Jump to content

நட்சத்திர வீரர்களுக்கான ரி-20 தொடர்: ஆசிய- உலக பதினொருவர் அணிகள் விபரம் அறிவிப்பு!


Recommended Posts

நட்சத்திர வீரர்களுக்கான ரி-20 தொடர்: ஆசிய- உலக பதினொருவர் அணிகள் விபரம் அறிவிப்பு!

 

 

by : Anojkiyan

Untitled-1-468-720x450.jpg

ஒட்டுமொத்த கிரிக்கெட் இரசிகர்களையும் கொண்டாட வைக்கும் வகையில், ஆசிய பதினொருவர் நட்சத்திர அணிக்கும் உலக பதினொருவர் நட்சத்திர அணிக்குமிடையிலான போட்டித் தொடரொன்றை நடத்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாடவுள்ள இரு அணிகளின் விபரங்களையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதற்கான ஆசிய பதினொருவர் நட்சத்திர அணியில், ஆறு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசியா பதினொருவர் அணியில் பெயரிடப்பட்ட ஆறு இந்திய வீரர்களில் விராட் கோஹ்லியும் உள்ளார்.

கே.எல்.ராகுலும் ஒரு போட்டியில் பங்கேற்க உள்ளார். ஷிகர் தவான், ரிஷாப் பந்த், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, ஆசிய பதினொருவர் அணியில், இலங்கை அணியின் வீரர்களான லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.

தொடரை நடத்தும் பங்களாதேஷ் அணியில், முஸ்தாபிஸூர் ரஹ்மான், தமீம் இக்பால், முஷ்பிகூர் ரஹீம், லிட்டன் தாஸ், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முஜிப் உர் ரஹ்மான், நேபாளத்தின் சந்தீப் லமேச்சேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்த அணிக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.
……………

உலக பதினொருவர் நட்சத்திர அணியை பொறுத்தவரை அணித்தலைவராக தென்னாபிரிக்காவின் டு பிளெஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோனி பேயர்ஸ்டொவ், அடில் ராஷித் ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களான, கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், கிரன் பொலார்ட், செல்டோன் கொட்ரெல், ஆகியோர் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்து அணியில் மிட்செல் மெக்லிகனும், தென்னாபிரிக்கா அணியில் லுங்கி ங்கிடியும், சிம்பாப்வே அணியில் பிரெண்டன் டெய்லரும் உலக பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரி-20 போட்டியாக நடைபெறவுள்ள இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி எதிர்வரும் மாதம் 21ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ரி-20 போட்டி 22ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் நாடானது 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாக உருவாகுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் தனி மனிதனாகும். 1920ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவர் பங்களாதே{க்கு தனியான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு 1975ஆம் ஆண்டு தனது 55 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அடுத்த வருடம் ஷேக் முஜீபுர் ரஹ்மான் எனும் சுதந்திர போராட்ட வீரர் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. எனவே 100 ஆண்டுகள் நிறைவு நிகழ்வை மிகவும் கோலாகலமான முறையில் நடாத்துவதற்கு பங்களாதேஷ் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவும். அரசின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையானது இவ்வாறு ஷேக் முஜீபுர் ரஹ்மான் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

ஆசிய பதினொருவர் அணி என்பது, சர்வதேச கிரிக்கெட் சபையினால் அந்தஸ்து பெற்று கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற ஆசிய அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான், நோபளம் போன்ற அனைத்து அணிகளிலிருந்தும் திறமைவாய்ந்த 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும்

அதே போன்று உலக பதினொருவர் அணி என்பது சர்வதேச கிரிக்கெட் சபையினுடைய அந்தஸ்து கொண்டுள்ள ஆசிய அணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அணிகளினுடைய 11 வீரர்களை கொண்டமைந்த அணியாகும்.

டெஸ்ட், ஒருநாள், ரி-20, ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான ரி-20 தொடர், 10 ஓவர்கள் கொண்ட போட்டி என பல்வேறு போட்டிகளை பார்த்து இரசித்த இரசிகர்களுக்கு, இப்போட்டித் தொடர் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

http://athavannews.com/நட்சத்திர-வீரர்களுக்கான/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.