Jump to content

பள பள அழகு தரும் பப்பாளி!


Recommended Posts

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

இப்பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.

வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

முகம் பளபளப்பாக மாறணுமா?

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

பப்பாளி பழத்தை வெட்டி கூழாக்கிக் கொள்ளுங்கள். இந்த கூழில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மட்டி- அரை டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.

இதனை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும். மென்மை கொஞ்சம் கூட இருக்காது. இதனால் சருமம் அழகற்றதாக மாறிவிடும்.

இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.

எப்படி என்கிறீர்களா?

பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், வெகு žக்கிரமே முகம் மென்மையானதாக மாறி விடும.

கருவளையமா?

ஒரு சில பெண்களின் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட கருவளையம், மற்றும் கன்னத்தில் கருமை படர்தல், கன்னத்தில் கருந்திட்டு என்று கருமை தோன்றிய பகுதிகளை மாற்றி இயற்கை அழகை மெருகூட்டி வருகிறது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

சோற்றுக்கற்றாழை இலை ஒன்றின் ஜெல்லுடன் பப்பாளி கூழ்- ஒரு டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து, இது நன்றாக காய்ந்ததும் தண்­ரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை இப்படி செய்து பாருங்கள். கருப்பு மாயமாகி இருப்பதை காண்பீர்கள்.

சிவப்பழகு வேண்டுமா?

பெரும்பாலான பெண்கள் சிவப்பழகைத்தான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டியது இதுதான்...

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.

அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!

இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

வெண்பிஞ்சு பாதங்கள்!

பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.

உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்.

எனக்கு யாராவது பப்பாளிபழம் வாங்கி அனுப்பிவிடுங்கோ

:o :P

Link to comment
Share on other sites

முல்தானி மட்டி-

இது என்ன யம்மு?? :o

Link to comment
Share on other sites

இது என்ன யம்மு?? :o

சமயலறைல வளர்ந்த தூயாக்கே தெரியலைனா :P

Link to comment
Share on other sites

இது என்ன யம்மு?? :o

யாருக்கு தெறியும் சுட்டு போட்டது மட்டும் தான் நான் டவுட் ஏதாவது இருந்தா தங்காவிட்ட கேளுங்கோ

தூய்ஸ் என்ன பூசி பார்கிற பிளானோ

:lol:

சமயலறைல வளர்ந்த தூயாக்கே தெரியலைனா :P

அது தானே சமையல் என்றாலே என்னவேன்றே எனக்கு தெறியாது

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு எப்படி இப்படி எல்லாம்

:lol:

Link to comment
Share on other sites

பப்பாளியில் இவ்ளோ பலன் இருக்கு. அம்மாவும் சொல்லுவா. ஆனால் எனக்குத்தான் பிடிப்பதில்லை. <_<

எனக்கும் முல் தானி பட்டி தெரியவில்லை...அகராதியிலும் இல்லை.

Link to comment
Share on other sites

பப்பாளியில் இவ்ளோ பலன் இருக்கு. அம்மாவும் சொல்லுவா. ஆனால் எனக்குத்தான் பிடிப்பதில்லை. :huh:

எனக்கும் முல் தானி பட்டி தெரியவில்லை...அகராதியிலும் இல்லை.

சகி அக்கா பப்பாளியில கேசரி செய்யலாமா

:P

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்ன நக்கலா? அக்கா எண்டொரு மரியாதை இல்லாம போச்சு என்ன :angry:

தெரியாததை கேட்பது நக்கலல்லவே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு தெறியும் சுட்டு போட்டது மட்டும் தான் நான் டவுட் ஏதாவது இருந்தா தங்காவிட்ட கேளுங்கோ

தூய்ஸ் என்ன பூசி பார்கிற பிளானோ

:D

சுடுறது நீங்க டவுட் கிளியர் பண்ணுறது நானா??? :lol::lol:

எனக்கும் முல்தானி மட்டி என்டால் என்னென்டு தெரியாது :D

Link to comment
Share on other sites

என்ன நக்கலா? அக்கா எண்டொரு மரியாதை இல்லாம போச்சு என்ன :angry:

அக்கா நான் நல்ல பிள்ளை இந்த குட்டிமாமாமா தான் என்னை கெடுகிறார்

:P

தெரியாததை கேட்பது நக்கலல்லவே :lol:

உண்மையவோ மாமா

:P

சுடுறது நீங்க டவுட் கிளியர் பண்ணுறது நானா??? :lol::lol:

எனக்கும் முல்தானி மட்டி என்டால் என்னென்டு தெரியாது :lol:

ஆமாம் தங்கா நீங்க தான் டவுட் கிளியர் பண்ண வேண்டுமுங்கோ :P

உங்களுக்கும் தெறியாதோ :D

Link to comment
Share on other sites

''முல்தானி மட்டி " நான் நினைக்கின்றேன் ஒரு விதமான தாளையின் மடலோ?பிள்ளைக்கற்றாலை?

சரி விடுங்க இது பெண்கள் சமாச்சாரம் நாம் ஏன் மண்டையைப் போட்டுக் குழப்புவான்?

Link to comment
Share on other sites

''முல்தானி மட்டி " நான் நினைக்கின்றேன் ஒரு விதமான தாளையின் மடலோ?பிள்ளைக்கற்றாலை?

சரி விடுங்க இது பெண்கள் சமாச்சாரம் நாம் ஏன் மண்டையைப் போட்டுக் குழப்புவான்?

நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முயன்றமைக்கு நன்றிகள். ஒரு இந்திய தமிழ் உறவை கேட்கலாமோ என தோன்றுகின்றது.....இப்படியானவற்

Link to comment
Share on other sites

எனது பதில் தவறு என்று மனம் நோகாமல் பதில், நல்ல பண்பு, பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முயன்றமைக்கு நன்றிகள். ஒரு இந்திய தமிழ் உறவை கேட்கலாமோ என தோன்றுகின்றது.....இப்படியானவற்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.