Jump to content

நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

BA8874-FF-EF7-D-4-C83-8421-17-B518-F38-D

„நாளைக்கு நான் பத்திரிகையில் வருவேன்இப்படி தனது அயல் வீட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டுச் சென்ற  Maurice (29), சொன்னபடியே இன்று ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறான்.

19.02.2020 அன்று இளவயதிலான ஒன்பது குர்தீஸ் இனத்தவர்களதும் இரண்டு யேர்மனியர்களது ம் மரணம் நிகழ்ந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு இடையில் இன்னும் ஒரு அனர்த்தம் யேர்மனியில் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களும் Hessen மாநிலத்திலேயே நடந்திருக்கிறது என்பது  இன்னும் ஒரு  அதிர்ச்சியான செய்தி.

ஒரு வாரம் பாடசாலை விடுமுறை. இந்த விடுமுறையில்தான் Rosenmontag என்ற யேர்மனியரின் கார்னிவேல்(Carnivel) நடைபெறுகிறது. விதவிதமான உடைகள், அரிதாரங்களுடன்  தங்களை அலங்கரித்து யேர்மனியர்கள் வீதிகளில் ஊர்வலம் வருவார்கள். இந்த விழாவில் பெரியவர்களும் சிறியவர்களுமாக மாறி மாறி   ஆடிப்பாடிக் கொண்டாடி குதூகலிப்பார்கள். அரசியல்வாதிகளைக் கிண்டலடிக்கும் விதமாக கேலியான பொம்மைகளை வடிவமைத்து  வாகனங்களில் வைத்து ஊர்வலம் வருவார்கள். பார ஊர்தியில் தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை வைத்துக் கொண்டு யேர்மனிய நிறுவனங்களின் முதலாளிகளும் தொழிலாளர்களும் கையசைத்து வருவார்கள். அப்படி அவர்கள் வரும் போது  வீதியில் நிற்பவர்களுக்கு  வாகனங்களில் இருந்து இனிப்பு மழை பொழிவார்கள். இந்த இனிப்பு வகைகளைச் சேகரிப்பதற்ககாகவே சிறுவர்கள்  Rosenmontagஇல் நடைபெறும் ஊர்வலங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.

நேற்று Hessen மாநிலத்தில் இருக்கும்  Volkmarsen என்ற சிறிய நகரில் Rosenmontag வீதி விழாவில் வாகனங்களில் இருந்து அள்ளி வீசப்படும் இனிப்புவகைகளைச் சிறார்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது  அந்தச் சிறார் கூட்டத்தின் மீது வேகமாக வந்து மோதியது Maurice இன் கார்.

இந்தத் தாக்குதலில், முதற் கட்டமாக30 பேர் வரையில் காயப்பட்டதாக அறிவித்த Frankfurt காவற்துறை இன்று காயப்பட்டவர்களது எண்ணிக்கை 50 பேருக்கு மேல் என்றும் அதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

வேகமாக கார் ஓட்டி வந்த Maurice நிறைந்த போதையில் இருந்ததாகவும், மோதலின் போது அவனது தலையில் ஏற்பட்ட காயத்தால் அவனிடம் முழுமையான விசாரணையை இன்னமும் நடத்த முடியவில்லை எனவும் கிடைக்கப் பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விபத்து வேண்டும் என்றே நடத்தப் பட்டிருக்கின்றது என்பது தெரிகிறது  எனவும் காவற்துறையின் அறிக்கை சொல்கிறது.

Hanau நகரில் குர்தீஸ் இளைஞர்களின் மீதான தாக்குதலுக்கு வலதுசாரி இனவாதிகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹம்பேர்க் மாநிலத் தேர்தலில் ஆளும் கட்சி பெரும் பின்னடைவு அடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப் பட்டும் தீவிர இனவாதக் கட்சியான AFD, அந்தத் தேர்தலில் சென்ற முறையைவிட 0,88வீத வாக்குகளை குறைவாகப்பெற்றதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

Rosenmontag அன்று நடந்த தாக்குதலுக்கு தாக்குதல்தாரி ஒரு மனநோயாளி என்றுதான் அறிக்கை வெளிவரப் போகிறது. இனவாதிகள், மனநோயாளிகள் நடுவேதான் இப்பொழுது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அதற்கிடையில்,கொரோனா வைரஸ் இத்தாலியில் தாக்கி இருக்கிறது. அது யேர்மனிக்கு வர அதிக  காலம் பிடிக்காது. தயாராக இருங்கள்" என யேர்மனிய சுகாதார அமைச்சர் Jens Spahn நேற்று தொலைக்காட்சியில் வந்து பயத்தை இன்னும் அதிகரித்துவிட்டுப் போயிருக்கிறார்.

Link to comment
Share on other sites

சிகரெட் : இன்று உன்னால் நான் சாம்பலாகின்றேன்;  நாளை என்னால் நீ சாம்பலாவாய்

பயங்கரவாதம் : நேற்று அரசுகளால் நான் உருவாக்கப்பட்டேன். இன்று மதங்களால் நான் வலுவாக்கப்பட்டேன். நாளை என்னால் மனித குலமே அழிக்கப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான கொலைகாரர்களின் நிழற்படங்களை ஒளிப்படங்களை.. பத்திரிகைகள் பிரசுரிப்பதை முற்றாக கைவிடுவதோடு.. கிறுக்கல் சித்திரமாக மட்டும் வெளியிடலாம்.. மக்கள் இவர்களை அடையாளம் காணக்கூடிய அடையாளங்களை முன்னிறுத்தி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.