Jump to content

மதவெறிக்கு எதிரான பிரதிக்கினை. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

மதவெறிக்கு எதிரான பிரதிக்கினை.  - வ.ஐ.ச.ஜெயபாலன்

தமிழரின் விடுதலைப்பாதையில் கண்ணி வெடிகளாக மத மோதல்கள் விதைக்கபடுகிறதா? வடமாகாணத்தில் இடம் பெறும் நிகழ்வுகள் சர்வதேச அரங்கில் தமிழரை வெட்க்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது அவசர சிகிச்சையை நாடி நிற்க்கும் ஆபத்தான அரசியல் புற்று நோயாகும்.

மத நல்லிணக்கம் தமிழரின் பல்லாயிரம் வருடத்து இயல்பு. சமயச் சார்பின்மை எங்கள் மகத்தான மரபாகும். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எல்லா சமய நிறுவனங்களும் ஒரே தெருவில் பக்கம் பக்கமாக நல்லிணக்கத்துடன் செயல்பட்டதை கூறுகிறது. 

போர்க்காலத்தில் மதபேதம் இல்லாமல் தமிழர் மத்தியில்  மனித உரிமை முதல் புனர்வாழ்வு ஈறான பல பணிகளிலும் முன்னின்றவர்கள் கிறுஸ்துவ மத தலைவர்கள் என்பதை நாம் அத்தனை இலகுவாக மறந்துவிடுதல் கூடாது.

1960பதுகளில் இருந்தே திருகேதீஸ்வரத்து சமய முரண்பாடுகள் தமிழருக்கு அவமானச் சின்னமாக வளர்க்கபட்டு வருகிறது.  போர்காலத்தில் வெளிப்படுத்திய மனித நேயத்துடனும் தமிழர் மீதான  பேரன்போடும் நடுநிலையான தலமைப் பண்போடும் வணக்கத்துக்குரிய  மன்னார் கத்தோலிக்க பேராயர்  தாமாக முன்வந்து திருகேதீஸ்வர பாதை வழைவு பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

சச்சி அண்ணா இளமையில் தமிழரிடையே சாதி சமய நல்லிணக்கத்துக்கு அறவழியில் உழைத்த மதிப்புக்குரிய வரலாற்றை கொண்டவர் என்பதை அறிவேன்.  சச்சி அண்ணா தனது இறுதிக் காலத்தில் மதப்பகை வளர்பவராக செயல்படுவதை நம்பவோ ஏற்கவோ முடியவில்லை. அண்ணா தமிழர் நலன்களுக்கு எதிரான மதவாதப் போக்கை கைவிட்டு திருகேதீஸ்வரம் பாதை வளைவு பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் பேராயரோடு பேசி தீர்வு காண முயலுங்கள். 

சமய சர்ச்சைகளும் விவாதங்களும் மேலோங்கியிருந்த பிரிட்டிஸ் கலோனில் ஆட்ச்சிக் காலத்தில்கூட தமிழர் மத்தியில் இடம்பெற்ற சைவ கிறிஸ்துவ மத சமய விவாதங்கள் நாகரீகமாகவே இடம்பெற்றன.  இன்றும் மத மோதல்களை முன்னெடுக்கும் சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்பது நம்பிக்கை தருவதாக உள்ளது.  சைவ கிறிஸ்துவ மக்கள் போர்க்காலத்தில் ஏற்பட்ட இறுகிய பிணைப்பை ஒருமைப்பட்டை எந்த விலை கொடுத்தாயினும் காப்பாற்றிட வேண்டும் என பணிகிறேன். 

மதவெறி தமிழ் பேசும் மக்களது கனவுகளின்மீது தீயாக மூட்டப்படுகிறது.  நமது விடுதலைக்காக இரத்தம் சிந்திய சகல மதங்களையும் இயக்கங்களையும் சேர்ந்த மாவீரர்களின் திருவுடல்கள் புதைந்துகிடக்கும் தாய்மண்ணைத் தொட்டு மதவெறிக்கு எதிராக பிரதிக்கினை எடுப்போம் வாருங்கள்.  

Link to comment
Share on other sites

On 2/21/2020 at 11:48 PM, poet said:

மத நல்லிணக்கம் தமிழரின் பல்லாயிரம் வருடத்து இயல்பு. சமயச் சார்பின்மை எங்கள் மகத்தான மரபாகும். மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எல்லா சமய நிறுவனங்களும் ஒரே தெருவில் பக்கம் பக்கமாக நல்லிணக்கத்துடன் செயல்பட்டதை கூறுகிறது. 

உண்மை. ஆனால், இன்று ஒரு பல்லின - மத சமூகங்களுடன் தான் நாம் வாழ்கின்றோம். எமக்கு என இருந்த தேசம் இன்று இல்லை. 

