Jump to content

கனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர்


colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் முதலீடு என்று வரும்போது, செயலைவிடப் பேச்சுத்தான் அதிகமாகவிருக்கிறது. ஆனால் சுகந்தன் சண்முகநாதனின் செயல் வித்தியாசமானது.

ஒரு பாடசாலைப் பதின்ம வயதினனாக, 25 வருடங்களுக்குமுன் சிறீலங்காவின் போர்ச்சூழலிலிருந்து தப்பியோடிய சுகந்தன் 2014ம் ஆண்டு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் கனடாவிலிருந்து தன் மண்ணுக்குக்கு மீண்டு வந்த செயல் மிகவும் வித்தியாசமானது.

பல தொழில்களை ஆரம்பித்தும், பலவற்றை மீட்டெடுத்தும் சாதனைகள் புரிந்துவருகிறார் சுகந்தன். நட்பற்ற சூழலில் கடினமான பாடங்களைக் கற்றுத் தேர்ந்து உள்ளார்ந்த வளங்களின் துணையுடன் தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்ட ஒரு தொழில் நிபுணரின் கதை இது

ஆரம்பம்
Suganthan2.jpg சுகந்தன் சண்முகனாதன்

1973 இல், ஒரு வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தில் பிறந்தவர் சுகந்தன். 1983 இல் தந்தையார் இயற்கை மரணமடையத் தாயாரின் பொறுப்பில் ஒரு தம்பியுடனும் இரு தங்கைகளுடனும் வசதிகள் குறைவேதுமின்றி வாழ்ந்தவர். போர் எல்லாவற்றையும் குழப்பியடித்தது. போர் ஏற்கெனவே தூக்கி எறிந்த மாமாவின் உதவியுடன் 1989 இல், தனது 16 வயதில், கனடா சென்றார்.

கனடாவில் இருபத்தைந்து வருடங்கள்

தாயின் சேலைக்குள் வளர்ந்த சுகந்தனின் வாழ்க்கை ரொறோண்டோவில் ஓய்வற்ற வேலை என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது. பாடசாலை, பகுதிநேர கோப்பை கழுவுதல், கிரிக்கெட் என்று நேரத்தை வசப்படுத்தித் தன் வாழ்வைச் சிரமத்தின் மத்தியிலும் வாழ்வாங்கு வாந்தார். அதிகாலை 5:00 முதல் அதிகாலை 2:00 மணிவரை அவரது நாள் பயனுடனே சுழன்றது. பயணத்தின் போது பள்ளி வேலைகளைச் செய்தேனும் நல்ல புள்ளிகளோடு படிப்பை முடித்தார். உயர்கல்விக்குப் பணம் போதாது. இரவுக் கல்லூரியும், பகலில், வார இறுதி நாட்களில் வேலையுமென எப்படியோ கல்வியோடு வாழ்க்கையும் உயர்ந்தது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு வாரம் முழுவதும் நான்கு வேலைகளாற் பிரித்தெடுக்கப்பட்டன. தளபாடத் தொழிற்சாலை வேலை முழு நேரமாகியது. அதுவே சுகந்தனது வாழ்வுக்கும் ஏணியானது

இரவுக் கல்லூரியில் எலெக்ட்றோணிக் எஞ்சினியரிங்க் கற்றாலும் ஒழுங்காக வகுப்புக்களுக்குப் போவதில்லை. நண்பர்களின் குறிப்புகளை வாசித்து அவர்களை விட மேலதிகமான புள்ளிகளைப் பெற்றார். இருப்பினும் அவர்களைப் போல் வருடம் 30,000 கனடிய டொலர்களை அவர் சம்பாதிக்க விரும்பவில்லை. அவர் கல்வி கற்கும்போதே வருடம் 80,000 கனடியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அது சுகந்தனின் கடினமும், விசுவாசமும் கொண்ட உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி. “கல்வி முக்கியமானது தான். ஆனல் அதை விரிவுரை மண்டபங்களில் உட்கார்ந்துதான் கற்க வேண்டுமென்பதில்லை” என்கிறார் சுகந்தன்.

சுகந்தனது தளபாடத் தொழிற்சாலை நிர்வாகம் அவரது திறமையை விரைவிலேயே இனம் கண்டு அவருக்குப் பதவியுயர்வும் கொடுத்தது. பகுதி நேர வேலைகள் அவசியமில்லாமற் போனது.

