Jump to content

தமிழரசுக் கட்சிக்குள் கோடி கோடியாக வெளிநாட்டுப் பணம்! வெடித்தது சர்ச்சை: குழப்பத்தில் பலர்..


Recommended Posts

தேர்தல்களின் போது செலவிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கனடா உட்பட வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கான ரூபா பணம் கொட்டுகின்றது.

அக்கட்சியின் பொறுப்புள்ள பிரமுகர்களே இந்த தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ள நிலையில் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இந்த நிதி வெளிநாடுகளில் இருந்து அரசியல் கட்சி ஒன்றுக்கு வந்து சேருகின்றதா? அது உரிய முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றதா என்பது பற்றிய விசாரணைகளை அதிகார வர்க்கம் ஆரம்பிக்கும் சூழல் இருப்பதாக அறிய வருகின்றது.

தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தற்போதைய தலைவர் கதிரவேலு குகதாசன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை கனடாவில் உயர்பதவியில் இருந்தவர்.

கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உட்படப் பல பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்தவர். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வலதுகரமாக திருகோணமலையில் செயற்படுபவர்.

அவர் 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்காகத் தானே சில கோடி ரூபாக்களை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

அதில் அவர் 2009இற்குப் பின்னர் நடந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்கள், மாகாணத் தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் ஒவ்வொன்றிற்கும் அனைத்துத் தமிழரசுக் கட்சியினருக்கும் தேர்தல் செலவுகளுக்காக சில கோடி ரூபாக்கள் நிதியை வழங்கியுள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதே சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான புதிய சுதந்திரன் இந்தத் தகவலை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

அதில் குகதாசன் சொல்லியது போல 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபை, வவுனியா நகர சபை போன்றவற்றுக்கு நடந்த தேர்தல் தொடங்கி இற்றைவரை நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில கோடிகளைக் கொடுத்து உதவியிருக்கின்றது . அதில் குகதாசனின் முற்சி அளப்பரியது.

தேர்தலுக்கு மட்டுமல்ல வட, கிழக்கில் வாழும் தமிழ் மக்களது பொருளாதார மேம்பாட்டுக்கும் சில கோடிகளை இது வரை கனடா த.தே.கூ திரட்டிக் கொடுத்துள்ளது என்று கட்சியின் பிரமுகர் நக்கீரன் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேசமயம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தையொட்டிப் பேசப்பட்ட விவகாரங்களை இணையத்தளம் ஒன்று விளாவாரியாக வெளியிட்டது.

அதன் விபரங்களாவன,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்படும் நிதி தொடர்பாக மத்திய செயற்குழு கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, தனது மகன் கலையமுதனை நோக்கி “உன்னை வெளியாலே கலைப்பேன்” என எச்சரித்த சுவாரஷ்ய சம்பவமும் இடம்பெற்றதை குறித்த இணையம் அறிந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.

அந்த சம்பவத்தைக் குறிப்பிட முன்னர் ஒரு பின்னணித் தகவல்... கனடாவிலுள் சில நபர்கள் பணத்தை வீசியெறிந்து இலங்கையில் கூலிப்படை அரசியல் செய்ய முனைவது தொடர்பாக குறித்த இணைய பக்கத்தில் ஏற்கனவே பல முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல புலம்பெயர் அமைப்புக்கள் பணத்தை வீசியெறிந்து பல குழுக்களை இயக்குவதை போல கனடாவிலுள்ள சிறிய குழுவொன்றும் தமிழ் அரசுக் கட்சியின் ஒரு சிறிய குழுவிற்குப் பணத்தை வீசியெறிந்து இயக்க வருவதைப் பற்றிய பல தகவல்களை குறித்த இணையம் பல முறை சுட்டிக்காட்டியிருந்தது.

அந்தக் குழுவின் அனுசரணையிலேயே வடமாகாணசபையில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டு விக்னேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அஸ்மின், சயந்தன், ஆர்னோல்ட், சத்தியலிங்கம், சாணக்கியன் ஆகியோரை அந்த குழு போஷித்து பலப்படுத்த முயற்சித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் இந்த குழு கனடாவில் பணம் சேகரித்து சுளையாக அனுப்புவது வழக்கம். அந்த குழுவின் கனடா செயற்பாட்டாளராக இருந்த குகதாசன் என்பவர் இறக்குமதியாகி தற்போது திருகோணமலை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

பணம் பாதாளம் வரை பாயுமென்ற நம்பிக்கையில் திருகோணமலையில் பழைய கட்சி செயற்பாட்டாளர்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு தனித்து வில் வாசிக்க முயன்று தற்போது சிக்கிப் போயுள்ளார்.

