Jump to content

மன்னார் பிரதேசத்தில் 2000 தமிழ்ப்பெண்கள், இஸ்லாமியர்களைத் திருமணம் செய்துள்ளனர்


Recommended Posts

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள்.

71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.

2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் சைவ சமயத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றது. இந்தநிலையில் இஸ்லாமியர்களைத் திருமணம் செய்வதன் ஊடாக இனம் ஒன்றே மாற்றப்படுகின்றது என்று பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

https://www.tamilwin.com/community/01/239302?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.
 
மன்னார் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு மாவட்டச் செயலகம் பிரதேச செயலக ரீதியாக திரட்டிய தரவுகளின்படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
 
மன்னார் மாவட்டத்தில் 71 ஆயிரத்து 868 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களில் 34 ஆயிரத்து 494 பேர் ஆண்கள். 37 ஆயிரத்து 374 பேர் பெண்கள்.
 
71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.
 
2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:
2 ஆயிரத்து 26 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர் என்று அந்தத் தரவுகள் கூறுகின்றன.

அதாவது....  2026 + 12 = 2038 தமிழர்கள்,  முஸ்லீம்களாக மாறி விட்டார்கள். 😮

Link to comment
Share on other sites

2 hours ago, போல் said:

71 ஆயிரத்து 868 முஸ்லிம்களில் 69 ஆயிரத்து 854 பேரே இஸ்லாமியர்கள். அவர்களில் 34 ஆயிரத்து 506 பேர் ஆண்கள். 35 ஆயிரத்து 348 பேர் பெண்கள்.

ஒரு முசுலீம் 7 பெண்களைத் திருமணம் செய்ய அவர்கள் சட்டத்தில் இடமுண்டு என்று சொல்கிறார்கள், அது உண்மையானால் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய பெண்டுகள் தேவை. அவர்கள் எங்கே போவார்கள்? புரிந்துகொள்ள வேண்டும்.... 🤔😋

 

2 hours ago, colomban said:

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 26 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் செய்துள்ளனர்.

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள். 💃💃

Link to comment
Share on other sites

இந்த தரவுகள் நம்பத் தகுந்தவை அல்ல, எந்த ஆதாரமும் இல்லாமக் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி, இத்தரவுகள் முதலில் அதிர்வு இணையத்தளத்தில் தான் வெளியாயின..!!

3 minutes ago, Paanch said:

ஒரு முசுலீம் 7 பெண்களைத் திருமணம் செய்ய அவர்கள் சட்டத்தில் இடமுண்டு என்று சொல்கிறார்கள், அது உண்மையானால் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய பெண்டுகள் தேவை. அவர்கள் எங்கே போவார்கள்? புரிந்துகொள்ள வேண்டும்.... 🤔😋

 

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள். 💃💃

இப்பொழுது இதான் டிரெண்ட் போல் உள்ளது ஒன்றில் முஸ்லிமைப்திருமணம் செய்வது அல்லது 13-15 வயது வித்தியாசத்தில் புலம்பெயர் நாட்டு மாப்பிள்ளையை திருமணம்ப்செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள். 💃💃

பாஞ்ச்  அண்ணை... மற்றப் பக்கம். 12 தமிழ் ஆண்கள், 
முஸ்லீம் பெண்களிடம்... கொழுத்த சீதனம் வாங்கி விட்டார்களே... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும்  வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்.....

30 வருடங்களுக்கு முன்பு பிரசுரமான வீரகேசரி பத்திரிகையை பாருங்கள்  அதில பெயர் மாற்றம் என்ற பகுதியில் பார்த்தால் இது போன்ற உணர்வு வரும் ....அனுபவ த்தில் சொல்லுகின்றேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

அனைவருக்கும்  வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன்.....

30 வருடங்களுக்கு முன்பு பிரசுரமான வீரகேசரி பத்திரிகையை பாருங்கள்  அதில பெயர் மாற்றம் என்ற பகுதியில் பார்த்தால் இது போன்ற உணர்வு வரும் ....அனுபவ த்தில் சொல்லுகின்றேன்...

முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது இணையத்தில் இருக்கா ?? அதன் லிங்க்கை நீங்களே இங்கு இணைத்திருக்கலாமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது இணையத்தில் இருக்கா ?? அதன் லிங்க்கை நீங்களே இங்கு இணைத்திருக்கலாமே???

