Jump to content

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்


Recommended Posts

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

Rakuten Viber இனால் அனைத்து இலங்கையர்களுக்கும் Localised UI அறிமுகம்

 
 

 

Rakuten Viber இன் ஆசிய பசுபிக் பிராந்திய சிரேஷ்ட பணிப்பாளர் அனுபவ் நாயர் உடனான கேள்வி பதில்கள்...

1. உலகளாவிய ரீதியில் Rakuten Viber ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. Viber ஐ பொறுத்தமட்டில் ஆசியா பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதா? துறையில் காணப்படும் சவால்கள் மத்தியில் Viber எவ்வாறு வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதை உங்களால் விவரிக்க முடியுமா?

ஆம், உலகளாவிய ரீதியில் காணப்படும் 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுடன் உயர் தரம் வாய்ந்த ஓடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், தகவல்கள் பரிமாற்றம் (messaging) மற்றும் பல அம்சங்களுடன் நாளாந்தம் தொடர்பாடல்களை பேணுவதற்காக பாதுகாப்பான மற்றும் இலவசமான இணைப்புகளை நாம் வழங்கி வருகின்றோம். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 70% க்கும் அதிகமான ஸ்மார்ட்ஃபோன் பாவனை காணப்படும் நிலையில், Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்பை இந்த பிராந்தியம் கொண்டுள்ளது. தகவல் பரிமாற்ற பிரிவில் கட்டமைப்பாளர் எனும் வகையில், எமது சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் நாம் முழுமையான புரிந்துணர்வை கொண்டுள்ளோம். எனவே, எமது துறையில் பெருமளவு சவால்கள் காணப்பட்ட போதிலும், அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களை நாம் கொண்டுள்ளோம். எமது நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், சிங்களம் மற்றும் தமிழ் போன்ற உள்நாட்டு மொழிகளில் My notes, Dark mode, Mute chats போன்ற UI கட்டமைப்புகளில் கவனத்தைக் கொண்டுள்ளோம். app இனுள் பாவனையாளரின் தினசரி அனுபவத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.

2. அண்மையில் Viber இல் இடம்பெற்ற மாபெரும் மெருகேற்றம் யாதென குறிப்பிட முடியுமா? இலங்கை ஏன் தெரிவு செய்யப்பட்டிருந்தது மற்றும் அதன் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன? ஏனைய நாடுகளிலும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றீர்களா?

இலங்கையர்களுக்கு இலகுவாகவும் சௌகரியமாகவும் தொடர்பாடல்களை பேணுவதற்காக, Viber அண்மையில் தனது UI ஐ சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அறிமுகம் செய்திருந்தது. உள்நாட்டு UI கட்டமைப்பு அறிமுகத்துக்கு ஆரம்பத்தில் பெருமளவு வரவேற்பு காணப்பட்டதுடன், சுமார் 45.5% பாவனையாளர்கள் இவற்றை பின்பற்ற ஆரம்பித்தனர். எதிர்வரும் மாதங்களில் இந்த சேவைகளை மேலும் உள்நாட்டவர்கள் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

Viber ஐ பொறுத்தமட்டில் வளர்ச்சிக்காக அதிகளவு வாய்ப்பை கொண்ட சந்தையாக இலங்கை அமைந்துள்ளது. இலங்கையர்கள் தமது சொந்த மொழியில் தொடர்பாடல்களை பேண ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மொத்த சனத்தொகையில் 85% க்கு அதிகமானவர்கள் தமது சொந்த மொழியை பயன்படுத்துவதில் ஆர்வத்தை கொண்டுள்ளனர். Viber இல் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஸ்டிக்கர் பெக்களில் உள்நாட்டு பிரபலங்கள் மற்றும் உரையாடல்கள் அடங்கியுள்ளன. அதிகளவு பின்தொடர்கையை கொண்ட Viber சமூகம் (community) என்பதும் இலங்கை நடிகை ஒருவரின் பகுதியாக அமைந்துள்ளது. எனவே, கட்டமைப்பினுள் புத்தாக்கமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்பது எமக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், எமது பாவனையாளர்களுக்கு அவை பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருக்க வேண்டும்.

3. சில பிரமுகர்கள் மற்றும் தாக்கம் செலுத்துவோர் தமது சொந்த சமூக (Communities) பகுதிகளை உருவாக்குவதை நாம் அவதானித்தோம். பெருமளவு சமூக ஊடக பின்புலத்தை கொண்ட இந்த நபர்கள் ஏன் Viber இல் பிரவேசிக்கின்றனர்?

துரிதமாக மாறி வரும் இந்த டிஜிட்டல் பகுதியில், மக்களின் கவனம் செலுத்தல் என்பது குறைவாக அமைந்துள்ளதுடன், அவசர நிலை அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, Instant Messaging app களின் பயன்பாடு என்பது சமூக ஊடக வலைத்தளங்களின் பாவனையை விட அதிகமாக அமைந்துள்ளது.

