Jump to content

நாம் இனி பங்­கு­தா­ர­ரில்லை": ஜெனி­வாவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பேன் - வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ்


Recommended Posts

 (ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அதற்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை.

பாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கவுமில்லை என்றும் வெ ளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் 26 ஆம் திகதி வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உரையாற்றவுள்ளார். அத்துடன் இலங்கையானது 30 - 1 என்ற ஜெனிவா பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாகவும் அவர் அறிவிக்கவுள்ளார். இது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இதனை குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்
எதிர்வரும் 26 ஆம் திகதி நான் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளேன். அதாவது இலங்கையானது 30-1 என்ற பிரேரணையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெ ளியேறுகின்றது என்பதனை நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவுள்ளேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையில் இலங்கை அரசாங்கம் இனி பங்குதாரர் இல்லை என்பதனை நான் ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன்.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது அரசியலமைப்புக்கு விரோதமானது. அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி தனக்கு இது குறித்து தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இந்த பிரேரணைக்கு மக்கள் அங்கீகாரமளிக்கவுமில்லை. அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறப்படவுமில்லை. எனவே இது சட்டவிரோதமானது என்றும் ஜனநாயகத்துக்கு எனவும் நான் ஜெனிவா பேரவையில் அறிவிக்கவிருக்கின்றேன்.

இந்த பிரேரணைக்கு எதிராகவே மக்கள் கடந்த தேர்தலில் ஆணை வழங்கினர். எனவே மக்களின் அங்கீகாரம் 30-1 பிரேரணைக்கு கிடைக்கவில்லை. எனவே அதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தோம். அந்தவகையில் அரசாங்கத்தின் தீர்மானத்தை நான் 26 ஆம் திகதி அறிவிப்பேன்
என்ன பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் உள்ளக ரீதியில் அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றார்.

https://www.virakesari.lk/article/76180

Link to comment
Share on other sites

SL briefs UNHRC President on decision to withdraw from Resolution

Foreign Secretary Ravinatha Aryasinha has briefed UN Human Rights Council (HRC) President Ambassador Elisabeth Tichy-Fisslberger on the decision of the Sri Lankan Government to withdraw its co-sponsorship of UN Resolution on the country, the Foreign Relations Ministry said.

The government decided to withdraw from the Resolution 40/1 of March 2019 on ‘Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka’, which also incorporates and builds on preceding Resolutions 30/1 of October 2015 and 34/1 of March 2017. The Foreign Secretary, who is in Geneva ahead of the 43rd Session of the HRC scheduled to commence next Monday, informed the President that the Cabinet had approved this decision following a cabinet paper submitted by Foreign Relations Minister Dinesh Gunawardena. The decision had also been presented to the Parliament on Thursday.

He also informed her that Minister Gunawardena will lead the Sri Lanka delegation to the 43rd Session of the Human Rights Council, and will formally inform the Council Members on the Government’s decision when he addresses the High Level Segment of the Council, on Wednesday. Minister Gunawardena who will also respond to the Oral Update on Sri Lanka by the High Commissioner on 27 February, is scheduled to meet the High Commissioner for Human Rights Michelle Bachelet. She was also informed by the Foreign Secretary that on the eve of the decision being taken by the Cabinet, the Ambassadors of the ‘core group’ that had moved the resolution, who were resident in Colombo ( the UK, Germany and Canada), had also been briefed by Minister Gunawardena. Ambassador Tichy-Fisslberger has appreciated Sri Lanka’s initiative to keep her briefed on the matter.

 

http://www.dailymirror.lk/top_story/SL-briefs-UNHRC-President-on-decision-to-withdraw-from-Resolution/155-183611

Link to comment
Share on other sites

ஈழத் தமிழரும் இனிமேல் போர்க்குற்றவாளிகள் கைகளில் சிக்கியுள்ள சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் ஆட்சியில் பங்குதாரராக இல்லாமல் தனியாக ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.