Jump to content

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்


Recommended Posts

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

 
 

 

Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் உடனான கேள்வி பதில்கள்...

1. உலகளாவிய ரீதியில் Rakuten Viber ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. Viber ஐ பொறுத்தமட்டில் ஆசியா பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதா? துறையில் காணப்படும் சவால்கள் மத்தியில் Viber எவ்வாறு வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதை உங்களால் விவரிக்க முடியுமா?

ஆம், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் உயர் தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) மற்றும் பல அம்சங்களுடன் நாளாந்தம் தொடர்பாடல்களை பேணுவதற்காக பாதுகாப்பான மற்றும் இலவசமான இணைப்புகளை நாம் வழங்கி வருகின்றோம். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 70% க்கும் அதிகமான ஸ்மார்ட்ஃபோன் பாவனை காணப்படும் நிலையில், Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்பை இந்த பிராந்தியம் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்ற பிரிவில் கட்டமைப்பாளர் எனும் வகையில், எமது சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் நாம் முழுமையான புரிந்துணர்வை கொண்டுள்ளோம். எனவே, எமது துறையில் பெருமளவு சவால்கள் காணப்பட்ட போதிலும், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களை நாம் கொண்டுள்ளோம். எமது நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், சிங்களம் மற்றும் தமிழ் போன்ற உள்நாட்டு மொழிகளில் My notes, Dark mode, Mute chats போன்ற UI கட்டமைப்புகளில் கவனத்தைக் கொண்டுள்ளோம். app இனுள் பாவனையாளரின் தினசரி அனுபவத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

2. அண்மையில் Viber இல் இடம்பெற்ற மாபெரும் மெருகேற்றம் யாதென குறிப்பிட முடியுமா? இலங்கை ஏன் தெரிவு செய்யப்பட்டிருந்தது மற்றும் அதன் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன? ஏனைய நாடுகளிலும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றீர்களா?

இலங்கையர்களுக்கு இலகுவாகவும் சௌகரியமாகவும் தொடர்பாடல்களை பேணுவதற்காக, Viber அண்மையில் தனது UI ஐ சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிமுகம் செய்திருந்தது. உள்நாட்டு UI கட்டமைப்பு அறிமுகத்துக்கு ஆரம்பத்தில் பெருமளவு வரவேற்பு காணப்பட்டதுடன், சுமார் 45.5% பாவனையாளர்கள் இவற்றை பின்பற்ற ஆரம்பித்தனர். எதிர்வரும் மாதங்களில் இந்த சேவைகளை மேலும் உள்நாட்டவர்கள் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்காக அதிகளவு வாய்ப்பை கொண்ட சந்தையாக இலங்கை அமைந்துள்ளது. இலங்கையர்கள் தமது சொந்த மொழியில் தொடர்பாடல்களை பேண ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மொத்த சனத்தொகையில் 85% க்கு அதிகமானவர்கள் தமது சொந்த மொழியை பயன்படுத்துவதில் ஆர்வத்தை கொண்டுள்ளனர். Viber இல் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர் பெக்களில் உள்நாட்டு பிரபலங்கள் மற்றும் உரையாடல்கள் அடங்கியுள்ளன. அதிகளவு பின்தொடர்கையை கொண்ட Viber சமூகம் (community) என்பதும் இலங்கை நடிகை ஒருவரின் பகுதியாக அமைந்துள்ளது. எனவே, கட்டமைப்பினுள் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்பது எமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், எமது பாவனையாளர்களுக்கு அவை பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

3. சில பிரமுகர்கள் மற்றும் தாக்கம் செலுத்துவோர் தமது சொந்த சமூக (Communities) பகுதிகளை உருவாக்குவதை நாம் அவதானித்தோம். பெருமளவு சமூக ஊடக பின்புலத்தை கொண்ட இந்த நபர்கள் ஏன் Viber இல் பிரவேசிக்கின்றனர்?

துரிதமாக மாறி வரும் இந்த டிஜிட்டல் பகுதியில், மக்களின் கவனம் செலுத்தல் என்பது குறைவாக அமைந்துள்ளதுடன், அவசர நிலை அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, Instant Messaging app களின் பயன்பாடு என்பது சமூக ஊடக வலைத்தளங்களின் பாவனையை விட அதிகமாக அமைந்துள்ளது.

