Jump to content

இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­காத ஐ.நா.செயலர், மனித உரிமைகள் ஆணையர்


Recommended Posts

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய .நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் .நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை.

நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய .நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்துப் பிராந்தியங்களிலும் இடம்பெறுவதாகவும், பொதுமக்கள் சர்வதேச சட்ட மீறல்களுக்கு உட்படுவதாகவும் சுட்டிக் காட்டினார். .நா. செயலர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஊடகவியலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதன் காரணமாக கொல்லப்படுகின்றனர். சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பட்டினி நிலைமை அதிகரிப்பதுடன் இஞைர் வேலையின்மையும் உயர்ந்து செல்கின்றது. அத்துடன் குடியியல் மாற்றங்கள், காலநிலை நெருக்கடி என்பன புதிய சவாலாக உருவெடுத்துள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே பதிலே உள்ளது. அது மனித உரிமையாகும்.

மனித உரிமை என்பது அனைத்து பிரஜைகளினதும் பிறப்புரிமையாகும். அவர்கள் அபிவிருத்தியில் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை மூன்றாவதாக உரையாற்றிய .நா. மனித உரிமை ஆணைாயளர் மிட்செல் பச்லெட் உரையாற்றுகையில், வருமையையும் சமத்துவமின்மையையும் குறைப்பதற்கு சமூக ஸ்திரத்தன்மை ஊக்குவிக்கப்படவேண்டும்.

மக்களை பின்னடைவுக்கு இட்டுச் செல்கின்றன அநீதியை ஒழிக்கவேண்டும். எனது அலுவலகம் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயராக இருக்கின்றது. அரசாங்கங்களுக்கான எமது தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

 

https://www.virakesari.lk/article/76428

Link to comment
Share on other sites

அழுத்தம் கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் அமைப்புகள் : மார்ச் 9 இல் ஜெனிவா வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு

            (ஜெனிவாவிலிருந்து  எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான 30/1 பிரேரணைக் கான அனுசரணையிலிருந்து  விலகிக் கொள்வதாக அரசாங்கம் நாளை யதினம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் இலங்கைக்கு கடும் அழுத்தங்களைப்  பிரயோகிப்பதற்கு புலம் பெயர் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

geneva_01.jpg

அதன் ஒரு கட்டமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி புலம்பெயர்ந்து வெளிநாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை  நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளன.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவை யின் 43ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும்26ஆம் திகதி இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர்தினேஷ் குணவர்த்தன உரையாற்றவுள்ளதுடன் அதன்போதுஇலங்கையானதுபிரேரணைக்கான அனுசரணையிலிருந்துவிலகவுள்ளதாகஉத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்.

அதேபோன்று 27ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதமும்பேரவையில் நடைபெறவிருக்கிறது. ஐக்கியநாடுகள்மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்தனது இலங்கை குறித்த அறிக்கையைபேரவையில் 27ஆம் திகதி வெளியிட்ட பின்னரே இலங்கை குறித்த விவாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையிலேயேஇலங்கை மீது சர்வதேசமும்ஐக்கிய நாடுகள் சபையும் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமெனகுறிப்பிட்டு புலம்பெயர்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதேபோன்று ஜெனிவா வளாகத்தில் பல்வேறு உபகுழுக்கூட்டங்களை நடத்தி இலங்கையானதுபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டுமென்ற விடயத்தைபுலம்பெயர்ந்த அமைப்புக்கள்வலியுறுத்தவுள்ளன.பிரித்தானிய தமிழர் பேரவைஉள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் அமைப்புக்கள் இவ்வாறுஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குநடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசேட உபகுழுக்கூட்டங்களை நடத்தி அழுத்தம் பிரயோகிக்கவும்ஏற்பாடு செய்துள்ளதாகஜெனிவா தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளைபாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும்இந்திய பிரதிநிதிகள்அரசாங்க பிரதிநிதிகள் எனபல்வேறு பிரதிநிதிகளும் ஜெனிவா நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். நேற்றைய தினம்இலங்கையில் காணாமல்போனோர்களின் உறவினர்களின் சங்கத்தின்தலைவி உட்படநான்கு பிரதிநிதிகள் ஜெனிவாவருகை தந்தனர்.வடமாகாணமுன்னாள் அமைச்சர்அனந்தி சசிதரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்ஜெனிவாவிற்கு வருகைதந்துள்ளனர்.

மேலும் நேற்றைய தினம் பல்வேறுநாடுகளிலிருந்துசட்டத்தரணிகள், மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் ஜெனிவா வந்தடைந்தனர.

இலங்கையிலிருந்துஅரசாங்கத்தின் தூதுக்குழுவினர்ஜெனிவா அமர்வில் பங்கேற்கின்றனர்.வெளிவிவகார செயலாளர்ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் ஏற்கனவே ஜெனிவா வந்துள்ளனர்.வெளிவிவகார அமைச்சர்தினேஷ் குணவர்த்தன இன்றைய தினம்ஜெனிவா வருகை தரவிருக்கிறார்.

இது இவ்வாறிருக்கதமிழகத்திலிருந்துஇம்முறை பல்வேறு தரப்பினர்ஜெனிவாவிற்கு வருகை தருவதற்கு ஏற்பாடாகியுள்ளது.விசேடமாகவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேராசிரியர்களான அருட்தந்தை குழந்தைசாமி ஷேவியர் இளம்பரிதி வைத்திய தாயப்பன் டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு மகாராஷ்டிரா மாநில வழக்கறிஞர் நிலேஷ் யுக்கி உள்ளிட்ட பலரும் இம்முறைஜெனிவாவிற்குவருகை தரவுள்ளன..

அதேபோன்றுசர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள் பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும்பல்வேறுஉபகுழுக்கூட்டங்களில்கலந்துகொண்டுதமது கருத்துக்களை வெளியிடவிருக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/76426

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை தமிழர் பக்கம் ஆளணி பலமாய் தான் உள்ளது ஆனால் இவர்கள் ஒற்றை வியூகத்துடன் ஒன்றுபட உழைப்பார்களா அல்லது பேருக்கு தனித்தனியாக இருந்து செயற்பட்டு அனைத்தையும் புஷ்வாணமாக்கி வீணடிப்பார்களா?

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

முதலாவது அமர்வில் உரையாற்றிய .நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் .நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.

பேசி சாதிப்பதை விட, பேசாமல் எதையாவது உருப்படியாக தமிழ் மக்களின் உரிமைக்காக செய்தால் நன்று.
இராசதந்திர அரசியலில் வெளியில் பேசாமல் தான் பல நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
 

Link to comment
Share on other sites

உலக நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சந்திக்கும் : ஜெனிவாவில் திருச்சோதி

 

 

கடந்த ஆட்சியிலும் இன அழிப்பு மௌனமாக அரங்கேறியது : ஜெனிவாவில் அனந்தி

 

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் இலங்கை இராணுவத்தின் பல குடும்பங்கள்! அடுத்து தடை வருமா?

 

Link to comment
Share on other sites

ஜெனிவா முன்றலில் ஈழத்தமிருடன் முறுகல்

 

 

 

 

Link to comment
Share on other sites

ஐ.நா மனித உரிமை அமைப்பின் 43 ஆவது கூட்டத்தொடரில் லீலாதேவி அவர்களின் வாய்மூல அறிக்கை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.