தலைவியே நாங்கள் பழைய பஞ்சாங்கம்...  30 வருடங்களுக்கு முன்பு .வீரகேசரி பத்திரிகை வாசித்த பொழுது மனதில் கிரகித்த  தகவலை சொன்னேன்....30 வருடங்களுக்கு முன்பு இணையமும் இல்லை லிங்கும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

தலைவியே நாங்கள் பழைய பஞ்சாங்கம்...  30 வருடங்களுக்கு முன்பு .வீரகேசரி பத்திரிகை வாசித்த பொழுது மனதில் கிரகித்த  தகவலை சொன்னேன்....30 வருடங்களுக்கு முன்பு இணையமும் இல்லை லிங்கும் இல்லை

அடடா எதோ கண்டுபிடிதது பழையனவற்றைத் தரவேற்றம் செய்துள்ளனர் என்று எண்ணினேன். பழைய பஞ்சாங்கம் இன்னும் கிழி யவில்லையா???😃😂

 

Link to comment
Share on other sites

25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகளுக்கு முந்தையது இணையத்தில் இருக்கா ?? அதன் லிங்க்கை நீங்களே இங்கு இணைத்திருக்கலாமே???

நீங்கள் வேண்டுமானால் 2017க்கு பிறகு வந்தவற்றை பார்க்கலாம் வீரகேசரியில்.

சென்ற வாரம் கூட கத்தோலிக்க பெண் ஒருவர் இஸ்லாமிய மதம் மாறியிருந்தார்

அதேபோல்  தினகரனில் 2013ல் இருந்து  பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

நீங்கள் வேண்டுமானால் 2017க்கு பிறகு வந்தவற்றை பார்க்கலாம் வீரகேசரியில்.

சென்ற வாரம் கூட கத்தோலிக்க பெண் ஒருவர் இஸ்லாமிய மதம் மாறியிருந்தார்

அதேபோல்  தினகரனில் 2013ல் இருந்து  பார்க்கலாம்.

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

மனித சமுகம் இன்னும் உன்னதம் அடையவில்லை .....என்பது உண்மை

39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா எதோ கண்டுபிடிதது பழையனவற்றைத் தரவேற்றம் செய்துள்ளனர் என்று எண்ணினேன். பழைய பஞ்சாங்கம் இன்னும் கிழி யவில்லையா???😃😂

 

நிதர்சனங்கள் இலகுவில் கிழிய வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

முஸ்லிம்கள் தமிழ் இனத்தின் அங்கம் இல்லை அவர்கள் அப்படி பார்ப்பதுமில்லை.

அதே போல் இதுக்கு சீதனத்துக்கும் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, தமது இனத்தை பெருக்க ஒரு வழியாக பார்க்கிறார்கள். பெண்க்ளை திருமணம் செய்வதன் மூலம் அவர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழர் எண்ணிக்கை குறையும்,முஸ்லிம் எண்ணிக்கை கூடும் அதே போல் அப்பெண் பிரச்வைக்கும் பிள்ளைகளும் முஸ்லிமாகவே வளர்வார்கள்.

அதைவிட இன்னுமொரு விடயம் தமிழ் மக்கள் காணி வீடுகளை பெண் பிள்ளைகளுக்கு வழங்குவார்கள், இதன் மூலம் தமிழரின் காணி பூமிகளை இலகுவில் அடையலாம்.

ஆனால் 2,000. பெண்கள் மதம் மாறினர் என்பது நம்ப தகுந்த் மாதிரி இல்லை.

Link to comment
Share on other sites

24 minutes ago, Dash said:

முஸ்லிம்கள் தமிழ் இனத்தின் அங்கம் இல்லை அவர்கள் அப்படி பார்ப்பதுமில்லை.

அதே போல் இதுக்கு சீதனத்துக்கும் சாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, தமது இனத்தை பெருக்க ஒரு வழியாக பார்க்கிறார்கள். பெண்க்ளை திருமணம் செய்வதன் மூலம் அவர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழர் எண்ணிக்கை குறையும்,முஸ்லிம் எண்ணிக்கை கூடும் அதே போல் அப்பெண் பிரச்வைக்கும் பிள்ளைகளும் முஸ்லிமாகவே வளர்வார்கள்.

