Jump to content

தமிழரசுக் கட்சிக்குள் கோடி கோடியாக வெளிநாட்டுப் பணம்! வெடித்தது சர்ச்சை: குழப்பத்தில் பலர்..


Recommended Posts

தேர்தல்களின் போது செலவிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபா பணம் கொட்டுகின்றது.

அக்கட்சியின் பொறுப்புள்ள பிரமுகர்களே இந்த தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிதி வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு வந்து சேருகின்றதா? அது உரிய முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பது பற்றிய விசாரணைகளை அதிகார வர்க்கம் ஆரம்பிக்கும் சூழல் இருப்பதாக அறிய வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தற்போதைய தலைவர் கதிரவேலு குகதாசன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை கனடாவில் உயர்பதவியில் இருந்தவர்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உட்படப் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வலதுகரமாக திருகோணமலையில் செயற்படுபவர்.

அவர் 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்காகத் தானே சில கோடி ரூபாக்களை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் 2009இற்குப் பின்னர் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்கள், மாகாணத் தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒவ்வொன்றிற்கும் அனைத்துத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேர்தல் செலவுகளுக்காக சில கோடி ரூபாக்கள் நிதியை வழங்கியுள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதே சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புதிய சுதந்திரன் இந்தத் தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

அதில் குகதாசன் சொல்லியது போல 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகர சபை போன்றவற்றுக்கு நடந்த தேர்தல் தொடங்கி இற்றைவரை நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கோடிகளைக் கொடுத்து உதவியிருக்கின்றது . அதில் குகதாசனின் முற்சி அளப்பரியது.

தேர்தலுக்கு மட்டுமல்ல வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்களது பொருளாதார மேம்பாட்டுக்கும் சில கோடிகளை இது வரை கனடா த.தே.கூ திரட்டிக் கொடுத்துள்ளது என்று கட்சியின் பிரமுகர் நக்கீரன் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேசமயம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தையொட்டிப் பேசப்பட்ட விவகாரங்களை இணையத்தளம் ஒன்று விளாவாரியாக வெளியிட்டது.

அதன் விபரங்களாவன,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்படும் நிதி தொடர்பாக மத்திய செயற்குழு கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தனது மகன் கலையமுதனை நோக்கி “உன்னை வெளியாலே கலைப்பேன்” என எச்சரித்த சுவாரஷ்ய சம்பவமும் இடம்பெற்றதை குறித்த இணையம் அறிந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த சம்பவத்தைக் குறிப்பிட முன்னர் ஒரு பின்னணித் தகவல்... கனடாவிலுள் சில நபர்கள் பணத்தை வீசியெறிந்து இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்ய முனைவது தொடர்பாக குறித்த இணைய பக்கத்தில் ஏற்கனவே பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல புலம்பெயர் அமைப்புக்கள் பணத்தை வீசியெறிந்து பல குழுக்களை இயக்குவதை போல கனடாவிலுள்ள சிறிய குழுவொன்றும் தமிழ் அரசுக் கட்சியின் ஒரு சிறிய குழுவிற்குப் பணத்தை வீசியெறிந்து இயக்க வருவதைப் பற்றிய பல தகவல்களை குறித்த இணையம் பல முறை சுட்டிக்காட்டியிருந்தது.

அந்தக் குழுவின் அனுசரணையிலேயே வடமாகாணசபையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அஸ்மின், சயந்தன், ஆர்னோல்ட், சத்தியலிங்கம், சாணக்கியன் ஆகியோரை அந்த குழு போஷித்து பலப்படுத்த முயற்சித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் இந்த குழு கனடாவில் பணம் சேகரித்து சுளையாக அனுப்புவது வழக்கம். அந்த குழுவின் கனடா செயற்பாட்டாளராக இருந்த குகதாசன் என்பவர் இறக்குமதியாகி தற்போது திருகோணமலை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

பணம் பாதாளம் வரை பாயுமென்ற நம்பிக்கையில் திருகோணமலையில் பழைய கட்சி செயற்பாட்டாளர்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு தனித்து வில் வாசிக்க முயன்று தற்போது சிக்கிப் போயுள்ளார்.

