் மாதிரி நிண்டால் நேரே, விழுந்தால் வேருடன்......!   🤔

தகப்பன் தனித்து விடப்படும் நிலை பல இடங்களில் நடந்தேறியுள்ளது.நடந்து கொண்டும் இருக்கின்றது. இதனால் தான் நான் முன்பொருதடவை யாழ்களத்தில் ஒரு கருத்து எழுதியிருந்தேன். அதாவது மனைவி உயிருடன் இருக்கும் போதே நான் இறந்துவிட வேண்டும் என.இதில் எனது சுயநலம் இருந்தாலும் இன்றைய காலகட்டத்தையும் சூழ்நிலைகளையும் நான்  நம்ப தயாரில்லை. நீங்கள்  கூறியது போல்  பெண்கள் நாணல் போன்றவர்கள்.ஒரு வயதிற்கு பின் அவர்கள் பிள்ளைகளுக்கும் தாயாக இருந்து கணவனுக்கும் தாயாக இருப்பவர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிக நன்றாக எழுதப்பட்ட மோசமான கதை. ஆனாலும் எல்லோரும்  இப்படியானவர்கள் அல்ல என்னும் உண்மை மனதுக்கு ஆறுதலைத் தருகிறது. மனைவிகூட இவரை ஒதுக்குகிறார் என்பதை நம்பமுடியாதுள்ளது. அது உண்மையாயின் அவர் மனைவியுடன் நல்ல வாழ்வு வாழாது பணம் பணம் என்று ஓடியுள்ளார். இவரிலும் தப்பு உள்ளது.

பல வருடங்களிற்கு முன் உங்களைப்போல் தான் நானும் நம்ப முடியவில்லை. ஆனால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்தித்த போதுதான் நிலமைகளை காண முடிந்தது. 
முதலாவது கனடாவில்....வயது முதிர்ந்த இரு பெண்பிள்ளைகள். அவர்களுடன் தாயர் பிரிந்து சென்றுவிட்டார்.தகப்பன் நோய்கள் வந்து கஷ்டப்படும் போது கூட அவர்கள் எட்டியும் பார்க்கவில்லை. ஆனால் கணவன் மூலம் கிடைக்கும் வாழ்வாதார உதவிப்பணம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்.கணவர் கொஞ்சம் கண்டிப்பானவர். பிள்ளைகளின் போக்கு அவருக்கு பிடிக்கவில்லை.காரணம் இந்திய சீக்கியர்களுடனான பழக்கவழக்கங்கள்.தவிர்க்குமாறு கண்டித்தார். மனைவியோ ஆதரவளித்தார். முடிவு தந்தையை/கணவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இரண்டாவது நிழலியின் கதை.......
மூன்றாவது இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்தேறியிருக்கின்றது
ஜேர்மனியில் கூட இரு தந்தையர் மனவேதனையால் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

பல வருடங்களிற்கு முன் உங்களைப்போல் தான் நானும் நம்ப முடியவில்லை. ஆனால் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை சந்தித்த போதுதான் நிலமைகளை காண முடிந்தது. 
முதலாவது கனடாவில்....வயது முதிர்ந்த இரு பெண்பிள்ளைகள். அவர்களுடன் தாயர் பிரிந்து சென்றுவிட்டார்.தகப்பன் நோய்கள் வந்து கஷ்டப்படும் போது கூட அவர்கள் எட்டியும் பார்க்கவில்லை. ஆனால் கணவன் மூலம் கிடைக்கும் வாழ்வாதார உதவிப்பணம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்.கணவர் கொஞ்சம் கண்டிப்பானவர். பிள்ளைகளின் போக்கு அவருக்கு பிடிக்கவில்லை.காரணம் இந்திய சீக்கியர்களுடனான பழக்கவழக்கங்கள்.தவிர்க்குமாறு கண்டித்தார். மனைவியோ ஆதரவளித்தார். முடிவு தந்தையை/கணவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இரண்டாவது நிழலியின் கதை.......
மூன்றாவது இங்கிலாந்திலும் இப்படியான சம்பவம் நடந்தேறியிருக்கின்றது
ஜேர்மனியில் கூட இரு தந்தையர் மனவேதனையால் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.

