Jump to content

தடைப்படுகிறதா இதயத் துடிப்பு?


Recommended Posts

இரண்டு நாட்களாகச் சிறிது மயக்கமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்த நபரொருவர் வீட்டில் வழமைபோன்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டார் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அவரது நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால், ஈ.சி.ஜி எடுத்துப் பார்த்தனர். அப்போது அவரது இதயத் துடிப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

அதாவது, அவரது இதயத்தின் வலது மேல் அறையிலிருந்து கீழ் அறைகளுக்கு வருகின்ற இலத்திரன் ஒட்டப் பாதையில் முழுமையாகத் தடை ஏற்பட்டதால் அவர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளனர். இந்த உபாதை தான் ‘இதயத் துடிப்பு முடக்கம்’ (Complete heart block) என அழைக்கப்படுகின்றது. 

 

‘இதயத் துடிப்பு முடக்கம்’ ஏற்படும் விதம் 

பொதுவாக ஓர் இயந்திரம் இயங்க வேண்டுமானால், அதற்கு மின்சக்தி தேவைப்படுவதைப் போன்று இதயம் துடிப்பதற்கும் சிறிதளவு மின்னோட்டம் தேவைப்படும். இதயத்தின் வலது மேலறையின் மேற்பகுதியில், ஒரு சிறிய ஜெனரேட்டர் போன்று ‘எஸ்-ஏ நோடு’ (Sino Atrial Node – SA node) என்னும் மின்கணு உள்ளது. இதுதான் மின்சாரத்தை உற்பத்தி செய்து இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இது வலது மேலறையின் கீழ்ப்பகுதியில் உள்ள ‘ஏ.வி. நோடு’ (Atrio Ventricular Node – AV Node) என்னும் துணை மின்கணுவுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இதனுடன் சிறப்பு நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje Fibres) இணைந்துள்ளன. இவை கீழ்நோக்கி வலது, இடது கிளைகளாகப் பிரிந்து, இதயத்தசைகளின் கீழறைகளுடன் சீராகப் பிணைந்துள்ளன. வலது மேலறையின் மின்கணுவுடன் பாட்ச்மேன் நார்க்கற்றைகள் (Bachmann’s bundle) இணைந்து, இடது இதயத்தின் மேலறை முழுவதும் பிணைந்துள்ளன. இப்படி ஒரு சங்கிலிப் பின்னலாக இதயம் முழுவதும் நார்க்கற்றைகள் அமைந்து ஒரு மின்னோட்டப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளதால், வலது இதயக் கணுவில் உற்பத்தியாகும் மின்னோட்டமானது எல்லா இதயத் தசைகளுக்கும் வழங்கப்படுகிறது. 

இதன் பலனாக இதயம் தூண்டப்பட்டு சீரான எண்ணிக்கையிலும், லப், டப், லப், டப் என்னும் இயல்பான லயத்துடனும் துடிக்கிறது. இந்த மின்னோட்டப் பாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ இதய மின்கணுவில் போதுமான அளவுக்கு மின்னோட்டம் உற்பத்தி ஆகாவிட்டாலோ, கீழ் அறைகளுக்கு மின்னோட்டம் செல்வது முழுவதுமாகத் தடைப்படும். அப்போது இதயத் துடிப்பு குறைவடையும் அல்லது நின்றுவிடும். இவ்வாறு இதயத் துடிப்பு நின்றுவிடும் நிலைமையே ‘இதயத் துடிப்பு முடக்கம்’ எனப்படுகின்றது. 

 

இதயத் துடிப்பு குறைகிறதா? 