அதைவிட இன்னுமொரு விடயம் தமிழ் மக்கள் காணி வீடுகளை பெண் பிள்ளைகளுக்கு வழங்குவார்கள், இதன் மூலம் தமிழரின் காணி பூமிகளை இலகுவில் அடையலாம்..

உங்கள் தீர்வு என்ன?

  1. ஒரே மதத்தவரே திருமணம் செய்யலாம் என்று சட்டம் உருவாக்கல்.
  2. மதம் மாறுவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரல்.
  3. மனித உரிமை அது இது என்று இப்படி சட்டங்கள் கொண்டுவர முடியாது என்றால் மதம் மாறுபவர்கள், மாற்று மதத்தில் திருமணம் செய்பவர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு வாள்வெட்டு போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் ஏற்படுத்தல்.
  4. உங்களின் அபார அறிவுத்திறனால் உருவான வேறு தீர்வு.
Link to comment
Share on other sites

13 minutes ago, கற்பகதரு said:

உங்கள் தீர்வு என்ன?

  1. ஒரே மதத்தவரே திருமணம் செய்யலாம் என்று சட்டம் உருவாக்கல்.
  2. மதம் மாறுவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவரல்.
  3. மனித உரிமை அது இது என்று இப்படி சட்டங்கள் கொண்டுவர முடியாது என்றால் மதம் மாறுபவர்கள், மாற்று மதத்தில் திருமணம் செய்பவர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு வாள்வெட்டு போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் அச்சுறுத்தல் ஏற்படுத்தல்.
  4. உங்களின் அபார அறிவுத்திறனால் உருவான வேறு தீர்வு.

இது உங்களது விதண்டாவாதம். இதற்கு விழிப்புணர்வு தான் முக்கியம். தமிழ் பெண்களிடம் முஸ்லிம் இளைஞ்ர்களுடன் நெருங்கி பழகவோ அல்லது காதல் தொடர்புகள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினால் போதுமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ தமிழ் சிங்கங்களே,

மாற்றுக்குறையா தங்கங்களே,

கத்தோலிக்கனா சைவனா,

சச்சியா, பாதிரியா,

கோவில் வளைவா,தேவாலய  முடுக்கா,

என்று நீங்கள் வெள்ளி பார்த்துக் கொண்டிருக்க,

2000 ஆயிரம் லட்டை லம்பா கிளப்பீடாரே ஐயா சோனகர் 😂

பிகு: இதில் அவர்களை குறை சொல்லி என்ன பயன். சமூகத்தின் மீது அக்கறை யாருக்கு இருக்கிறது? பெரியாஸ்பத்திரில கக்கூஸ் கழுவிறவன் கூட வீடும் நகையும் கேட்கும் போது, தமிழ் வாலிபர்கள் தமக்குதாமே நிர்ணயித்த திருமண விலை கட்டுபடியாகாது என்ற போது, பெண்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே கேள்வி வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வதா, அல்லது விரும்பி வரும் முஸ்லிம் மனிதனை மணம் செய்வதா என்பது மட்டுமே. 

கலியாணம் கட்டிக் கொடுத்து பருவ உணர்வுகளுக்கு ஒரு அங்கீகாரம்மிக்க வடிகாலை இந்த சமூகம் அவர்களுக்கு வழங்காதபோது, தமிழாவது மண்ணாவது என்று இனமும், மதமும் மாறி அவர்கள் தமக்கென ஒரு வாழ்வை அமைக்கிறார்கள். இரெண்டாம், மூன்றாம், நான்காம் தாரமாகவேனும். 

அவர்களும் பொதுவாக நம்பி வரும் பெண்களை வைத்து வாழவே செய்கிறார்கள்.

2000 தமிழ் பெண்களை வாழவைக்க வக்கில்லாத ஆண்மையற்ற ஒரு இனம் - விடயம் நடந்த பின் இணைய வெளியில் வியாக்கியானம் நடத்த மட்டும் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வீடும் நகையும் கேட்கும் போது, தமிழ் வாலிபர்கள் தமக்குதாமே நிர்ணயித்த திருமண விலை கட்டுபடியாகாது என்ற போது, பெண்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே கேள்வி வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே வாழ்வதா, அல்லது விரும்பி வரும் முஸ்லிம் மனிதனை மணம் செய்வதா என்பது மட்டுமே. 