அவருக்கும் திருகோணமலையில் கட்சி செயற்பாட்டாளர்களுக்குமிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் சந்திப்பு சம்பந்தன் தலைமையில் இன்று நடக்கவுள்ளது.

அவர் அண்மையில், தானே கேள்வியெழுப்பி தானே விடையளித்து ஒரு கேள்வி பதில் அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். அதில் நான் சில கோடி ரூபாயை கட்சிக்காக வழங்கியிருக்கின்றேன் என குறிப்பிட்டுமிருக்கின்றார்.

இந்த அறிக்கையை படித்த கட்சியின் நிர்வாகிககள் அப்படி சில கோடி ரூபாக்கள் அவரால் கட்சிக்கு வழங்கப்பட்டதா என வினவியுள்ளனர்.

இந்த விவகாரம் கட்சியின் பொருளாளர் வரைப் போனது. குகதாசனிடமிருந்து ஒரு சதமும் கட்சியின் பொருளாளரிடம் வரவில்லை. பொருளாளரிற்கு வராமல் கட்சிக்குப் பணம் வர சாத்தியமில்லையே.

இதையடுத்து கட்சியின் செயலாளர் மற்றும் பல பிரமுகர்களிற்கு பொருளாளர் தரப்பிலிருந்து இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

கட்சி செயலாளரும் கனடா குரூப் ஆள்தான். கடிதத்தைப் பார்த்து விட்டு அவரும் கப்சிப்பாக இருந்து விட்டார். இதையடுத்தே இந்த விவகாரம் நேற்று கட்சியின் மத்திய செயற்குழுவில் எழுப்பப்ட்டது.

கட்சியின் பொருளாளர் கனகசபாபதி இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி அப்படி கட்சிக்கு பணம் வழங்கினீர்களா? யாரிடம் வழங்கினீர்கள் எனக் கேட்டார்.

நான் பணம் வழங்கினேன் என சுயதம்பட்டம் அடித்தே தேர்தலில் வெற்றிப் பெறலாமென நினைத்தோ என்னவோ குகதாசன் சொன்னது இப்படி மாறுமென அவர் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப் போனார்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாட சுமந்திரன் அவருக்கு ஆதரவாக களமிறங்கி அந்த பணத்தை நான்தான் வாங்கினேன் என்றார்.

அப்படியென்றால் அந்த பணம் எங்கே, அதற்கான கணக்கு என்ன? என கூட்டத்திலிருந்த பலரும் கேள்வியெழுப்பினர். கட்சியின் பொருளாளர் இருக்க தனிநபர்கள் ஊடாக இப்படியான பணக் கொடுக்கல் வாங்கலின் தேவை என்ன, இதன் நேர்மைத் தன்மையை எப்படி ஏற்றுக் அகொள்வது என கேள்வி எழுப்பினார்.

கனேடிய தமிழ் காங்கிரஸ் வழங்கிய பணத்தை தான் வழங்கியதாக குகதாசன் பாவனை பன்னுகிறார், பகிரங்க அறிக்கை விடுகின்றார், அவர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்றும் வலியுறுத்தினார்.

முறையற்ற நிதி பரிமாற்றத்திற்கு மாவை சோனாதிராசாவின் மகன் கலையமுதன் கடும் எதிர்ப்பை தெரிவித்து அனைத்தும் முறைப்படி கணக்கு நடவடிக்கைக்கு ஊடாக நடைபெற வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரனுக்கும் அவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது நாங்கள் கனடாவில் திரட்டிய பணம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.

தர்க்கம் பலமடைய கலையமுதனை உட்காரும்படி மாவை சேனாதிராசா பலமுறை குறிப்பிட்டார். எனினும் கலையமுதன் உட்காராமல் நியாயத்தை சுட்டிக்காட்டியபடி இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாவை சேனாதிராசா நீ இப்பொழுது இருக்காவிட்டால் உன்னை வெளியில் அனுப்புவேன் என எச்சித்தார்.

அந்தப் பணத்தில் மாகாண சபை தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 6 இலட்சம் படி வழங்கியதாகவும் பங்காளிக் கட்சிகளிற்கும் வழங்கியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு பழைய கதையை விடுவோம். இதை கிளறினால் கட்சிக்குத் தான் பாதிப்பு எனக் கூறி சமரசப்படுத்தி அந்தவிவகாரத்தை மூடி வைத்தனர்.