வாடிக்கையாளர்களைச் சந்திக்கச் செல்லும் போது சுகந்தனுடன் அவரது வெள்ளை இன மேலதிகாரியும் போகவேண்டியிருந்தது. மண் நிறத் தோலுடையவருடன் வணிகம் செய்ய வாடிக்கையாளர்கள் விருப்பப்படாமல் போகலாம் என்பதற்காகவிருக்கலாம்.

வெகு விரைவிலேயே நிறுவனமும், வாடிக்கையாளரும் சுகந்தனது திறமையைக் கண்டறிந்து கொண்டனர். நிறுவனம் அவருக்கு அவரது மேலதிகாரிக்கு மேலான பதவியை வழங்கியது. முழுக் கனடாவுக்கும் தரக் கட்டுபாட்டு அதிகாரியாகவும் (Quality Control) தொடர்ந்து உலக முழுவதுக்குமான அதிகாரத்தையும் நிறுவனம் அவருக்கு வழங்கியது. சிறிது காலத்தில் நிறுவனத்தின் முக்கிய ‘சிக்கல் தீர்க்கும்’ நிபுணராக (company trouble-shooter) ஆகப் பதவியுயர்த்தப்பட்டதுமல்லாமல் 100,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையில் அவருக்கு மூன்று அலுவலகங்களைக் கொடுத்ததன் மூலம் சுதந்திரமாகப் பணிசெய்யும் வசதியையும் நிறுவனம் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

சிக்கல் தீர்ப்பது என்பது சுகந்தனுக்குக் கைவந்த கலை. அது தொடர்பான ஒரு கதையை அவர் விரும்பிச் சொல்கிறார். ஒரு தடவை நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுகந்தனைத் தேடி வந்தார். நிறுவனத்தின் 50% மான மரப் போர்வைத் (wood veneer) தளபாடங்கள் நிறம் மாறுவதால் வாடிக்கையளர்களால் திருப்பியனுப்பப் படுகின்றன எனக் குறைபட்டுக்கொண்டார். சுகந்தன் அதைப் பார்த்துவிட்டு “இது இயற்கையான நிகழ்வு. போர்வையாகப் பாவிக்கப்பட்டது உண்மையான மரம், செயற்கையான பிளாஸ்டிக் அல்ல என்பதையே இது உணர்த்துகிறது எனக்கூறி இதையே வாடிக்கையாளரிடமும் சொல்லுங்கள்” எனக்கூறினார். இதன் பிறகு வாடிக்கையாளரும் மகிழ்ச்சியடைய தளபாடங்கள் திருப்பி அனுப்பப்படுவதும் நின்றுவிட்டது.

சுகந்தன் இன்நிறுவனத்தில் 20 வருடங்கள் பணி புரிந்தார். இக்காலத்தில் கனடாவிலும், அமெரிக்காவிலும் சொத்துக்களில் முதலீடு செய்தார். தாயையும் ஒரு தம்பியையும் கனடாவுக்கு அழைக்க மற்றத் தம்பி அகதியாக ஐரோப்பாவுக்கு ஓடத் தங்கை மட்டும் திருமணம் முடித்து யாழ்ப்பாணத்திலேயே தங்கி விட அவரது கடமைகள் ஓரளவு திருப்தியுற்றன.

யாழ்ப்பாணம் திரும்புதல்

25 வருடங்களுக்குப் பிறகு, 2014 இல் சுகந்தன் யாழ்ப்பாணம் திரும்பினார். மனைவிக்கு விருப்பமில்லை எனினும் அவரது கனவு வேறாக இருந்தது. சரி வராவிட்டால் திரும்பி வரலாம் என்ற வாக்குறுதியோடு யாழ்ப்பாணம் சென்றார் சுகந்தன். ஏன் யாழ்ப்பாணம் திரும்பினாய் என்று கேட்டதற்கு “எனது பிள்ளைகள் தமது வேர்களை அறிய வேண்டும்” என்றார். மகன் தற்போது கனடாவில் பல்கலைக்கழகத்தில் பயில்கிறார். மகள் யாழ்ப்பாணத்தில் படிக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர்

சுகந்தன், தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேச, எழுதக்கூடியவர், நேரடியாகப் பேசுபவர், கவனமாகக் கேட்பவர், விழிகளை நேரே சந்தித்து அளவளாபுபவர், மொத்தத்தில் சகலரையும் இலகுவில் ஈர்க்கக்கூடியவர். ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராவதற்குரிய அத்தனை அம்சங்களையும் கொண்ட ஒருவர் சுதந்திரமான வியாபாரியாக விரும்புவது இயற்கையே.

