Jump to content

இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன?


Recommended Posts

இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன?

டிரம்ப் மற்றும் மோதிபடத்தின் காப்புரிமை Getty Images
 

முதன்முறையாக இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியாவுக்கு வரும் ஏழாவது அமெரிக்க அதிபர் டிரம்ப். தூதரக உறவுகள் மற்றும் பாதுகாப்பு பற்றி எழுதும் ருத்ரா சௌத்ரி, இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறார் இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.

டிரம்பின் இரண்டு நாள் பயணம் அவருடைய ’பெருமையைக்’ கூட்டுவதற்காக, முக்கியமாக, 2020 அமெரிக்க பொதுத் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்கானதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அவர் மூன்று நகரங்களுக்குச் செல்கிறார்: நாட்டின் தலைநகர் டெல்லி; ஆக்ரா, அங்கு தாஜ்மஹாலை பார்க்கிறார்; மற்றும், குஜராத் மாநிலத்தில் பிரதானமான ஆமதாபாத் நகரம், அங்கு 100,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார். அந்த நிகழ்வுக்கு, ``நமஸ்தே டிரம்ப்'' என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் நகரில் பங்கேற்ற ``Howdy, Modi!'' என்ற நிகழ்ச்சிக்குப் பிரதி உபகாரமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நிகழ்ச்சியில் நரேந்திர மோதியும், டிரம்ப்பும் அமெரிக்காவில் வாழும் 50,000 இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினர்.

மோதி - டிரம்ப்படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வருகைகள் சாதாரணமான நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதோ அல்லது சாதாரண சூழ்நிலையில் அமைந்தவையோ அல்ல. இந்தியா குறித்த அமெரிக்க அதிபரின் பொதுவான அணுகுமுறையில் ஒரு மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தும் வகையிலும் இவை அமைந்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள 2.4 மில்லியன் இந்தியர்களின் தயவைப் பெறுவதற்காக, இந்தியாவின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு டிரம்ப்பை சம்மதிக்க வைப்பதாக இது அமைந்துள்ளது.

அவருடைய ஈகோவுக்கு ஒரு வகையில் இது வலு சேர்ப்பதாக இருக்கும்: பலமான, புத்திசாலித்தனமான உறவுகளை உருவாக்கும் வகையில் இது இருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் வகையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாவதற்கான வாய்ப்புகள் குறைவே.

டொனால்டு டிரம்ப்படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்பிள், வால்நட், மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன; இந்தியாவின் பால் பொருள்கள், கோழிப்பண்ணை மற்றும் மின்னணு வணிக சந்தையில் தங்களுக்கு அதிக இடமளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்துகிறது; அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளை குறைக்க வேண்டும் என்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

அமெரிக்க அரசின் தொழில் துறை பிரதிநிதியாக இருக்கும், சமரசத்துக்கு இடம் தராதவராக இருக்கும் ராபர்ட் லைத்திஜெர் இந்தப் பயணத்தில் இடம் பெறுவாரா அல்லது தவிர்த்துவிடுவாரா என்ற கருத்துகள், ஒப்பந்தம் எதுவும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உணர்த்துவதாக உள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்கு இருக்காது என்று தெரிகிறது. டிரம்ப்பின் வார்த்தையில் சொன்னால், பேரம் உருவாக்குபவருக்கு எந்த ``பேரமும்'' இருக்காது.

2008 ஆண்டில் 66 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்த அமெரிக்கா - இந்தியா வர்த்தகம் 2018ல் 142 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது. இந்தியாவின் ஜிடிபி ஆண்டுக்கு 7 - 8 சதவீதம் என்ற அளவில் வளர்ந்த போது, இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் வர்த்தகம் உயர்ந்தது.

ஆனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்த நிலையில் (2019 - 20ல் 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது), ரொம்பவும் பாதுகாப்பான பொருளாதாரக் கொள்கைகளின் அறிமுகம், தற்போது இந்தியாவுக்குச் சாதகமாக உள்ள வர்த்தகப் பற்றாக்குறையை சமன் செய்ய டிரம்ப் எடுத்த நடவடிக்கை ஆகிய காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைத்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், வர்த்தக உறவுகள் குறித்த விஷயத்தில் அமெரிக்க அதிபர், விலகி வந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்மதிக்க வைக்க வேண்டிய கட்டாயம் திரு. மோடியின் அரசுக்கு உள்ளது. அமெரிக்க - இந்திய உறவுகளில் முக்கியத்துவமான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

உலகில் மிக அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் சந்தையாக இந்தியா இருக்கிறது. தனிநபர் டேட்டா பயன்பாடு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் ``பெரிய தொழில்நுட்ப'' நிறுவனங்களுக்கு, வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இப்போதைய பொருளாதார நெருக்கடி நிலையிலும், அமெரிக்க பொருள்கள் மற்றும் வணிகத்துக்கு, மிகப் பெரிய வளரும் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்.