கடவுளே என்னை நல்ல குடும்பத்தில் பிறக்க வத்ததுக்கும்  நல்ல கணவன் குழந்தைகளைத் தந்ததுக்கும் கோடி நன்றி. ஆனால் மறதி வருத்தம் எனக்கு வராமல் என் கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்று என்று வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.😧

Link to comment
Share on other sites

பின்னூட்டம் இட்ட, ஊக்குவிப்பு புள்ளிகளை இட்ட அனைவருக்கும் நன்றி.

எம் சமூகத்தில் பொதுவாக குடும்ப வன்முறை என்பது பெண்களுக்கு எதிராக மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றது எனும் எண்ணம் உள்ளது. அதேயளவுக்கு இல்லையெனிலும், ஆண்களுக்கு எதிரான வன்முறைகளும் பரவலாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. இதில் Verbal abuse எனப்படும் வார்த்தைகளின் மூலம் காயப்படுத்துவது, senior abuse எனப்படும் முதியவர்களை கவனியாது விடப்படுவது போன்றன தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இங்கு கனடாவில் பெண் ஒருவர் பொலிசுக்கு தொலைபேசி அடித்து கணவனால் வன்முறைக்குள்ளாகின்றார் என சொல்லி தனக்கான பாதுகாப்பை கோருவது அடிக்கடி இடம்பெறும். ஆனால் இதே போன்று ஒரு ஆண் பொலிசுக்கு தொலைபேசி எடுத்து சொல்வதில்லை. இதில் ஆண் எனும் கர்வமும் அப்படி சொன்னால் தன் மானம் போய்விடும் என்ற எண்ணமும் பிரதானமாக பங்கு பகிக்கின்றது. எனவே தான் பிரச்சனை முற்றி வெடிக்கும் போது கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தக் கதையில் வருபவர் போன்று தான் என் மாமாவும் இருந்தார். வாரம் முழுதும் நாளொன்றுக்கு பல மணி நேர வேலை. ஈற்றில் நீரிழவு நோய் முற்றி அவரது கால்களில் பிரச்சனை வந்து நடக்க முடியாமல் போனபோது குடும்பம் பெரியளவுக்கு கவனிக்கவில்லை. அம்புலன்சிற்கு அடித்து சொன்னதுடன் விட்டு விட்டார்கள். ஆனால் கொஞ்சம் ஆழமாக இறங்கி நோக்கும் போது மாமா தன் வேலை வேலை என்று ஓடியமையால் நல்லதொரு ஆரோக்கியமான குடும்ப உறவை ஏற்படுத்துவதில் தவறி விட்டார். Emotional Feelings எதுவும் இல்லாத ஒரு உறவு நிலை (அதே மாமா பின் ஊருக்கு திரும்பி சென்று இன்னொரு திருமணம் முடித்து இறுதி 12 வருடங்களையும் புது மனிதனாக வாழ்ந்து இறந்தது தனிக் கதை). இந்த நிலையை இங்கு பல குடும்பங்களில் காண கூடியதாக இருக்கின்றது.

இப்படியான விடயங்களின் அடிப்படைக் காரணமாக இங்கு இருப்பது பேராசை ஆகும். அளவுக்கு மீறி / சக்திக்கு மீறி சொத்துகளையும் செல்வத்தையும் தேடும் போதுதான் எல்லா பிரச்சனைகளும் வர ஆரம்பிக்கின்றன. இது ஒரு புற்றுநோய் போன்று இங்கு எம்மிடம் பரவி கிடக்குது.