ஒரு தலைமுறை அவகாசம் கொடுங்கள் யாழ்ப்பாணம் புளோரிடா போல வந்துவிடும். இளையவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும், வல்லுனர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்கும், முதியவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலமாக மாறும்

சுகந்தன் சண்முகநாதன்

சுகந்தனது முதலாவது தொழில் முயற்சி தன் தங்கையின் கணவருடன் சேர்ந்து ‘றிச் லைஃப்’ (Rich Life) என்ற நிறுவனத்தின் வடமாகாண விநியோகிஸ்தராகியது. ‘றிச் லைஃப்’, முன்னணி பாலுணவுப் பொருட்களின் தயாரிப்பாளராவர். நான் சுகந்தனைச் சந்திக்குமுன்பே இப் பொருட்களை வாங்குபவன். வட மாணத்தின் சகல கடைகளிலும் கிடைக்கும் இப் பொருட்கள் கிடைக்கின்றன.

இதன் பிறகு சுகந்தனின் கவனம் வரணி பனஞ் சாராயக் கூட்டுறவுச் சங்கத்தின் பக்கம் திரும்பியது. போர்க்காலத்தில் இலாபகரமாக நடத்தபட்ட கூட்டுறவுச் சங்கங்கள் பல தற்போது மூடப்படும் நிலையில் இயங்குவது பற்றிச் சுகந்தன் அறிந்திருந்தார். தங்களது வேலையாட்களுக்குத் தொழில்களை வழங்கியது மட்டுமல்லாது, ஆயிரக் கணக்கான கள்ளிறக்கும் தொழிலாளர்களையும் இச் சங்கங்கள் வாழவைத்துக் கொண்டிருந்தன. குழந்தைப் பள்ளிகள் முதல் பல நல்ல காரியங்களுக்கு நிதி உதவியும் புரிந்து வந்தன. போரின் முடிவு இவற்றில் சிலவற்றையும் முடித்துக்கொண்டது, சில ஊசலாடிக்கொண்டிருந்தன. 2009 இற்குப் பிறகு தென்னிலங்கை நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் வட மாகாணச் சந்தைக்காகப் போட்டியிட்டன. போர்க்காலத்தில், பலவகைப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டுறவுச் சங்கங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் அதிக முன்னேற்றங்களைச் செய்யமுடியாமல் போனது. பண்டங்களின் தரங்களை உயர்த்தவோ, அவற்றின் லேபல்களையோ அல்லது பெட்டிகளையோ கவர்ச்சியான தரத்துக்கு வைத்திருக்கவோ முடியவில்லை.

OldNewBottle.jpg வரணி கூட்டுறவுச் சங்கத் தயாரிப்புகள்

வரணி வடிப்புத் தொழிற்சாலை (distillery) வீதியில் வீசப்பட்ட போத்தல்களைத் திரும்பவும் பாவித்தது. சுடலைகளில் கவலை தீர்க்கக் குடிப்பவர்கள் வீசும் வெற்றுப் போத்தல்கள் பாவனைக்கு வந்தன. லேபல்கள் கைகளால் ஒழுங்கீனமாக ஒட்டப்பட்டன. சில கிழிந்தவாறிருந்தன. கள்ளின் தரம் போத்தலுக்குப் போத்தல் வித்தியாசமாகவிருந்தது. உற்பத்திக்கான மூலப் பொருட்கள் தென்னிலங்கையிலிருந்து ஒழுங்காகப் பெறப்படாமையால் தயாரிப்பு தடைபடுவது வழக்கமாகவிருந்தது. மொத்தத்தில் சீரற்ற முகாமைத்துவம் காரணமாகப் பண்டத்தின் விற்பனையில் தளர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் தென்னிலங்கைக் கள்ளுற்பத்தியில் பாவிக்கப்படும் மூலப்பொருட்களின் வேறுபாடு காரணமாக அவற்றின் விலைகளுடன் வட மாகாணக் கள்ளின் விலை இலாபகரமானதாக இருக்கவில்லை.

