Jump to content

ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார்


Recommended Posts

ஆர்சனல், யுனைடட் அணிகளுக்கு வெற்றி: வெளியேற்றப்பட்டார் நெய்மார்

 
Untitled-1-461-696x464.jpg
 

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

மன்செஸ்டர் யுனைடட் எதிர் வட்போர்ட்

ப்ரூனோ பெர்னாண்டோ தனது புதிய கழகத்திற்காக முதல் கோலை பெற்ற நிலையில் வட்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் மன்செஸ்டர் யுனைடட் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்டியது. 

இதன்மூலம் முதல் நான்கு இடங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில்  5 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் மன்செஸ்டர் யுனைடட் 3 புள்ளிகளாலேயே பின்தங்கி உள்ளது. 

மறுபுறம், கடந்த டிசம்பரில் மன்செஸ்டர் யுனைடட்டை வீழ்த்தியபோதும் வட்போர்ட் இந்த தோல்வியினால் தகுதி இழப்பு நிலையான 19 ஆவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த நான்கு போட்டிகளில் அந்த அணி எந்த வெற்றியையும் பதிவுசெய்யவில்லை.       

எனினும் இந்தப் போட்டியை மன்செஸ்டர் யுனைடட் தடுமாற்றத்துடனேயே ஆரம்பித்தது. போட்டியின் ஆரம்பத்திலேயே வட்போர்ட் முன்கள வீரர் ட்ரோய் டீனிக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அதனை அவர் தவறவிட்டார். 

இந்நிலையில் 42 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்குள் வட்போர்ட் கோல்காப்பாளர் பென் பொஸ்டர் கீழே வீழ்த்தியதால் கிடைத்த ஸ்பொட் கிக்கை பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார். பெர்னாண்டஸ் கடந்த ஜனவரியில் ஸ்போர்டிங் லிபோன் அணியில் இருந்து மன்செஸ்டர் யுனைடட்டிற்கு 47 மில்லியன் பௌண்ட்களுக்கு ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.      

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் வட்போர்ட் சார்பில் டீனி பந்தை மன்செஸ்டர் யுனைடட் வலைக்கு செலுத்தியபோதும் அது வீடியோ நடுவர் உதவி நாடப்பட்டது. அப்போது பந்து கிரேக் டோசனில் கைகளில் பட்டது உறுதியானதை அடுத்து கோல் நிராகரிக்கப்பட்டது.  

இந்நிலையில் 58 ஆவது நிமிடத்தில் அன்தோனி மார்சல், யுனைடட் சார்பில் இரண்டாவது கோலை புகுத்தினார். தொடர்ந்து போட்டி முடிவதற்கு 15 நிமிடங்கள் இருக்கும்போது மேசன் கிரீன்வூட் மேலும் ஒரு கோலை பெற்று யுனைடட்டின் வெற்றியை இலகுவாக்கினார்.   

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் செல்சியை 2-0 என தோற்கடித்த யுனைடட் அணி இந்தப் பருவத்தில் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெறுவது இது மூன்றாவது தடவையாகும். 

ஆர்சனல் எதிர் எவர்டன்

பெர்ரி எமரிக் அபுமயங்கின் இரட்டை கோல் உதவியுடன் எவர்டர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சனல் 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. 

போட்டியின் முதல் நிமிடத்திலேயே சிறப்பாக வழங்கப்பட்ட ப்ரீ கிக்கை ஆர்சனல் தடுக்கத் தவறியதால் டொமினிக் கெல்வேர்ட் லுவிஸ் தலையால் முட்டி எவர்டன் அணியை முன்னிலை பெறச் செய்தார். 

ஆரம்ப நிமிடங்களிலேயே காயமுற்ற சீட் கொலசினக்கிற்கு பதில் வீரராக அனுப்பப்பட்ட பதின்ம வயது புகாவோ சகா வந்த விரைவிலேயே பரிமாற்றிய பந்தைக் கொண்டு எட்வர்ட் நிகடியா ஆர்சனல் சார்பில் பதில் கோல் திருப்பினார்.  

இந்நிலையில் அபுமயங் 33 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் ஆர்சனல் போட்டியில் முன்னிலை பெற்றபோதும் ரிச்சார்ல்சன் பதில் கோல் திருப்ப மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.  

முதல் பாதி ஆட்டம் 2-2 என முடிவுற்ற நிலையில் இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்திலேயே நிகொலஸ் பபே உதைத்த பந்தை ஆறு யார்ட் பெட்டிக்கு சற்று வெளியில் நின்று தலையால் முட்டிய அபுமயங் கோலாக மாற்றினார்.  

ஆர்சனல் ஒரு வாரத்திற்குள் நியூகாசில் யுனைடட்டிற்கு எதிராக 4-0 என ப்ரீமியர் லீக் வெற்றி மற்றும் ஐரோப்பிய லீக்கில் ஒலிம்பிக்காவுக்கு எதிராக 1-0 என வெற்றி என்று அடுத்தடுத்து மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது. 

இதன்படி, ஐந்து போட்டிகளில் ஆர்சனல் பெறும் நான்காவது வெற்றி இதுவென்பதோடு 2020இல் தோல்வியுறாத அணியாக நீடித்து வருகிறது. ப்ரீமியர் லீக்கில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கும் ஆர்சனல் சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறும் முதல் நான்கு இடங்களை பிடிக்க ஏழு புள்ளிகளால் பின்தங்கியுள்ளது.  

மறுபுறம் 36 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்தில் நீடிக்கு எவர்டன் கடந்த 24 ஆண்டுகளில் ஆர்சனல் அணியை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் போர்டியுக்ஸ்

போர்டியுக்ஸ் அணியை 4-3 என தோற்கடித்த பரிஸ் செயின்ட் ஜெர்மைன் லீக் 1 புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகள் வித்தியாசத்துடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். 

மார்குயின்ஹோஸ் இரட்டை கோல் பெற எடிசன் கவானி PSG சார்பில் 200 ஆவது கோலை பெற கிலியன் ம்பப்பே 65 ஆவது நிமிடத்தல் மற்றொரு கோலை பெற்றதன் மூலம் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டது. 

இதன்மூலம் PSG 26 போட்டிகளில் 65 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றபோதும் அந்த அணியின் தலைவர் தியாகோ சில்வா காயம் காரணமாக விளையாட முடியாதிருப்பதோடு நெய்மார் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றது அந்த அணிக்கு பின்னடைவாகும்.   

மறுபுறம் போர்டியுக்ஸ் அணி ஹ்வாங் உயி ஜோ, பப்லோ மற்றும் ரூபன் மூலம் கோல்கள் பெற்று கடைசி நிமிடம் வரை எதிரணிக்கு சவால் கொடுத்தது. அந்த அணி தற்போது 35 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தில் உள்ளது.  

http://www.thepapare.com/international-football-roundup-for-23rd-of-february-2020-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
    • இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை. ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎
    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.