Jump to content

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது.


Recommended Posts

 

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றிருக்கின்றது. 

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கே 5 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடிய பின்னர் தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. 

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் அங்கமாக அமைகின்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (21) வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய அணிக்கு வழங்கினார். 

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 68.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக அஜிங்கியா ரஹானே 46 ஓட்டங்களுடன் தனது தரப்பில் கூடிய ஓட்டங்கள் பெற்ற வீரராக மாற, நியூசிலாந்து தரப்பின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான டிம் சௌத்தி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 348 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில், அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 153 பந்துகளுக்கு 11 பௌண்டரிகள் அடங்கலாக 89 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், கைல் ஜேமிசன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் தலா 44 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர். 

தொடர்ந்து, 183 ஓட்டங்கள் பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியினர் மீண்டும் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காண்பித்த மயாங்க் அகர்வால் அரைச்சதம் தாண்டி 58 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

இதேநேரம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் டிம் சௌத்தி 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். 

இந்திய அணியின் மோசமான இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் காரணமாக போட்டியின் வெற்றி இலக்காக 9 ஓட்டங்கள் மாத்திரமே நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர், போட்டியின் வெற்றி இலக்கினை 1.4 ஓவர்களில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காமல் அடைந்தனர். 

இப்போட்டியில் அடைந்து கொண்ட தோல்வி மூலம் இந்திய கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் முறையாக தோல்வியினை பதிவு செய்து கொள்கின்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி தெரிவு செய்யப்பட்டார். இனி, நியூசிலாந்து – இந்திய அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் கடைசியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (29) கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 165 (68.1) அஜிங்கியா ரஹானே 46,  கைல் ஜேமிசன் 39/4, டிம் செளத்தி 49/4

நியூசிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 348 (100.2) கேன் வில்லியம்சன் 89, கைல் ஜேமிசன் 44, ரொஸ் டெய்லர் 44, கொலின் டி கிரான்ட்ஹோமே 43, இஷாந்த் சர்மா 68/5, ரவிச்சந்திரன் அஷ்வின் 99/3

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 191 (81) மயாங்க் அகர்வால் 58, டிம் செளத்தி 61/5, ட்ரென்ட் போல்ட் 39/4

நியூசிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 9/0 (1.4)

முடிவுநியூசிலாந்து 10 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com/india-tour-of-new-zealand-2020-1st-test-roundup-tamil/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

☺️...😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.