கூட்டுறவுச் சங்கமாக இருந்ததால் வரணி கள்ளுற்பத்தித் தொழிலை வாங்கச் சுகந்தனால் முடியவில்லை. ஆனால் அப்பண்டத்தின் ஏக விநியோகிஸ்தன் என்ற வகையில் அதன் தரத்தை ஏற்றுமதித் தரத்துக்கு உயர்த்த சுகந்தனால் முடிந்தது. பிரித்தானியா, கனடா, இத்தாலி போன்ற பல நாடுகளிலுள்ள வடிப்புத் தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்குள்ள தொழில்முறைகளைக் கற்றுக்கொண்டார்.

போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை வடமாகாணத்தில் நிறுவ முயற்சித்தாராயினும் அதன் முதலீடு அதிகமாக இருந்ததனால் அம் முயற்சியை விட்டுவிட்டார். இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றைச் செய்து, தென்னிலங்கையில் அரச முதலீட்டுச் சபையின் உதவியுடன் அவர்கள் ஆரம்பித்த போத்தல் தயாரிக்கும் நிறுவனமொன்றின் வடமாகாண விநியோகஸ்தராகவும் ஆகிக்கொண்டார். இதன் மூலம் வரணி தொழிற்சாலைக்கு தடங்கலில்லாத போத்தல் விநியோகமும் கிடைத்தது.

முதலீட்டுச் சபையின் ஆதரவுடன் தென் கொரிய நிறுவனமொன்றினால் தென்னிலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றிலிருந்து பெட்டிகள், லேபல்கள், மூடிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டார். அத்தோடு வடமாகாணத்தின் இதர நிறுவனங்களுக்கான விநியோகங்களையும் சேர்த்து ஒன்றாகத் தனது தேவைகளைச் (order) சமர்ப்பிப்பதன் மூலம் அவருடைய வாங்கு திறன் பன்மடங்கு அதிகரித்தது. சுகந்தன் தென் கொரிய நிறுவனத்தின் மிக முக்கிய வாடிக்கையாளராக முடிந்தது. மூலப் பொருட்கள் உரிய நேரத்தில் தொழிற்சாலையை வந்தடைந்தன.

இவற்றைச் செய்ததன் மூலம் சுகந்தன் கள்ளுற்பத்திக்குரிய போத்தல், லேபல், பெட்டி அத்தனையையும் தன் ஒருங்கிணைந்த நிறுவனங்களுக்குள்ளேயே வைத்திருக்க முடிந்தது.

சுகந்தனின் வியாபார அபிவிருத்தியில் இன்னுமொரு அதிர்ஷ்டமும் வந்து ஒட்டிக்கொண்டது. யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு மருத்துவர்களின் மாநாட்டுக்கு பதநீர் வழங்குவதற்கான கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. பதநீர், பனையிலிருந்து எடுக்கப்படும் போதையூட்டாத ஒரு பானம். தாய்ப் பாலுக்குச் சமமான போஷாக்கு நிறைந்த ஒரு பானம். வரணி கூட்டுறவுச் சங்கத்தில் இது உற்பத்தி செய்யப்படுவதில்லையாயினும் சுகந்தன் பதனீர் தயாரிக்கும் இன்னுமொரு கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டுபிடித்தார்.

பதநீர் வருடத்தில் 3-4 மாதங்களுக்கே உற்பத்தியாகும். ஆனாலும் பதப்படுத்தும் பதார்த்தங்கள் (preservatives) எதையுமே பாவிக்காமல் பதநீரை ஒரு வருடத்துக்குப் பழுதாகாமல் போத்தலில் அடைத்துவைக்கக் கற்றுக்கொண்டார் சுகந்தன். சென்ற வருடம் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட பதநீர்த் தயாரிப்புகளை யாழ்ப்பாணத்தின் பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு விநியோகித்து அமோக வெற்றியையும் பெற்றிருக்கிறார். தற்போது ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற கண்டங்களின் சந்தைகளைக் குறிவைத்து விநியோகிஸ்தர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.