ஒரு 70% புத்த சமயத்தை பெரும்பான்மையாக கொண்டதுடன் மட்டுமல்லாமல் ஒரு தீவிரவாத போக்கையும் கொண்ட சுற்றத்திற்குள் வாழும்பொழுது, 72 ஆண்டுகளையும் கடந்து இன, மத, கலாச்சார அழிவை எதிர்நோக்கி உள்ளது தமிழ் சமூகம். 

அகிம்சை, சகிப்பு என்ற உயர்ந்த குணங்கள் இருக்கத்தான் வேண்டும். அதேவேளை, அதை மதிக்கத்த சமூகங்கள் மத்தியில் தான் அவற்றிற்கும் பயன் இருக்கும். 

Link to comment
Share on other sites

எல்லோரும் இந்து மத மனித்களை தானே விட்டு கொடுக்க சொல்கிறீரகள் எங்கேயும் யாருமே இந்தனைக்கும் காரணமான அந்த குருமாரை குற்றம நேரடியாக சொல்லவில்லை அவர்கள் போரக்காலத்தில் உதவி செய்தபடியால் அவர்கள் நல்லவர்கள் செய்வது எல்லாம் சரி என்று கண்ணையும் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருக்க தான் சொல்கிறாரகளோ??? அவர்கள் ஆங்கிலம் சிங்களம் பேச தெரிந்தபடியால தலையிட்டாரகள் எங்கட சைவ ஐயருக்கு சமஸ்கிரதமும் சரியா வராதே தமிழும் அதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

எல்லோரும் இந்து மத மனித்களை தானே விட்டு கொடுக்க சொல்கிறீரகள் எங்கேயும் யாருமே இந்தனைக்கும் காரணமான அந்த குருமாரை குற்றம நேரடியாக சொல்லவில்லை அவர்கள் போரக்காலத்தில் உதவி செய்தபடியால் அவர்கள் நல்லவர்கள் செய்வது எல்லாம் சரி என்று கண்ணையும் எல்லாத்தையும் பொத்திக்கொண்டு இருக்க தான் சொல்கிறாரகளோ??? அவர்கள் ஆங்கிலம் சிங்களம் பேச தெரிந்தபடியால தலையிட்டாரகள் எங்கட சைவ ஐயருக்கு சமஸ்கிரதமும் சரியா வராதே தமிழும் அதே 

நீங்கள் சுய பரிசோதனை செய்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் உண்டோ ?

கவி மத சகிப்புத்தன்மைபற்றி கவலைப்பட்டால், நீங்கள் அதிலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள். 🤔

On 2/23/2020 at 12:39 AM, ampanai said:

உண்மை. ஆனால், இன்று ஒரு பல்லின - மத சமூகங்களுடன் தான் நாம் வாழ்கின்றோம். எமக்கு என இருந்த தேசம் இன்று இல்லை. 

ஒரு 70% புத்த சமயத்தை பெரும்பான்மையாக கொண்டதுடன் மட்டுமல்லாமல் ஒரு தீவிரவாத போக்கையும் கொண்ட சுற்றத்திற்குள் வாழும்பொழுது, 72 ஆண்டுகளையும் கடந்து இன, மத, கலாச்சார அழிவை எதிர்நோக்கி உள்ளது தமிழ் சமூகம். 

அகிம்சை, சகிப்பு என்ற உயர்ந்த குணங்கள் இருக்கத்தான் வேண்டும். அதேவேளை, அதை மதிக்கத்த சமூகங்கள் மத்தியில் தான் அவற்றிற்கும் பயன் இருக்கும். 

எங்களிடையே சகிப்புத்தன்மை இல்லையென்றால் அது சமயங்களின் பிழை அல்ல. அது எம் இனத்தின் பண்பு. 

 

Link to comment
Share on other sites

நான் தமிழ்..., இந்து அல்ல!
****************************

நான் சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணை தாய்லாந்தில் சந்தித்தேன். அது ஒரு Starbucks காபி நிலையம். கருப்பாய் இருந்தாள். ஆனால் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தாள். சினேகமாய்ச் சிரித்தேன். அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

"இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?"

"இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து"

என்றாள். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. அவளது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி.

"இங்கு உக்காரலாமா?"

"ஓ"

என்று தலையசைத்தாள். அவள் தான் கால்நடை மருத்துவர் என்றும், உயிர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றும் சொன்னாள்.அவளது பணி, தாய்லாந்துக்கு வந்ததற்கான காரணம் போன்றவற்றைச் சுற்றி எங்களது உரையாடல் சென்று கொண்டிருந்த்தது. மொழி பற்றி லேசாக உரையாடல் திரும்பியது.

"உங்கள் தாய் மொழி என்ன?"

"தமிழ்"

என்றாள். எனக்கு மேலும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

"உங்களுக்குத் தமிழ் தெரியுமா?"

"தெரியாது, தாத்தா, பாட்டி பேசுவார்கள். ஆனால் எனக்குத் தெரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது".