உடல் முழுவதும் குருதியைச் செலுத்தவென இதயம் நிமிடத்துக்கு 60முதல் 100தடவைகள் வரை துடிக்கிறது. ஒவ்வொரு துடிப்பின்போதும் 70மி.லி. குருதியை அது உடலுக்குள் செலுத்தும். நிமிடத்துக்கு 60தடவைக்கும் குறைவாக இதயம் துடிப்பது ‘குறைத் துடிப்பு’ (Bradycardia) எனப்படுகின்றது. மாரடைப்பு, இதயத் துடிப்பு முடக்கம் (Heart block), குறை தரொய்ட்போன்ற பிரச்சினைகளால் இதயத் தசைகளில் தொற்று (Myocarditis) ஏற்படுதல், இதயத் தசைகள் தொய்வு (Cardio myopathy) அடைதல், நாரிழையழற்சி (Fibrosis) ஏற்படுதல், சிறுவயதில் கீல்வாதக் காய்ச்சல் (Rheumatic fever) வந்து பின்னாளில் இதய வால்வுகளைப் பழுதாக்கிவிடுதல் போன்றவற்றாலும் இப்பிரச்சினை உருவாகலாம். அத்தோடு சில மருந்துகளின் பக்கவிளைவு, முதுமை, குருதியில் சில தாதுக்கள் குறைதல் அல்லது அதிகரித்தல், வெளிக்காற்றில் ஒட்சிசன் அதிகம் குறைதல் (Hypoxia) போன்ற காரணங்களாலும் இதயத் துடிப்பு குறைடைய முடியும். 

 

அறிகுறிகள்  

இப் பிரச்சினைக்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலாம் நிலை ஆபத்து இல்லாதது. அப்போது கடுமையான சோர்வு தலைகாட்டும். உடல் பலவீனமாக இருக்கும். கிறுகிறுப்பு ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் காணப்படும்போது மருந்து பாவித்தால் அவ்வறிகுறிகள் சீராகிவிடும்.  அடுத்த கட்டத்தில் சிறிய அளவில் அவ்வப்போது மயக்கம் வரும். மனக்குழப்பமும் ஏற்படலாம். தற்காலிகமாக சுயநினைவை இழக்கலாம். இந்த இரண்டாம் நிலைக்குப் பெரும்பாலும் மருந்து சிகிச்சை பலன் அளிக்கும். இல்லாவிட்டால், ‘பேஸ்மேக்கர்’ (Pacemaker) கருவியைப் பொருத்த வேண்டி இருக்கும். 

மூன்றாம் நிலைதான் ஆபத்தானது. இந்நிலைமையில் இதயம் துடிப்பதைத் திடீரென்று முழுமையாக நிறுத்திவிடும். அப்போது ஆழ்ந்த மயக்கம் வரும். சுயநினைவே இருக்காது. மூச்சுத்திணறல் ஏற்படும். சிலருக்கு இதயத்தின் சில பகுதிகள் தற்காப்புக்காகத் துடிக்கும். அப்போது அவருக்கு மயக்கம் தெளிந்தாலும் அடிப்படைப் பிரச்சினை சரியாகாது. மருத்துவ உதவி அவசரமாகத் தேவைப்படும். பலருக்கு உடனே ‘செயற்கைச் சுவாசம்’ கொடுத்தால்தான் இதயத் துடிப்பு மீளும். அப்போதுகூட இதயம் நிமிடத்துக்கு 30-க்கும் குறைவாகவோ அதிவேகமாகவோ துடிக்கும். இந்த இரண்டு நிலைமைகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.  அதைத் தவிர்க்க பயனாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எப்படி மாரடைப்பு வந்தவருக்கு முதல் ஒரு மணி நேரம் பொன்னானது, அதுபோன்று இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டவருக்கும் அந்த நேரம் பொன்னானது. அந்த நேரத்துக்குள் சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. 

சிலர் நினைப்பது போன்று மாரடைப்பும் இதயத் துடிப்பு முடக்கமும் ஒன்றல்ல. இதயத் தசைகளுக்கு குருதியை எடுத்துச் செல்லும் தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக்கொள்ளப்படுவதால் தான் மாரடைப்பு ஏற்படும். இதயத் தசைகளுக்கு மின்னோட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது தான் இதயத் துடிப்பு முடக்கம். அதேநேரம் மாரடைப்பு வந்தவருக்கு இதயத் துடிப்பு முடக்கமும் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது. 