இதேபோல முல்லைத்தீவு இளைஞரணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் நீதி விவகாரம் தொடர்பில் பேசி கட்சியின் வேட்புமனுக் குழுவிலுள்ள குறைப்பாட்டை சுட்டிக்காட்டினார்.

அனைத்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் வேட்புமனு குழுவில் உள்வாங்கப்பட்டிருக்க மன்னார் மாவட்டத்தின் சார்ள்ஸ் நிர்மலநாதனை இணைக்காதமை தவறு, மன்னாரில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் அந்த பிரசேதத்தின் பிரதிநிதியும் குழுவில் இணைக்கப்பட வேண்டுமென அவர் கருத்து தெரிவித்த போது, நீ இரு. பேஸ்புக்கில் எல்லாம் கட்சியைப் பற்றி எழுதுகிறாய். உனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இருக்கிறது என மாவை குறிப்பிட, பீற்றர் இளஞ்செழியன் பொங்கியெழுந்தார்.

அவர் சரமாரியாக பேசியதில் மாவை திண்டாடி தனது 10 தம்பிகளையும் துணைக்கழைத்தும் பலன் கிட்டவில்லை.

இறுதியில் ஏனையவர்கள் தலையிட்டு பீற்றர் இளஞ்செழியனை சமரசப்படுத்தி உட்கார வைத்தனர்.

இதேவேளை வடமராட்சியை சேர்ந்த தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் ஒருவர் சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருந்தார்.

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும் இதன்போது 221 மில்லியன் ரூபா கனடாக் கிளை ஊடாக வழங்கப்பட்டதாக சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

https://www.tamilwin.com/politics/01/239473?ref=home-feed

Link to comment
Share on other sites

On 2/26/2020 at 1:10 AM, போல் said:

அவர் 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் தமிழரசுக் கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்காகத் தானே சில கோடி ரூபாக்களை கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.

இவர் தன்ர சொந்த கோடிக்கணக்கான காசை கொடுத்தாரோ அல்லது கனடால சேகரித்த கோடிக்கணக்கான காசை தன்ர சொந்த காசு என்டு கொடுத்தாரோ?

உண்மை தெரிஞ்சாகனும்!

Link to comment
Share on other sites

On 2/26/2020 at 1:10 AM, போல் said:

கடந்த வாரம் திருகோணமலைக்கு தாம் பயணம் மேற்கொண்டதாகவும் இதன்போது 221 மில்லியன் ரூபா கனடாக் கிளை ஊடாக வழங்கப்பட்டதாக சில ஆவணங்களை பிரமுகர் ஒருவர் காண்பித்ததாகவும் தெரிவித்தார்.

குகதாசன் தனக்கு இந்தமுறை எப்பிடியாவது சீட் கிடைக்கோனும் என்டு ஒற்றைக் காலில நிக்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் / சும்முக்கு...  சரியான... பங்கு வராவிட்டால்...
மாவை... போராட்டம்  செய்வாரா? 

Link to comment
Share on other sites

On 2/29/2020 at 7:23 AM, தமிழ் சிறி said:

சம் / சும்முக்கு...  சரியான... பங்கு வராவிட்டால்...
மாவை... போராட்டம்  செய்வாரா? 

மாவை தன்ர மகனை பாராளுமன்றத்துக்கு அனுப்ப ரெடி ஆகிறார். அதால இப்ப வாய் திறக்க மாட்டார்.

Link to comment
Share on other sites

பணமே எங்கே ?

  • உனக்கு நான் அனுப்பிய பணம் எங்கே?  
  • நிதி திரட்டியவருக்கு  கொடுத்த பணம் எங்கே ?
  • கட்சிக்கு  கொடுத்த பணம் எங்கே ?  

இவ்வாறு பணம் சம்பந்தப்பட்ட பல நியாயமான கேள்விகள் உள்ளன எமது சமூகத்தில். 

சில இடங்களில் பற்றுச்சீட்டை வாங்க முடியாது / கேட்க முடியாது. மற்றைய இடங்களில் நாம் கேட்க மறந்து விடுவோம். சில இடங்களில் பணத்தை வேண்டுபவர்கள்  பற்றுச்சீட்டை தராமல் விட்டுவிடுவார்கள். 

அவதானம், பணம் கொடுப்போரிலும் அதை பெறுவோரிலும் இருக்க வேண்டும். அப்பொழுதான் அந்த பணம் பயனாக மாறும்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.