Jump to content

கருணா அம்மான் உட்பட எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் - ஆனந்தசங்கரி


Recommended Posts

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG


நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது கட்சி கிழக்கு மாகாணத்தின் களநிலவரங்ளை நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவே இது. இதே காலகட்டத்தில் இங்கு உருவான கிழக்கு தமிழர் ஒன்றியமும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக, கிழக்கு மாகாணத்தில உள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க முன்னணி சம்மந்தமாக ஆச்சரியப்படத்தக்க தவறான கருத்துக்களை ஒரு சிலர் தெரிவித்ததாக  சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்படி முன்னணி உருவாக்குதல் சம்மந்தமாக கருணா அம்மானுடன் நாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

எம்முடன் இணைய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம்.

இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76301

Link to comment
Share on other sites

வரும் வாய்ப்பை நழுவவிடாது ஒன்றிணைந்து சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும் - கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் காரைதீவு அமைப்பாளர் தி.ஞானேந்திரன் தலைமையில் விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் முழுமையாக வாக்களித்து சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே ஒரு ஜனாதிபதியை உருவாக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நாங்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் மறுபக்கம் பார்த்தால் அது எங்களுக்கு ஒரு ஆபத்தான விடயமும் கூட. ஏனென்றால் சிறுபான்மையினர் இல்லாமல் ஒரு ஜனாதிபதியை ஏற்படுத்தலாம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. எது அப்படியிருந்தாலும் வரப்போகின்ற காலம் இந்த அரசாங்கம் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடிக்கக்கூடிய வாய்ப்புகாணப்படுகின்றது.

கடந்த காலத்திலே ஆட்சிசெய்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறந்த முறையிலே இந்த நாட்டை ஆட்சி செய்யாத காரணத்தினால் நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் திண்டாடிய நிலையில்தான் புதிய மாற்றம் உருவாகியிருக்கிறது. இந்த அரசுஎவ்வளவு காலம் நீடிக்கின்றதோ அந்தக்காலம் வரை நாங்களும் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் முன்வந்து இவ்வாறான தெளிவுபடுத்தல்களை செய்து வருகின்றோம். கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் இனிவரும் காலங்களிலும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனால்தான் தேர்தல் விடயத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணையும்படி கடந்த ஒரு வருட காலமாக கூறி வருகிறோம். அதை ஏற்று இன்று பல அணிகள் ஒன்றிணைய முன்வந்திருக்கின்றன. அதற்காக ஒரு தேர்தல் கூட்டமைப்பை உருவாக்க முடிவெடுத்துள்ளோம். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் பயணிப்பதற்குரிய ஏற்பாடுகள் கிட்டத்தட்ட 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி சூரியன் சின்னத்திலே போட்டியிட உயர் மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் பயணித்து அனைத்தையும் இழந்த நிலையிலே இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் பாரிய பின்னடைவுகளை நாம் சந்தித்திருக்கின்றோம். தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை என்ற கட்டத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் யுத்த காலங்களிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளையும் அழிவுகளையும் எதிர்நோக்கிய மாவட்டம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

நான் பிரதி அமைச்சராக இருந்தபொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்திருப்பதுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தேன். ஆனால் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவ்வுதவிகள் குறைந்தளவிலேதான் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இங்குள்ள மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. வாய்ப்பனை ச்சாரி.. வாய்ப்பை.. நழுவ விட்டால்.. எப்படி... பணக்காரர் ஆவதாம். சிங்களக் குட்டிக்களோடு கொட்டமடிப்பதாம்.

சங்கரி.. கிளிநொச்சி மேஞ்சவர்.. இவர் சிங்களத்திகளை மேஞ்சவர். ஒருவர் கடிதம் எழுதித் துரோகி மற்றவர் களத்துரோகி. கூட்டணி அமோகமாக அமையும். 

ஒரு ஓட்டவிழுந்த கப்பல்.. இன்னொரு மூழ்கிப்போன கப்பலை துணைக்கழைக்குதாம். 

Link to comment
Share on other sites

சும்மாவா வேலை வாய்ப்பு வழங்கினவர்!! எல்லோரிடமும் இலட்சக்கணக்கில் வாங்கித்தானே வேலை வழங்கினவர்... என்னிடம் பணம் இல்லை என்றதால் தன்னுடைய மருமகனுக்கு நிலவளவை திணைக்களத்தில் வேலை வாங்கி கொடுத்தவர்தானே!!??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

கடந்த கால ஆட்சி ராஜபக்க்ஷ குடும்பத்தினரை மின்சாரகதிரையில் இருந்து தாமே காப்பாற்றியதாக கூறுகின்றனர். நீர் முண்டு குடுக்கும் ஆட்சியாளர் உம்மை மின்சாரக் கதிரைக்கு அனுப்பாமல் காத்துக்கொள்ளும் காணுமையோ. 

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG

 

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

 

கருணாவும் இவரோட சேரவில்லை, பிள்ளையானும் சேரவில்லை.  அப்ப யாரோட இவர் கூட்டு வச்சிருக்கிறார். ஹிஸ்புல்லவோடைய? இவர் சொல்லுறதை பார்த்தால் ஒரு நாலு தனிப்படடவர்களுடன் கூட்டு மாதிரி  இருக்குது . இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

Link to comment
Share on other sites

8 hours ago, satan said:

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

 

43 minutes ago, Vankalayan said:

இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

ஐயா வெட்கப்படவுமில்லை, தூங்கவுமில்லை, ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்கிறார். பாவம் அவரும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பார்.... உறுமீனும் வந்தபாடில்லை, அதற்குள் சித்திரகுப்தன் கணக்கெழுதி முடித்துவிடுவான்போல் தெரிகிறதே.... 😮 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.