ToddyBottles.jpg கள்ளு
வடக்கின் பனைப் பொருளாதாரம்

பனம் தொழில் வடக்கிற்கு இன்றியமையாதது. ஒரு பருவ காலத்தில் கள்ளுத் தொழிலாளி நாளொன்றுக்கு 5000 ரூபாய்களைச் சம்பாதிப்பார். பருவ காலம் 10 மாதங்களுக்கு நீடிக்கும். போதையற்ற பதனீர் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. காரைநகரில் பதநீரை ஒழுங்காகக் குடித்துவந்த மூதாட்டி ஒருவர் 104 வயதுவரைக்கும் ஆரோக்கியமாக வாழ்ந்ததாகப் பேசிக்கொள்வார்கள். அவருடைய மரணச் சடங்கில் 600 பேரப் பிள்ளைகளும், பூட்டப் பிள்ளைகளும் கலந்துகொண்டார்களாம். முறையாகச் செயற்பட்டால் பனம் தொழில் போதுமானவர்களுக்கு வேலை வாய்ப்பையும், அரசாங்கத்துக்கு வரியையும் தருவதன் மூலம் வடமாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய ஒன்று.

வடக்கின் நோக்கு

சுகந்தன் இதர தொழில் முயற்சிகளிலும் கண் வைத்திருக்கிறார். கண்ணாடிகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் மறுசுழற்சி (recycling) செய்யும் முயற்சி அது. வேறு தொழில் முயற்சிகளையும் காலப்போக்கில் எடுத்துக்கொள்வாரென நம்புவோம்.

புலம்பெயர்ந்தவர்கள் மீண்டு வந்து தொழில்துறைகளை ஆரம்பிப்பது வழக்கமான ஒன்றல்ல. சுகந்தன் ஒரு தனி உதாரணம். அவர் ஒரு தர்மஸ்தாபனமோ அல்லது மூளைவள ஆலோசகரோ அல்ல. அவர் தான் கற்ற வட அமெரிக்கத் திறமைகளையும் அனுபவங்களையும் கொண்டு வட இலங்கையின் நலிவுற்றுப் போகும் தொழில்களை மேம்படுத்தியும், புதிய தொழில்களை ஆரம்பித்தும் முன்னுதாரணபுருஷராகத் திகழ்கிறார். அவரது உள்ளார்ந்த பார்வையும், வடக்கிற்கு அப்பாலும் ஏற்படுத்தும் தொடர்புகளின் மூலம் புதிய பண்டங்களை உருவாக்கி சர்வதேச சந்தைகளில் விற்க முயற்சிக்கிறார்.

வடக்கு தூங்குகிறது, சட்டங்களற்றது, அதிகம் பின்தங்கியது, அதிகம் மெத்தனப் போக்குடையது, அதிகம் சோம்பேறிகளைக் கொண்டது, அங்கு முதலிடுவதில் பிரயோசனம் கிட்டாது என்றெல்லாம் கூறுபவர்களைத் தவறு எனச் சொல்வதற்கு சுகந்தன் ஒரு உதாரணம். நல்ல திட்டத்துடனும், நல்ல முகாமைத்துவத்துடனும் வடக்கில் பாரிய பொருளாதார வெற்றிகளை அடையலாம்.

வடக்கிற்கான நோக்கு (vision) என்னவாயிருக்குமெனச் சுகந்தனிடம் கேட்டபோது கேட்டபோது, “ஒரு தலைமுறை அவகாசம் கொடுங்கள் யாழ்ப்பாணம் புளோரிடா போல வந்துவிடும். இளையவர்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும், வல்லுனர்கள் புதிய தொழில்களை ஆரம்பிக்கும், முதியவர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்கும் நிலமாக மாறும்” என்றார்.

ஒரு தலைமுறை? சுகந்தனைப் போல ஐம்பது பேர்கள் இருந்தால் வெகு முன்பதாகவே அது சாதிக்கப்பட்டுவிடும்.

https://marumoli.com/கனடாவிலிருந்து-கள்ளுத்-த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி வெற்றி பெறவாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

வாழ்த்துக்கள் நன்பா

நண்பா என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

கள்ளுக்கு நண்பனா அல்லது சுகந்தனுக்கு நண்பனா ?😜

Link to comment
Share on other sites

எம்மவர்கள் ஒருவரின் வெற்றியை 'காப்பி' அடிக்கும் 'பண்பை' கொண்டவர்கள். அதை இந்த விடயத்திலும் (ஒரு பாடசாலைப் பதின்ம வயதினனாக, 25 வருடங்களுக்குமுன் சிறீலங்காவின் போர்ச்சூழலிலிருந்து தப்பியோடிய சுகந்தன் 2014ம் ஆண்டு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் கனடாவிலிருந்து தன் மண்ணுக்குக்கு மீண்டு வந்த செயல் மிகவும் வித்தியாசமானது. ) கடைப்பிடிக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

மிக முக்கியமான தொழில் துறை விற்பனர். மிக மிக முக்கியமான கட்டுரை. சுகந்தனுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும். 