அவருக்கும் திருகோணமலையில் கட்சி செயற்பாட்டாளர்களுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் சந்திப்பு சம்பந்தன் தலைமையில் இன்று நடக்கவுள்ளது.

அவர் அண்மையில், தானே கேள்வியெழுப்பி தானே விடையளித்து ஒரு கேள்வி பதில் அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். அதில் நான் சில கோடி ரூபாயை கட்சிக்காக வழங்கியிருக்கின்றேன் என குறிப்பிட்டுமிருக்கின்றார்.

இந்த அறிக்கையை படித்த கட்சியின் நிர்வாகிககள் அப்படி சில கோடி ரூபாக்கள் அவரால் கட்சிக்கு வழங்கப்பட்டதா என வினவியுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியின் பொருளாளர் வரைப் போனது. குகதாசனிடமிருந்து ஒரு சதமும் கட்சியின் பொருளாளரிடம் வரவில்லை. பொருளாளரிற்கு வராமல் கட்சிக்குப் பணம் வர சாத்தியமில்லையே.

இதையடுத்து கட்சியின் செயலாளர் மற்றும் பல பிரமுகர்களிற்கு பொருளாளர் தரப்பிலிருந்து இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

கட்சி செயலாளரும் கனடா குரூப் ஆள்தான். கடிதத்தைப் பார்த்து விட்டு அவரும் கப்சிப்பாக இருந்து விட்டார். இதையடுத்தே இந்த விவகாரம் நேற்று கட்சியின் மத்திய செயற்குழுவில் எழுப்பப்ட்டது.

கட்சியின் பொருளாளர் கனகசபாபதி இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி அப்படி கட்சிக்கு பணம் வழங்கினீர்களா? யாரிடம் வழங்கினீர்கள் எனக் கேட்டார்.

நான் பணம் வழங்கினேன் என சுயதம்பட்டம் அடித்தே தேர்தலில் வெற்றிப் பெறலாமென நினைத்தோ என்னவோ குகதாசன் சொன்னது இப்படி மாறுமென அவர் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப் போனார்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாட சுமந்திரன் அவருக்கு ஆதரவாக களமிறங்கி அந்த பணத்தை நான்தான் வாங்கினேன் என்றார்.

அப்படியென்றால் அந்த பணம் எங்கே, அதற்கான கணக்கு என்ன? என கூட்டத்திலிருந்த பலரும் கேள்வியெழுப்பினர். கட்சியின் பொருளாளர் இருக்க தனிநபர்கள் ஊடாக இப்படியான பணக் கொடுக்கல் வாங்கலின் தேவை என்ன, இதன் நேர்மைத் தன்மையை எப்படி ஏற்றுக் அகொள்வது என கேள்வி எழுப்பினார்.

கனேடிய தமிழ் காங்கிரஸ் வழங்கிய பணத்தை தான் வழங்கியதாக குகதாசன் பாவனை பன்னுகிறார், பகிரங்க அறிக்கை விடுகின்றார், அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

முறையற்ற நிதி பரிமாற்றத்திற்கு மாவை சோனாதிராசாவின் மகன் கலையமுதன் கடும் எதிர்ப்பை தெரிவித்து அனைத்தும் முறைப்படி கணக்கு நடவடிக்கைக்கு ஊடாக நடைபெற வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரனுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது நாங்கள் கனடாவில் திரட்டிய பணம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

தர்க்கம் பலமடைய கலையமுதனை உட்காரும்படி மாவை சேனாதிராசா பலமுறை குறிப்பிட்டார். எனினும் கலையமுதன் உட்காராமல் நியாயத்தை சுட்டிக்காட்டியபடி இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாவை சேனாதிராசா நீ இப்பொழுது இருக்காவிட்டால் உன்னை வெளியில் அனுப்புவேன் என எச்சித்தார்.

அந்தப் பணத்தில் மாகாண சபை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 6 இலட்சம் படி வழங்கியதாகவும் பங்காளிக் கட்சிகளிற்கும் வழங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு பழைய கதையை விடுவோம். இதை கிளறினால் கட்சிக்குத் தான் பாதிப்பு எனக் கூறி சமரசப்படுத்தி அந்தவிவகாரத்தை மூடி வைத்தனர்.

