Jump to content

கருணா அம்மான் உட்பட எவரும் எம்முடன் இணைந்து கொள்ளலாம் - ஆனந்தசங்கரி


Recommended Posts

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG


நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது கட்சி கிழக்கு மாகாணத்தின் களநிலவரங்ளை நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவே இது. இதே காலகட்டத்தில் இங்கு உருவான கிழக்கு தமிழர் ஒன்றியமும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக, கிழக்கு மாகாணத்தில உள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க முன்னணி சம்மந்தமாக ஆச்சரியப்படத்தக்க தவறான கருத்துக்களை ஒரு சிலர் தெரிவித்ததாக  சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்படி முன்னணி உருவாக்குதல் சம்மந்தமாக கருணா அம்மானுடன் நாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

எம்முடன் இணைய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம்.

இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/76301

Link to comment
Share on other sites

வரும் வாய்ப்பை நழுவவிடாது ஒன்றிணைந்து சிறந்தமுறையில் பயன்படுத்த வேண்டும் - கருணா

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் காரைதீவு அமைப்பாளர் தி.ஞானேந்திரன் தலைமையில் விபுலாநந்தா கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் முழுமையாக வாக்களித்து சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமலே ஒரு ஜனாதிபதியை உருவாக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் நாங்கள் காப்பாற்றப்பட்டிருந்தாலும் மறுபக்கம் பார்த்தால் அது எங்களுக்கு ஒரு ஆபத்தான விடயமும் கூட. ஏனென்றால் சிறுபான்மையினர் இல்லாமல் ஒரு ஜனாதிபதியை ஏற்படுத்தலாம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. எது அப்படியிருந்தாலும் வரப்போகின்ற காலம் இந்த அரசாங்கம் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடிக்கக்கூடிய வாய்ப்புகாணப்படுகின்றது.

கடந்த காலத்திலே ஆட்சிசெய்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிறந்த முறையிலே இந்த நாட்டை ஆட்சி செய்யாத காரணத்தினால் நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் திண்டாடிய நிலையில்தான் புதிய மாற்றம் உருவாகியிருக்கிறது. இந்த அரசுஎவ்வளவு காலம் நீடிக்கின்றதோ அந்தக்காலம் வரை நாங்களும் அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் முன்வந்து இவ்வாறான தெளிவுபடுத்தல்களை செய்து வருகின்றோம். கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள் இனிவரும் காலங்களிலும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதனால்தான் தேர்தல் விடயத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணையும்படி கடந்த ஒரு வருட காலமாக கூறி வருகிறோம். அதை ஏற்று இன்று பல அணிகள் ஒன்றிணைய முன்வந்திருக்கின்றன. அதற்காக ஒரு தேர்தல் கூட்டமைப்பை உருவாக்க முடிவெடுத்துள்ளோம். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயருடன் பயணிப்பதற்குரிய ஏற்பாடுகள் கிட்டத்தட்ட 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி சூரியன் சின்னத்திலே போட்டியிட உயர் மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் பயணித்து அனைத்தையும் இழந்த நிலையிலே இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் பாரிய பின்னடைவுகளை நாம் சந்தித்திருக்கின்றோம். தீர்வும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை என்ற கட்டத்தில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் யுத்த காலங்களிலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளையும் அழிவுகளையும் எதிர்நோக்கிய மாவட்டம். அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பது இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

நான் பிரதி அமைச்சராக இருந்தபொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்திருப்பதுடன் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தேன். ஆனால் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவ்வுதவிகள் குறைந்தளவிலேதான் கிடைத்திருக்கின்றன. இதனால்தான் எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு இங்குள்ள மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76317

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம்.. வாய்ப்பனை ச்சாரி.. வாய்ப்பை.. நழுவ விட்டால்.. எப்படி... பணக்காரர் ஆவதாம். சிங்களக் குட்டிக்களோடு கொட்டமடிப்பதாம்.

சங்கரி.. கிளிநொச்சி மேஞ்சவர்.. இவர் சிங்களத்திகளை மேஞ்சவர். ஒருவர் கடிதம் எழுதித் துரோகி மற்றவர் களத்துரோகி. கூட்டணி அமோகமாக அமையும். 

ஒரு ஓட்டவிழுந்த கப்பல்.. இன்னொரு மூழ்கிப்போன கப்பலை துணைக்கழைக்குதாம். 

Link to comment
Share on other sites

சும்மாவா வேலை வாய்ப்பு வழங்கினவர்!! எல்லோரிடமும் இலட்சக்கணக்கில் வாங்கித்தானே வேலை வழங்கினவர்... என்னிடம் பணம் இல்லை என்றதால் தன்னுடைய மருமகனுக்கு நிலவளவை திணைக்களத்தில் வேலை வாங்கி கொடுத்தவர்தானே!!??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

கடந்த கால ஆட்சி ராஜபக்க்ஷ குடும்பத்தினரை மின்சாரகதிரையில் இருந்து தாமே காப்பாற்றியதாக கூறுகின்றனர். நீர் முண்டு குடுக்கும் ஆட்சியாளர் உம்மை மின்சாரக் கதிரைக்கு அனுப்பாமல் காத்துக்கொள்ளும் காணுமையோ. 

Link to comment
Share on other sites

18 hours ago, ampanai said:

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


IMG_1900.JPG

 

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

 

கருணாவும் இவரோட சேரவில்லை, பிள்ளையானும் சேரவில்லை.  அப்ப யாரோட இவர் கூட்டு வச்சிருக்கிறார். ஹிஸ்புல்லவோடைய? இவர் சொல்லுறதை பார்த்தால் ஒரு நாலு தனிப்படடவர்களுடன் கூட்டு மாதிரி  இருக்குது . இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

Link to comment
Share on other sites

8 hours ago, satan said:

அதுசரி ஏன் சங்கரியார் ரொம்ப வெட்கப்படுகிறார்?

 

43 minutes ago, Vankalayan said:

இருந்தாலும் ஐயா தூங்குறதை பார்த்தால் நல்ல பிரயாசப்பட்டிருக்கிறார் போல்தான் தெரியுது .  

ஐயா வெட்கப்படவுமில்லை, தூங்கவுமில்லை, ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருக்கிறார். பாவம் அவரும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பார்.... உறுமீனும் வந்தபாடில்லை, அதற்குள் சித்திரகுப்தன் கணக்கெழுதி முடித்துவிடுவான்போல் தெரிகிறதே.... 😮 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.