Jump to content

யாழில் விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு – 41 இளைஞர்கள் கைது


Recommended Posts

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில் இன்று திங்கட்கிழமை மாலை கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.

சற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.

சி சி ரி வி பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றைய இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்று விடுதியின் உரிமையாளரான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் த.துவாரகன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/76405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

 

5 hours ago, ampanai said:

இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த தயாரிப்பு. விரைவில் வெளிவரும் எதிர்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-4.jpg

UPDATE – யாழில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்கள் விடுதலை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

‘இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர்’ என பொலிஸார் கூறினர்.

யாழில் இராணுவத்தினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் 41 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இராணுவத்தினர் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இராணுவத்தினர் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதற்கமைய நேற்று (திங்கட்கிழமை) இரவு அங்கு சென்ற இராணுவத்தினர், முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும் தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கருத்த தெரிவித்துள்ள விடுதியின் உரிமையாளரும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருமான த.துவாரகன், “உள்ளூர் இளைஞர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வேறு ஒரு விடுதியில்  கேக் வெட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துக்கு எனது விடுதியில் இளைஞர்கள் கூடியிருந்தனர். அவர்கள் உணவு எடுத்துக்கொண்டிருந்த போது, இராணுவத்தினர் வருகை தந்தனர்.

சற்று நேரத்தில் வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சனும் இங்கு வந்தார். ஆயுதங்களுடன் இளைஞர்கள் கூடியுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததால் விடுதியைச் சுற்றிவளைக்கின்றோம் என்று இராணுவத்தினர் தெரிவித்தனர்.

விடுதிக்குள் நுழைந்த இராணுவத்தினர் அங்குள்ள ஒவ்வொரு அறையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். நான் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினேன்.

சி.சி.ரி.வி. பதிவுகள் உள்ளதால் ஆயுதங்களுடன் இளைஞர்கள் வந்திருந்தால் பார்வையிடமுடியும் என்று தெரிவித்தேன். ஆனால் இராணுவத்தினர் கேட்கவில்லை. பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் உள்ளே இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அதனால் அங்கு உணவு எடுத்துக்கொண்டிருந்த 41 இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விருந்தில் மதுபானங்கள் எவையும் பயன்படுத்தப்படவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/யாழில்-இராணுவத்தினர்-மேற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய மருதனாா் மடத்தில் உள்ள எமது உணவகத்தில் முற்பதிவு செய்யப்பட்ட உணவை எடுப்பதற்காக வந்திருந்த சமயம் நேற்றிரவு இராணுவத்தினா் சுற்றிவளைத்து பெருமளவு இளைஞா்களை கைது செய்திருக்கின்றனா்.சம்பவத்தில் 50 உணவு பெதிகளை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா். அதற்கு மேலதிகமாக எங்கள் ஹோட்டலில் எந்த வொரு நிகழ்வும் இடம்பெறவில்லை. அந்த நிகழ்வு பிறிதொரு இடத்தில் இடம்பெற்றது. எங்கள் ஹோட்டலில் இரு ந்து ஒரு சிகரட் அல்லது ஒரு மதுபான போத்தலை கூட இராணுவத்தினா் மீட்கவில்லை என இன்று காலை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரும் ஹோட்டல் உாிமையாளருமான த.துவாரகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிகழ்வு நடந்தது வேறு இடத்தில், உணவு எடுக்கவந்தவா்களை இராணுவம் கைது செய்த நிலையில் நாம் ஆவா குழுவுக்கு பிறந்தநாள் கொண்டாட ஹோட்டல் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான நிகழ்வு நடக்கவில்லை. மேலும் கைது செய்யப்பட்டவா்கள் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்கள் அல்ல. எனவே இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

நாம் ஆவா குழு உறுப்பினா்களின் நிகழ்வுக்கு இடம்கொடுக்கவில்லை. இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவா்கள் ஆவா குழு உறுப்பினா்களோ அல்லது குற்றச் செயல்களுடன் தொடா்புடையவா்களோ அல்ல என்பதை சுன்னாகம் பொலிஸாா் உறுதிப்படுத்தியிருப்பதுடன், கைது செய்யப்பட்டவா்களை விடுதலையும் செய்துள்ளனா்.

பின்னா் நான் இராணுவத்தினருடன் பேசியபோது தாம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டாா்கள். பெருமளவு இளைஞா்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாம் ஹோட்டலை முற்றுகையிட்டதாக கூறினா். பின்னா் அவா்களே பொலிஸாரை அழைக்குமாறும் கூறினா்.ஆனால் அதற்கு முன்னதாகவே நாம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தோம். பின்னா் இராணுவத்தினாின் வாகனங்களிலும், தனியாா் வாகனங்களிலும் இளைஞா்களை ஏற்றி சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு நாங்கள் கொண்டு சென்றிருந்தோம். கைது செய்யப்பட்ட இளைஞா்கள் குற்ற செயல்களுடன் தொடா்படையவா்களா? என சோதிக்கப்பட்டு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனா் என தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-விடுதி-சுற்றி-வளைப்/

Link to comment
Share on other sites

11 minutes ago, கிருபன் said:

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

யாழ் விடுதி சுற்றி வளைப்பு -அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் -த.துவாரகன்

கடந்த 23ம் திகதி 50 பேருக்கான உணவு முற்பதிவு செய்யப்பட்டது.  .சம்பவத்தில் 50 உணவு பெதிகளை வாங்குவதற்காகவே இளைஞா்கள் வந்திருந்தனா்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுன்னாகம் பிரதேச சபை உறுப்பினரும் ஹோட்டல் உாிமையாளருமான த.துவாரகன் தெரிவித்துள்ளார்.

 இந்த சம்பவம் அரசியல் பின்புலத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-விடுதி-சுற்றி-வளைப்/

அரசியல் பின்புலம் என்றால் அது எந்த அரசியல் பின்புலம்? நீங்கள்தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவ படுத்துகிறீர்கள், அங்கஜன் அரச பிரதிநிதியாக செயல்படுகிறார்। அப்படி என்றால் எது அரசியல் பின் புலம்?

ஐம்பது உணவு பார்சலை கொண்டுசெல்வதட்கு இதனை (41) பேர் வர வேண்டுமா? நிச்சயமாக இதில் எதோ பிரச்சினை இருக்கிறது। அரசியல் செல்வாக்கினால்தான் அதனை பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Vankalayan said:

ஐம்பது உணவு பார்சலை கொண்டுசெல்வதட்கு இதனை (41) பேர் வர வேண்டுமா? நிச்சயமாக இதில் எதோ பிரச்சினை இருக்கிறது। அரசியல் செல்வாக்கினால்தான் அதனை பேரும் விடுவிக்கப்பட்டுள்ளார்।

பொறுமை.... மலிஞ்சால் சந்தைக்கு வரும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.