குடும்பம் பிள்ளைகள் என்பன முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியவை. அதே நேரம் எமக்கான முக்கியத்துவத்தையும் நாம் எமக்கும் கொடுக்க வேண்டும். இந்த வாழ்வு ஒரு முறை மட்டுமே வாழக் கூடியது. பிள்ளைகள் வளரும் காலம் தான் நாமும் வயதாகாமல் ஆரோக்கியமாக வாழும் காலமும் ஆகும். இதில் எம்மை நாம் கவனிக்காமல் விட்டால் எஞ்சிய காலத்தில் எம்மை எவரும் கவனிக்க மாட்டார்கள் எனும் நிலை வரலாம் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். எமக்காகவும் நாம் வாழ வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனைக் காணாமலேயே வாரத்தில் 6 நாட்கள் (சிலவேளை 7 நாட்களும்) வேலை வேலை என்று தும்படித்து தமது குடும்பம், சொந்தம் என்று உதவிக்கொண்டு வாழ்பவர்களை புலம்பெயர் நாடுகளில் காணலாம். பிள்ளைகளுடன் நெருக்கமாக இளவயதில் இருக்காவிட்டால், அவர்களுக்கு எமது பூர்வீகத்தையும் வரலாறுகளையும் சொல்லாவிட்டால் அந்நியத்தன்மை வந்துவிடும். வயது போய் நோய்வாய்ப்படும்போது புறக்கணிப்பது எதுவித குற்றவுணர்வையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிள்ளைகளைக் குறை கூறிப் பயன் இல்லை. நாம் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோமோ எம் பெற்றோரை எப்படி மதிக்கிறோமோ அதுவே எமக்கும் பரிசாகக் கிடைக்கிறது.அத்தோடு பிள்ளைகளே எம்மைக் கடைசிகாலத் தில் பார்க்கவேண்டும் என்னும் மடைத்தனமான பேராசையுடன் தானறிவைப் பயன்படுத்த்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் பல தமிழர்களுக்கு முடியாததனாலேயே இப்படியான நிலை ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2020 at 11:36 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடவுளே என்னை நல்ல குடும்பத்தில் பிறக்க வத்ததுக்கும்  நல்ல கணவன் குழந்தைகளைத் தந்ததுக்கும் கோடி நன்றி. ஆனால் மறதி வருத்தம் எனக்கு வராமல் என் கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்று என்று வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.😧

12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதில் பிள்ளைகளைக் குறை கூறிப் பயன் இல்லை. நாம் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோமோ எம் பெற்றோரை எப்படி மதிக்கிறோமோ அதுவே எமக்கும் பரிசாகக் கிடைக்கிறது.அத்தோடு பிள்ளைகளே எம்மைக் கடைசிகாலத் தில் பார்க்கவேண்டும் என்னும் மடைத்தனமான பேராசையுடன் தானறிவைப் பயன்படுத்த்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் பல தமிழர்களுக்கு முடியாததனாலேயே இப்படியான நிலை ஏற்படுகின்றது.

 

நல்லாய்தான் கதைக்கிறியள். 
இப்பிடியான பிரச்சனையளுக்கு  தாயின்ரை பங்கு மிக முக்கியம் கண்டியளோ? தகப்பன் பிசியாய் வேலை வேலை எண்டு திரியேக்கை தாய்  பிள்ளையளுக்கு சொல்லி  காரணங்களை சொல்லி வளர்க்க வேணும். தகப்பன் என்னத்துக்கு இப்பிடி ஓடி ஓடி வேலை செய்யுறார் எண்டு...தாய் முதலில் கணவனுக்கு மரியாதை குடுக்க வேணும். அதை பார்த்து பிள்ளையளும் பார்த்து மரியாதை குடுப்பினம்.அதே மாதிரித்தான் தகப்பனும் தாய்க்கு மரியாதை குடுக்க வேணும். ஒரு நேரமாவது குடும்பமாய் கூடியிருந்து கதைத்து பேசி உணவு உண்ண வேண்டும்.கூடுதலான குடும்பங்களிலை தாய் கணவனுக்கு மரியாதை குடுப்பதேயில்லை.

பிள்ளையள் விடயத்தில் தாயே எல்லா இடத்திலும் முடிவெடுக்கிறார்.இந்த இடத்தில் அப்பாவையும் கேட்க வேணும் என்று தாய் பிள்ளைகளுக்கு சொல்லுவதேயில்லை.இதனால் தகப்பனின் முக்கியத்துவம் பிள்ளைகளுக்கு தெரியாமலே போகின்றது.சில இடங்களில் பிள்ளைகளுக்கு தகப்பன் வீட்டுக்கு வீட்டுக்கு வருவதும் தெரியாது.போவதும் தெரியாது.ஏன் சில தாய்மாருக்கும் தெரியாது.
இன்னுமொரு முக்கியமான விடயம் வீட்டுக்குள் ஆன்மீகம் முக்கியம்.

Bildergebnis für தகப்பனின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பிள்ளைகளுக்கு தகப்பன் வீட்டுக்கு வீட்டுக்கு வருவதும் தெரியாது.போவதும் தெரியாது

பணம் வருவது மட்டும் அவர்களுக்குத் தெரிகிறது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சே என்ன ஆளையா நீர் நிழலி. வேலை முடிஞ்சு சந்தோசமா யாழை திறந்தேன், மனசை பிசைகிறது உங்கள் கதை.

அதிலும் அந்த யாவும் கற்பனை இல்லை என்ற வசனம் 😢  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.