‘Instant updates’ எனும் யுகத்தில், பிரமுகர்கள் அடங்கலாக அனைவரும் தமது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்வோருடன் தாம் எங்கு உள்ளோம் மற்றும் தமது உணர்வுகள் பற்றி உடனடியாக update/connect செய்து தகவல்களை செய்து பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றனர். எனவே, ‘Instant update’ எனும் இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் Viber communities இனால் சிறந்த மற்றும் பாதுகாப்பான கட்டமைப்பு வழங்கப்படுகின்றது. தமது ரசிகர்களுடன் இணைந்திருப்பதற்கு மேலாக, Viber Communities களும் 100% admin கட்டுப்பாட்டை வழங்கும். Close chat, private conversations போன்றவற்றுடன் தெரிவுகள் முடக்கப்பட்ட அல்லது செயற்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனூடாக, பிரத்தியேக தனிப்பட்ட பகுதிகள் சீராக பேணப்படுகின்றன.

4. வர்த்தக நாமங்களுக்கு மாத்திரம் தான் இந்த சமூகங்கள் (communities) பொருந்துமா?

ஒரே நேரத்தில் பல பேருடன் இணைப்பை ஏற்படுத்த எதிர்பார்ப்போருக்காக Viber சமூகங்கள் (Communities) அமைந்துள்ளது. சராசரியாக, கடந்த ஆண்டில் 40,000 தகவல்கள் Viber இலங்கை சமூகத்தில் (Viber Sri Lanka Community) பகிரப்பட்டிருந்தது. இது நாட்டில் காணப்படும் வர்த்தகநாமமிடப்படாத சமூகமாக (Non Branded Generic Community) அமைந்துள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், Viber சமூகம் (Community) என்பது ஆசிரியர்கள், வதிவிட நிர்வாகங்கள், ஆர்வமுள்ள குழுக்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் போன்ற பல்வேறு குழுக்கள் மத்தியில் முக்கியமான தகவல்களை பரிமாறும் ஊடகமாக அமைந்துள்ளது. இதன் பிரத்தியேகமான admin controls மற்றும் ஈடுபாட்டை பேணும் உள்ளம்சங்களான Polls, edit text போன்றன தகவல் பரிமாற்றத்துக்கும் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்குமான சௌகரியமான கட்டமைப்பாக அமைந்துள்ளது.

5. தமது பாவனையாளர்களுக்கான பிரத்தியேக நிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை Viber தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். அது எப்படி? அதன் பிரதான போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இது எவ்வாறு அமைந்துள்ளது?

அடிப்படையில் Viber ஒரு end to end encrypted தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன் ஆகும். பாவனையாளரின் பிரத்தியேகதத் ன்மைக்கு நாம் முக்கியத்துவமளிப்பதால், ஏனைய அப்ளிகேஷன்களிலிருந்து அது எம்மை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. எமது பாவனையாளர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைப்பது அல்லது பகிர்ந்து கொள்வதை நாம் மேற்கொள்வதில்லை.

எமது போட்டியாளர்கள் மற்றும் தமது பாவனையாளர்களுக்கு ஏனைய நாளிகைகள் செவிமடுப்பது மற்றும் அவர்களின் ஒன்லைன் செயற்பாடுகளை கண்காணித்து விளம்பர வருமானமீட்டும் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போதும், Viber தமது பாவனையாளர்களின் பிரத்தியேக தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இரு பிரதான விடயங்களுக்கு நாம் எமது நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் மேற்கொள்கின்றோம். எமது பாதுகாப்பு அம்சங்களை அடிக்கடை மேம்படுத்தி, ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வது மற்றும் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த தகவல் பரிமாற்ற app அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக தொடர்ச்சியான மெருகேற்றங்களை மேற்கொள்வது ஆகியன அடங்கியுள்ளன.

6. அடுத்த மாதங்களில் இலங்கையர்களுக்கு Viber இடமிருந்து எவற்றை எதிர்பார்க்க முடியும்?

Viber மற்றும் இலங்கையர்களுக்கு இது சிறந்த காலமாகும், நாம் புத்தாக்கங்களை வடிவமைத்த வண்ணமுள்ளதால், அவற்றை விரைவில் எதிர்பார்க்க முடியும். இதற்காக நாம் உள்நாட்டு பங்காண்மைகள், பண்டிகைக் கால கைகோர்ப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு, தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு மேற்கொள்ளல் ஆகியவற்றை app இனுள் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது அண்மைக்கால புத்தாக்கங்கள் (User interface, My Notes) பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், தொடர்ந்து மெருகேற்றங்களை மேற்கொள்ள நாம் முயற்சித்து வருகின்றோம்.

அண்மையில் நாம் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் user interface ஐ அறிமுகம் செய்திருந்தோம். புதிய உள்ளம்சமான My Notes என்பது, உங்கள் வேலைப்பழு நிறைந்த வேளைகள் மற்றும் சந்திப்புகள் போன்றவற்றை app இல் குறித்துக் கொள்ளக்கூடிய தீர்வாக இருக்கும். எதிர்வரும் மாதங்களில், வேகமான மற்றும் எளிமையான தயாரிப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.