Jump to content

கோட்டாபய அரசில் இன்னும் பலரிற்கு சர்வதேச தடைகள் வரும்! எம்.ஏ.சுமந்திரன் எச்சரிக்கை


Recommended Posts

 

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களிற்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததாலேயே, சவேந்திர சில்வா மீதான தடையை அமெரிக்கா விதித்தது.

அமெரிக்காவை பின்பற்றி ஏனைய நாடுகளும் தடைகளை விதிக்குமென எதிர்பார்க்கிறோம்.

ஒருவருக்கல்ல, இன்னும் பலரிற்கு தடைகள் வரலாமென எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

யாழில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்

“ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை விலகுவதால் வலுவிழக்காது. இந்த தீர்மானங்கள் இலங்கையும் இணை அனுசரணை வழங்கியதால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஏற்கனவே இலங்கை எதிர்ப்பு தெரிவித்தபோதும், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை எதிர்த்ததால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இலங்கை எதிர்த்தது என்பதால், அவை வலுவிழக்கவில்லை.

2014ம் ஆண்டு வாக்கெடுப்பினால் நடத்தப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச விசாரணை நடத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கை எதிர்ப்பு தெரிவித்தபோதும், சர்வதேச விசாரணை நடந்து முடிந்து, அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

நாம் ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை விலகலாம். மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் அரசுகளை கட்டுப்படுத்தாது.

அதனால் விலகுகிறோம் என சொல்லத் தேவையில்லை. அதற்கு அர்த்தம் கிடையாது. நாம் ஒத்துழைக்க மாட்டோம் என குறிப்பிடலாம்.

அரசாங்கம் இப்படி நடக்கலாமென எதிர்பார்த்து சில நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். அரசு அந்த அறிவித்தல் விடுத்தால் என்ன செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைக்க மாட்டோம் என இலங்கை சொன்னால், தீர்மானத்தின் உண்மையான நிலைப்பாட்டை- சிங்கள மக்களும் புரியும் விதமாக வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுள்ளோம்.

இலங்கை தீர்மானத்தை முன்னெடுக்கும் 5 நாடுகளும் சேர்ந்து எழுத்து மூலமாக கூட்டறிக்கையை வெளியிடுவதாக சொல்லியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நாடு பொறுப்பெடுத்த விடயங்களை செய்யாவிட்டால் அடுத்தது என்னவென்ற கேள்வியுள்ளது.

புதிய அரசு பிரேரணையுடன் ஒத்துழைக்க மாட்டோம் என கூறியதால், மாற்று வழிகள் பற்றியும் பேசியுள்ளோம். முன்னாள் ஆணையாளர் இளவரசர் செய்ட் சில மாற்று வழிகளை பரிந்துரைத்துள்ளார்.

அதிலொன்றாக, உலகளாவிய நியாயாதிக்கத்தை உறுப்பு நாடுகள் பிரயோகிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அமெரிக்கா தற்போது சவேந்திர சில்வாவின் பயணத்தடை மூலம் செய்துள்ளது.

அதை பின்பற்றி ஏனைய நாடுகளும் பலருக்கு தடை விதிக்குமென நம்புகிறோம் என்றார்.

https://www.tamilwin.com/politics/01/239293?ref=home-feed

Link to comment
Share on other sites

ஐ.நா.வின் இந்த தீர்மானத்தில் இருந்து ஒரு 'சுதந்திர நாடு' விடுபட முடியும். 

ஆனால், சர்வேதேச குற்றவியல் நீதிமன்றில் (International Criminal Court) இருந்து விடுபட முடியாது. 

உங்களால் (கூட்டமைப்பால்)  அதை செய்ய முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டதரனி இன்னும் அரசியலில் ஈடுபடுகின்றாராம்...

Link to comment
Share on other sites

கூட்டமைப்பின் கூச்சலில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றவாவது கோத்தாவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.