1970 பதுகளில் சுகந்தனைப்போல வெளிநாடுகளில்/ உள்ளூரில்  படித்த பல இளைஞர்கள் பரீட்ச்சார்த்த தொழில் உற்பத்தி  முயற்ச்சிகளில் ஈடுபட்டனர்.  சிலர்ஓடுகள் சேகரித்து மீழ் சுளற்ச்சி போத்தல் தொழிற்சாலை, தண்ணீர் பம்பு தொழிற்சாலை. பிளாஸ்ரிக் படகு மீன்பிடி வலை உற்பத்தி,   ஜாம் தொழிற்சாலை, றால் பதனிடும் தொழிற்சாலை,  வைன், நெல்லிரசம் அலுமினிய தொழிற்சாலை இனிப்பு உற்பத்தி பனம்சாராய தொழில் என யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகிற  சேகரிக்கக்கூடிய பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் தொழிலை வெற்றிகரமாக ஆரம்பித்தார்கள். நானே யாழ்ப்பாணம் விவசாய அடிப்படை தொழி நகரமாக வளர்கிறது என எழுதியிருக்கிறேன். போரில் அவை யாவும் கைவிடப்பட்டன. நமது ஆய்வாளர்கள் போரால் கைவிடபட்ட பொருளாதர முன்னெடுப்புகள் பற்றியும் ஆராயவேண்டும்.  அவை பற்றி ஆராய்ந்தால் பல சுகந்தன்கள் உருவாக வாய்ப்பு கிட்டும்.  

யாழ் இத்தகைய பயனுள்ள முயற்சிகளை ஊக்குவிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, poet said:

யாழ் இத்தகைய பயனுள்ள முயற்சிகளை ஊக்குவிக்குமா?

நிச்சயமாக ஊக்கவிக்காது.மறுவளமாக அவருக்கு பைத்தியகாரன் பட்டம் கட்டும்.எப்ப வெளிநாடு போகலாம் என்டு காத்துக்கொன்டு இருக்கும் சனத்திடம் வேறு எதை எதிர் பாக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதனீரை போத்தலில் அடைக்கிறார் என்றாங்கள்.. பிறகு கள்ளுன்னு செய்திக்கு தலைப்புப் போடுறாங்கள்.

வழமையாக நம்மவர்கள் செய்யும்.. சாதாரணத்தையும் பிரமாண்டமாக்கிக் காட்டும்.. நிறைய வெட்டிப் பந்தாக்கள் செய்தியில் அடக்கப்பட்டிருந்தாலும்.. 

சூழலுக்கு ஏற்ப வளங்களைப் பாவித்து உள்ளூர் மக்களும் பயன்பெற உழைப்பது வரவேற்க வேண்டிய விடயம் தான்.

ஆனால்... ஒரு நெருடல்.. போர்காலத்தில்.. ஒன்றுமே பண்ண விடல்ல.. கட்டுப்பாடுகள் என்று சொல்லுறீங்க.. அதே போர்காலத்தில் தான் தோலகட்டி.. நெல்லிப்பழரசம் புதிய வடிவில்.. பழைய சுவையில் சந்தையை சுவீகரித்ததை மறந்தது எப்படியோ தெரியவில்லை. அதுவும் சொறீலங்கா.. சிங்கள அரச வள.. வழங்கல்.. தடைகள் மத்தியிலும். 

அதுமட்டுமல்ல.. போர்காலத்தில் தான் குறுகிய காலத்தில் பயன் தரத்தக்க.. தென்னை.. பப்பாளி.. வாழை.. மா..  மாதுளை.. என்று பல வகை தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில்.. தமிழீழப் பொருண்மிய மேப்பாட்டுக் கழகத்தின் கண்டுபிடிப்புக்களும் உள்ளடங்கும். இப்போதும்.. இது குறித்து பொ ஐங்கரநேசன் போன்றவர்களிடம் கேட்டறியலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.