இந்தியா பெருமளவில் ஆயுதங்களும் இறக்குமதி செய்கிறது. இந்த உறவுகளில் பாதுகாப்புத் துறை வர்த்தகம் நல்ல வாய்ப்புள்ள துறையாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்புத் துறை வர்த்தகம் பெருமளவு உயர்ந்திருக்கிறது. 2008ல் ஏறத்தாழ எதுவுமே இல்லை என்ற நிலையில் இருந்து 2019ல் 15 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளது.

டொனால்டு டிரம்ப் - மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

பாதுகாப்புத் துறை தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் - அமெரிக்காவின் பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் பன்முக பயன்பாடு கொண்ட 24 ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் - டிரம்ப்பின் இந்திய வருகையின் போது பூர்த்தி செய்யப்படலாம் என தெரிகிறது.

பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் தொடர்பாக நுணுக்கமான விஷயங்களை அதிகாரிகள் முடிவு செய்து கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப்பை அசத்துவதற்காக பிரமாண்டமான ஸ்டேடியம் மற்றும் நகரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. தன்னுடைய செல்வாக்கை காட்டிக் கொள்வதில் டிரம்ப்புக்கு பிடித்தமான விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கும் மேலானதாக இந்த தனித்துவமான உறவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1945க்குப் பிந்தைய உலக அரசியல் அமைப்பு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: சர்வதேச உத்தரவாதங்களில் இருந்து அமெரிக்கா பகுதியளவுக்கு பின்வாங்கிக் கொள்வது, பருவநிலை மாறுபாடு தொடர்பான ஒப்பந்தங்களில் பன்முக வர்த்தக ஒப்பந்தங்களை மாற்றும் திட்டத்தில் இருந்து பின்வாங்கியதன் மூலம் தெளிவாகியுள்ளது; பெல்ட் அண்ட் ரோடு முயற்சி (BRI) மூலம் சீனாவின் டிரில்லியன் டாலர் முயற்சி ரஷியா திரும்பியது; பிரெக்ஸிட்; மற்றும் 5 ஜி போன்ற புதிய தொழில்நுட்ப விஷயங்களில் ஐரோப்பாவில் ஒற்றுமை இல்லாதது என மாற்றங்கள் நடந்துள்ளன. உலகின் மிகப் பெரிய மற்றும் மீட்கும் தன்மையுள்ள ஜனநாயக நாடுகள் பரவலான சவால்கள் மற்றும் கவலைகள் மீது அக்கறை காட்ட வேண்டியுள்ளது.

டிரம்ப்படத்தின் காப்புரிமை THOMAS B. SHEA / GETTY

ஆமதாபாத்தில் நடன நிகழ்ச்சிகளுக்கும், தாஜ்மஹாலில் நீண்ட நேரம் நடைபயிலும் நேரத்துக்கும் இடையில், உலகின் தற்போதைய நிலை குறித்து திரு. மோதியும், திரு. ட்ரம்ப்பும் பேசுவதற்கு நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதில் இந்தியா - அமெரிக்கா உறவின் உண்மையான வாய்ப்பு பற்றியும் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்கொல்லி நோய்கள் பரவாமல் தடுப்பது, அவற்றைக் கையாள்வது குறித்த விஷயங்களில் சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குதல் மற்றும் பலப்படுத்துதல் பற்றியும் தீவிரமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இந்த அவசியம் அதிகமாக உள்ளது. புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் எல்லைகள் கடந்து டேட்டா பரிமாற்றம் ஆகியவற்றின் சவால்கள் பற்றி மறு ஆய்வு செய்து, புதிய சர்வதேச கட்டமைப்புகளை (ஒருமித்த கருத்துடைய நாடுகளுக்கு இடையில் பங்களிப்பை உருவாக்குதல் போன்ற) அல்லது பழைய திட்டங்களைப் புதுப்பித்தல் (உதாரணமாக ஜி 20 மூலமாக) தற்கால கவலைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டியுள்ளது.

வர்த்தகம் மற்றும் ஒப்பந்தங்களில் டிரம்ப் ஆர்வம் காட்டுவார் என்றாலும், அவரை வியப்பில் ஆழ்த்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது என்றாலும், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் 21வது நூற்றாண்டை உண்மையில் எப்படி உருவாக்கலாம் என்பது தொடர்பான கலந்துரையாடலுக்கு இரு தலைவர்களுக்கும் போதிய நேர அவகாசம் கிடைக்க வாய்ப்புள்ளது.

https://www.bbc.com/tamil/india-51602440

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிதன் இதையும் வாசித்து பாருங்கோ...ஏன் இந்தியாவுக்கு டிரம்ப் போனவர் என்று உங்களுக்கு விளங்கட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன? ?

பரபரப்பு ரிசி சொல்வது என்ன.?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.