எங்கட கலாச்சாரத்தின் படி சீதனம் சாதி பார்க்க வேண்டும் எங்களுக்கு எண்டு ஒரு பெருமை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

💯   எனக்கு தெரிந்த ஒருவர் முன்பு நெருப்பு பறக்க தமிழ் தேசியம் கதைப்பவர் சிங்களவன் காட்டுமிராண்டி என்பார் தனது மகள் சிங்களவரை காதலித்ததும் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார் இப்போது நேர்மாறு.

 

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம்.

முஸ்லிம்கள் தங்கள் மதத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரையும் எதிரிகளாக பார்க்கிறார்கள்.இணங்கி செல்வதானால் தமிழர்களும் முஸ்லிமாக மாறவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 முஸ்லிம்கள் தம்மை வேறு ஒரு இனமாக இப்போதெல்லாம் முன்னிலைப்படுத்தினாலும் அவர்கள் அடிப்படையில் தமிழர்கள் தானே. ஒரே நாட்டில் இருந்துகொண்டு மதம் என்ற காரணத்தினால் அவர்களை நாம் விரோதிகளாகப் பார்க்கிறோம். ஆனால் அதை தீர்ப்பதற்கான வழிமுறை எம்மிடம் இல்லை. புலம் பெயர் நாடுகளில் கூடப் பல இளந்தலைமுறை மாற்று இனத்தவரைத் திருமணம் செய்கின்றனர். இத்தனைக்கும் பெற்றோர் தமிழ் தமிழ் என்று பிள்ளைகளுக்கும் தமிழைக் கற்பித்தவர்கள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எம் இனத்தில் உள்ள சீதன, சாதி அடிப்படைகளும் எப்போ மாறுகிறதோ அதுவரை நாம் சும்மா கத் திக்கொண்டிருக்கவேண்டியதுதான்

உங்கள் கதையின் படி ,சைவர்கள் ,இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள் இலங்கையில் இல்லாமல் போனாலும் பரவாயில்லை ....முஸ்லீம் மதம் மட்டும் தழைத்தோங்கட்டும் ஏன் என்றால் அவர்களும் தமிழ் கதைக்கிறார்கள் ....அப்படித்தானே 

Link to comment
Share on other sites

9 hours ago, Dash said:

இது உங்களது விதண்டாவாதம். இதற்கு விழிப்புணர்வு தான் முக்கியம். தமிழ் பெண்களிடம் முஸ்லிம் இளைஞ்ர்களுடன் நெருங்கி பழகவோ அல்லது காதல் தொடர்புகள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினால் போதுமானது.

அட, இது வரை அறிவுறுத்தவில்லையா? இனியாவது செய்து பாருங்கள்.

இந்த சைவ பெண்கள் கத்தோலிக்கருடன் நெருங்கி பழகி மதம் மாறி விட்டாலும் சைவ மக்கள் தொகை குறைந்து விடுமே? அதை தடுக்க என்ன செய்யலாம்? இன்னும் ஒரு அறிவுறுத்தல் கொடுத்து பார்க்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்கள் கதையின் படி ,சைவர்கள் ,இந்துக்கள் ,கிறிஸ்தவர்கள் இலங்கையில் இல்லாமல் போனாலும் பரவாயில்லை ....முஸ்லீம் மதம் மட்டும் தழைத்தோங்கட்டும் ஏன் என்றால் அவர்களும் தமிழ் கதைக்கிறார்கள் ....அப்படித்தானே 

இவ்வளவு கதைக்கும் உங்களால் ஒரு முஸ்லீம் - தமிழர் திருமணத்தை நிறுத்த முடியுமா ?? அல்லது மதம் மாறாது ஒருவரையாவது தடுக்க முடியுமா ?? நான் யதார்த்தத்தை மட்டும்தான் எழுதியுள்ளேன் தவிர என் நிலைப்பாட்டை அல்ல றதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் விரும்பி, மதம் மாறி திருணம் செய்தாலும் மதம் மாற்றி விட்டார்கள். வறியோர்க்கு உதவி செய்தாலும் மதம் மாற்றி விட்டார்கள் என்று சண்டை பிடிப்போமே தவிர; உருப்படியாய் ஒன்றும் செய்யோமே. எங்கள் பெண்கள், ஆண்களை பெற்றவர்கள் குலம், கோத்திரம், அழகு, அறிவு, கொழுத்த பணம் என்று அடுக்கிக்கொண்டே போவார்கள் பிள்ளைகள் யாராவது ஒன்றை இழுத்துக்கொண்டு வந்தால் வாயை மூடிக்கொண்டு ஆசீர்வதிக்கிறார்கள். அதனால் பிள்ளைகள் பெற்றோருக்கு சிரமமில்லாமல் இலகுவான வழியை தேடுகிறார்கள் போலுள்ளது. இது சரியென்று நான் சொல்லவில்லை. நடப்பதை விதி என்று பழி போடவேண்டிய நிலை. காலம் மாறிவிட்ட.து நாமும் மாற்றத்தை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம்.