 

சிகிச்சை  

இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களுக்கு மருந்து சிகிச்சையுடன், தற்காலிகமாக ஒரு பேஸ்மேக்கர் கருவியை உடனே பொருத்தி அவரது இதயத் துடிப்பு முறைப்படுத்துகின்றது. பின்னர் நிரந்தரமாகவே ஒரு பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றன. இதன் பயனாக இயல்பு வாழ்வுக்கு திரும்பிவிடலாம். 

 

‘பேஸ்மேக்கர்’ என்றால் என்ன?  

இதயத் துடிப்பு குறைந்தவர்களுக்கு இதயத்தைச் செயற்கை முறையில் தூண்டி, மீண்டும் அதைச் சீராகத் துடிக்கச் செய்யும் கருவிக்கு ‘செயற்கை இதய முடுக்கியே (Artificial Pacemaker) எனப்படுகின்றது. இதயத்தில் மின்கணு செய்யும் வேலையை இது செய்கிறது. இது பார்ப்பதற்கு ஒரு தீப்பெட்டி போலிருக்கும். எடை 30கிராம். இதில் பேட்டரி, ஜெனரேட்டர், சிறிய மின் சுற்று, மின்கம்பிகள் ஆகியவை இருக்கும். 

இதனை பாதிக்கப்பட்டுள்ளவருக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, மார்பில் இடது அல்லது வலது காரை எலும்புக்கு (Clavicle) அருகில், அதிக ஆழம் இல்லாதவாறு இதைப் புதைத்து, மேற்தோலைத் தையல்போட்டு மூடிவிடுகின்றனர். இதயத்துக்குச் செல்லும் கழுத்துப் பெருஞ்சிரை (Carotid vein) குருதிக் குழாய் வழியாக இதன் மின்கம்பிகள் இதய அறைகளுக்குள் கொண்டுசெல்லப்பட்டு பொருத்தி விடப்படுகின்றன. இது ஒரு கடிகாரத்தைப் போன்று இயங்கிக்கொண்டிருக்கும். இதில் இதயம் எத்தனை தடவை துடிக்க வேண்டும் என்று நிரல் எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ப மின்தூண்டல்களை உருவாக்கி இது இதயத்துக்கு அனுப்பும். அதனால் இதயம் தூண்டப்பட்டு துடிப்பு சீராகிவிடும். இதில் உள்ள மின்கலத்தின் ஆயுள்காலத்தைப் பொறுத்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் இதை மாற்றிக்கொள்வது அவசியமானது.   

http://www.thinakaran.lk/2020/02/22/சுகாதாரம்/48709/தடைப்படுகிறதா-இதயத்-துடிப்பு

Link to comment
Share on other sites

நன்றி நண்பரே மிகபயனுள்ள தகவல் இதே போல இரவில் சுவாசிக்க மறக்கும அல்லத 72  சுவாச நேரம் திடீரென குறைவதாலும் நடு இரவு மரணங்கள் ஏற்படுவதாக கேள்விப்பட்டேன் அந்த விபரம் அறிந்தால் அதன் பாதிப்புகள எழுதுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லுமா?? மற்ற கட்சிகள் வெற்றி வாய்ப்புகள் இல்லையா?? மின்னம்பலம்.  திமுக உடையதா   ??🤣
    • யூன் 4ம் திக‌தி உண்மையான‌ புள்ளி விப‌ர‌ம் தெரியும்   இது ம‌க்க‌ளை குழ‌ப்ப‌ செய்ய‌ப் ப‌ட்ட‌ செய‌லாய் பார்க்கிறேன்...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் காணொளி மூல‌ம் உண்மையை வெளியிட‌லாம்............................. ஏன் நேர‌ம் ஒதுக்கி எழுத்தின் மூல‌ம் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவான்😁....................................
    • இல்லை அண்ணா, இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை. நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும். இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.  
    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.