‘Instant updates’ எனும் யுகத்தில், பிரமுகர்கள் அடங்கலாக அனைவரும் தமது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்வோருடன் தாம் எங்கு உள்ளோம் மற்றும் தமது உணர்வுகள் பற்றி உடனடியாக update/connect செய்து தகவல்களை செய்து பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றனர். எனவே, ‘Instant update’ எனும் இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் Viber communities இனால் சிறந்த மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பு வழங்கப்படுகின்றது. தமது ரசிகர்களுடன் இணைந்திருப்பதற்கு மேலாக, Viber Communities களும் 100% admin கட்டுப்பாட்டை வழங்கும். Close chat, private conversations போன்றவற்றுடன் தெரிவுகள் முடக்கப்பட்ட அல்லது செயற்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக, பிரத்தியேக தனிப்பட்ட பகுதிகள் சீராக பேணப்படுகின்றன.

4. வர்த்தக நாமங்களுக்கு மாத்திரம் தான் இந்த சமூகங்கள் (communities) பொருந்துமா?

ஒரே நேரத்தில் பல பேருடன் இணைப்பை ஏற்படுத்த எதிர்பார்ப்போருக்காக Viber சமூகங்கள் (Communities) அமைந்துள்ளது. சராசரியாக, கடந்த ஆண்டில் 40,000 தகவல்கள் Viber இலங்கை சமூகத்தில் (Viber Sri Lanka Community) பகிரப்பட்டிருந்தது. இது நாட்டில் காணப்படும் வர்த்தகநாமமிடப்படாத சமூகமாக (Non Branded Generic Community) அமைந்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், Viber சமூகம் (Community) என்பது ஆசிரியர்கள், வதிவிட நிர்வாகங்கள், ஆர்வமுள்ள குழுக்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் போன்ற பல்வேறு குழுக்கள் மத்தியில் முக்கியமான தகவல்களை பரிமாறும் ஊடகமாக அமைந்துள்ளது. இதன் பிரத்தியேகமான admin controls மற்றும் ஈடுபாட்டை பேணும் உள்ளம்சங்களான Polls, edit text போன்றன தகவல் பரிமாற்றத்துக்கும் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்குமான சௌகரியமான கட்டமைப்பாக அமைந்துள்ளது.

5. தமது பாவனையாளர்களுக்கான பிரத்தியேக நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை Viber தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். அது எப்படி? அதன் பிரதான போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இது எவ்வாறு அமைந்துள்ளது?

அடிப்படையில் Viber ஒரு end to end encrypted தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன் ஆகும். பாவனையாளரின் பிரத்தியேகதத் ன்மைக்கு நாம் முக்கியத்துவமளிப்பதால், ஏனைய அப்ளிகேஷன்களிலிருந்து அது எம்மை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. எமது பாவனையாளர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைப்பது அல்லது பகிர்ந்து கொள்வதை நாம் மேற்கொள்வதில்லை.

எமது போட்டியாளர்கள் மற்றும் தமது பாவனையாளர்களுக்கு ஏனைய நாளிகைகள் செவிமடுப்பது மற்றும் அவர்களின் ஒன்லைன் செயற்பாடுகளை கண்காணித்து விளம்பர வருமானமீட்டும் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போதும், Viber தமது பாவனையாளர்களின் பிரத்தியேக தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இரு பிரதான விடயங்களுக்கு நாம் எமது நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் மேற்கொள்கின்றோம். எமது பாதுகாப்பு அம்சங்களை அடிக்கடை மேம்படுத்தி, ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது மற்றும் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த தகவல் பரிமாற்ற app அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்ச்சியான மெருகேற்றங்களை மேற்கொள்வது ஆகியன அடங்கியுள்ளன.

6. அடுத்த மாதங்களில் இலங்கையர்களுக்கு Viber இடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்?

Viber மற்றும் இலங்கையர்களுக்கு இது சிறந்த காலமாகும், நாம் புத்தாக்கங்களை வடிவமைத்த வண்ணமுள்ளதால், அவற்றை விரைவில் எதிர்பார்க்க முடியும். இதற்காக நாம் உள்நாட்டு பங்காண்மைகள், பண்டிகைக் கால கைகோர்ப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு, தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு மேற்கொள்ளல் ஆகியவற்றை app இனுள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது அண்மைக்கால புத்தாக்கங்கள் (User interface, My Notes) பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், தொடர்ந்து மெருகேற்றங்களை மேற்கொள்ள நாம் முயற்சித்து வருகின்றோம்.

அண்மையில் நாம் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் user interface ஐ அறிமுகம் செய்திருந்தோம். புதிய உள்ளம்சமான My Notes என்பது, உங்கள் வேலைப்பழு நிறைந்த வேளைகள் மற்றும் சந்திப்புகள் போன்றவற்றை app இல் குறித்துக் கொள்ளக்கூடிய தீர்வாக இருக்கும். எதிர்வரும் மாதங்களில், வேகமான மற்றும் எளிமையான தயாரிப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.