Link to comment
Share on other sites

4 hours ago, கற்பகதரு said:

 

இந்த சைவ பெண்கள் கத்தோலிக்கருடன் நெருங்கி பழகி மதம் மாறி விட்டாலும் சைவ மக்கள் தொகை குறைந்து விடுமே? அதை தடுக்க என்ன செய்யலாம்? இன்னும் ஒரு அறிவுறுத்தல் கொடுத்து பார்க்கலாமா?

ஒரு சைவ பெண் கத்தொலிக்கராக மதம் மாறினாலும் அவர் தமிழர் தான்;ஆனால் அவர் இஸ்லாமியராக மதம் மாறினால் தமிழரில் ஒருவர் குறைந்து முஸ்லிமின் எண்ணிக்கை கூடும்.

வித்தியாசம் விளங்குதா;அதே போல் பெரும்பாலான தமிழர்கள் மன்னாரில் கத்தோலிக்கர் என்றபடியால் அப்படி இஸ்லாமியராக மதம் மாறியவர்கலில் பெரும்பாலானோர் கத்தொலிக்க பெண்களாகவே இருப்பர்.

உண்மையில் 2014-2017 வரையான காலப்பகுதியில் இந்த மத மாற்றங்களுக்கு இலக்காக இருந்தது வவுனியா தான்,ஆனால் அங்கு இருந்த மக்களின் உதவியுடன் இது அடக்கபட்டு விட்டது ஆனால் மன்னாரில் கட்டுக்கடங்காமல் நடக்கிறது....ஏன் தமிழனும் தமிழனும் அடிபடுவதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

இந்தப் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்கள், சீதணம் என்ற கொடுமையிலிருந்து தங்கள் பெற்றோரைக் காப்பாற்றிய புண்ணியவதிகள்.

யார் சொன்னது ...முஸ்லிம்களின் சீதனம் வாங்கும் திருகுதாளம் உங்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள் . 
சீதனம் இரண்டுவகைப்படும் ஒன்று திருமணத்தின் முதலே அடித்துப்பேசி கறாராக டீலை முடிப்பது நமது தமிழர்கள் செய்வது ,
அடுத்தது தான் மஹா கேவலமான திருட்டுத்தனமான சீதனம் இதைத்தான் அநேக முஸ்லிம்கள் செய்வது 
கலியாணத்தின் போது ஒன்றும் வேணாம் என்று செய்வது ,வெளியாட்களுக்கு காலரை தூக்கி படம் காட்டிவிட்டு 
குடித்தனம் செய்ய ஆரம்பித்ததும் சிறுக சிறுக வேலையை  ஆரம்பிப்பது முதலில் நீ என்ன கொண்டுவந்தனீ என்று கேள்வி ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக பெண் மூக்கை சிந்திக்கொண்டு பிறந்த வீட்டிற்கு வர ஆரம்பிப்பார் , ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னவர் கையில் பெண் வீட்டாருக்கு எங்கே என்னென்ன இருக்கு என்ற முழு பட்டியலும் இருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக அட்டை உறிஞ்சுவது போல பெண்ணை வச்சு எல்லாத்தையும் ஆட்டைய போடுவார், எல்லாவற்றையும் உறிஞ்சியதற்கு பின் அடுத்தது அதுதான் நான்கை ஒரேநேரத்தில் வச்சு ஓட்ட மார்க்கத்தில் இடமிருக்கே , வெளியில் சீதனம் வாங்காமல் கலியாணம் முடிச்சவன் என்ற கெத்து உள்ள உறிஞ்சவேண்டியதை உறிஞ்சும் முடிச்சாச்சு. இதுதான் மகா மொள்ளமாரி சீதனம் 
இதில் நானா மார்கள் எக்ஸ்பர்ட்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.