இதேபோல முல்லைத்தீவு இளைஞரணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் நீதி விவகாரம் தொடர்பில் பேசி கட்சியின் வேட்புமனுக் குழுவிலுள்ள குறைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

அனைத்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் வேட்புமனு குழுவில் உள்வாங்கப்பட்டிருக்க மன்னார் மாவட்டத்தின் சார்ள்ஸ் நிர்மலநாதனை இணைக்காதமை தவறு, மன்னாரில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் அந்த பிரசேதத்தின் பிரதிநிதியும் குழுவில் இணைக்கப்பட வேண்டுமென அவர் கருத்து தெரிவித்த போது, நீ இரு. பேஸ்புக்கில் எல்லாம் கட்சியைப் பற்றி எழுதுகிறாய். உனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இருக்கிறது என மாவை குறிப்பிட, பீற்றர் இளஞ்செழியன் பொங்கியெழுந்தார்.

அவர் சரமாரியாக பேசியதில் மாவை திண்டாடி தனது 10 தம்பிகளையும் துணைக்கழைத்தும் பலன் கிட்டவில்லை.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு பீற்றர் இளஞ்செழியனை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர்.

இதேவேளை வடமராட்சியை சேர்ந்த தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் ஒருவர் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும் இதன்போது 221 மில்லியன் ரூபா கனடாக் கிளை ஊடாக வழங்கப்பட்டதாக சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/politics/01/239473?ref=home-feed

Link to comment
Share on other sites

On 2/26/2020 at 1:10 AM, போல் said:

அவர் 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்காகத் தானே சில கோடி ரூபாக்களை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

இவர் தன்ர சொந்த கோடிக்கணக்கான காசை கொடுத்தாரோ அல்லது கனடால சேகரித்த கோடிக்கணக்கான காசை தன்ர சொந்த காசு என்டு கொடுத்தாரோ?

உண்மை தெரிஞ்சாகனும்!

Link to comment
Share on other sites

On 2/26/2020 at 1:10 AM, போல் said:

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும் இதன்போது 221 மில்லியன் ரூபா கனடாக் கிளை ஊடாக வழங்கப்பட்டதாக சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

குகதாசன் தனக்கு இந்தமுறை எப்பிடியாவது சீட் கிடைக்கோனும் என்டு ஒற்றைக் காலில நிக்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் / சும்முக்கு...  சரியான... பங்கு வராவிட்டால்...
மாவை... போராட்டம்  செய்வாரா? 

Link to comment
Share on other sites

On 2/29/2020 at 7:23 AM, தமிழ் சிறி said:

சம் / சும்முக்கு...  சரியான... பங்கு வராவிட்டால்...
மாவை... போராட்டம்  செய்வாரா? 

மாவை தன்ர மகனை பாராளுமன்றத்துக்கு அனுப்ப ரெடி ஆகிறார். அதால இப்ப வாய் திறக்க மாட்டார்.

Link to comment
Share on other sites

பணமே எங்கே ?

  • உனக்கு நான் அனுப்பிய பணம் எங்கே?  
  • நிதி திரட்டியவருக்கு  கொடுத்த பணம் எங்கே ?
  • கட்சிக்கு  கொடுத்த பணம் எங்கே ?  

இவ்வாறு பணம் சம்பந்தப்பட்ட பல நியாயமான கேள்விகள் உள்ளன எமது சமூகத்தில். 

சில இடங்களில் பற்றுச்சீட்டை வாங்க முடியாது / கேட்க முடியாது. மற்றைய இடங்களில் நாம் கேட்க மறந்து விடுவோம். சில இடங்களில் பணத்தை வேண்டுபவர்கள்  பற்றுச்சீட்டை தராமல் விட்டுவிடுவார்கள். 

அவதானம், பணம் கொடுப்போரிலும் அதை பெறுவோரிலும் இருக்க வேண்டும். அப்பொழுதான் அந்த பணம் பயனாக மாறும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.