"ஏன் கற்றுக் கொள்ளாமல் விட்டீர்கள்"

"எனது பள்ளிப் பருவத்தில் வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது நிறைய தமிழ் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் தோன்றியுள்ளன. ஆகவே இளைய தலைமுறை தமிழை நன்கு கற்கும்"

என்றாள். உள்ளத்தில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. மெதுவாய் எங்கள் பேச்சு மதத்தை நோக்கித் திரும்பியது.

"நீங்கள் இந்துவா?"

"இல்லை. நான் தமிழ்"

என்றாள். எனக்குச் சங்கட்டமாகப் போய்விட்டது. ஒருவரிடம் நீங்கள் என்ன மதம் என்று கேட்க வேண்டுமே ஒழிய நீங்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவரா என்பது நாகரீகம் இல்லை என்று எண்ணிக்கொண்டு

"மன்னிக்கவும், நான் நேரடியாகக் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் தமிழ் தான். ஆனால் உங்கள் மதம் என்ன?"

என்று மறுபடியும் வினவினேன்.
அவள் மறுபடியும்

"தமிழ் தான்"

என்றாள். சொல்லிவிட்டு

"ஏன் மறுபடியும் கேட்கிறீர்கள்? ஏதாவது தவறுதலாய்ச் சொல்லிவிட்டேனா?"

"இல்லை, தமிழ் என்பது இனம். ஆனால் மதமில்லையே? இந்தியாவில் எங்களைக் கேட்டால், தமிழன் என்று சொல்லுவோம். ஆனால் மதம் என்றால் இந்து என்றுதான் சொல்வோம்"

என்றேன்.

"எங்கள் சமூகத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை. நாங்கள் தமிழ் என்றுதான் சொல்வோம். தென் ஆப்பிரிக்காவில் உள்ள சமூகத்தில் தமிழ், இந்துஸ்தானி, முஸ்லீம் என்று வேறுபாடு உள்ளது. நாங்கள் முருகன், காளி போன்ற தெய்வங்களை வணங்குபர்கள், இந்துஸ்தானியர்கள் போல் அல்ல ஆகையால் தமிழர்களை இந்துஸ்தானிகள் என்றோ, இந்து என்றோ சொல்வதில்லை, தமிழர்கள் என்றுதான் அழைப்பார்கள்"

என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடை பெற்றுச் சென்றாள்.

எனக்கு ஏன் இந்தியாவில் மட்டும் தமிழர்கள் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்ற சிந்தனை வந்தது. ஏதாவது மத மாற்றம் நடந்திருக்குமோ?

அதன் பிறகு சமீபத்தில் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டர்பனுக்கும், நாடேல் மாகணத்துக்கும் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெண் சொன்னது உண்மையென்று நேரடியாக உணர்ந்தேன். அங்கு தமிழர்கள் முருகனையும், சிறு தெய்வங்களையும் வழிபட்டுக்கொண்டு தமிழர்களாகவே வாழ்கிறார்கள்.

அதேபோல் இன்றும் எனக்கு ஒரு அனுபவம். எனது அலுவலகத்தில் ஒரு பர்மியன் இருக்கிறான். பார்த்தால் சிரிப்பதுண்டு ஆனால் பேசியதில்லை. இன்று எதேச்சையாக நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனிடம் பர்மா அரசியல் நிலையை அறிந்துகொள்ளும் பொருட்டு நிலைமை எப்படி உள்ளது என்று வினவினேன். அரசு சுடுவதை நிறுத்தியுள்ளது என்றான். தான் ரங்கூனிலிருந்து வருகிறேன் என்றான். அங்கு தமிழர்கள் சிலர் வாழ்கிறார்கள் தானே என்றேன். ஆமாம் என்றவன் சிலர் அல்ல, பலர் என்றான். தமிழர்களுக்கென்று மன்றங்கள் எல்லாம் இருக்கிறது. தமிழர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் என்று தனித் தனியே மன்றங்கள் வைத்துள்ளார்கள் என்றான். எனக்கு மறுபடியும் ஆச்சரியம், இங்கும் தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை போல என்று உணர்ந்தேன்.

Robin என்று எல்லோராலும் அழைக்கப்படும் அந்த பர்மியன் மெதுவாய் என் காதருகே வந்து

"என் உண்மையான பெயர் என்ன தெரியுமா, வடிவேலு"

என்றான். முருகக் கடவுளின் பெயர். அவன் தந்தை தமிழராம். தாய் பர்மியராம்.

பகிரியில் வந்த பதிவு

 
Link to comment
Share on other sites

  ஐஐயோ  மார்த்தாண்டன் , அபாண்டமாக பழி சுமத்தலாமா. என்பதிவை தயவு செய்து வாசியுங்க. நான் இந்துக்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேணும் அல்லது கிறிஸ்துவர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேணுமென்று ஒருதலைப் பட்சமாக ஏதும் எழுதவில்லையே. திரும்ப ஒருதடவை வாசியுங்க. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.